"என்னை கொல்ல இனி ஒருவன் பிறந்து தான் வர வேண்டும் வீர பாண்டியா ..."என்றான் ஆதித்யயன் .
"வந்து விட்டார்கள் ஆதித்யா ....உன்னை சுற்றியே இருக்கிறார்கள் ....பல வருடமாய் உன்னை பலி வாங்க பலர் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நீ அறிவாயா ...இந்த முடி உனக்கா சேர வேண்டியது ..யோசித்து சொல் ....சேவூர் செருக்களத்திலேயே உன்னை கொல்ல தான் முயன்றார்கள் பல முறை ...தப்பி விட்டாய் ஆதித்யா .....எதற்காக உன் நாட்டின் எல்லைகளை சூறையாடினோம் என்று நினைக்கிறாய் ?எதற்காக உங்கள் குலதெய்வத்தை கடத்த முயன்றோம் என்று நினைக்கிறாய் ...இது எல்லாம் யார் போட்டு கொடுத்த திட்டம் என்று அறிவாயா நீ ?....உன்னை சுற்றி சூழ்ச்சி வலை விரித்து விட்டோம் ஆதித்யா ...இந்த தரணி ஆள போவது நீ இல்லை ....இந்த பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யம் உனது இல்லை ..."என்றான் வீரபாண்டியன் .
"யார் திட்டம் இது ...சொல் வீரபாண்டியா ...சொல் ...."என்றான் ஆதித்யன் வெறியுடன் .
"அதை சொல்ல எனக்கு என்ன சித்தம் கலங்கி இருக்கிறதா என்ன ..இன்று என் உயிர் பிரியலாம் ...இன்று நீ என்னை வெல்லலாம் ...ஆனால் நாளை உன்னை பற்றிய தகவல்கள் சரித்திரத்திலே இருக்க போவதில்லை ....அவர்கள் வெல்ல போவது உறுதி ஆதித்யா ...."என்ற வீர பாண்டியன் வெறி கொண்டவனாய் வாளினை சுழற்ற,பல முறை ஆதித்யன் கண்களை ,கழுத்தை அந்த வாள் குறி வைத்தது .
நீண்ட நேரம் நடந்து கொண்டு இருந்தது அங்கு வாள் சண்டை .உயிர் போகும் நிலை என்ற இறுதி கட்டத்தில் இருந்ததால் ,வீரபாண்டியன் காவல் படை ஆக்ரோஷத்துடன் தான் போரிட்டது .
ஆதித்யனை கொல்ல ஒரே வழி அவனை நெருங்குவது தான் என்பதை உணர்ந்த வீரபாண்டியன் விபரீத முடிவூ எடுத்தான் .வாளை சுழற்றியவாறு ஆதித்யன் மார்பினில் ஆழமாக கீறி விட்டான் வீரபாண்டியன் .அடுத்த நொடி ஆதித்யன் வாள் வீரபாண்டியன் மார்பினில் அவன் கேடயத்தை துளைத்து ,இதயத்தை குத்தி கிழித்தது .
வாயில் ,மூக்கில் ரத்தம் ஒழுக ,மண்ணில் சரிந்தான் வீரபாண்டியன் .விழுந்த அந்த நிலையிலும் அவன் கடைதழில் புன்னகை அரும்பியது .
"என் உயிர் போவதற்கு நான் கவலை படவில்லை ...என் ஒரே கவலை போக போகும் உன் உயிரை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடவில்லையே என்பது மட்டும் தான் .என்ன பார்க்கிறாய் ....என் வாளில் கருநாகத்தின் காளகூடத்தை தீட்டி எடுத்து இருக்கிறேன் .உன் மார்பில் அந்த வாள் கொண்டு தான் கீறி இருக்கிறேன் ..உன் உயிர் இனி மெல்ல போகும் ...ஹா ஹா ஹா ..."என்றவனின் தலையை ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்தினான் ஆதித்யன் .
தலை இல்லாத அந்த உடல் துடித்து தன் துடிப்பை நிறுத்தி கொண்டது .வீரபாண்டியன் இறப்பை கண்ட அவன் படை சிதறி போக ,ஆதித்யன் படையினர் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள் .
வீரபாண்டியனின் விஷம் தோய்த்த வாள் ஏற்படுத்திய காயம் தன் வேலையை காட்ட ஆரம்பிக்க ,ஆதித்யன் தள்ளாட தொடங்க ,அவனை தாங்கி கொண்டாள் நித்திலவல்லி .
இளவரசனின் நிலையின் மேல் அனைவரின் கவனம் திரும்ப ,அங்கு சிறிதளவில் மட்டுமே காயம் அடைந்து இருந்த ஒருவன் தப்பி சென்றதை அங்கு யாருமே கவனிக்கவில்லை ...ஆதித்யனை கொல்ல துடித்து கொண்டு இருக்கும் சதி கூட்டத்திற்கு இவன் மூலம் தகவல் வெகு வேகமாய் சென்று அடைந்தது .
"அன்பரே ...அன்பரே ...ஒன்றும் இல்லை ...கண்ணை திறந்து பாருங்கள் ..கண்ணை மூட வேண்டாம் ..."என்ற நித்திலவல்லி ஆதித்யன் கண்கள் சொருக ஆரம்பித்தது .
தன் கையில் இருந்த குறுவாள் கொண்டு ஆதித்யன் மேல் ஆடையை கிழித்து எறிந்த நித்திலவல்லி ,அவன் மார்பு காயத்தை வெகு ஆழமாக கீறி விட ,செங்குருதி பெருக்கெடுத்தது .தன் கைகளை வைத்து மார்பினை அழுத்தி விட ,குருதியின் அளவு அதிகமாகியது .சிறிது நேரம் அப்படியே விட்டவள் ,பின் காயத்தில் தன் வாய் வைத்து ரத்தத்தை உறிஞ்சி கீழே துப்ப ஆரம்பித்தாள் .
ஐந்து ஆறு முறை அது போல் செய்தவள் ,பின் அழகன் கொண்டு வந்த பச்சிலை ஒன்றின் சாறை காயத்தின் மேல் பிழிய ரத்த பெருக்கம் நின்றது .ஆதித்யனின் ஆடையை ரெண்டாய் கிழித்தவள் அதை கட்டு போல் மேல் கரத்தில் அழுத்தமாய் கட்டி விட ,ரத்த போக்கு இதயத்திற்கு செல்வது குறைய ஆரம்பித்தது .
"அண்ணலே !...காளகூடம் ஆழமாய் பரவி இருக்கிறது என்று நினைக்கிறன் ...இதற்க்கு இவர் கண் விழித்து இருக்க வேண்டும் ...ரத்தத்தில் இதன் மேலும் கலக்க விடுவது ஆபத்து ...இவரை கச்சியம்பதி அருகே இருக்கும் மலை குடிகளிடம் கொண்டு செல்வோம் ..அவர்கள் மருத்துவத்தில் சிறந்தவர்கள் .எந்தவித சர்ப்ப (நாக )காளகூடத்திற்கும் அவர்களிடம் சல்லியக்காரணி உண்டு ....இவரை என் புரவியில் ஏற்றுங்கள் ..."என்றாள் நித்திலவல்லி .
"வந்து விட்டார்கள் ஆதித்யா ....உன்னை சுற்றியே இருக்கிறார்கள் ....பல வருடமாய் உன்னை பலி வாங்க பலர் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நீ அறிவாயா ...இந்த முடி உனக்கா சேர வேண்டியது ..யோசித்து சொல் ....சேவூர் செருக்களத்திலேயே உன்னை கொல்ல தான் முயன்றார்கள் பல முறை ...தப்பி விட்டாய் ஆதித்யா .....எதற்காக உன் நாட்டின் எல்லைகளை சூறையாடினோம் என்று நினைக்கிறாய் ?எதற்காக உங்கள் குலதெய்வத்தை கடத்த முயன்றோம் என்று நினைக்கிறாய் ...இது எல்லாம் யார் போட்டு கொடுத்த திட்டம் என்று அறிவாயா நீ ?....உன்னை சுற்றி சூழ்ச்சி வலை விரித்து விட்டோம் ஆதித்யா ...இந்த தரணி ஆள போவது நீ இல்லை ....இந்த பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யம் உனது இல்லை ..."என்றான் வீரபாண்டியன் .
"யார் திட்டம் இது ...சொல் வீரபாண்டியா ...சொல் ...."என்றான் ஆதித்யன் வெறியுடன் .
"அதை சொல்ல எனக்கு என்ன சித்தம் கலங்கி இருக்கிறதா என்ன ..இன்று என் உயிர் பிரியலாம் ...இன்று நீ என்னை வெல்லலாம் ...ஆனால் நாளை உன்னை பற்றிய தகவல்கள் சரித்திரத்திலே இருக்க போவதில்லை ....அவர்கள் வெல்ல போவது உறுதி ஆதித்யா ...."என்ற வீர பாண்டியன் வெறி கொண்டவனாய் வாளினை சுழற்ற,பல முறை ஆதித்யன் கண்களை ,கழுத்தை அந்த வாள் குறி வைத்தது .
நீண்ட நேரம் நடந்து கொண்டு இருந்தது அங்கு வாள் சண்டை .உயிர் போகும் நிலை என்ற இறுதி கட்டத்தில் இருந்ததால் ,வீரபாண்டியன் காவல் படை ஆக்ரோஷத்துடன் தான் போரிட்டது .
ஆதித்யனை கொல்ல ஒரே வழி அவனை நெருங்குவது தான் என்பதை உணர்ந்த வீரபாண்டியன் விபரீத முடிவூ எடுத்தான் .வாளை சுழற்றியவாறு ஆதித்யன் மார்பினில் ஆழமாக கீறி விட்டான் வீரபாண்டியன் .அடுத்த நொடி ஆதித்யன் வாள் வீரபாண்டியன் மார்பினில் அவன் கேடயத்தை துளைத்து ,இதயத்தை குத்தி கிழித்தது .
வாயில் ,மூக்கில் ரத்தம் ஒழுக ,மண்ணில் சரிந்தான் வீரபாண்டியன் .விழுந்த அந்த நிலையிலும் அவன் கடைதழில் புன்னகை அரும்பியது .
"என் உயிர் போவதற்கு நான் கவலை படவில்லை ...என் ஒரே கவலை போக போகும் உன் உயிரை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடவில்லையே என்பது மட்டும் தான் .என்ன பார்க்கிறாய் ....என் வாளில் கருநாகத்தின் காளகூடத்தை தீட்டி எடுத்து இருக்கிறேன் .உன் மார்பில் அந்த வாள் கொண்டு தான் கீறி இருக்கிறேன் ..உன் உயிர் இனி மெல்ல போகும் ...ஹா ஹா ஹா ..."என்றவனின் தலையை ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்தினான் ஆதித்யன் .
தலை இல்லாத அந்த உடல் துடித்து தன் துடிப்பை நிறுத்தி கொண்டது .வீரபாண்டியன் இறப்பை கண்ட அவன் படை சிதறி போக ,ஆதித்யன் படையினர் அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள் .
வீரபாண்டியனின் விஷம் தோய்த்த வாள் ஏற்படுத்திய காயம் தன் வேலையை காட்ட ஆரம்பிக்க ,ஆதித்யன் தள்ளாட தொடங்க ,அவனை தாங்கி கொண்டாள் நித்திலவல்லி .
இளவரசனின் நிலையின் மேல் அனைவரின் கவனம் திரும்ப ,அங்கு சிறிதளவில் மட்டுமே காயம் அடைந்து இருந்த ஒருவன் தப்பி சென்றதை அங்கு யாருமே கவனிக்கவில்லை ...ஆதித்யனை கொல்ல துடித்து கொண்டு இருக்கும் சதி கூட்டத்திற்கு இவன் மூலம் தகவல் வெகு வேகமாய் சென்று அடைந்தது .
"அன்பரே ...அன்பரே ...ஒன்றும் இல்லை ...கண்ணை திறந்து பாருங்கள் ..கண்ணை மூட வேண்டாம் ..."என்ற நித்திலவல்லி ஆதித்யன் கண்கள் சொருக ஆரம்பித்தது .
தன் கையில் இருந்த குறுவாள் கொண்டு ஆதித்யன் மேல் ஆடையை கிழித்து எறிந்த நித்திலவல்லி ,அவன் மார்பு காயத்தை வெகு ஆழமாக கீறி விட ,செங்குருதி பெருக்கெடுத்தது .தன் கைகளை வைத்து மார்பினை அழுத்தி விட ,குருதியின் அளவு அதிகமாகியது .சிறிது நேரம் அப்படியே விட்டவள் ,பின் காயத்தில் தன் வாய் வைத்து ரத்தத்தை உறிஞ்சி கீழே துப்ப ஆரம்பித்தாள் .
ஐந்து ஆறு முறை அது போல் செய்தவள் ,பின் அழகன் கொண்டு வந்த பச்சிலை ஒன்றின் சாறை காயத்தின் மேல் பிழிய ரத்த பெருக்கம் நின்றது .ஆதித்யனின் ஆடையை ரெண்டாய் கிழித்தவள் அதை கட்டு போல் மேல் கரத்தில் அழுத்தமாய் கட்டி விட ,ரத்த போக்கு இதயத்திற்கு செல்வது குறைய ஆரம்பித்தது .
"அண்ணலே !...காளகூடம் ஆழமாய் பரவி இருக்கிறது என்று நினைக்கிறன் ...இதற்க்கு இவர் கண் விழித்து இருக்க வேண்டும் ...ரத்தத்தில் இதன் மேலும் கலக்க விடுவது ஆபத்து ...இவரை கச்சியம்பதி அருகே இருக்கும் மலை குடிகளிடம் கொண்டு செல்வோம் ..அவர்கள் மருத்துவத்தில் சிறந்தவர்கள் .எந்தவித சர்ப்ப (நாக )காளகூடத்திற்கும் அவர்களிடம் சல்லியக்காரணி உண்டு ....இவரை என் புரவியில் ஏற்றுங்கள் ..."என்றாள் நித்திலவல்லி .
Attachments
-
44.7 KB Views: 0
-
187.8 KB Views: 0
-
85.7 KB Views: 0
-
11.7 KB Views: 0
-
670.1 KB Views: 0