அருமையான விளக்கம் சகோதரரே
இந்த காலத்தில் இப்படி வேறுபடுத்தி சொல்லிதரும் நபர்கள் இல்லை. அதனாலேயே பல இடங்களில் எழுத்து பிழை மிகுந்து வார்த்தையின் அர்த்தமே மாறிவிடுகிறது . நான் நிறைய இடங்களில் கண்ட தவறு அது
போனாள் என்பதற்கும் போனால் என்பதற்கும் பொருள் வேறு ஆனால் இந்த காலத்தில் இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தவறாக கையாளுகின்றனர்.
வருகிறான்--- வறுகிரான்
பெறுதல்---- பெருதல்
ஆள்காட்டி-- ஆல்காட்டி
இப்படி பல சொற்களை பொருள் சரியாய் தெரியாமல் எழுத்து பிரயோகம் செய்கின்றோம். எனது சிறிய வேண்டுகோள் ஒரு சொல்லுக்கு ஒத்து வரும் மற்ற சொற்களை அறியும் பொருட்டு தினமும் 4 சொற்கள் வீதம் அதன் பொருளுடன் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.