• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை -இறுதி அத்தியாயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஆண்டு -2019

இடம் -காஞ்சிபுரம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் அகண்ட காவேரி போல் ஓடி கொண்டு இருந்த வேகவதி ஆறு இன்று ஆடு ,மாடுகள் மேயும் ,ஆகாய தாமரை மலர்ந்த ,மனித கழிவுகள் கொட்டப்பட்டு கொண்டு இருக்கும் சிறு கால்வாய் .அடுத்த கூவம் நதி ஆகும் தகுதிகள் உள்ள பல நதிகளில் இதுவும் ஒன்று.

அந்த கால்வாயையும் பிரிக்கும் விதமாய் நடுவே ஒரு பாலம் .அதை கடந்து சென்றால் அந்த ஆற்றின் தவறு கால்வாயின் அருகே அமைந்து இருந்தது கலெக்டர் அலுவலகம் .அதன் ஒரு பகுதியாய் காஞ்சிபுரம் தலைமை காவல் அதிகாரி DIG அலுவலகம் .

p681a099.jpg 152946588716134.jpg

அந்த அலுவலகத்தின் முன் மிக பெரிய பரத் கிரௌண்ட் .அங்கு தான் போலீசார் அணிவகுப்பு ,சுதந்திர தின கொண்டாட்டம் எல்லாம் நடைபெறும் .அந்த கிரௌண்ட் தாண்டி போலீஸ் அலுவலக வாயிலில் வந்து நின்றது சமுத்திராவின் ஸ்கூட்டி .

அங்கு வேலையாய் வந்தவர்கள் செல்பவர்கள் ஒரு கணம் சமுத்திராவின் அழகை கண்டு ."அப்பா என்ன அழகு டா சாமி ..."என்று நினைக்காமல் கடக்கவில்லை .இன்ஸ்டன்ட் கவி சக்ரவர்த்திகளை உருவாக்கி கொண்டு இருப்பதை அறியாதவளாய் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள் .வழக்கத்தை விட கெடு பிடி மிக அதிகமாய் இருந்தது .

anushka02 (1).jpg

"நில்லு மா .....உன்னை தான் மா ...பிரஸ்காரங்க னா பின்னாடி போங்க ....வேற ஏதாவது வேலை னா அந்த பக்கம் இருக்கும் பிளாக் ல ஆபீஸ் இருக்கு அங்கே போய் விசாரி மா ..."என்றார் வாயிலில் நின்ற கான்ஸ்டபிள் .

"ஹலோ ...அங்கிள் ...அங்கிள் ...ரிலாக்ஸ் ...கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசுங்க ...."என்றாள் சமுத்திரா .

ஒரு கணம் அதிர்ந்த அவர்,"ஓஹ் சமுத்திரா நீயாடா கண்ணு ...சாரிமா பார்க்கலை ...வேறு யாரோன்னு ...ஆமா நீ என்ன இந்த பக்கம் ..."என்றார் சமுத்திராவிற்கு நன்கு அறிமுகம் ஆகி இருந்த அவர் -சோமநாதன்

"அதான் அங்கிள் என் காலேஜ் மேட் ஒருத்தி காணாம போனான்னு உங்க கிட்டே கூட சொல்லி இருந்தேன் இல்லை ....மூன்று நாள் முன் கம்பளைண்ட் பைல் செய்து இருந்தேன் அங்கிள் ... நேத்து இங்கே இருந்து கால் செஞ்சி மார்னிங் பத்து மணிக்கு வர சொல்லி இருந்தாங்க ..அதான் .."என்றாள் சமுத்திரா .

"இங்கேயா ...இருக்காதுமா ...எந்த ஸ்டேஷன் கம்பளைண்ட் பைல் செய்து இருந்தீயோ அங்கே வர சொல்லி இருப்பாங்க ...:என்றார் சோமு

:நானும் அதை தான் கேட்டேன் அங்கிள் ..இங்கே கலெக்டர் ஆபீஸ்க்கு "A பிளாக் ரெண்டாது மாடிக்கு தான் அங்கிள் வர சொன்னாங்க ...யாரோ SP அழகர்நம்பி அவரை மீட் செய்ய சொன்னாங்க ....ஆமா என்ன அங்கிள் இன்னைக்கு ....இவ்வளவூ பரபரப்பாய் இருக்குது இந்த இடம் ...மத்த நாள் எல்லாம் ஈ ,காக்கை கூட இருக்காது ...கிரௌண்ட்ல பசங்க கிரிக்கெட் ,புட்பால்ன்னு அதகளம் செய்து இருப்பாங்க ....என்னைக்கும் இல்லாத திருநாளாய் வெளிமாநில நியூஸ் சேனல் வண்டி எல்லாம் நிக்குது ?"என்றாள் சமுத்திரா சுத்தி பார்த்த வாறு .

அதற்குள் வேறு ஒரு கான்ஸ்டபிள் அங்கு செக்யூரிட்டிக்கு நிற்க வைத்து விட்டு வந்த சோமு ,"இந்த பக்கம் வாம்மா ...."என்று வராண்டாவில் அழைத்து கொண்டு சென்றார் .அந்த நீண்ட வராண்டாவில் நடந்த வாறே ,"என்னமா இப்படி கேட்டுட்டே ...உனக்கு விஷயமே தெரியாதா ..."என்று ஆரம்பித்தவர் தன் தலையில் தானே தட்டி கொண்டு ,"யாருக்குமே தான் தெரியாது ...இன்னும் சார் இன்டெர்வியூ கொடுக்கலை ...விஷயம் ரொம்ப ரகசியமா வைத்து இருக்காங்க சமுத்திரா ....நேத்து நைட் காஞ்சிபுரம் சுத்தி 36 இடங்களில் நள்ளிரவில் மழையை கூட பொருட்படுத்தாமல் ரைட் நடந்துச்சு ...கிட்டத்தட்ட 2000 மேற்பட்ட சிலைகள் ,தங்கம் ,சில்வர் ,பஞ்சலோகம் ,கல்லுன்னு மீட்டு வந்து இருக்காங்க ...எல்லாமே ராஜா காலத்து கோயில் சிற்பங்க ....அது தவிர 300 குறையாத ஓலை சுவடிகளாம் ...அதில் விலை உயர்ந்த மருத்துவ குறிப்புக்கள் போகர் முதலிய சித்தர்கள் எழுதிய மருந்து பத்தி எல்லாம் இருக்காம் ...சாமிக்கு போட்டு வைத்து இருந்த நகைகளை மாத்திட்டு போலி நகைகளை வேற வச்சி இருக்காங்க ...பல பெரும் புள்ளிகள் இதில் ஈடு பட்டு இருக்காங்களாம் ...."என்றார் சோமு .

"என்ன அங்கிள் சொல்றீங்க ...இவ்வளவூ சிலைகளா ...விளையாடறீங்களா என்ன ?"என்றாள் சமுத்திரா நம்ப முடியாமல் .

"என்னமா இப்படி சொல்லிட்டே ...IG சுந்தர மாணிக்கவேல் அய்யா அவருடன் சிலை கடத்தல் சிறப்பு பிரிவூ ,பொருளாதார குற்ற பிரிவூ (ECONOMIC OFFENCES WING )ஆஃபீஸ்ர் முப்பது பேர் ஒரு மாசமாய் இங்கே தான் மா முகாம் இட்டு இருங்காங்க ... வெளியே யாருக்கும் தெரியமா தினமும் ரைட் போய்ட்டு கிடைச்சவனை எல்லாம் நொண்டி நொங்கு எடுத்துட்டு இருக்காங்க ...அதில் ஒருத்தன் சொன்னது வைத்து நேத்து போன ரைட்டில் தான் இவ்வளவூ சிலை மீட்டு இருக்காங்க ...."என்றவர்கள் பேசி கொண்டே ரெண்டாம் தளத்தை அடைந்து இருந்தார்கள் .

"சுந்தர மாணிக்கவேல் சார் ....முதலமைச்சர் ஸ்பெஷல்லா நியமித்த நேர்மையான IG சார் ..அவரே வந்து இருக்காரா ...அப்போ விஷயம் பெருசு தான் .... "என்றாள் சமுத்திரா

இவர்கள் பேசி கொண்டே முதல் அறை ஒன்றை தாண்ட ,அடுத்த அறையில் இருந்து வெளி வந்த ஒருவன் இவர்களை கண்டு கோபத்துடன் இவர்கள் அருகே வந்தான் .

"என்ன சோமு சார் ...பிரஸ் யாரையும் உள்ளே விட கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லி கூட இந்த பெண்ணை ஏன் உள்ளே விட்டிங்க ...மேடம் IG சார் இன்டர்வியூ கொடுப்பார் ..ப்ளீஸ் கோ அபேரட் ...கீழே வெயிட் செய்யுங்க ..."என்றான் எரிச்சலுடன் .

"சார் ...சார் ...இவங்க பிரஸ் இல்லை சார் ...உங்களை பார்க்க தான் வர சொல்லி இருந்தீங்களாம் ...இவங்க காலேஜ் பிரென்ட் காணோம் என்று கம்பளைண்ட் கொடுத்த ..."என்று அவர் சொல்வதற்குள் ,

"மிஸ் சமுத்திரா தேவராஜன் ரைட் ...சாரி உங்களை நாங்க தான் வர சொல்லி இருந்தோம் ...பை தி பை ஐ யாம் SP அழகர்நம்பி...திஸ் வே ப்ளீஸ் ...சோமு சார் ..நீங்க போங்க ...இனி யார் என்ன சொன்னாலும் இனி யாரையும் இங்கே அல்லோவ் செய்யாதீங்க ...."என்றவன் சமுத்திராவை நான்கு அறைகள் தாண்டி அழைத்து சென்றான் .

அந்த அறை மிக பெரிதாய் இருந்தது .பெரிய ஆஃபீஸ்ர் ஒருவரின் அறை போல் இருந்தது .அங்கு அழைத்து சென்றவன் ,"ப்ளீஸ் டேக் யுவர் சீட் ....சார் ஒரு இன்வெஸ்டிகஷன்ல இருக்கார் ...வந்துடுவார் ...."என்றான் அழகர்நம்பி .

"என்ன சார் நடக்குது இங்கே ..நீங்க தானே வர சொல்லி இருந்தீங்க ....என் பிரென்ட் கவிக்கு என்ன ஆச்சு சார் ..."என்றாள் சமுத்திரா நடப்பது ஒன்றும் புரியாமல் .

"சிஸ்டர் !...டென்ஷன் ஆக வேண்டாம் ....உங்க பிரென்ட் கவி நல்லாவே இருக்காங்க ...மீதத்தை சார் வந்து சொல்வார் ...இப்போ கவியையும் ,அவங்க பியான்சி மிஸ்டர் நிகில்லையும் டாக்டர் செக் செய்ய வந்துட்டு இருக்காங்க ...டோன்ட் ஒர்ரி ...அவங்களை காணோம் என்று கம்பளைண்ட் கொடுத்து இருந்தீங்க இல்லை அதான் இங்கே வரவழைச்சோம் ...மிஸ் கவியும் உங்களை தான் கேட்டாங்க ."என்றான் அழகர் .

"எந்த சார் பத்தி சொல்றீங்க சார் ?"என்றாள் சமுத்திரா -இனம் புரியாத படபடப்பு நெஞ்சில் எழ

"ACP ஆதவ் காலேஸ்வர் ...சிலை கடத்தல் தடுப்பு பிரிவூ ஸ்பெசல் ஆஃபீஸ்ர் ..."என்றான் அழகர்

"IG சுந்தர மாணிக்கவேல் சார் மகனா ?"என்றாள் சமுத்திரா

"ஆதவ் ... ஐ மீன் ACP சார் உங்களுக்கு தெரியுமா சிஸ்டர் ?"என்றான் அழகர் .

"இல்லை சார் ....பேர் கேள்வி பட்டு இருக்கேன் ...என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ...ரொம்ப நேர்மையானவர் ..தப்புன்னா ஸ்பாட் தண்டனை என்று ஒரு புக் ல போட்டு இருந்தாங்க ....பார்த்தது இல்லை ...."என்றாள் சமுத்திரா .

"இப்போ வருவார் பாருங்க ....எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ....ஏதாவது வேணும் என்றால் சொல்லுங்க ...ஹெசிட்டேட் செய்யாதீங்க சிஸ்டர்....போலீஸ் ஸ்டேஷன் என்றால் பெண்கள் வர சங்கட படுவாங்கன்னு தெரியும் ...என்னை உங்க பிரதர் மாதிரி நினைசீக்கோங்கோ ...அடுத்த அறையில் தான் இருப்பேன் ..."என்றவன் தலை அசைப்புடன் வெளியேற அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தாள் சமுத்திரா .

'என்னங்கடா நடக்குது இங்கே ...தலையும் புரியலை வாலும் புரியலை ....இந்த கவிக்கும் இந்த சிலை கடத்தல் ஏதாவது லிங்க் இருக்குமோ ....ஏற்க்கனவே அது ஒரு முந்திரி ...அவ லவ் செய்த அந்த நிகில் ஒரு முந்திரி ...ரெண்டும் சேர்ந்து என்ன செஞ்சி வச்சி இருக்குங்கனே தெரிலையே .....'என்று மனதிற்குள் புலம்பியவள் ,நேரம் ஆக ஆக பொறுமை இழந்தவளாய் தன் சாம்சங் மொபைல் எடுத்தாள் .

அதில் யூ ட்யூப் ஆன் செய்து, பாடல்களை ஓட விட்டு ஹியர்போன் மாட்டிக்கொண்டு ,அந்த அறையில் மாட்டி இருந்த படங்களை பார்த்தவாறே நடந்து கொண்டு இருந்தாள்.

அதே சமயம் மற்றொரு அறையில் அமர்ந்து இருந்தனர் கவியும் அவள் பியான்சி நிகிலும் .உடன் ஒரு போலீஸ் ஆஃபீஸ்ர் .அதே சமயம் உள்ளே வந்தார் அவர் .

shivaji-limg3.jpg

"ஹலோ சார் ...ஐ ஆம் டாக்டர் சிவானந்த் ."என்றபடி வந்தார் அந்த அறுபது வயது முதியவர் .பார்க்க அப்படி ஒரு தேஜஸ் அந்த முகத்தில் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"வாங்க சார் .....உங்க ID ப்ளீஸ் ..."என்றவரிடம் ID கொடுக்க அதை வாங்கி பார்த்தவர் ,"சார் !இவங்க தான் சார் ...தலையில் அடி பட்டு இருக்கு ...என்னன்னு பாருங்க ......"என்றார் அந்த போலீஸ்

"கொஞ்சம் வெளியே வெயிட் செய்யுங்க சார் ."என்றார் டாக்டர் .

அவர் வெளியே சென்ற உடன் இருவரையும் சோதித்த அவர் ,நெற்றியில் பட்டு இருந்த அடிக்கு மருந்திட்டு பிளாஸ்டர் ஒன்றை ஓட்டினார் .அவர் விரல் மேல் பட்டதும் அப்படி ஒரு பரவசம் இருவர் உடம்பிலும் ஓட அவர்கள் தேகம் சிலிர்த்தது .வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒருசாத்வீக சூழலில் மாட்டியது போன்ற உணர்வூ இருவருக்கும் .

"சார் !...உங்களை நான் அந்த ரவி வீட்டில் பார்த்தேன் .....அவங்க என்னை சுட வந்த போது நீங்க அங்கே இருந்தீங்க தானே ...."என்றான் நிகில் .

"அது நான் இல்லை மை சன் ...தலையில் அடி பட்டு இருக்கு இல்லையா ...அதான் யாரையோ பார்த்துட்டு அது நான் என்று சொல்றே .....கண் மூடி தூங்கு ....எல்லாம் சரி ஆகிடும் ...கோ டு ஸ்லீப் ....டோன்ட் ஸ்ட்ரெஸ் யூர்செல்ப் ....மனசை போட்டு குழப்பிக்காதே .....ஸ்லீப் ..."என்ற அவர் குரலும் ,அவர் போட்ட இன்ஜெக்ஷன் வேலை செய்ய இருவரும் சிறு பிள்ளைகள் போல் கண் மூடி உறங்க ஆரம்பித்தனர் .

தூங்கும் இருவரையும் ஒரு நொடி நின்று பார்த்தவரின் முகத்தில் மெல்லிய புன்முறுவல் மலர்ந்தது .
images (2).jpg

அதே சமயம் அடுத்த அறையில் பாட்டு கேட்டு கொண்டு உலவி கொண்டு இருந்த சமுத்திரா பக்கத்து அறையில் இருந்து வெளி வந்த அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு இருந்தாள்.

1352262288_rebel-32.jpg

யப்பா என்ன உயரம் , நிச்சயம் ஆறடி ஒரு அங்குலம் இருப்பான் .45-35-18.கண்களில் அப்படி ஒரு தேஜஸ் .அவன் நின்ற விதமே தனி கம்பீரத்தை தர, அந்த மாநிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு! முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும் என மொத்தத்தில் ஆண் அழகன் .பல பெண்களின் கனவூ நாயகன்.

விசாரணை முடித்து விட்டு வந்து இருப்பான் போல் இருந்தது .காக்கி பேண்ட் அணிந்து இருந்தவன், காக்கி சட்டையை களைந்து உள்ளே அணிந்து இருந்த கருமை நிற பனியனுடன் ,தசைகள் முறுக்கேறி நின்ற விதம் ....நிச்சயம் அனல் மூச்சினை ஏற்படுத்தாமல் இருக்காது .

"ஆண்மை என்ற வார்த்தைக்கு ஏற்ற தோற்றம் நீ தானா

தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இது தானா ...."--
என்ற பாடல் வரிகள் இவனுக்காகவே எழுதி இருப்பார்களோ ..!

"ஹலோ மிஸ் .....யார் நீங்க ?"என்றான் என்றான் வழிந்த வியர்வையை ட்வெல் கொண்டு துடைத்த படி .

prabhas-new-getup.jpg
அவள் தான் காதில் ஹியர் போன் மாட்டி பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறாளே ,இவன் கேட்டது எங்கே அவளுக்கு கேட்க போகிறது ?

ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் ,இவன் கேட்க கேட்க பதில் கூறாமல் திரும்பி நின்று கொண்டு இருக்கும் அந்த பெண்ணின் மேல் கோபம் பிறக்க என்ன செய்கிறோம் என்று புரியாதவனாய் தன் பலம் கொண்ட மட்டும் அவள் கையை பிடித்து திருப்ப ,அதிர்ந்து போன அவளின் கரங்களில் இருந்து பறந்து சென்றது போன் .

இழுத்த வேகத்தில் பேலன்ஸ் தவிர விட ,இழுத்தவன் மேல் மோதி நின்றாள் சமுத்திரா .இதுவே ராஜாக்கள் காலமாய் இருந்தால் ,"கண்கள் இரண்டும் கூர் வாட்களாய் ஒன்றை ஒன்றை உரசின"என்று கூறி இருப்பார்கள் .இது நிகழ் காலம் ஆயிற்றே .”ரெண்டு அக்னி ஏவுகணைகள்” போல் இவர்கள் கண்கள் மோதி கொள்ள ,கெமிஸ்ட்ரி அங்கு அணுஆயுதமாய் வெடித்து சிதறியது.

பறந்து சென்று விழுந்த போன் தன் வேலையை செவ்வனே செய்தது .யூ டூப் அடுத்த பாடல் தானாய் பாட ஆரம்பித்தது .

நறுமுகையே நறுமுகையே

நீயொரு நாழிகை நில்லாய்

செங்கனி ஊறிய வாய் திறந்து

நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றிதறள நீர்வடிய கொற்றப்

பொய்கை ஆடியவள் நீயா

திருமகனே திருமகனே

நீ ஒரு நாழிகைப் பாராய்

வெண்ணிறப் புரவியில் வந்தவனே

வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்

போய்கை ஆடுகையில்

ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா

மங்கை மான்விழி அம்புக்ள்

என் மார் துளைத்ததென்ன

பாண்டி நாடனைக் கண்டு என்

உடல் பசலை கொண்டதென்ன

நிலாவிலே பார்த்த வண்ணம்

கனாவிலே தோன்றும் இன்னும்

நிலாவிலே பார்த்த வண்ணம்

கனாவிலே தோன்றும் இன்னும்

இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை

இடையினில் மேகலை இருக்கவில்லை


ஞாயும் ஞாயும் யாராகியறோ ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன

யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன

திருமகனே திருமகனே

நீ ஒரு நாழிகைப் பாராய்

வெண்ணிறப் புரவியில் வந்தவனே

வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்

பொய்கை ஆடுகையில்

ஒற்றைப் பார்வை பார்த்தவனும் நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றிதறள நீர்வடிய கொற்றப்

பொய்கை ஆடியவள் நீயா

ஒருவேளை முன்னர் ஆற்றினில் நீர் ஆடும் போது சந்தித்த இரு உள்ளங்களை பற்றி நினைவூ படுத்துகின்றனவோ ?
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஆதவ்விற்கு தன் மேல் விழுந்த பெண்ணின் முகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ...வந்த கோபம் அந்த பெண்ணை கண்டதும் கானல் நீராய் மறைந்து போனது .தன் மனைவியாய் வர போகும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று உருவகப்படுத்தி இருந்தானோ அந்த நினைப்பிற்கு உயிர் வந்து விட்டதை போல் தன் மேல் சாய்ந்து இருக்கும் பெண் இருக்க அவன் திகைத்து போய் நிற்க ,சமுத்திராவோ கனவில் வந்து காதல் தொல்லை புரிந்து கொண்டு இருந்த உருவத்தை நேரில் கண்டதும் திகைத்து விழித்து கொண்டு இருந்தாள்

images (1).jpg

விட்ட குறை தொட்ட குறை போல் ,பூர்வ ஜென்மத்து பந்தம் கை சேர்ந்தது போல் அலை பாய்ந்து கொண்டு இருந்த அந்த இரு உள்ளங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டதை போன்ற நிம்மதி இருவருக்குள்ளும் .இருவருக்கும் ஏன் என்று புரியாமல் கண்கள் தானாய் கலங்க ஆரம்பித்தது .கை எடுத்தால் மறைந்து விடுவார்களோ என்று பயத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்து கொண்டனர் .


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..

அழுதால் கொஞ்சம் நிம்மதி,

பேசமறந்து சிலையாய் இருந்தால்....

பேசமறந்து சிலையாய் இருந்தால்...

அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....

அதுதான் காதலின் சந்நிதி

எவ்வளவூ நேரம் அப்படியே உறைந்து நின்றார்களோ ,"சார் !"என்ற அழைப்பு இருவரையும் பிரித்தது .

"வாங்க டாக்டர் சார் ..செக் செய்துடீங்களா ....அடி பலம் இல்லையே .."என்றான் தன்னை மீட்டு கொண்ட ஆதவ் .

"இல்லை சார் ....தே ஆர் ஆல்ரைட் ....தூங்க சொல்லிட்டு வந்து இருக்கேன் ....ரொம்ப ரெஸ்ட்லெஸ் சா இருந்தாங்க ....கொஞ்ச நேரத்தில் முழிச்சுடுவாங்க ....அப்போ நான் கிளம்பறேன் ..."என்றார் டாக்டர் சிவானந்த் .

"தேங்க் யு சார் ...கிரேட் ஹெல்ப் "என்றான் ஆதவ்

"உதவ தானே வந்தேன் .......என் கடமை ஆச்சே ....சீக்கிரம் தேதி பார்த்து திருமணம் செய்துட்டு ராஜா -ராணி மாதிரி சந்தோசமா வாழுங்க ...."என்றார் சிவானந்த்

prabhas_1507171185.jpeg

ஒரு கணம் திகைத்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ,"ஷோர் சார் .....நிச்சயம் உங்களை இன்வைட் செய்வோம் ..."என்றனர் கோரஸாக .

ஆதவ் கை நீட்ட எந்த தயக்கமும் இல்லாமல் அவன் கரத்தில் தன் கரத்தை வைத்தாள் சமுத்திரா .அதை பார்த்து புன்னகையுடன் அகன்றார் சிவானந்த் .

அவர் சென்றதும் ,"ஹாய் ஐ ஆம் ஆதவ் காலேஸ்வர் ..."என்றான் ஆதவ் .

"ஹாய் ஐ ஆம் சமுத்திரா ..."என்றாள் அவள் .

"முத்து .....நித்திலம்ன்னு கூட சொல்வாங்க ...எனக்கு பேர்ல்னா (pearl )ரொம்ப பிடிக்கும் ...ஐ லவ் நித்திலம் ...ஐ மீன் இந்த முத்தை ரொம்ப பிடிச்சி இருக்கு ....."என்றான் அவன் .

"இந்த முத்து விற்பனைக்கு இல்லை சார் ..."என்றாள் அவள் .

"விலை மதிப்பிடவே முடியாத முத்து தான் இதுன்னு தெரியுது ...இதற்கு இடாய் என் உயிரை கொடுத்தாலும் இந்த முத்து என் கை சேராதா ?"என்றான் ஆதவ் .

"சேருமா ...சேராதான்னு தெரியாமலா அவர் கிட்டே sure என்று சொன்னீங்க சார் ....உங்க அப்பாவை கூப்பிடுங்க ...அவர் கிட்டே கம்பளைண்ட் செய்யறேன் உங்களை பத்தி .."என்றாள் சமுத்திரா முகம் சீரியசாக .

'நாம் தான் அவசர பட்டுட்டோமோ 'என்று நினைத்த ஆதவ் ,"வருவார் கம்பளைண்ட் செய்யுங்க .சாரி "என்றான்

"ஆமா ACP சார் ...கம்பளைண்ட் செய்ய தான் போறேன் ...இத்தனை நாள் கனவில் வந்து இம்சை செய்த உங்கள் அன்பு மகன் ,இப்போ நிஜத்தில் என் இதயத்தை களவாடிட்டார் ...இந்த திருடனை எப்படி போலீஸ் ஆக்கினீங்க என்று நியாயம் கேட்க தான் போகிறேன் ...."என்றவள் அதற்கு மேல் முடியாமல் சிரிக்க ஆரம்பிக்க ,அவளுடன் சேர்ந்து நகைக்க ஆரம்பித்தான் ஆதவ் .

அதே சமயம் வெளியே காரிடோரில் நடந்து கொண்டு இருந்த சிவானந்த் மேல் வந்து மோதினார் தேவராஜன் .
lIeAx88.jpg

"ஓஹ் சாரி சார் ...தெரியாம வந்துட்டேன் ..கவனிக்கலை ..."என்றவர் இடித்த வேகத்தில் தன் கையில் இருந்து கொட்டிய பொருட்களை சேகரிக்க ,அவருக்கு உதவி செய்தார் சிவானந்த் .

சேகரித்த பொருட்களில் அவர் கையில் வந்தது முத்துசாமி தீக்ஷிதரின் பாடல் பதித்த தகடு தான் .

அதை கண்ணில் ஒற்றி கொண்டவர் ,"இசை சக்ரவர்த்தியின் இசையை வெல்ல யாரால் முடியும் இல்லையா தேவராஜா ?"என்றார்

"ஓஹ் சார் உங்களுக்கும் பழம் எழுத்துக்கள் தெரியுமா ...."என்றார் தேவராஜன் வியப்புடன் .

"ஏன் தெரியாமலா இதே போல் ஒன்று வாங்கி வைத்து இருக்கேன் ..."என்றார் சிவானந்த் .

"சார் என்ன சார் சொல்றீங்க ..இதே போல் வாங்கி வைக்க எப்படி சார் முடியும் ?இது தங்கத்துல செய்ய பட்டது சார் ....முத்துசாமி தன் கையால் செதுக்கிய பாடல் சார் ..."என்றார் தேவராஜன் அதிர்ந்தவராய் .

"என்ன தேவராஜா ...கற்றது எல்லாம் மறந்து விட்டதா என்ன ?உண்மையான தங்க தகட்டிற்கும் ,தங்க மூலம் பூச பட்ட போலிக்கும் கூடவா உனக்கு வித்தியாசம் தெரியவில்லை ?இது போலி தேவராஜா ...நீயே பார் ....சந்தேகமாய் இருந்தால் இங்கே பழமை பரிசோதிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் ...பரிசோதித்து பார்த்து கொள் ...தஞ்சையில் இப்படி போலி தகடு செய்து அது உண்மை என்று விற்பனை செய்கிறார்களாம் ....ஏமாந்து விடாதே .."என்ற அவர் கிளம்ப ,அந்த தகட்டை பரிசோதித்த ஆய்வாளர் அது போலி என்று சொன்னார்

"நல்லவேளை ...தக்க சமயத்தில் உண்மை தெரிந்தது .இல்லையென்றால் என் மானம் போய் இருக்கும் ...கடவுள் மாதிரி வந்து காப்பாற்றினார் அவர் ."என்றார் தேவராஜன் பெரு மூச்சு விட்டவாறு .

பொறுமையாய் படிகளில் இறங்கி சென்ற அந்த சிவானந்தர் கைகைளில் இருந்தது ஒரு தகடு .அதன் ஜொலிப்பு வைத்தே சொல்லி விடலாம் அது சுத்தமான தங்கத்தில் செய்ய பட்ட தகடு என்று .அதை கண்டு புன்னகைத்தவர் தன் பிரீப் கேஸ்சில் வைத்து மூடினார் .
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அதே சமயம் பிரஸ் மீட் ஆரம்பம் ஆகி இருந்தது ஆதவ் காலேஸ்வர் பேட்டி கொடுத்து கொண்டு இருந்தான். அவனை காதலோடு கண்களால் அணைத்து கொண்டு இருந்தாள் தேவராஜன் ,சுந்தர மாணிக்கவேல் உடன் நின்ற சமுத்திரா -அவனின் நித்திலம்
idol_farmhouse.jpg

"வணக்கம் தமிழகம் கலைகளின் சுரங்கம் என்பதை மறுப்பதற்கில்லை .அதை தெரிந்து வைத்து இருப்பதால் தான் இவற்றினை விற்க பல பேர் தயங்குவதில்லை .சில மாதமாய் இங்கு உள்ள கோயில்களில் இருந்து பல சிற்பங்கள் -தங்கம் ,வெள்ளி ,கல் ,பஞ்ச லோகம் என்று 1000 கணக்கில் கொள்ளை அடிக்க பட்டு போலி சான்றிதழ் வாங்க பட்டு ஏற்றுமதி செய்ய படுகிறது .600 கிலோ உள்ள பெரிய சுதை சிற்பங்களை கூட திருடி அவற்றை கப்பலில் ,லாரியில் பழம் ,காய் என்று ஏற்றுமதி செய்கிறார்கள் .இது பல பில்லியன் டாலோர் புழங்கும் தொழில் .நேற்று நடந்த ரைடில் கிடைத்த சிற்பங்கள் எண்ணிக்கை மட்டும் 2000 மேல் ...ஒரு சிற்பம் விற்க படுவது ஒரு சமுதாயத்தின் அடையாளத்தை அழிப்பதற்கு சமம் .கடவுள் இருக்கிறார் இல்லை என்பது இங்கு பெரிசு இல்லை ....நமது முன்னோரின் திறமை ,அறிவூ ஏதோ ஒரு நாட்டின் கோடீஸ்வரனின் ஷோ கேஸ் பொம்மை ஆக விட்டுட்டு இருக்கோம் ....பிலடெல்பியா அருங்காட்சி அகத்தில் மதுரை மதன கோபால ஸ்வாமி சிலைகள் தனி ஒருவனின் சொத்தாய் காட்சிக்கு வைக்க பட்டு இருக்கிறது .36வருடம் முன் களவாட பட்ட கல்லிடைக்குறிச்சி அறம்வளர்த்த நாயகி கோயில் சிற்பங்களை 2018 தான் மீட்டோம் ....வருடத்திற்கு 10,000 குறையாத சிலைகள் விற்கப்படுகின்றன என்று ஆய்வூ அறிக்கை சொல்கிறது .அந்த திருட்டு ஆட்கடத்தல் வரை போய் இருக்கிறது ..ரோடு போடும் பணிக்காக நிலம் தோண்டும் போது கிடைத்த தகடு ஒன்று முன்னர் காணாமல் போன ஆதித்ய கரிகாலன் அரண்மனை என்று நம்பி அதை ஆராய்ச்சிக்காக கொடுத்த ஆஃபீஸ்ர் நிகில் என்பவரை கடத்தி இருக்காங்க ....பத்திரமாக அவரை மீட்டு விட்டோம் .."என்றான் ஆதவ்

_8fb5271c-5d55-11e6-9d35-61702936114d.jpg

"அப்போ காஞ்சிபுரத்தில் நிலத்துக்கு அடியில் அப்படி ஒரு தங்க அரண்மனை இருக்கா ?"என்றார் ரிப்போர்ட்டர் ஒருவர் .

dc-Cover-h8ihm0kfiep9jg5u597o2f2q55-20180928060024.Medi (1).jpeg

"இதற்கு நான் பதில் சொல்வதற்கு பதில் திரு தேவராஜன் ,இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஆக இருந்து ஓய்வூ பெற்றவர் இருக்கார் .அவர் சொன்னால் சரியாய் இருக்கும் ."என்று கை காட்ட தேவராஜன் பேச ஆரம்பித்தார் .

IG-Pon-Facebook-J-Prabhu-Agamudayar.jpg

"வணக்கம் ....நிகில் தன் கையில் கிடைத்த தகடினை என்னிடம் தான் கொடுத்தார் .நானும் முதலில் அதை தங்கம் என்று நினைத்தேன் ....அப்புறம் கார்பன் டேட்டிங் செய்து பார்த்த பின்னர் தான் அது தகரம் என்று தெரிந்தது .இது தஞ்சையில் பரவி வரும் நூதன மோசடி ....இதோ நிகில் என்னிடம் கொடுத்த தகடு ...."என்று காமெராவிற்கு தூக்கி காட்டினார் .

"சார் அப்போஅந்த தங்க மாளிகை என்பது ?"என்றார் ஒரு ரிப்போர்ட்டர்

"அந்த மாளிகை இருப்பதாக சொல்ல படும் இடம் இதோ வெளியே எட்டி பார்த்தீங்கன்னா கால்வாய் மாதிரி ஓடும் இந்த வேகவதி ஆற்றங்கரையில் தான் ...இதை இப்போ ஆறுன்னு கூட சொல்ல முடியாது ....இங்கே மண் ரொம்பவே நிலை தன்மை அற்றது ...அப்படி ஸ்திரம் இல்லாத இடத்தில் அரண்மனை எப்படி கட்ட முடியும் ?கட்டினாலும் மண்ணுக்குள் புதையாமல் நிற்குமா ?இதை யோசிக்காமல் எந்த மடையனும் கட்ட மாட்டான் ....தங்க மாளிகை என்பது எல்லாம் சுத்த பொய் ....."என்றார் தேவராஜன் .

C3MEXygWMAYTvHk.jpg

அதே சமயம் அழகர் வந்து சுந்தர மாணிக்கவேல் காதில்ஏதோ சொல்ல ,"இப்பொது வந்த தகவல் ,இந்த சிலை கடத்தலின் தமிழக தலைவன் ரவி என்பவன் தப்பி செல்ல முயன்ற போது ரோடு அச்சிடேன்ட் ஆகி இறந்து விட்டார் .அவர் இடம் இருந்து கிடைத்த டைரி வைத்து இதில் இந்திய அளவில் ,உலக அளவில் யார் எல்லாம் ஈடு பட்டு இருக்காங்கன்னு தெரிய வரும் ..."என்றார் சுந்தர மாணிக்கவேல்

பேட்டி அதோடு முடிய ,"ராஜ் எப்படி டா இருக்கே ...டெல்லியில்பார்த்தது ....இருபது வருஷம் ஆச்சுடா ....."என்றார் சுந்தர் .

"நான் நல்லா இருக்கேன் ...நீ எப்படி இருக்கே ...."என்றார் தேவராஜன்

"உனக்கு ஒரு மகள் தானே ..எங்கே அவ ....?உனக்கு ஒரு மகன் தானே ....எங்கே அவன் ?"இருவரும் கோரஸாய் கேட்டு சிரித்தனர்

பின் இருவரும் தங்கள் பிள்ளைகளை தேட அவர்கள் இருவரும் தங்களுக்கு என்று தனி உலகம் --காதல் உலகம் உருவாக்கி அதில் சஞ்சரித்து கொண்டு இருப்பதை கண்ட தந்தையர் இருவரும் சிரித்தனர் ,

"அப்போ இவங்க பிறக்கும் போது நாம பேசி வைத்தது போல் திருமணத்தை முடித்து விடலாமா சம்மந்தி ?"என்றார் சுந்தர் .

"பேஷா செய்திடலாம் சம்மந்தி ....போகும் போக்கு பார்த்தா நமக்கு அந்த வேலை கூட இருக்காது போலெ இருக்கு ...சீக்கிரம் நல்ல நாள் பாருடா ...."என்றார் தேவராஜன் .

இவர்கள் பேசியதை கேட்டு கொண்டே வந்தனர் இருவரும் .

"இன்னைக்கே கூட நல்ல நாள் தான் டாட் ....பொண்ணு ரெடி ....மாப்பிள்ளை நான் ரெடி ....பெத்தவங்க நீங்க ரெடி ...இது கோயில் நகரம் ....திரும்பிய பக்கம் எல்லாம் கோயில் தான் ....ஏதாவது ஒரு கோயிலில் திருமணம் செய்துட வேண்டியது தான் ....என்ன நித்தி ...உனக்கு ஒகே தானே ?"என்றான் ஆதவ் .

"டபுள் ஒகே ...."என்றாள் சமுத்திரா .

1526609911-Baahu.jpg


Prabhas-Anushka-Shetty-are-not-a-couple.jpg
இனி இவர்கள் வாழ்வில் நிதமும் தேன் மழை பொழிந்து கொண்டே தான் இருக்க போகிறது .

இவர்கள் இங்கே மகிழ்ச்சியுடன் பேசி கொண்டு இருப்பதை கீழ் இருந்து பார்த்த சிவானந்த் முகத்தில் மெல்லிய புன்னகை பரவ ,அங்கு இருந்து நடந்து சென்ற அவர் உடன் கறுப்பு நிற நாய் ஒன்று நடந்து சென்றது .


"விண்டவர் கண்டிலர் ....கண்டவர் விண்டிலர்

முற்றும்.



 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top