காதல் ,காமம் என்ற பிரளயம் மதனன் (மன்மதன் )இருவருக்குள்ளும் ஏற்படுத்தி சல்லியக்காரணி (மருந்து )ஒருவருக்கு ஒருவர் மட்டுமே .புரவிகள் எழும்பி குதிக்க ,ஆதித்யனின் கரம் இடையில் உரச ,அதன் வீரியம் தாங்க முடியாதவளாய் புரவியில் இருந்து சரிந்த நித்திலாவல்லியை ,"தேவி !"என்று பதறி அழைத்து ஒற்றை கையால் புரவியில் இருந்து அவளை தூக்கி தன் புரவியில் தனக்கு முன்னே இருத்தி கொண்டான்
அவள் கரங்கள் அவன் தோளினில் பூஞ்ச்சரம் கொழுகொம்பை பற்றுவது போல் பிடித்து கொள்ள ,அவன் கரங்கள் அவள் வெற்றிடையில் பதிந்தது .
'இருந்தாலும் நாயகருக்கு கள்ளத்தனம் அதிகம் தான் ......மற்றவர்களுக்கு புரவி பயிற்சி அளிக்கும் நான் தான் புரவியில் இருந்து கீழே சரிய போகிறேனாம் ...கள்ளர் ..... இது தான் சமயம் என்று இவ்வளவூ நெருங்கி விட்டாரே ...கள்ளர் ...அதை தானே நானும் எதிர் பார்த்தேன் ....ஆயுகம் முழுதும் இப்படியே தலைவனின் கைவளைவில் இப்படியே சென்று கொண்டு இருந்தால் அதை விட வேறு பேரு என்ன வேண்டும் ?'என்றது நித்திலாவல்லியின் மனம் .-
'ஆஹா ...என்னவொரு மென்மை ...நறவம் (அனிச்சம் மலர் )தோற்று விடும் போல் இருக்கிறதே ...
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ,
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?
பூக்களிலே இருக்கின்ற பூந்தாதினை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினையுடைய வண்டே! நான் விரும்பியதைக் கூறாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறுவாயாக. என்னோடு பழகிய நட்பினைக் கொண்டவள் என் தலைவி. மயில் போன்ற மென்மையும் நெருக்கமான பற்களையும் கொண்ட அவளுடைய கூந்தலிலே வீசுகின்ற நறுமணத்தைப் போல, நீ அறிந்த மலர்களிலே நறுமணமுடைய மலர்களும் உள்ளனவா?
என்று நித்திலவல்லியின் கூந்தல் மனம் நாசியை துளைக்க ,மனம் மீண்டும் ஆராய்ச்சியில் இறங்கியது அவள் பால் சாய்ந்து விட்ட காதல் கொண்ட அவன் மனம் ...
"இளவரசரே !....தாங்கள் என்ன செய்து கொண்டு இருப்பது என்ன ?'என்றாள் நித்திலவல்லி .
"புரவியை செலுத்தி கொண்டு இருக்கிறேன் ...."என்றான் ஆதித்யன் அவள் கண்களோடு தன் கண்களை உறவாட விட்டு .
"அதை பற்றி நான் இயம்பவில்லை ...உங்கள் கரம் செய்யும் செயலை சொல்கிறேன் ..."என்றாள் அவள் நகைப்புடன் .
"தேவி ...புரவியில் இருந்து நீ கீழே சரிந்து விட கூடாதே என்ற உயர்ந்த எண்ணத்தில் உன்னை பிடித்து இருக்கிறேன் ...."என்றான் அந்த கள்ளன்
நாணம் மேலோங்க அவன் கை வளைவூ தந்த ஏமம் (இன்பம் )அவளை நாண வைத்தது .
"தேவி !நான் கேட்ட வினாவிற்கு நீ இன்னும் விடை அளிக்கவில்லையே ....பாண்டிய நாட்டினையும் இந்த சோழன் வென்று விட்டான் ...கொற்கை முத்துக்களும் இந்த சோழனுக்கே உரிமை பட்டவை எனும் போது இந்த முத்து ,இந்த நித்திலம் எனக்கு உரிமை பட்டவை தானே .."என்றான் இளவரசன் குணிந்து அவளை நெருங்கி
"இது நீங்கள் வெல்ல பாண்டிய நாட்டு முத்து இல்லை என்று முன்னரே பகர்ந்து விட்டேன் ....."என்றாள் தன் மனம் உடையவனின் பேச்சில் தடுமாறுவதை தடுக்கும் பொருட்டு .
நினைக்க மட்டுமே அவளால் முடிந்தது ...நில் என்றால் மனம் நின்றா விடும் ...அதுவும் அவனை மட்டுமே தலைவனாய் கொண்டு விட்ட மனது .
"இந்த நித்திலத்தை வெல்ல நினைக்கவில்லை தேவி ....என் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க உரிமை கோருகிறேன் ....இது சோழ முத்து என்பதால் இன்னும் மதர்ப்பில் (களிப்பில் )தான் இருக்கிறேன் ..இரண்டரை நாழிகை (ஒரு மணி நேரம் )தான் நீயும் நானும் சந்தித்து ஆகிறது என்றால் வியக்காமல் இருக்க முடியவில்லை ....பல உம்மை (முன் ஜென்மம் )நெருங்கி பழகியது போல் ,அதன் தொடர்பாய் தான் தோன்றுகிறது உன் மேல் நான் கொண்டு இருக்கும் இந்த ஆவல் (காதல் )....உன்னை கண்ட அந்த நொடியே நான் உன்னவன் ஆகி விட்டேன் தேவி "என்றான் இளவரசன் மிகவும் நெருங்கி அவளை தன் மேல் சாய்ந்தவாறு .
அவள் கரங்கள் அவன் தோளினில் பூஞ்ச்சரம் கொழுகொம்பை பற்றுவது போல் பிடித்து கொள்ள ,அவன் கரங்கள் அவள் வெற்றிடையில் பதிந்தது .
'இருந்தாலும் நாயகருக்கு கள்ளத்தனம் அதிகம் தான் ......மற்றவர்களுக்கு புரவி பயிற்சி அளிக்கும் நான் தான் புரவியில் இருந்து கீழே சரிய போகிறேனாம் ...கள்ளர் ..... இது தான் சமயம் என்று இவ்வளவூ நெருங்கி விட்டாரே ...கள்ளர் ...அதை தானே நானும் எதிர் பார்த்தேன் ....ஆயுகம் முழுதும் இப்படியே தலைவனின் கைவளைவில் இப்படியே சென்று கொண்டு இருந்தால் அதை விட வேறு பேரு என்ன வேண்டும் ?'என்றது நித்திலாவல்லியின் மனம் .-
'ஆஹா ...என்னவொரு மென்மை ...நறவம் (அனிச்சம் மலர் )தோற்று விடும் போல் இருக்கிறதே ...
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ,
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?
பூக்களிலே இருக்கின்ற பூந்தாதினை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினையுடைய வண்டே! நான் விரும்பியதைக் கூறாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறுவாயாக. என்னோடு பழகிய நட்பினைக் கொண்டவள் என் தலைவி. மயில் போன்ற மென்மையும் நெருக்கமான பற்களையும் கொண்ட அவளுடைய கூந்தலிலே வீசுகின்ற நறுமணத்தைப் போல, நீ அறிந்த மலர்களிலே நறுமணமுடைய மலர்களும் உள்ளனவா?
என்று நித்திலவல்லியின் கூந்தல் மனம் நாசியை துளைக்க ,மனம் மீண்டும் ஆராய்ச்சியில் இறங்கியது அவள் பால் சாய்ந்து விட்ட காதல் கொண்ட அவன் மனம் ...
"இளவரசரே !....தாங்கள் என்ன செய்து கொண்டு இருப்பது என்ன ?'என்றாள் நித்திலவல்லி .
"புரவியை செலுத்தி கொண்டு இருக்கிறேன் ...."என்றான் ஆதித்யன் அவள் கண்களோடு தன் கண்களை உறவாட விட்டு .
"அதை பற்றி நான் இயம்பவில்லை ...உங்கள் கரம் செய்யும் செயலை சொல்கிறேன் ..."என்றாள் அவள் நகைப்புடன் .
"தேவி ...புரவியில் இருந்து நீ கீழே சரிந்து விட கூடாதே என்ற உயர்ந்த எண்ணத்தில் உன்னை பிடித்து இருக்கிறேன் ...."என்றான் அந்த கள்ளன்
நாணம் மேலோங்க அவன் கை வளைவூ தந்த ஏமம் (இன்பம் )அவளை நாண வைத்தது .
"தேவி !நான் கேட்ட வினாவிற்கு நீ இன்னும் விடை அளிக்கவில்லையே ....பாண்டிய நாட்டினையும் இந்த சோழன் வென்று விட்டான் ...கொற்கை முத்துக்களும் இந்த சோழனுக்கே உரிமை பட்டவை எனும் போது இந்த முத்து ,இந்த நித்திலம் எனக்கு உரிமை பட்டவை தானே .."என்றான் இளவரசன் குணிந்து அவளை நெருங்கி
"இது நீங்கள் வெல்ல பாண்டிய நாட்டு முத்து இல்லை என்று முன்னரே பகர்ந்து விட்டேன் ....."என்றாள் தன் மனம் உடையவனின் பேச்சில் தடுமாறுவதை தடுக்கும் பொருட்டு .
நினைக்க மட்டுமே அவளால் முடிந்தது ...நில் என்றால் மனம் நின்றா விடும் ...அதுவும் அவனை மட்டுமே தலைவனாய் கொண்டு விட்ட மனது .
"இந்த நித்திலத்தை வெல்ல நினைக்கவில்லை தேவி ....என் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க உரிமை கோருகிறேன் ....இது சோழ முத்து என்பதால் இன்னும் மதர்ப்பில் (களிப்பில் )தான் இருக்கிறேன் ..இரண்டரை நாழிகை (ஒரு மணி நேரம் )தான் நீயும் நானும் சந்தித்து ஆகிறது என்றால் வியக்காமல் இருக்க முடியவில்லை ....பல உம்மை (முன் ஜென்மம் )நெருங்கி பழகியது போல் ,அதன் தொடர்பாய் தான் தோன்றுகிறது உன் மேல் நான் கொண்டு இருக்கும் இந்த ஆவல் (காதல் )....உன்னை கண்ட அந்த நொடியே நான் உன்னவன் ஆகி விட்டேன் தேவி "என்றான் இளவரசன் மிகவும் நெருங்கி அவளை தன் மேல் சாய்ந்தவாறு .
Attachments
-
10.6 KB Views: 1
-
144.4 KB Views: 1
-
89.8 KB Views: 1