வணக்கம் எழுத்தாளர்களே...
நலமா?
(எஸ்.எம். எழுத்தாளர்கள் இலட்சுமிக்கு ‘பிரிய(ங்கா)’மானவர்கள்னு ஊருக்குள்ள பேசிக்குறாங்க, நீங்க நல்லாத்தான் இருப்பீங்கனு எனக்குத் தெரியும்... )
சரி, நாம் அடுத்த கற்கண்டைக் கடிப்போம்...
வினையெச்சம்:
எந்த மொழியின் சொற்களையும் (நான் அறிந்தவரை!) ‘பெயர்’, ‘வினை’ என்ற இரண்டு பகுப்பிற்குள் பொதுவாக அடக்கிவிடலாம்.
வினைச்சொல் என்பது ஒரு செயலைக் குறிக்கும்.
தமிழைப் பொறுத்தவரை வினைச்சொற்கள் மிக நுட்பமாக, ஆனால் எளிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.
தொல்காப்பியர் வினைச்சொல் என்பதை எப்படி வரையறுக்கின்றார் பாருங்கள்:
‘வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்’
-தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையியல்
‘வினைச்சொல் என்பது என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், அது (பெயர்ச்சொல்லைப் போல) வேற்றுமை ஏற்காது, காலக்குறிப்போடு அமையும்’ என்கிறார் தொல்ஸ்!
அதாவது வினைச்சொல் ஒரு செயலைக் குறிக்கும் என்றோமல்லவா, அச்செயல் நடந்து முடிந்துவிட்டதா (இறந்தகாலம்), நடந்துகொண்டிருக்கின்றதா (நிகழ்காலம்) அல்லது இனிதான் நடக்கப்போகிறதா (எதிர்காலம்) என்று உணர்த்தும் என்கிறார்.
தமிழின் வினைச்சொல் காலத்தை மட்டுமின்றி அச்செயலைச் செய்தவரின் திணை, பால் (+எண்), இடம் ஆகியவற்றையும் குறிக்கும்.
எடுத்துக்காட்டாய் ‘வந்தான்’ என்ற சொல்லைப் பாருங்கள்.
‘வருதல்’ என்ற செயல் நிகழ்ந்தது என்பதைக் காட்டுகிறது.
வருதலாகிய அச்செயலைச் செய்தது ஒரு (எண் - ஒருமை) ஆண் (திணை - உயர்திணை, ஆண்பால்), படர்க்கை ஆகிய தகவல்களைத் தருகிறது.
இவ்வாறு முழுமையாகத் தகவல்களைத் தரும் வினைச்சொல்லை நாம் ‘வினைமுற்று’ (முற்று = முழுமை பெற்றது) என்கிறோம்.
இப்போது,
‘வந்து’ ‘வந்த’ ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
‘வந்து’ - எங்கு வந்து? யார் வந்தது? எப்போது? எதற்காக? எந்தத் தகவலும் முழுமையாக இல்லை!
இவ்வாறே ‘வந்த’ என்ற சொல்லும்!
எனவே இவை ‘வினைமுற்று’க்கள் அல்ல என்பது தெரிகிறது!
இவற்றில் பொருள் எஞ்சி நிற்கிறது. எனவே இவற்றை ‘எச்சம்’ (எச்சம் = மீதி இருத்தல், முற்று பெறாமல் இருத்தல்) என்கிறோம்.
‘வந்து’ ‘வந்த’ இரண்டுமே ‘வருதல்’ என்ற செயலைக் குறிப்பன, இரண்டுமே முற்றுப் பெறாத எச்சங்கள், ஆனால் இரண்டும் வெவ்வேறு என்று தோன்றுகிறதல்லவா?
சரி, இவற்றை வாக்கியங்களில் அமைத்துப் பார்ப்போம்:
‘வந்து நின்றான்’ / ‘வந்து அமர்கின்றாள்’ / ‘வந்து சொல்லுவார்’ / ‘வந்து கத்தியது’ / ‘வந்து மேய்ந்தன’
‘வந்த பையன்’ / ‘வந்த பாடகி’ / ‘வந்த சான்றோர்’ / ‘வந்த ஆடு’ / ‘வந்த புலிகள்’
‘வந்து’ என்ற எச்ச வினைச்சொல் முற்றுப் பெற இன்னொரு (முற்றுப் பெற்ற) வினைச்சொல் தேவையாகிறது.
‘வந்த’ என்ற எச்ச வினைச்சொல் முற்றுப் பெற ஒரு பெயர்ச்சொல் தேவைப்படுகிறது.
(மேலே உள்ள எடுத்துக்காட்டுகளைக் கவனித்துப் பாருங்கள். ‘வந்த சென்றான்’ என்றாலோ, ‘வந்து பையன்’ என்றாலோ பொருந்தவில்லை என்பதையும் கவனியுங்கள்!)
ஆக, எச்ச வினைச்சொற்கள் இரண்டு வகை:
1. (மற்றொரு) வினைச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெறுவன
2. ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெறுவன
மற்றொரு வினைச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெறும் எச்சங்களை ‘வினையெச்சம்’ என்போம்.
ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெறும் எச்சங்களை ‘பெயரெச்சம்’ என்போம்.
கவனிக்க: ‘பெயரெச்ச’மும் ஒரு வினைச்சொல்தான்! ஒரு பெயர்ச்சொல்லினால் முற்றுப் பெறுவதால் அதனைப் ‘பெயரெச்சம்’ என்கிறோமே தவிர அது பெயர்ச்சொல் அல்ல, வினைச்சொல்லேதான். (வந்த, நின்ற, எழுதிய... இவற்றிலெல்லாம் ஒரு செயலே குறிக்கப்படுகிறது!)
இப்போதைக்கு நமது கவனம் வினையெச்சங்களில்தான்.
வினையெச்சங்களைத் தொடர்ந்து வல்லினம் மிகுமா மிகாதா என்று பேசுவோம்.
அதற்கு முன் இந்த வினையெச்சம் (கூடவே பெயரெச்சம்) என்ற கருத்தை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
இவ்விழையில் உங்கள் நினைவுக்கு வரும் வினையெச்சங்கள் சிலவற்றைப் பதிவிடுங்கள் (குறைந்தது ஒரு பத்து!)
அவற்றை வைத்துதான் நான் அடுத்த பாடத்தைத் தொடங்கப் போகிறேன்...
நன்றி
--வி
நலமா?
(எஸ்.எம். எழுத்தாளர்கள் இலட்சுமிக்கு ‘பிரிய(ங்கா)’மானவர்கள்னு ஊருக்குள்ள பேசிக்குறாங்க, நீங்க நல்லாத்தான் இருப்பீங்கனு எனக்குத் தெரியும்... )
சரி, நாம் அடுத்த கற்கண்டைக் கடிப்போம்...
வினையெச்சம்:
எந்த மொழியின் சொற்களையும் (நான் அறிந்தவரை!) ‘பெயர்’, ‘வினை’ என்ற இரண்டு பகுப்பிற்குள் பொதுவாக அடக்கிவிடலாம்.
வினைச்சொல் என்பது ஒரு செயலைக் குறிக்கும்.
தமிழைப் பொறுத்தவரை வினைச்சொற்கள் மிக நுட்பமாக, ஆனால் எளிதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.
தொல்காப்பியர் வினைச்சொல் என்பதை எப்படி வரையறுக்கின்றார் பாருங்கள்:
‘வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்’
-தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையியல்
‘வினைச்சொல் என்பது என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், அது (பெயர்ச்சொல்லைப் போல) வேற்றுமை ஏற்காது, காலக்குறிப்போடு அமையும்’ என்கிறார் தொல்ஸ்!
அதாவது வினைச்சொல் ஒரு செயலைக் குறிக்கும் என்றோமல்லவா, அச்செயல் நடந்து முடிந்துவிட்டதா (இறந்தகாலம்), நடந்துகொண்டிருக்கின்றதா (நிகழ்காலம்) அல்லது இனிதான் நடக்கப்போகிறதா (எதிர்காலம்) என்று உணர்த்தும் என்கிறார்.
தமிழின் வினைச்சொல் காலத்தை மட்டுமின்றி அச்செயலைச் செய்தவரின் திணை, பால் (+எண்), இடம் ஆகியவற்றையும் குறிக்கும்.
எடுத்துக்காட்டாய் ‘வந்தான்’ என்ற சொல்லைப் பாருங்கள்.
‘வருதல்’ என்ற செயல் நிகழ்ந்தது என்பதைக் காட்டுகிறது.
வருதலாகிய அச்செயலைச் செய்தது ஒரு (எண் - ஒருமை) ஆண் (திணை - உயர்திணை, ஆண்பால்), படர்க்கை ஆகிய தகவல்களைத் தருகிறது.
இவ்வாறு முழுமையாகத் தகவல்களைத் தரும் வினைச்சொல்லை நாம் ‘வினைமுற்று’ (முற்று = முழுமை பெற்றது) என்கிறோம்.
இப்போது,
‘வந்து’ ‘வந்த’ ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
‘வந்து’ - எங்கு வந்து? யார் வந்தது? எப்போது? எதற்காக? எந்தத் தகவலும் முழுமையாக இல்லை!
இவ்வாறே ‘வந்த’ என்ற சொல்லும்!
எனவே இவை ‘வினைமுற்று’க்கள் அல்ல என்பது தெரிகிறது!
இவற்றில் பொருள் எஞ்சி நிற்கிறது. எனவே இவற்றை ‘எச்சம்’ (எச்சம் = மீதி இருத்தல், முற்று பெறாமல் இருத்தல்) என்கிறோம்.
‘வந்து’ ‘வந்த’ இரண்டுமே ‘வருதல்’ என்ற செயலைக் குறிப்பன, இரண்டுமே முற்றுப் பெறாத எச்சங்கள், ஆனால் இரண்டும் வெவ்வேறு என்று தோன்றுகிறதல்லவா?
சரி, இவற்றை வாக்கியங்களில் அமைத்துப் பார்ப்போம்:
‘வந்து நின்றான்’ / ‘வந்து அமர்கின்றாள்’ / ‘வந்து சொல்லுவார்’ / ‘வந்து கத்தியது’ / ‘வந்து மேய்ந்தன’
‘வந்த பையன்’ / ‘வந்த பாடகி’ / ‘வந்த சான்றோர்’ / ‘வந்த ஆடு’ / ‘வந்த புலிகள்’
‘வந்து’ என்ற எச்ச வினைச்சொல் முற்றுப் பெற இன்னொரு (முற்றுப் பெற்ற) வினைச்சொல் தேவையாகிறது.
‘வந்த’ என்ற எச்ச வினைச்சொல் முற்றுப் பெற ஒரு பெயர்ச்சொல் தேவைப்படுகிறது.
(மேலே உள்ள எடுத்துக்காட்டுகளைக் கவனித்துப் பாருங்கள். ‘வந்த சென்றான்’ என்றாலோ, ‘வந்து பையன்’ என்றாலோ பொருந்தவில்லை என்பதையும் கவனியுங்கள்!)
ஆக, எச்ச வினைச்சொற்கள் இரண்டு வகை:
1. (மற்றொரு) வினைச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெறுவன
2. ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெறுவன
மற்றொரு வினைச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெறும் எச்சங்களை ‘வினையெச்சம்’ என்போம்.
ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டு முற்றுப் பெறும் எச்சங்களை ‘பெயரெச்சம்’ என்போம்.
கவனிக்க: ‘பெயரெச்ச’மும் ஒரு வினைச்சொல்தான்! ஒரு பெயர்ச்சொல்லினால் முற்றுப் பெறுவதால் அதனைப் ‘பெயரெச்சம்’ என்கிறோமே தவிர அது பெயர்ச்சொல் அல்ல, வினைச்சொல்லேதான். (வந்த, நின்ற, எழுதிய... இவற்றிலெல்லாம் ஒரு செயலே குறிக்கப்படுகிறது!)
இப்போதைக்கு நமது கவனம் வினையெச்சங்களில்தான்.
வினையெச்சங்களைத் தொடர்ந்து வல்லினம் மிகுமா மிகாதா என்று பேசுவோம்.
அதற்கு முன் இந்த வினையெச்சம் (கூடவே பெயரெச்சம்) என்ற கருத்தை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
இவ்விழையில் உங்கள் நினைவுக்கு வரும் வினையெச்சங்கள் சிலவற்றைப் பதிவிடுங்கள் (குறைந்தது ஒரு பத்து!)
அவற்றை வைத்துதான் நான் அடுத்த பாடத்தைத் தொடங்கப் போகிறேன்...
நன்றி
--வி