• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கற்கக் கற்கண்டாய் - 2 - வல்லினம் மிகல் - 2ம் வேற்றுமை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இக்கட்டுரை எப்படி உள்ளது?

  • எளிதாகப் புரிகிறது

    Votes: 11 100.0%
  • சரியாகப் புரியவில்லை

    Votes: 0 0.0%

  • Total voters
    11

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஆம், ‘பரிசுப் பெற்றான்’ என்று வராது!

‘பரிசு பெற்றான்’ / ‘பரிசைப் பெற்றான்’ என்றுதான் வரும்.

(’பரிசுப் பெற்றான்’ என்று சொல்லிப் பாருங்கள், கூடுதல் இடைவெளி வரும். ‘பரிசுப்’ என்கையில் ‘ப்’பில் உதடுகள் சற்றுக் கூடுதல் அழுத்தத்துடன் ஒட்டிக்கொள்கின்றன!)
ஆம் அண்ணா.. சுப் என்கையில் அதிக அழுத்தத்துடன் ஒலிக்கிறது. ???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
எனக்கு நியாபகம் இருக்கே கா.. முதலில் வருவது எழுவாய் கடைசியில் வருவது பயனிலை இடையில் வருவது செய்படுபொருள் என்று நினைவில் வைத்துக் கொள்ள பார்முலா போல் படித்தேன். ??
எடுத்துக்காட்டுடன் சொல் காவ்யா... அப்ப தான் எனக்கு புரியும்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
@Kavyajaya @Premalatha

வந்ததைச் சொன்னதைப் போற்றுகிறேன்...

பாடத்தைப் படித்ததில் புரிவதைப் புரியாததைக் குறிப்பிடுக,

சொன்னதைக் கற்றதைப் பயில்வதைப் பழக்கமாய்க் கொள்க...

(மேலே உள்ள சொற்களில் 2ம் வேற்றுமை அதிகமாக வருமாறு எழுதியுள்ளேன்... கவனிக்க!) :)
செம்ம திறமை அண்ணா உங்களுக்கு.???
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எடுத்துக்காட்டுடன் சொல் காவ்யா... அப்ப தான் எனக்கு புரியும்
அது எதற்கு.. புரியாமல் நான் படித்ததை உங்களுக்கு வேறு சொல்லித்தர வேண்டுமா.. ??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அண்ணா.. ஒரு குட்டி சந்தேகம். அன்பு பரிசுப் பெற்றான் என்று வராதா. தவறான இலக்கணமா அது
அண்ணா அப்போ இங்க குட்டி சந்தேகம் என்று தான் வருமா? வல்லினம் மிகாதா
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இரண்டாம் வேற்றுமை உருபு ஐ அல்லாது வரும் சொற்களில் வல்லினம் மிகாது. சரியா.. ஆனால் இதனை எப்படி நியாபகம் வைத்துக் கொள்வது எழுதுகையில்? ஏன் என்றால் நான் பரிசு பெற்றான், கோடு கிழித்தாள், பந்து பிடித்தான் அனைத்திலும் வல்லினம் மிக வைத்து விடுவேன்.. ???
ஆம், 2ம் வேற்றுமைத் தொகையில் (உருபு மறைந்து வருகையில்) வல்லினம் மிகாது.

2ம் வேற்றுமை என்ற அமைப்பை மனத்தில் பதித்துக்கொள்ள முயல்க.

ஒரு எளிய பயிற்சியாக ஏதேனும் ஒரு கதையை எடுத்துக்கொண்டு எங்கெல்லாம் இரண்டாம் வேற்றுமை வருகிறது என்று குறிக்க முயல்க.

2ம் வேற்றுமை விரியாக வருகிறதா, தொகையாக வருகிறதா என்று காண்க.

தொடக்கத்தில் இவ்வமைப்பை கவனத்தோடு (conscious) செய்து வந்தால், நாளடைவில் அது பழகி இயல்பாக வந்துவிடும்...
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அண்ணா அப்போ இங்க குட்டி சந்தேகம் என்று தான் வருமா? வல்லினம் மிகாதா
வல்லினம் மிகும்! ‘குட்டிச் சந்தேகம்’ என்று வர வேண்டும். (இது வேறு விதியினால்!)

ஆனால், ‘சந்தேகம்’ என்பதைச் சமற்கிருதச் சொல் என்று கொண்டால் வல்லினம் மிகாது (தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது என்பது விதி!)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
செயப்படுபொருள் / செயப்பாட்டுபொருள்
‘செயப்படுபொருள்’ என்றுதான் இலக்கணக்காரர்கள் கையாண்டுள்ளனர்!

/வினையே செய்வது செயப்படுபொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற்கு இது பயன் ஆக என்னும்
அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ
ஆயெட்டு என்ப தொழில் முதனிலையே./

/செயப்படுபொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே./

-தொல்காப்பியம்.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அருமையான விளக்கம் சகோதரரே :love::love: இந்த காலத்தில் இப்படி வேறுபடுத்தி சொல்லிதரும் நபர்கள் இல்லை. அதனாலேயே பல இடங்களில் எழுத்து பிழை மிகுந்து வார்த்தையின் அர்த்தமே மாறிவிடுகிறது . நான் நிறைய இடங்களில் கண்ட தவறு அது

போனாள் என்பதற்கும் போனால் என்பதற்கும் பொருள் வேறு ஆனால் இந்த காலத்தில் இதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தவறாக கையாளுகின்றனர்.
வருகிறான்--- வறுகிரான்
பெறுதல்---- பெருதல்
ஆள்காட்டி-- ஆல்காட்டி

இப்படி பல சொற்களை பொருள் சரியாய் தெரியாமல் எழுத்து பிரயோகம் செய்கின்றோம். எனது சிறிய வேண்டுகோள் ஒரு சொல்லுக்கு ஒத்து வரும் மற்ற சொற்களை அறியும் பொருட்டு தினமும் 4 சொற்கள் வீதம் அதன் பொருளுடன் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top