சிறு குன்றின் மேல் இருந்து அவற்றை கண்காணித்து கொண்டு இருந்தார் தேவநாராயணர் .வயது நிச்சயம் ஐம்பது இருக்கலாம் .ஆனால் கம்பீரம் மிஞ்சி இருந்தது . பட்டு அங்கவஸ்த்திரம் அணிந்து ,காதில் கடுக்கண் ,கையில்,காலில் காப்பு ,கழுத்தை ஒட்டி தங்க சங்கிலியில் ஆடும் ருத்ராஷ்க்ஷம் ,நவரத்தின மாலை ,இடையில் கட்ட பட்டு இருக்கும் வைர பிடி வைத்த வாள் என்று ஒரு அரசனின் கம்பீரம் அவரிடம் .பல விதைகளுக்கு அதிபதி ஆயிற்றே தேவ நாராயணர் .
அவர் கை கட்டி பணிவுடன் தன் முன்னால் நின்று கொண்டு இருந்த நபரை பவ்யத்துடன் பார்த்து கொண்டு இருந்தார் .
அவரின் முன் காவி உடையில் இருந்தார் ஒருவர் .முக அமைப்பு நிச்சயம் 2019 ஆம் ஆண்டு கச்சியம்பதி கோயிலில் ,நள்ளிரவில் ,பூட்டிய கோயிலுக்குள் பூஜை செய்து கொண்டு இருந்தவரை போன்றே இருந்தது .
(இருவரும் ஒரே நபரா ?)
அப்படி ஒரு தேஜஸ் அவர் முகத்தில் .இடையில் காவி நிற ஆடை .கழுத்தில் பெரிய ருத்திராட்சங்கள் .ஜடா முடி .கண்களில் தீட்ஷட்சண்யம் . 16 இடங்களில் விபூதி தீற்று .அவரே ஞான பழமாய் ,பக்தியின் வித்தாய் ஜொலித்து கொண்டு இருந்தார் .
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழுமாம்.-என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டு அவரே ஆகும் .
"கற்றது மறந்து விட்டதா தேவநாராயணா ?'என்றார் அந்த காவி உடை புனிதர் .குரலா அது அப்படி ஒரு சாத்வீகம் அதில் .
"அய்யனே ...தாங்கள் கேட்பது இந்த அடியேனுக்கு புரியவில்லை ..."என்றார் தேவநாராயணர்
"இந்த கந்தகோட்டத்தை (அரண்மனையை )முதலில் இருந்து நிர்மாணிப்பது நீ தானா என்று கேட்கிறேன் ?"என்றார் அவர் .
"இல்லை அய்யனே ....எனக்கு முன் வேறு ஒரு கல்வினையாளர் தான் இந்த பணியை செய்து கொண்டு இருந்தார் ...ஆனால் துரதிஷ்ட வசமாய் அவர் உயிர் இங்கேயே பிரிந்து விட்டது ....அதன் பிறகு தான் இளவரசர் என்னை நியமித்தார் ."என்றார் தேவநாராயணர் .
"விநாசா காலே விபரீத புத்தி ..."என்றார் அவர் தன் நெஞ்சில் உள்ள ருத்ராட்சட்ச்சை பிடித்த படி .
"அய்யனே ...."என்றார் தேவநாராயணர் ஒன்றும் விளங்காமல் .
"விதி வழி மதி செல்லும் என்பது இது தான் நாராயணா ....அழிவூ நெருங்கும் போது புத்தியும் விபரீதமாய் தான் எண்ண தொடங்கும் ..நடப்பது நடந்தே தீரும் ."என்று அவர் சொல்லி முடிக்கவும் அவர்கள் முன் மூவரும் புரவியில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது .
அதில் இருந்து கீழே இறங்கியவர்கள் அவர்கள் இருவரையும் வணங்கினார்கள் .இளவரசன் தன் குருவான தேவநாராயணர் காலில் விழுந்து வணங்க ,"சீரஞ்சீவியாக வாழ்க மகனே "என்று அவர் வாழ்த்த அந்த புனிதரின் இதழில் மர்ம புன்னகை விரிந்தது .
"இளவரசே !...இவர் என் குரு ...இவர் திருநாமம் சிவானந்த போகர் ....என் குரு .பெரும் தவசீலர் .வேதங்களில் கரை கண்டவர் .இதுவரை இமயமலையில் தவத்தில் இருந்தார் ....சில காலமாய் கச்சியம்பதி கோயில் பூஜை இவர் தான் ஏற்று உள்ளார் ....அவரின் ஆசி பெரு ...இவர் ஆசி நம்மை படைத்தவன் தரும் ஆசிக்கு நிகர் ."என்றார் தேவநாராயணர் ஆதித்யனிடம் .
அவர் காலில் விழுந்து வணங்க ஆதித்யன் முயல ,அதை கை காட்டி தடுத்தவர் ," தேவையில்லை "என்றார் .
அதை கேட்டு அனைவரும் ஒரு கணம் திகைத்து போயினர் .
அவர் கை கட்டி பணிவுடன் தன் முன்னால் நின்று கொண்டு இருந்த நபரை பவ்யத்துடன் பார்த்து கொண்டு இருந்தார் .
அவரின் முன் காவி உடையில் இருந்தார் ஒருவர் .முக அமைப்பு நிச்சயம் 2019 ஆம் ஆண்டு கச்சியம்பதி கோயிலில் ,நள்ளிரவில் ,பூட்டிய கோயிலுக்குள் பூஜை செய்து கொண்டு இருந்தவரை போன்றே இருந்தது .
(இருவரும் ஒரே நபரா ?)
அப்படி ஒரு தேஜஸ் அவர் முகத்தில் .இடையில் காவி நிற ஆடை .கழுத்தில் பெரிய ருத்திராட்சங்கள் .ஜடா முடி .கண்களில் தீட்ஷட்சண்யம் . 16 இடங்களில் விபூதி தீற்று .அவரே ஞான பழமாய் ,பக்தியின் வித்தாய் ஜொலித்து கொண்டு இருந்தார் .
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழுமாம்.-என்ற திருக்குறளுக்கு எடுத்துக்காட்டு அவரே ஆகும் .
"கற்றது மறந்து விட்டதா தேவநாராயணா ?'என்றார் அந்த காவி உடை புனிதர் .குரலா அது அப்படி ஒரு சாத்வீகம் அதில் .
"அய்யனே ...தாங்கள் கேட்பது இந்த அடியேனுக்கு புரியவில்லை ..."என்றார் தேவநாராயணர்
"இந்த கந்தகோட்டத்தை (அரண்மனையை )முதலில் இருந்து நிர்மாணிப்பது நீ தானா என்று கேட்கிறேன் ?"என்றார் அவர் .
"இல்லை அய்யனே ....எனக்கு முன் வேறு ஒரு கல்வினையாளர் தான் இந்த பணியை செய்து கொண்டு இருந்தார் ...ஆனால் துரதிஷ்ட வசமாய் அவர் உயிர் இங்கேயே பிரிந்து விட்டது ....அதன் பிறகு தான் இளவரசர் என்னை நியமித்தார் ."என்றார் தேவநாராயணர் .
"விநாசா காலே விபரீத புத்தி ..."என்றார் அவர் தன் நெஞ்சில் உள்ள ருத்ராட்சட்ச்சை பிடித்த படி .
"அய்யனே ...."என்றார் தேவநாராயணர் ஒன்றும் விளங்காமல் .
"விதி வழி மதி செல்லும் என்பது இது தான் நாராயணா ....அழிவூ நெருங்கும் போது புத்தியும் விபரீதமாய் தான் எண்ண தொடங்கும் ..நடப்பது நடந்தே தீரும் ."என்று அவர் சொல்லி முடிக்கவும் அவர்கள் முன் மூவரும் புரவியில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது .
அதில் இருந்து கீழே இறங்கியவர்கள் அவர்கள் இருவரையும் வணங்கினார்கள் .இளவரசன் தன் குருவான தேவநாராயணர் காலில் விழுந்து வணங்க ,"சீரஞ்சீவியாக வாழ்க மகனே "என்று அவர் வாழ்த்த அந்த புனிதரின் இதழில் மர்ம புன்னகை விரிந்தது .
"இளவரசே !...இவர் என் குரு ...இவர் திருநாமம் சிவானந்த போகர் ....என் குரு .பெரும் தவசீலர் .வேதங்களில் கரை கண்டவர் .இதுவரை இமயமலையில் தவத்தில் இருந்தார் ....சில காலமாய் கச்சியம்பதி கோயில் பூஜை இவர் தான் ஏற்று உள்ளார் ....அவரின் ஆசி பெரு ...இவர் ஆசி நம்மை படைத்தவன் தரும் ஆசிக்கு நிகர் ."என்றார் தேவநாராயணர் ஆதித்யனிடம் .
அவர் காலில் விழுந்து வணங்க ஆதித்யன் முயல ,அதை கை காட்டி தடுத்தவர் ," தேவையில்லை "என்றார் .
அதை கேட்டு அனைவரும் ஒரு கணம் திகைத்து போயினர் .
Attachments
-
59.8 KB Views: 2
-
18.2 KB Views: 2
-
60.6 KB Views: 1
-
31.7 KB Views: 1