Just awesome explanation ennodathum ithu thaan.. sooper kavi..அக்கா... இந்த ஐயம் எனக்குப் பல முறை எழுந்துள்ளது...ஆனால் அப்படி யோசித்தால் டிக்டாக்கிலும் வாட்சப்பிலும் ட்விட்டரிலும் அறிவையா வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்???
பெரும்பான்மையைப் பற்றி மட்டும் சொல்கிறேன்...பிறரை விட்டு விடலாம்...நம்மைப் பற்றி பார்ப்போம்....கதை படிப்பதால் கற்பனை உலகத்தில் வாழ்கிறோமென்ற கருத்தில் எனக்கு ஒரு ஐயம்..இவர்கள் creativityஐ வளர்த்து கொள்ளுங்கள் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்களே..அதில் கற்பனை இல்லையா.....கற்பனை செய்ய செய்யத் தானே புதிய எண்ணங்கள் வளரும்...நம் எழுத்தாளர்கள் எத்தனை பேர் கதை படிக்க ஆரம்பித்து எழுத்துலகில் அடி எடுத்து வைத்தார்கள்? அது எழுத்துத் திறனை வளர்த்தெடுக்கிறது என்பதற்கு இதனை விட வேறென்ன கண் கூடான சான்று தேவை...
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்க கதைகள் கற்றுக் கொடுக்கின்றனவே.... எடுத்துக்காட்டாக நம் வீட்டில் நாம் யாரையாவது எதிர்த்துப் பேசுகிறோம் என்றாலோ சண்டை போடுகிறோம் என்றாலோ அதன் தாக்கத்தை உணராமல் இருந்து விடுவோம்..இங்கே கதையில் அதுபோல் வருகையில் பிறரைப் பற்றி படிக்கையில் வீட்டினரின் கோணத்தையும் மதித்திருக்க வேண்டுமோ அவசரப்பட்டிருக்க கூடாதோ என எண்ணத் தோன்றுகிறது தானே....சுய மதிப்பீடு செய்ய உதவுகிறதே...
குடும்பக் கதைகள் மட்டும் தான் தமிழில் வருகிறது என்ற எண்ணம் கொண்ட பலரைப் பார்த்திருக்கிறேன்....அந்த குடும்பக் கதைகளிலும் romance மட்டுமே வருகிறது என்பது அவர்களின் ஆழமான கருத்து....எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இவர்கள் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..romance படிக்க மட்டும் கதை வாசிக்க நேரம் ஒதுக்க நாம் என்ன முட்டாள்களா...அதுதான் நோக்கமென்றால் தொலைக்காட்சி பெட்டியை முடுக்கினால் போதாதா... குடும்பக் கதையில் என்ன இல்லை..மோனிஷா அக்கா எழுதும் கதைகளில் த்ரில்லர் இல்லையா...ஸீனாக்கா கதையில் வரும் வசனங்கள் நம்மைக் கவர்கிறதா இல்லை romance கவருகிறதா எனக் கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும்...சக்கரவ்யூகத்தில் கேரள பாரம்பத்தியத்தை அறிய இயலவில்லையா.. அதையும் தாண்டி எத்தனை நோய்கள் மருத்துவம் சார்ந்த கதைகள் நம் தளத்திலேயே உள்ளன... இவையெல்லாம் அறிவு இல்லையென்றால் Newton's second law trigonometry share market மட்டும் தான் அறிவா என்ன..அப்படியிருந்தால் அதையும் கூட நம்மாலும் எழுத்தாளர்களாலும் திறம்பட செய்ய இயலும்..
குடும்பத்தை மட்டுமே உலகமாகக் கொண்டு பெண்கள் இருக்க முடியுமா.. அவர்களுக்கும் ஏதோ ஒரு பொதுவெளி தேவைப்படுகிறதே..அது குடும்பக் கதையாய் இருப்பதில் என்ன நேர்ந்தது விடப் போகிறது...
அக்கா அதே மாதிரி நீங்கள் கூறிய ஆங்கில நாவல்கள் பற்றிய கருத்தும் கூட உண்மை தான்...பள்ளியில் கூட என்ன பொழுதுபோக்கு உனக்கு என்ற கேள்விக்கு கதைகள் படிப்பது என்றால் ஆங்கிலம் தானே என்று கேட்ட தமிழாசிரியை எல்லாம் உண்டு....கனிந்த மன தீபங்களாய் ஜெயசக்தி நாவலில் வரும் வரிகள் தான் ஞாபகம் வருகின்றன...சாண்டில்யன் படித்தால் வேறு என்னவெல்லாமோ தெரிந்து கொள்ளலாம் என்கிறார்களே என்ற கேள்விக்கு நாயகி குந்தவி அது நீங்கள் தேடிப் பிடித்துப் படிக்கும் பக்கத்தைப் பொருத்தது என்று பதிலடி கொடுப்பார்...அதேதான் என் கருத்தும் ...
பலர் relaxationக்கு என்று படிக்க தானே செய்கிறார்கள்..அதிலென்ன தவறு...பிறரைப் பாதிக்காமல் தன் பொழுதுபோக்கை ஏற்படுத்திக் கொள்வதில் என்ன பிழை....படிச்சுட்டே சந்தோஷமா இருங்க அக்கா
ஆஹா ரொம்ப பொங்கிட்டோம் போதும்....??
@Kavyajaya அக்கா என்ன படிக்காம இங்க வந்து என்ன பண்ணுறன்னு கேட்க கூடாது...நான் இந்த டாபிக்க பார்த்ததும் கட்டுப்படுத்த முடியாம கொட்ட ஆரம்பிச்சுட்டேன்..அது தமிழ் கட்டுரை அளவு வந்துடுச்சு
Haha last naan keka varathukulla.. ??? sari polachi poo