[மு.கு.: கதைக்கு முன் இதைப் படிக்கவில்லை என்றால் ஒருமுறை படித்துவிடுக! நன்றி!]
[கதையின் இறுதியில் ஒரு ‘அருஞ்சொற்பொருள்’ தந்துள்ளேன். தேவையெனில் பார்க்கவும். ஏதேனும் புரியாத சொல் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள், சேர்த்துவிடுகிறேன்!]
தொடுவானத்தில் கதிரவனின் வெளிச்சம் மெல்லிய வைரவூசியாய் நீண்டு பருத்துக்கொண்டிருந்தது. வளிமண்டலம் இல்லாத நிலவின் பரப்பில் கருப்பு வானத்தில் ஊடுருவிய அந்த வெள்ளை ஒளிக்கற்றை மெல்லியதாயினும் நேரடியாய்க் காண இயலாததாய் ஒளிர்ந்தது.
வளிமண்டலமில்லாத நிலவுகளின் விடியல்கள் கவிதையின் பாடுபொருள்கள் அல்ல; அந்நிலவின் பரப்பில் தத்தம் பணியில், அது ஏதேனும் ஒரு குமிழின் வாயிலில் கதிர்வாளைப் பிடித்தபடி சும்மா நிற்பதாய் இருந்தாலும், கருத்தாய் ஈடுபட்டிருந்த தொடிம வீரர்களும் கவிபாடும் கவிஞர் அல்லர்!
பதுமன் இறுமாப்பும், அச்சமும், சோர்வும் கலந்த கலவையாய்த் தொடிமப் படைகளின் பாடிவீடுகளாய் விளங்கிய குமிழ்களின் வரிசையின் ஊடே நடந்தான். இறுமாப்பு, அவனை யாரும் தடுக்காததால் ஏற்பட்டது - படைவீரன் சீருடையில் இருந்தாலும் அவனது தோளில் மின்னிய எலியின் உருவம் அவனை ஒற்றன் என அடையாளம் காட்டியது, எனவே அவனை யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் இயலாது, இதற்காகவே அவன் இங்குத் தன் சீருடையில் வந்திருந்தான். அச்சம், அவன் கொண்டு வந்த செய்தியின் கசப்புத்தன்மையினால் உண்டானது - பதி என்ன செல்லப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு - என்ன சொல்வார் என்று அவனுக்குத் தெரிந்திருந்ததன் உறுத்தல். சோர்வு, பயணக் களைப்பு. அதியக் கோளிலிருந்து அதன் நிலவுக்கு 20 காலத்துளிகளில் வந்துவிடலாம் - அதியர்களின் கலத்தில் வருவதென்றால் - இவன் யாருமறியாது வர வேண்டிய நிர்பந்தத்தில் மீத்தாவலைப் பயன்படுத்தி ஏறத்தாழ இரண்டு ஒளிநாள் தொலைவு பயணித்தல்லவா வந்திருக்கிறான்? ஒன்றிரண்டு நொடிகளுக்கு என்றால் மீத்தாவல் விளையாட்டு போல இருக்கும் (சிவ்வென்று புத்துணர்வு தருவதாய்) அதற்கு மேல் பதுமனுக்கு ஒவ்வாது - ஆனால், வேறு வழியில்லை!
தொடிம வீரர்கள் அதியக் கோளை முற்றுகையிடுவதற்கான பணிகளில் மும்முரமாய் இருப்பதைக் காண முடிந்தது பதுமனால். இவனை யாரும் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை, ஆனால் ஒவ்வொரு நிலையாகக் கடந்து அவன் பதியின் குமிழை நோக்கி முன்னேறுகையில் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளால் தான் கவனிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதைப் பதுமன் நன்கு அறிந்தே இருந்தான். அவனது சீருடையையும் கவசத்தையும் ஊடுவிப் பார்க்கும் ஊடுகதிர்க் கருவிமுதல் அவனது நாடித்துடிப்பையும் இரத்தத்தில் கலந்திருக்கும் வேதிப்பொருள்களையும் தொலைவிலிருந்தே அலசிக்கொண்டிருக்கும் பல்லொலிக் கருவிவரை ஆங்காங்கிருப்பதை அவனால் உணர முடிந்தது! எனினும் பதி இருந்த குமிழியின் வாயிலை அவன் அடைந்ததும் அங்குக் காவல் புரிந்த வீரர்கள் சம்பிரதாயமாக அவனது விவரங்களை விசாரித்தனர்.
தொடிமர்களின் பாடிவீடுகளின் இந்தப் பகுதி நிலவின் ‘முகப்’ பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. அதியக்கோளின் ஒரே நிலவான இத்துணைக்கோள் அதியத்துடன் கடலலைப்பிணைப்பு பெற்று இயங்குவதால் அதன் ஒரு அரைகோளம் எப்போதும் அதியக் கோளை நோக்கியதாகவும், மற்றொரு அரைகோளம் எதிர்த்திசையிலேயும் இருக்கும் - அதியக்கோளை நோக்கியவண்ணம் இருக்கும் பகுதியைத்தான் ‘முகம்’ என்பர், மற்றதை ‘புறம்’ என்பர்.
தொடிமர்கள் அதியக்கோளின் மீது படையெடுத்து, அதனை முற்றுகையிட ஆயத்தம் செய்யத் தோதான பகுதி அக்கோளின் நிலவின் முகந்தானே? தொடிமர்களின் எண்வகைப்படைப் பிரிவுக்கும் தலைவரான, அவற்றின் மாதண்ட நாயகரான, அவரது பதவிக்கேற்ப எல்லா வீரராலும் ‘பதி’ என்று அழைக்கப்படுபவரான பெருஞ்சேனாதிபதி நன்மள்ளனாரின் பாடிவீடு, செயற்கை வளிமண்டலமும் தட்பவெட்ப சீரமைப்பியும் கொண்டதான அந்தப் பெரிய குமிழி, நடுநாயகமாக தொடிமர்களின் கொடி பெரிதாய்ப் பறக்க, அதியக்கோளை உற்று நோக்கும் ஒரு பெருங்கண்ணைப் போல அமைந்திருந்தது. பதுமன் ஒருவித பரவசத்துடன் உள்ளே நுழைந்தான்.
நிலவின் ‘புறத்’தில் இன்னொரு பாடிவீடு அமைந்திருப்பதையும் அவன் அறிந்தேயிருந்தான், அதை மனத்திரையில் கற்பனை செய்தவன், ஒரு வேளை அடுத்து அதற்குள் செல்லும் வாய்ப்பும் அவனுக்கு வாய்த்தாலும் வாய்க்கும் என்பதை எண்ணிப்பார்த்தான், ஒற்றர்படை தண்டநாயகர் அவனை எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் அனுப்பியிருந்தார். தொடிமக்கோளின் சர்வாதிகார ஆளுநரைக் கூட சந்திப்போம் என்ற எண்ணம் அவனது பரவசத்தை மேலும் கூட்டி உடலில் மெல்லிய புல்லரிப்பை உண்டுபண்ணியது, அவனது உடலில் ஏற்பட்ட அம்மெல்லிய வேறுபாடுகளை வெற்றுவெளியிலிருந்து வளிமண்டலத்திற்குள் வந்ததன் எதிரொலி என்று எண்ணிக்கொண்டன அவனைக் கண்காணித்த கருவிகள்!
பதுமன் உள்ளே நுழைந்து மூச்சுமுகமுடியைக் கழட்டியவுடன் பெருஞ்சேனாதிபதியின் மெய்க்காப்பாளன் ஒருவன் அவன் முன் வந்து, தன்னைத் தொடருமாறு செய்கை காட்டிவிட்டு முன் செல்ல, பதுமன் தொடர்ந்தான். தனக்கு முன்னால் செல்பவன் தனக்கே மெய்க்காப்பாளனாய்ச் செல்வதைப் போல உணர்ந்த பதுமனுக்குப் பெருஞ்சேனாதிபதியின் புகழ்பெற்ற மெய்க்காப்பளர்களாகிய ‘நெருப்பீட்டி’களுள் ஒருவன் தனக்குக் காவல் செய்கிறான் என்ற எண்ணம் பூரிப்பைத் தந்தது. முன்னால் சென்ற அந்த நெருப்பீட்டி சட்டென நின்று திரும்பிப் பதுமனை முறைத்துவிட்டு மீண்டும் முன்னால் செல்லத் தொடங்கினான். பதுமன் எண்ணமும் உணர்வுகளும் அடங்கிப் போனவனாக அவனைப் பின் தொடர்ந்தான்!
ஒரு அறையின் வாசலில் நின்று அருகில் இருந்த ஒரு உலோக வட்டத்தைத் தனது ஈட்டியால் அந்த மெய்க்காப்பாளன் தட்ட, கதவு திறந்துகொண்டது. பதுமனை உள்ளே செல்லச் செய்கை காட்டிவிட்டுக் கதவின் அருகிலேயே நின்று கொண்டான் அந்த நெருப்பீட்டி. பதுமன் உள்ளே நுழைந்தவுடன் அவனுக்குப் பின்னால் கதவுகள் மூடிக்கொள்வதை உணர்ந்தான். அவனுக்கு நேராக ஒரு மேசையும் அதற்குப் பின்னால் ஒரு உயர நாற்காலியும் இருந்தன. அவ்வறை எந்த விதமான அலங்காரங்களும் இன்றி, மிக வெளிறிய இளஞ்சிவப்பில் மெல்லிய மனவழுத்தம் தரும் அமைப்பில் இருப்பதாகத் தோன்றியது பதுமனுக்கு. அறையைப் பார்வையால் ஒரு சுற்று அளந்து மீண்டும் அந்த நாற்காலியை நோக்கும்போதுதான் அதற்குப் பின்னால் அறையின் இருமூலையிலும் இரண்டு நெருப்பீட்டிகள் நிற்பதைக் கண்டான் பதுமன். அவனது இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது! இவர்கள் இங்கேயேதான் நிற்கின்றனரா, இல்லை நான் வந்தபின் வந்தனரா?
அடுத்து என்ன என்று அவர்களை வினவலாமா வேண்டாவா என்று பதுமன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு வலதுபக்கம் சுவரில் ஒரு கதவு அரவமின்றித் திறக்க நன்மள்ளனார் அறைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்தார். ‘மாதண்ட நாயகர், பெருஞ்சேனாதிபதி நன்மள்ளனார்’ என்று பதுமன் ஒருமுறை சொல்லிக்கொண்டான். இவர்தானா? சீருடை ஏதுமின்றி, விடுமுறையில் உல்லாசக் கோளுக்குச் செல்லும் விண்கலத்தில் வந்து அமரும் பக்கத்து இருக்கை பயணியைப் போல எந்த ஆராவாரமுமின்றி இவ்வளவு எளிமையாக வந்தமரும் இவர்தானா நன்மள்ளனார்?
”சேனாதிபதி சித்திரனாரின் ஒற்றர்கள் எல்லோருமே உன்னைப் போல மந்தமாகத்தான் இருப்பார்களா? இல்லை, நீதான் இருப்பதிலேயே சிறந்தவன் என்று உன்னை என்னிடம் அனுப்பி வைத்தாரா?” என்று பதுமனைப் பார்த்து வினவிய அவரது குரலில் இருந்த கட்டளைத் தொனியும் எரிச்சலும் பதுமனை மேலும் உலுக்கின!
“வ- வந்தனம் பதி!” உடலை விறைத்துக் கைகளை மார்புக்கு நேராய் இணைத்து அவரை வணங்கினான். ச்ச, எத்தனைமுறை மனத்திற்குள் செய்து பார்த்துக் கொண்டேன், நேரில் இப்படி திணறிவிட்டேனே! இனி இவர் என்னைப் புழுவைப் போலத்தான் மதிப்பார்! சித்திரனாரிடம் என்னைப் பற்றி என்ன சொல்லப் போகிறாரோ! என்னால் ஒற்றர் படைக்கே இழுக்கு! “சித்திரனாரின் வந்தனம். அந்தக் கிழவி இங்கு வந்து நம் ஆளுநரைச் சந்திப்பது உறுதியாகிவிட்டது!”
”பதுமா! அக்கிழவி நிலவில்தான் இருக்கிறாள், நாளை புறத்தில் உள்ள தனது பாடிவீட்டில் ஆளுநர் அவளைச் சந்திக்கிறார். உங்கள் செய்தி அந்தக் கிழவியைவிட மெல்ல வந்து சேர்கிறது, இத-”
“அது செய்தி இல்லை பதி!” அவசரப்பட்டு அவர் பேசி முடிக்கும்முன் குறுக்கிட்டுவிட்டோம்!
“ஒற்றர் படைக்குச் சில சலுகைகள் தேவைதான் போல...” ங-கதிரைவிட தீர்க்கமான பார்வையால் பதுமனை முறைத்தபடியே வினவினார் நன்மள்ளனார், “எது செய்தி, சொல்...”
“மன்னிக்கவும் பதி! இதோ!” என்று ஓரடி முன்வைத்து அவருக்கு முன் இருந்த மேசையில் மிகப் பணிவுடன் ஒரு சிறிய பேழையை வைத்துவிட்டு மீண்டும் பின் சென்று விறைப்புடன் நின்றான்.
நன்மள்ளனார் தனக்கு வலப்பக்கம் நின்றிருந்த நெருப்பீட்டியை நோக்க அவன் கம்பீரமான நடையில் வந்து அப்பேழையைக் கையில் எடுத்துத் திறந்து அதற்குள் இருந்த சிறிய மாத்திரையைத் தன் கையிலிருந்த ஒரு கருவிக்குள் போட, அது சில நொடிகள் அக்கருவிக்குள் பயணித்து வெளிவர, ‘சரி’ என்பதைப் போல தலையை ஒரு வெட்டுவெட்டி மாத்திரையை மீண்டும் பேழையிலேயே வைத்துப் பேழையை மூடாமலேயே மேசை மேல் வைத்துவிட்டு மீண்டும் தன் இடத்திற்குச் சென்று சிலையைப் போல நின்றுகொண்டான்.
நன்மள்ளனார் பதுமனைப் பார்த்து மெல்ல புன்னகைத்துவிட்டு (அவரது முகத்தசைகளின் அந்த அசைவைப் ‘புன்னகை’ என்றுதான் பதுமன் எண்ணினான்!) அம்மாத்திரையை வாயிலிட்டுக்கொண்டார்.
அதில் வேதிப்பொருள்களில் தீட்டப்பட்டிருந்த செய்தி நன்மள்ளனாரின் மூளையை எட்டுவதைப் பதுமனும் தனக்குள் கற்பனை செய்துகொண்டான், அதில் இருக்கும் செய்தி அவனுக்குத் தெரியும். மாத்திரையை வாயில் வைத்து, எச்சிலில் அது கரையத் தொடங்கியதும் கனவுபோல, தொலைவில் கேட்கும் ஒலியைப் போல அதன் செய்தி மூளைக்குள் ‘கேட்கும்’. அதி இரகசியமான செய்திகளைத்தான் இவ்வாறு மாத்திரையில் பரிமாறுவார்கள் எனினும், ஒற்றனாகிய பதுமனுக்கு அவ்வனுபவம் நிறையவே உண்டு! ஒருவருக்கு உருவான அச்செய்தி-மாத்திரையை வேறொருவர் உண்டால் உடனே மரணந்தான்! நன்மள்ளனார் இறந்துவிடவில்லை, தன் முகத்தசைகள் இறுக, பதுமனைக் கூர்ந்து நோக்கினார்.
”இச்செய்திக்குத் தகுந்த ஆதாரம் இருக்கும் என்றே நம்புகிறேன்?”
“இருக்கிறது பதி! நானேதான் ஆதாரம்!” பதுமன் விறைப்புடன் சொன்னான். இந்தத் தொடிம-அதியப் போரின் வரலாற்றில் தான்தான் முதல் அத்தியாயம் என்ற எண்ணம் அவனுள் ஓடியது!
நன்மள்ளனார் எழுந்து நின்றார், “ஆளுநரைச் சந்திக்கத் தயாராய் இரு!”
[கதையின் இறுதியில் ஒரு ‘அருஞ்சொற்பொருள்’ தந்துள்ளேன். தேவையெனில் பார்க்கவும். ஏதேனும் புரியாத சொல் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள், சேர்த்துவிடுகிறேன்!]
1
தொடுவானத்தில் கதிரவனின் வெளிச்சம் மெல்லிய வைரவூசியாய் நீண்டு பருத்துக்கொண்டிருந்தது. வளிமண்டலம் இல்லாத நிலவின் பரப்பில் கருப்பு வானத்தில் ஊடுருவிய அந்த வெள்ளை ஒளிக்கற்றை மெல்லியதாயினும் நேரடியாய்க் காண இயலாததாய் ஒளிர்ந்தது.
வளிமண்டலமில்லாத நிலவுகளின் விடியல்கள் கவிதையின் பாடுபொருள்கள் அல்ல; அந்நிலவின் பரப்பில் தத்தம் பணியில், அது ஏதேனும் ஒரு குமிழின் வாயிலில் கதிர்வாளைப் பிடித்தபடி சும்மா நிற்பதாய் இருந்தாலும், கருத்தாய் ஈடுபட்டிருந்த தொடிம வீரர்களும் கவிபாடும் கவிஞர் அல்லர்!
பதுமன் இறுமாப்பும், அச்சமும், சோர்வும் கலந்த கலவையாய்த் தொடிமப் படைகளின் பாடிவீடுகளாய் விளங்கிய குமிழ்களின் வரிசையின் ஊடே நடந்தான். இறுமாப்பு, அவனை யாரும் தடுக்காததால் ஏற்பட்டது - படைவீரன் சீருடையில் இருந்தாலும் அவனது தோளில் மின்னிய எலியின் உருவம் அவனை ஒற்றன் என அடையாளம் காட்டியது, எனவே அவனை யாரும் தடுக்கவில்லை, தடுக்கவும் இயலாது, இதற்காகவே அவன் இங்குத் தன் சீருடையில் வந்திருந்தான். அச்சம், அவன் கொண்டு வந்த செய்தியின் கசப்புத்தன்மையினால் உண்டானது - பதி என்ன செல்லப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு - என்ன சொல்வார் என்று அவனுக்குத் தெரிந்திருந்ததன் உறுத்தல். சோர்வு, பயணக் களைப்பு. அதியக் கோளிலிருந்து அதன் நிலவுக்கு 20 காலத்துளிகளில் வந்துவிடலாம் - அதியர்களின் கலத்தில் வருவதென்றால் - இவன் யாருமறியாது வர வேண்டிய நிர்பந்தத்தில் மீத்தாவலைப் பயன்படுத்தி ஏறத்தாழ இரண்டு ஒளிநாள் தொலைவு பயணித்தல்லவா வந்திருக்கிறான்? ஒன்றிரண்டு நொடிகளுக்கு என்றால் மீத்தாவல் விளையாட்டு போல இருக்கும் (சிவ்வென்று புத்துணர்வு தருவதாய்) அதற்கு மேல் பதுமனுக்கு ஒவ்வாது - ஆனால், வேறு வழியில்லை!
தொடிம வீரர்கள் அதியக் கோளை முற்றுகையிடுவதற்கான பணிகளில் மும்முரமாய் இருப்பதைக் காண முடிந்தது பதுமனால். இவனை யாரும் பெரிதாய்க் கண்டுகொள்ளவில்லை, ஆனால் ஒவ்வொரு நிலையாகக் கடந்து அவன் பதியின் குமிழை நோக்கி முன்னேறுகையில் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளால் தான் கவனிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதைப் பதுமன் நன்கு அறிந்தே இருந்தான். அவனது சீருடையையும் கவசத்தையும் ஊடுவிப் பார்க்கும் ஊடுகதிர்க் கருவிமுதல் அவனது நாடித்துடிப்பையும் இரத்தத்தில் கலந்திருக்கும் வேதிப்பொருள்களையும் தொலைவிலிருந்தே அலசிக்கொண்டிருக்கும் பல்லொலிக் கருவிவரை ஆங்காங்கிருப்பதை அவனால் உணர முடிந்தது! எனினும் பதி இருந்த குமிழியின் வாயிலை அவன் அடைந்ததும் அங்குக் காவல் புரிந்த வீரர்கள் சம்பிரதாயமாக அவனது விவரங்களை விசாரித்தனர்.
தொடிமர்களின் பாடிவீடுகளின் இந்தப் பகுதி நிலவின் ‘முகப்’ பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. அதியக்கோளின் ஒரே நிலவான இத்துணைக்கோள் அதியத்துடன் கடலலைப்பிணைப்பு பெற்று இயங்குவதால் அதன் ஒரு அரைகோளம் எப்போதும் அதியக் கோளை நோக்கியதாகவும், மற்றொரு அரைகோளம் எதிர்த்திசையிலேயும் இருக்கும் - அதியக்கோளை நோக்கியவண்ணம் இருக்கும் பகுதியைத்தான் ‘முகம்’ என்பர், மற்றதை ‘புறம்’ என்பர்.
தொடிமர்கள் அதியக்கோளின் மீது படையெடுத்து, அதனை முற்றுகையிட ஆயத்தம் செய்யத் தோதான பகுதி அக்கோளின் நிலவின் முகந்தானே? தொடிமர்களின் எண்வகைப்படைப் பிரிவுக்கும் தலைவரான, அவற்றின் மாதண்ட நாயகரான, அவரது பதவிக்கேற்ப எல்லா வீரராலும் ‘பதி’ என்று அழைக்கப்படுபவரான பெருஞ்சேனாதிபதி நன்மள்ளனாரின் பாடிவீடு, செயற்கை வளிமண்டலமும் தட்பவெட்ப சீரமைப்பியும் கொண்டதான அந்தப் பெரிய குமிழி, நடுநாயகமாக தொடிமர்களின் கொடி பெரிதாய்ப் பறக்க, அதியக்கோளை உற்று நோக்கும் ஒரு பெருங்கண்ணைப் போல அமைந்திருந்தது. பதுமன் ஒருவித பரவசத்துடன் உள்ளே நுழைந்தான்.
நிலவின் ‘புறத்’தில் இன்னொரு பாடிவீடு அமைந்திருப்பதையும் அவன் அறிந்தேயிருந்தான், அதை மனத்திரையில் கற்பனை செய்தவன், ஒரு வேளை அடுத்து அதற்குள் செல்லும் வாய்ப்பும் அவனுக்கு வாய்த்தாலும் வாய்க்கும் என்பதை எண்ணிப்பார்த்தான், ஒற்றர்படை தண்டநாயகர் அவனை எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் அனுப்பியிருந்தார். தொடிமக்கோளின் சர்வாதிகார ஆளுநரைக் கூட சந்திப்போம் என்ற எண்ணம் அவனது பரவசத்தை மேலும் கூட்டி உடலில் மெல்லிய புல்லரிப்பை உண்டுபண்ணியது, அவனது உடலில் ஏற்பட்ட அம்மெல்லிய வேறுபாடுகளை வெற்றுவெளியிலிருந்து வளிமண்டலத்திற்குள் வந்ததன் எதிரொலி என்று எண்ணிக்கொண்டன அவனைக் கண்காணித்த கருவிகள்!
பதுமன் உள்ளே நுழைந்து மூச்சுமுகமுடியைக் கழட்டியவுடன் பெருஞ்சேனாதிபதியின் மெய்க்காப்பாளன் ஒருவன் அவன் முன் வந்து, தன்னைத் தொடருமாறு செய்கை காட்டிவிட்டு முன் செல்ல, பதுமன் தொடர்ந்தான். தனக்கு முன்னால் செல்பவன் தனக்கே மெய்க்காப்பாளனாய்ச் செல்வதைப் போல உணர்ந்த பதுமனுக்குப் பெருஞ்சேனாதிபதியின் புகழ்பெற்ற மெய்க்காப்பளர்களாகிய ‘நெருப்பீட்டி’களுள் ஒருவன் தனக்குக் காவல் செய்கிறான் என்ற எண்ணம் பூரிப்பைத் தந்தது. முன்னால் சென்ற அந்த நெருப்பீட்டி சட்டென நின்று திரும்பிப் பதுமனை முறைத்துவிட்டு மீண்டும் முன்னால் செல்லத் தொடங்கினான். பதுமன் எண்ணமும் உணர்வுகளும் அடங்கிப் போனவனாக அவனைப் பின் தொடர்ந்தான்!
ஒரு அறையின் வாசலில் நின்று அருகில் இருந்த ஒரு உலோக வட்டத்தைத் தனது ஈட்டியால் அந்த மெய்க்காப்பாளன் தட்ட, கதவு திறந்துகொண்டது. பதுமனை உள்ளே செல்லச் செய்கை காட்டிவிட்டுக் கதவின் அருகிலேயே நின்று கொண்டான் அந்த நெருப்பீட்டி. பதுமன் உள்ளே நுழைந்தவுடன் அவனுக்குப் பின்னால் கதவுகள் மூடிக்கொள்வதை உணர்ந்தான். அவனுக்கு நேராக ஒரு மேசையும் அதற்குப் பின்னால் ஒரு உயர நாற்காலியும் இருந்தன. அவ்வறை எந்த விதமான அலங்காரங்களும் இன்றி, மிக வெளிறிய இளஞ்சிவப்பில் மெல்லிய மனவழுத்தம் தரும் அமைப்பில் இருப்பதாகத் தோன்றியது பதுமனுக்கு. அறையைப் பார்வையால் ஒரு சுற்று அளந்து மீண்டும் அந்த நாற்காலியை நோக்கும்போதுதான் அதற்குப் பின்னால் அறையின் இருமூலையிலும் இரண்டு நெருப்பீட்டிகள் நிற்பதைக் கண்டான் பதுமன். அவனது இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது! இவர்கள் இங்கேயேதான் நிற்கின்றனரா, இல்லை நான் வந்தபின் வந்தனரா?
அடுத்து என்ன என்று அவர்களை வினவலாமா வேண்டாவா என்று பதுமன் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு வலதுபக்கம் சுவரில் ஒரு கதவு அரவமின்றித் திறக்க நன்மள்ளனார் அறைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்தார். ‘மாதண்ட நாயகர், பெருஞ்சேனாதிபதி நன்மள்ளனார்’ என்று பதுமன் ஒருமுறை சொல்லிக்கொண்டான். இவர்தானா? சீருடை ஏதுமின்றி, விடுமுறையில் உல்லாசக் கோளுக்குச் செல்லும் விண்கலத்தில் வந்து அமரும் பக்கத்து இருக்கை பயணியைப் போல எந்த ஆராவாரமுமின்றி இவ்வளவு எளிமையாக வந்தமரும் இவர்தானா நன்மள்ளனார்?
”சேனாதிபதி சித்திரனாரின் ஒற்றர்கள் எல்லோருமே உன்னைப் போல மந்தமாகத்தான் இருப்பார்களா? இல்லை, நீதான் இருப்பதிலேயே சிறந்தவன் என்று உன்னை என்னிடம் அனுப்பி வைத்தாரா?” என்று பதுமனைப் பார்த்து வினவிய அவரது குரலில் இருந்த கட்டளைத் தொனியும் எரிச்சலும் பதுமனை மேலும் உலுக்கின!
“வ- வந்தனம் பதி!” உடலை விறைத்துக் கைகளை மார்புக்கு நேராய் இணைத்து அவரை வணங்கினான். ச்ச, எத்தனைமுறை மனத்திற்குள் செய்து பார்த்துக் கொண்டேன், நேரில் இப்படி திணறிவிட்டேனே! இனி இவர் என்னைப் புழுவைப் போலத்தான் மதிப்பார்! சித்திரனாரிடம் என்னைப் பற்றி என்ன சொல்லப் போகிறாரோ! என்னால் ஒற்றர் படைக்கே இழுக்கு! “சித்திரனாரின் வந்தனம். அந்தக் கிழவி இங்கு வந்து நம் ஆளுநரைச் சந்திப்பது உறுதியாகிவிட்டது!”
”பதுமா! அக்கிழவி நிலவில்தான் இருக்கிறாள், நாளை புறத்தில் உள்ள தனது பாடிவீட்டில் ஆளுநர் அவளைச் சந்திக்கிறார். உங்கள் செய்தி அந்தக் கிழவியைவிட மெல்ல வந்து சேர்கிறது, இத-”
“அது செய்தி இல்லை பதி!” அவசரப்பட்டு அவர் பேசி முடிக்கும்முன் குறுக்கிட்டுவிட்டோம்!
“ஒற்றர் படைக்குச் சில சலுகைகள் தேவைதான் போல...” ங-கதிரைவிட தீர்க்கமான பார்வையால் பதுமனை முறைத்தபடியே வினவினார் நன்மள்ளனார், “எது செய்தி, சொல்...”
“மன்னிக்கவும் பதி! இதோ!” என்று ஓரடி முன்வைத்து அவருக்கு முன் இருந்த மேசையில் மிகப் பணிவுடன் ஒரு சிறிய பேழையை வைத்துவிட்டு மீண்டும் பின் சென்று விறைப்புடன் நின்றான்.
நன்மள்ளனார் தனக்கு வலப்பக்கம் நின்றிருந்த நெருப்பீட்டியை நோக்க அவன் கம்பீரமான நடையில் வந்து அப்பேழையைக் கையில் எடுத்துத் திறந்து அதற்குள் இருந்த சிறிய மாத்திரையைத் தன் கையிலிருந்த ஒரு கருவிக்குள் போட, அது சில நொடிகள் அக்கருவிக்குள் பயணித்து வெளிவர, ‘சரி’ என்பதைப் போல தலையை ஒரு வெட்டுவெட்டி மாத்திரையை மீண்டும் பேழையிலேயே வைத்துப் பேழையை மூடாமலேயே மேசை மேல் வைத்துவிட்டு மீண்டும் தன் இடத்திற்குச் சென்று சிலையைப் போல நின்றுகொண்டான்.
நன்மள்ளனார் பதுமனைப் பார்த்து மெல்ல புன்னகைத்துவிட்டு (அவரது முகத்தசைகளின் அந்த அசைவைப் ‘புன்னகை’ என்றுதான் பதுமன் எண்ணினான்!) அம்மாத்திரையை வாயிலிட்டுக்கொண்டார்.
அதில் வேதிப்பொருள்களில் தீட்டப்பட்டிருந்த செய்தி நன்மள்ளனாரின் மூளையை எட்டுவதைப் பதுமனும் தனக்குள் கற்பனை செய்துகொண்டான், அதில் இருக்கும் செய்தி அவனுக்குத் தெரியும். மாத்திரையை வாயில் வைத்து, எச்சிலில் அது கரையத் தொடங்கியதும் கனவுபோல, தொலைவில் கேட்கும் ஒலியைப் போல அதன் செய்தி மூளைக்குள் ‘கேட்கும்’. அதி இரகசியமான செய்திகளைத்தான் இவ்வாறு மாத்திரையில் பரிமாறுவார்கள் எனினும், ஒற்றனாகிய பதுமனுக்கு அவ்வனுபவம் நிறையவே உண்டு! ஒருவருக்கு உருவான அச்செய்தி-மாத்திரையை வேறொருவர் உண்டால் உடனே மரணந்தான்! நன்மள்ளனார் இறந்துவிடவில்லை, தன் முகத்தசைகள் இறுக, பதுமனைக் கூர்ந்து நோக்கினார்.
”இச்செய்திக்குத் தகுந்த ஆதாரம் இருக்கும் என்றே நம்புகிறேன்?”
“இருக்கிறது பதி! நானேதான் ஆதாரம்!” பதுமன் விறைப்புடன் சொன்னான். இந்தத் தொடிம-அதியப் போரின் வரலாற்றில் தான்தான் முதல் அத்தியாயம் என்ற எண்ணம் அவனுள் ஓடியது!
நன்மள்ளனார் எழுந்து நின்றார், “ஆளுநரைச் சந்திக்கத் தயாராய் இரு!”
-------
Last edited: