• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 32

அத்தியாயம் – 33

“ நாம ஓரே வயித்துல பிறக்காதவங்களா இருக்கலாம்.... ஆனா ஓரே வீட்டுல பிறந்தவங்க தானே? அந்த பாசம் கூட உனக்கில்லையா?” கண்கள் இடுங்க கேட்பவளை கலங்கிய முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மைசரா.

“ நான் தான் நீங்க வேணும்.... உங்க சொந்தம் வேணும் னு பைத்தியக்காரி மாதிரி நெனச்சிட்டு இருக்கனோ னு இப்ப தோணுது சரா....”

“ அப்படியெல்லாம் இல்ல ரிதா.... ப்ளீஸ்.... புரிஞ்சிக்கோ...”

“நீ புரிஞ்சிக்கோ சரா.... பெரியவங்க சண்டை போட்டு பிரிஞ்சியிருந்தா.... நாமளும் அப்படி தான் இருக்கணுமா? அவங்கள சேர்த்து வைக்க வேண்டாமா? இன்னும் எத்தனை காலத்துக்கு சாச்சி இப்படியே இருப்பாங்க. நீயும் நானும் கல்யாணம் முடிஞ்சி போயிட்டோம் னா அப்புறம் அவங்களோட நிலைமை?” தன் தாயிக்காக பேசுபவளை பார்க்க பார்க்க இன்னும் தான் அன்பு சுரந்தது அவளிடத்தில்.

“ எல்லாரும் காருல ஏறியாச்சு. இன்னும் கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற படி உள்ளே வந்த ரமீஸ் தங்கைகளின் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என உணர்ந்தான்.

“ என்னாச்சு ரிதா?”

“ இந்த லூசு கடைக்கு வராதாம்....”

ஏன் என்பது போல அவன் பார்க்க,” உம்மா.... போக வேண்டாம் னு சொல்லிட்டாங்க” என்றாள் தலைகுனிந்து.

“ நான் சாச்சி கிட்ட பேசுறேன் னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறா காகா.... இவ கொஞ்சம் இங்க ஒட்டுதலா இருந்தா தானே சாச்சிக்கு இங்க வரலாம்ற எண்ணம் வரும்? ” என புகார் வாசித்தாள்.

அதற்குள் ரிஸ்வி கார் ஹாரனை ஒலிக்க விட்டு அழைத்தான்.

“ கிளம்பி வா சரா.... சாச்சி கிட்ட நாங்க பேசிக்கிறோம்”

“ இல்ல காகா.... உம்மா கோபப்படுவாங்க... ப்ளீஸ் நீங்க போயிட்டு வாங்க. நா... நா இன்னோரு நாள் வரறேன்” என்றதும் ரிதாவிற்கு பயங்கர கோபம்.

“ விடுங்க காகா.... மேடம் பெரியாள் ஆகிட்டாங்க. நாம சொன்னாலாம் வர மாட்டாங்க” என்று விட்டு வெளியே செல்ல, கலங்கிய சராவின் தலையை வருடி விட்டு சென்றான் ரமீஸ்.

இருவரும் காரில் ஏற மைசராவை காணாமல் மன்சூரின் முகம் வாடி போனது.

பிரச்சனை இது தான்..... இன்று அனைவரும் அவர்களின் ஜவுளிகடைக்கு சென்று திருமணத்திற்கான துணிகளை எடுத்து வருவதாக திட்டம். மைசராவிற்கும் போக ஆசை தான். ஆனால் மன்சூரும் அஸ்மாவும் உடன் வருவதாக கூற, அவளுக்கு போக பிடிக்கவேயில்லை.

“ அங்க போனா அந்த லூசு (மன்சூர்) ஏதாவது வந்து பேசும். அதற்கு இந்த லூசு (ரிஸ்வி) ஏதாவது சொல்லும். எதுக்கு வம்பு? அக்கடா னு வீட்டிலேயே இருப்போம்” என வர மறுத்து விட்டாள். அதற்கு தான் ரிதா அவளை திட்டி விட்டு சென்றாள்.

அனைவரும் கிளம்பி சென்ற பின் கீழே வந்தாள். ஹாலில் அமர்ந்திருந்த கமரை பார்த்து,” நீங்க போகலயா ஆச்சா?” என்றவள் “ என்னால தான் போகலயா?” என்றாள் தவிப்பாக.

“ அப்படி ஒன்னுமில்ல மா. நா போய் என்ன செய்ய போறேன்? எனக்கு வேண்டியதை சனோபரே பார்த்து வாங்கிடுவா. நீ ஏன் போகல?” என்றதும் வயிற்று வலி என சொல்லி மழுப்பிவிட்டாள். சபூரா அனுப்பவில்லை என்று சொன்னால் எங்கே போனை போட்டு கேட்டு விடுவார்களோ என பயம் அவளுக்கு. அவள் சபூராவிடம் கேட்கவுமில்லை. அவர் மறுக்கவுமில்லை....

“ மதியம் அவங்கெல்லாம் வெளியே சாப்பிட போறாங்களாம் சரா. அதனால தில்லுவயும் அனுப்பிட்டேன். நான் மன்சூர் கூட்டாளிங்களுக்கு சமைக்குற கரீம் கிட்ட நமக்கும் சேர்த்து சமைக்க சொல்றேன்” எனவும்

“ வேண்டாம் ஆச்சா. நமக்கு நானே சமைக்குறேன்”

“ உனக்கெதுக்குமா சிரமம்? உடம்பு சரியில்ல னு சொன்னியே”

“ அதெல்லாம் ஒன்னுமில்ல ஆச்சா. வெளியே போக தான் பிடிக்கலை. உங்க மருமக சமைக்குறதுக்கு நல்லாவே டிரெனியிங் கொடுத்திருக்காங்க.... சோ.... சிரமம்லாம் இல்ல” என்றவள்

“ என்ன சமைக்கலாம்?” என தாடையை தட்டி யோசித்து,” என் ஆச்சா காக முதன்முதலா சமைக்குறேன். அதனாஸ தடல்புடலா பிரியாணியே செஞ்சுடுறேன்.” என்றாள்.

“ உன் இஷ்டம்....” என புன்னகைத்தார் கமர்.

“ அப்போ பிரியாணியே செஞ்சிடுறேன்” என்று விட்டு சமையலறையை ஆராய்ந்து தேவையான பொருட்களை கமரிடம் கூற, யாருக்கோ போன் போட்டதில் அனைத்தும் பொருட்களும் வீடு வந்தது.

“ முதல்ல ஏதாவது இனிப்பு செய் சரா.....” எனவும் பெருவிரல் உயர்த்தி காட்டி “ டன்” என்றவள் வேலையில் இறங்கினாள்.

சுற்றி சுழன்று வேலை செய்யும் பேத்தியை பார்க்கையில் தன் மருமகள் இந்த வீட்டில் நடமாடிய நாட்கள் மனதிற்குள் நிழலாடியது.

“ என்ன ஆச்சா? அப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என சிரித்தாள்.

“ உன் உம்மாவும் இப்படி தான் ஒத்த ஆளா வேல பார்ப்பா.... என்னை ஒரு உதவி கூட செய்ய விடமாட்டா.... அதே நேரம் என்னை பக்கத்துலயே இருக்க சொல்லுவா. நீயும் அவள போலயே வேல செய்ற” என்றவரின் கண்கள் குளமாயின.

அவரை பார்த்து புன்னகைத்தவள் மீண்டும் வேலையில் பரபரப்பானாள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் மட்டன் பிரியாணி, எண்ணெய் கத்திக்காய், தயிர் பச்சடி, பாயாசம் எல்லாம் தயாராகியது.

கமர் மதிய நேர தொழுகையை முடித்து விட்டு வர ஆச்சாவும் பேத்தியுமாக அமர்ந்து சாப்பிட்டனர். பணியாட்கள் யாரும் இல்லாத நேரமாதலால் இருவரும் தங்கள் பாசத்தை தடையின்றி பொழிந்து கொண்டனர்.

“ அப்படியே சபூராவோட கை பக்குவம்” என சிலாகித்த படி பேத்தியின் சமையலை ரசித்து உண்டார் கமர்.

“ என்ன ஆச்சா..... உங்கள நம்பி இவ்ளோ பிரியாணி செய்து வைச்சா நீங்க இவ்ளோ கம்மியா சாப்பிடுறீங்க....” என அலுத்துக் கொண்டாள் சிறியவள்.

“ போதும் டா. நல்ல சாப்பிட்டேன். நம்ம மக்க கூட்டம் வந்தா இந்த பிரியாணி பஞ்சா பறந்துடும்” என சிரித்தவர் சற்று நேரம் உறங்க போவதாக கூறிவிட்டு செல்ல, தனியாக இருக்க பிடிக்காமல் சரா வும் அவருடனே சென்றாள்.

சிறிது நேரத்தில் கமர் கண்ணயர்ந்து விட, மைசரா அலைபேசியில் ஏதோ நாவல் படித்துக் கொண்டிருந்தாள். இன்றைய நாள் ரிதாவின் சண்டையோடு ஆரம்பித்தாலும் கமரின் பரிவில் நிறைந்திருந்தது.

வாயிற் மணியோசை கேட்டு எழுந்து வந்தாள் மைசரா. அனைவரும் வந்துவிட்டனர் என எண்ணி கதவை திறந்தவள், களைத்த முகத்தோடு நின்றிருந்த ரிஸ்வியை பார்த்து நெற்றி சுருக்கினாள். உடன் யாருமில்லை.... ஆனாலும் ஏதும் வினவாது உள்ளே செல்ல, “கன்மா..... கன்மா....” என அழைத்தபடி ரிஸ்வி வந்து ஹாலில் அமர்ந்தான்.

மாடி படியில் ஏறிக் கொண்டிருந்தவள்,” ஆச்சா தூங்குறாங்க....” என்றாள் மெல்லிய குரலில். தலையை தாங்கிய படி அவன் அப்படியே சோபாவில் சாய, பசியின் சாயல் அவன் முகத்தில் அப்பட்டமான தெரிந்தது.

மீண்டும் படியேறியவள் மனம் தாங்காது, “ ஏதாவது வேணுமா?” என்றாள் தயக்கமாக.

அவளை திரும்பி பார்த்தவன்,” பசிக்குது.....” என்று விட, தன்னிச்சையாக அவளது விழிகள் கடிக்காரத்தை தொட்டது.

அது நாலே முக்காலை காட்ட, “ இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்பது?” என பார்வையில் கேட்டு முறைத்தவள் கீழிறங்கி சமையலறைக்கு சென்றாள்.

பிரியாணியை அவனில் வைத்து சுடு செய்து மேஜைக்கு கொண்டு வர, அதற்குள் முகம் கழுவி விட்டு வந்தமர்ந்திருந்தான் ரிஸ்வி.

மைசரா வைத்திருந்த பாயாசத்தை கிளறி கொண்டிருந்தவனை ஏறிட்டாள் சரா. அவளின் பார்வையை உணர்ந்தவன்,” இல்ல.... நேற்று டீல பெப்பர் போட்டேன் னு இன்னைக்கு பாயாசத்துல ஏதாவது கலந்திருப்பியோ னு ஒரு டவுட்” என இழுக்க,

“ எனக்கு பழிவாங்குற புத்தியெல்லாம் கிடையாது” என்றாள் கடுப்பாக.

“ ஆமாமா.... அந்த புத்திய தான் சாம்பார் ஊற்றும் போது பார்த்தேனே” என ஒரு கொட்டு வைக்க, முகத்தை திருப்பிக் கொண்டாள். எல்லா பதார்த்தங்களையும் மேஜையில் கொண்டு வந்து வைத்து விட்டு ஹாலுக்கு சென்றுவிட்டாள் மைசரா.

மாலை நேர தொழுகையை நிறைவேற்ற எழுந்து வந்த கமர்,” தூங்கலயா சரா..... செத்த படுக்க வேண்டியது தானே?” எனவும் ரிஸ்வி வந்த விஷயத்தை சொன்னாள் பெண்.

அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே பெரிய ஏப்பத்தோடு வந்தான் ரிஸ்வி.

“ கன்மா கரீம் பாய் பிரியாணி சூப்பர்....”

அவன் கூறியதை கவனியாதவர்,“ நேரத்துக்கு சாப்பிடாம அப்படி என்ன வேலை வேண்டி கிடக்கு? உன்னை கவனிக்காம அங்க என்ன பண்ணிட்டு இருக்கா இந்த ரிதா? வரட்டும் அவ..... கல்யாண வேலைய பார்க்குறேன் னு உடம்ப கவனிக்காம இருந்திடாத ராஜா” என கரிசனத்தோடு கோபப்பட்டார் கமர்.

“ அவங்கள கடையில விட்டுட்டு நான் குடோன்க்கு போயிட்டேன் கன்மா... அங்க கொஞ்சம் வேலை இழுத்துடுச்சி..... “

“ இந்த காசிம் மருமகன் தான் இருக்காங்கள. அவங்கள பார்த்துக்க சொல்றது தானே?”

“ அய்யய்யோ..... வேற வினையே வேண்டாம்.... என்னை பார்த்தாலே முறைக்கிறார் மனுஷன்” என சிரித்தான்.

“ ப்ச்.... அவரு குணமே அப்படி தான்.... என்னத்த செய்ய ரிஸ்வி.... குடும்பம்னா எல்லாரையும் அனுசரிச்சி தான் போகணும்”

அவரை ஒரு நொடி ஆழ பார்த்தவன்,” அப்போ என் உம்மா இந்த குடும்பம் இல்லையா கன்மா? அவங்கள மட்டும் இப்படி ஒதுக்கி வைக்கலாமா?” என்றதும் கமர் அதிர்ச்சியாக, அப்போது தான் மாடி செல்ல திரும்பிய மைசராவும் திகைத்து பார்த்தாள்.

“ வாப்பா சொன்னாங்க கன்மா.... என் உம்மா ஏதோ சொல்லி தான் உங்க ரெண்டாவது மருமக வீட்ட விட்டு போயிட்டாங்க னு. அவங்க தப்பு பண்ணலனா அதை நிரூபிக்கறது தானே நியாயம்.... அதை விட்டுட்டு கோழை மாதிரி ஓடி போறது எப்படி தீர்வாகும்?” கத்தியை விட கூர்மையான வார்த்தை ஒன்றை உதிர்த்து விட துடித்து போயினர் பெண்கள் இருவரும்.

அருகில் மைசராவை வேறு வைத்து கொண்டு அவன் பேச,” போதும் ரிஸ்வி” என அதட்டினார் கமர்.

“ மருமகளுக்கு மட்டும் சப்போட் பண்ணுங்க.... பெத்த மகள விட்டுடுங்க.... அவங்க பண்ண காரியத்தால என் உம்மா காலம் பூரா கெட்ட பேர சுமக்குறாங்க....” என்றவன் கிளம்பி சென்றுவிட்டான்.

அவன் செல்லும் வரை பிடித்து வைத்து கண்ணீர் வெளி வர அதை துடைத்து விட்டவள்,” ஏன் ஆச்சா அவங்க அப்படி பேசிட்டு போறாங்க? என் உம்மா கோழையா?” என வெடித்தாள் மைசரா.

“ இல்ல மா.... அவன் ஏதோ கோபத்துல....” என விளக்கியவரை நோக்கி கையை உயர்த்தியவள்,” எதுக்காக என் உம்மா இந்த வீட்டை விட்டு போனாங்க.... எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்” என்றாள் திடமாக.

“ அது.... அது....”

“ எதுவா இருந்தாலும் பரவாயில்ல ஆச்சா.... கேட்குற பக்குவம் எனக்கிருக்கு...” என உந்த, அதற்கு மேலும் மறைக்காமல் நடந்ததை கூற தொடங்கினார் கமர்

- மழை வரும் .......

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
ரிஷ்வி தன் தாயை கோழை என்று சொல்லவும் துடித்துத் போயினர் சரா, பாட்டி இருவரும், தனக்கு என்ன நடந்ததுன்னு உண்மை சொல்லுங்கனு சரா கேட்கிறாள், என்ன நடந்தது? ???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top