- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
காப்பு
அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.
நூல்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1
அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2
தேரணி யிட்டுபட புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நௌiந்ததுசூர்ப்
பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே. 3
ஓரவொட்டாரொன்றை யுன்னவொட்டார்மலரிட்டுனதான்
சேரவொட்டாரைவர் செய்வதென்யான் சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிக்கக்
கூரகட்டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன்றவனே. 4
திருந்தப் புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. 5
பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மாநந்தந் திfத்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. 6
சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. 7
ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே. 8
தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே. 9
சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கு
மெல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்
செவ்வாய்வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. 10
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்து மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டே 11
படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகழிந்
துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்
இடைப்பட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. 12
ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட் டெட்டு வெற்புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே. 13
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்கு வெற்பும்
அப்பாதி யாய் விழ மேருங் குலங்கவிண்ணாரு முய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே. 14
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே. 15
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெரு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் தொளக்கலை வேல்
விடுங்கொ னருள் வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. 16
வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைச்
பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வௌiக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே. 17
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18
சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம் பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே. 19
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணப் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. 21
மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. 22
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண்டோ ட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே. 23
கின்னங் குறித்தடி னேfசெவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வௌiயாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே. 24
தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாய டாவந்த காவந்து பார்சற்றென் கைக் கெட்டவே. 25
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
சீலத்தை மௌfளத் தௌiந்தறி வார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங்களே. 26
ஓலையுந் தூதருங் கண்டுதிண்டாட லொழித் தெனக்குத்
காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே. 27
வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே. 28
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான் கடந் தேன் சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. 29
பாலென் பதுமொழி பஞ்னெf பதுபதம் பாவையர்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. 30
பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல் தொட்ட காவலனே. 31
கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னே துறந் தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைத்த வதைக்குங் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்தாள் வந்திரட்சிப்பையே. 32
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே. 33
பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்வழி யார்வலைக்கேமனங் கட்டுண்டதே. 34
பத்திற் துறையிழிந் தாநந்த வாரி படிவதானால்
புத்தித் தரங்கந் தௌiவதென் றோபொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட கட்டியிலே
குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே. 35
கழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்பமின்பங்
கழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னே முத்தி கிட்டுவதே. 36
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. 37
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே. 39
சேல்பட் டழிந்தது செந்துaர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. 40
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. 41
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிங்குங்
குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டி மல்குற் குரகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்லாத் தவைaங்கி தெங்கே யெனக்கிங் ஙன் வாய்த்ததுவே. 42
கவியாற் கடலடைத் தோன் மரு கொனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றி யன்பாற்
குவியாக் கரங்கள் வந்தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே. 43
தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே. 44
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்
குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே. 45
நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்த னேசெந்தி லாய் சித்ர மாதரல்குற்
றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மநோதுக்க மானது மாய்வயதற்கே. 46
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே. 47
பத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. 48
சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்சூழாஞ்
சாரிற் கதியின்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. 49
படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே. 50
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின்
நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்
தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே. 51
சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ, பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமார
குமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே. 52
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. 53
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்கொன்
றீகைக் கெனை விதித் தாயிலை யே யிலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே. 54
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய்யா ரென்செய்வார் யம தூதருக்கே. 55
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே. 56
பொருபிடி யுங்களி றும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவென் சாற்றிநித்தம்
இருபிடி சோகொண் டிட்டுண்டிருவினை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாயவுடம்பிதுவே. 57
அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.
நூல்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1
அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2
தேரணி யிட்டுபட புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நௌiந்ததுசூர்ப்
பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே. 3
ஓரவொட்டாரொன்றை யுன்னவொட்டார்மலரிட்டுனதான்
சேரவொட்டாரைவர் செய்வதென்யான் சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிக்கக்
கூரகட்டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன்றவனே. 4
திருந்தப் புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. 5
பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மாநந்தந் திfத்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. 6
சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. 7
ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே. 8
தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே. 9
சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கு
மெல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்
செவ்வாய்வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. 10
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்து மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டே 11
படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகழிந்
துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்
இடைப்பட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. 12
ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட் டெட்டு வெற்புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே. 13
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்கு வெற்பும்
அப்பாதி யாய் விழ மேருங் குலங்கவிண்ணாரு முய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே. 14
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே. 15
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெரு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் தொளக்கலை வேல்
விடுங்கொ னருள் வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. 16
வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைச்
பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வௌiக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே. 17
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18
சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம் பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே. 19
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணப் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. 21
மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. 22
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண்டோ ட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே. 23
கின்னங் குறித்தடி னேfசெவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வௌiயாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே. 24
தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாய டாவந்த காவந்து பார்சற்றென் கைக் கெட்டவே. 25
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
சீலத்தை மௌfளத் தௌiந்தறி வார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங்களே. 26
ஓலையுந் தூதருங் கண்டுதிண்டாட லொழித் தெனக்குத்
காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே. 27
வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே. 28
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான் கடந் தேன் சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. 29
பாலென் பதுமொழி பஞ்னெf பதுபதம் பாவையர்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. 30
பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல் தொட்ட காவலனே. 31
கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னே துறந் தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைத்த வதைக்குங் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்தாள் வந்திரட்சிப்பையே. 32
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே. 33
பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்வழி யார்வலைக்கேமனங் கட்டுண்டதே. 34
பத்திற் துறையிழிந் தாநந்த வாரி படிவதானால்
புத்தித் தரங்கந் தௌiவதென் றோபொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட கட்டியிலே
குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே. 35
கழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்பமின்பங்
கழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னே முத்தி கிட்டுவதே. 36
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. 37
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே. 39
சேல்பட் டழிந்தது செந்துaர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. 40
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. 41
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிங்குங்
குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டி மல்குற் குரகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்லாத் தவைaங்கி தெங்கே யெனக்கிங் ஙன் வாய்த்ததுவே. 42
கவியாற் கடலடைத் தோன் மரு கொனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றி யன்பாற்
குவியாக் கரங்கள் வந்தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே. 43
தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே. 44
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்
குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே. 45
நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்த னேசெந்தி லாய் சித்ர மாதரல்குற்
றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மநோதுக்க மானது மாய்வயதற்கே. 46
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே. 47
பத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. 48
சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்சூழாஞ்
சாரிற் கதியின்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. 49
படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே. 50
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின்
நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்
தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே. 51
சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ, பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமார
குமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே. 52
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. 53
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்கொன்
றீகைக் கெனை விதித் தாயிலை யே யிலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே. 54
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய்யா ரென்செய்வார் யம தூதருக்கே. 55
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே. 56
பொருபிடி யுங்களி றும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவென் சாற்றிநித்தம்
இருபிடி சோகொண் டிட்டுண்டிருவினை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாயவுடம்பிதுவே. 57