கப்பல் மாதா!
ஆண்டவரின் படைப்பான மனிதனிடம் பல வித்தியாசங்களை நாம் பார்த்திருக்கலாம். அதே போல், மனிதன் ஆண்டவருக்காக ஆலயம் எழுப்பும் வகையிலும் வித்தியாசங்கள் இருக்கும் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
ஆம், உவரி மக்கள் தேவ மாதாவிற்காக எழுப்பப்பட்ட ஆலயம் வித்தியாசமாகவே உள்ளது.உவரி கடற்கரையில், கப்பல் விமானத்தை தாங்கியபடி , இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது.
அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. கடலை நம்பியே வாழும் மீனவர்களுக்கு ஆதாரமாக இருப்பது கப்பல் என்றும், விண்ணில் பறக்க ஆதாரமாக இருப்பது விமானம் என்றும், விண்ணையும் மண்ணையும் இணைப்பது மேரி மாதா என்பதினாலே இவ்வாலயம், விமானத்தை தாங்கியபடி கப்பல் இருப்பதாக மார்ட்டின் என்ற ஆசிரியர் என்பரின் ஆலோசனை பேரில் உருவம் அமைக்கப்பட்டது.
கடலை நோக்கி அமைக்கப்பட்ட இந்த கப்பல் ஆலயம், கரையில் இருந்து பார்க்கும் போது, அந்த கப்பல் கடலில் நீந்துவது போலவே காட்சி தருகிறது. "என்னை நம்பி வா மகனே! இந்த வாழ்வென்னும் கடலில் நீந்த நான் கற்று தருகிறேன்" என்று செல்வ மாதா, தேவ மாதா கூறுவது போலவே இருக்கிறது.
இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்வது ஒரு சடங்காக அனுசரிக்கப்படுகிறது. முன்பொரு நாள் இரவில் இங்குள்ள செல்வமாதாவின் திருச்சிலை மீது ஒரு பிரகாசமான ஒளி தோன்றி ஒருமணி நேரம் பிரகாசித்ததாம்.
வேறு விளக்கோ மெழுகுவர்த்தியோ எரியாதபோது இவ்விதமான அதிசய ஒளி தோன்றிய செப்டம்பர் 18 ஆம் நாளை ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
ஆறு வழிகள் கொண்ட இந்த கப்பல் ஆலயத்தில், 2017 ஆம் ஆண்டு ஆலய வாசலில் மூன்று உருவம் கொண்ட மாதாவை பிரதிஷ்டை செய்தனர். இதற்கு ஒரு சிறப்பு காரணமும் இருக்கிறது.
அதோடு, இந்தியா, நெதர்லாந்து, ஜெர்மன், வடிகன், ஃப்ரான்ஸ் போன்ற மாநிலங்களில் கொடிகள் ஆலயத்தின் தூண்களில் வரையப்பட்டுள்ளன. அமைதியை வேண்டி வரும் மக்களுக்காக, கப்பல் ஆலயம் அருகில் ஒரு தியான அறை உள்ளது.
இத்தேவாலயமானது கோவா கிறித்தவ துறவிகளால் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. திருநெல்வேலியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உவரி என்னும் கடற்கரை கிராமத்தில் இத்தேவாலயம் அமைந்துள்ளது.

ஆண்டவரின் படைப்பான மனிதனிடம் பல வித்தியாசங்களை நாம் பார்த்திருக்கலாம். அதே போல், மனிதன் ஆண்டவருக்காக ஆலயம் எழுப்பும் வகையிலும் வித்தியாசங்கள் இருக்கும் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
ஆம், உவரி மக்கள் தேவ மாதாவிற்காக எழுப்பப்பட்ட ஆலயம் வித்தியாசமாகவே உள்ளது.உவரி கடற்கரையில், கப்பல் விமானத்தை தாங்கியபடி , இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது.
அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. கடலை நம்பியே வாழும் மீனவர்களுக்கு ஆதாரமாக இருப்பது கப்பல் என்றும், விண்ணில் பறக்க ஆதாரமாக இருப்பது விமானம் என்றும், விண்ணையும் மண்ணையும் இணைப்பது மேரி மாதா என்பதினாலே இவ்வாலயம், விமானத்தை தாங்கியபடி கப்பல் இருப்பதாக மார்ட்டின் என்ற ஆசிரியர் என்பரின் ஆலோசனை பேரில் உருவம் அமைக்கப்பட்டது.
கடலை நோக்கி அமைக்கப்பட்ட இந்த கப்பல் ஆலயம், கரையில் இருந்து பார்க்கும் போது, அந்த கப்பல் கடலில் நீந்துவது போலவே காட்சி தருகிறது. "என்னை நம்பி வா மகனே! இந்த வாழ்வென்னும் கடலில் நீந்த நான் கற்று தருகிறேன்" என்று செல்வ மாதா, தேவ மாதா கூறுவது போலவே இருக்கிறது.
இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்வது ஒரு சடங்காக அனுசரிக்கப்படுகிறது. முன்பொரு நாள் இரவில் இங்குள்ள செல்வமாதாவின் திருச்சிலை மீது ஒரு பிரகாசமான ஒளி தோன்றி ஒருமணி நேரம் பிரகாசித்ததாம்.
வேறு விளக்கோ மெழுகுவர்த்தியோ எரியாதபோது இவ்விதமான அதிசய ஒளி தோன்றிய செப்டம்பர் 18 ஆம் நாளை ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
ஆறு வழிகள் கொண்ட இந்த கப்பல் ஆலயத்தில், 2017 ஆம் ஆண்டு ஆலய வாசலில் மூன்று உருவம் கொண்ட மாதாவை பிரதிஷ்டை செய்தனர். இதற்கு ஒரு சிறப்பு காரணமும் இருக்கிறது.
- பிதாவாகிய சர்வேஸ்வரின் மகளாகிய தேவமாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்!
- சர்வேஸ்வரனின் தாயாகிய தேவமாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்!
- பரிசுத்த ஆவியாகிய ஆண்டவரின் பத்தினியாகிய தேவமாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்!
அதோடு, இந்தியா, நெதர்லாந்து, ஜெர்மன், வடிகன், ஃப்ரான்ஸ் போன்ற மாநிலங்களில் கொடிகள் ஆலயத்தின் தூண்களில் வரையப்பட்டுள்ளன. அமைதியை வேண்டி வரும் மக்களுக்காக, கப்பல் ஆலயம் அருகில் ஒரு தியான அறை உள்ளது.
இத்தேவாலயமானது கோவா கிறித்தவ துறவிகளால் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. திருநெல்வேலியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உவரி என்னும் கடற்கரை கிராமத்தில் இத்தேவாலயம் அமைந்துள்ளது.