• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 40(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
ஆனால் மீண்டும் தூக்கம் அவளை போலவே அருகில் வராமல் ஆட்டம் காட்டியது. அவள்???????? மூடிய இமைகளுக்குள் அவனவள் வந்து இம்சிக்க மெல்ல கண் திறந்தான். அரையிருட்டான அந்த அறையில் அருகில் ஓர் உருவம் வரி வடிவமாய் தெரிந்தது.

உவகை மிகுதியில் அதை வாரி அணைத்தவனின் கரங்களில் சிக்கியிருந்தது ஓர் பெரிய தலையணை. அதை இன்னும் இறுக்கியவனின் வன்னிதழ்கள் வார்த்தைக்கும் வலிக்குமோ என மிக மென்மையாய் உச்சரித்தன.....

“ மெஹர்..... ஐ லவ் யூ மெஹர்.... ஐ லவ் யூ மெஹர்.....ஐ லவ் யூ..... ஐ லவ் யூ டி பப்ளிமாஸ்....”

அறையெங்கும் பரவியிருந்த அமைதியை அவனது காதல் மொழிகள் ஆக்கிரமித்திருந்தன. அவன் விட்ட ஏக்கமூச்சுகள் கடல் தாண்டி வந்து அவளுக்கு புரையூட்ட, மேஜை மேலிருந்த தண்ணீரை எடுத்து பருகினாள் மைசரா மெஹர்.

“ சரா.... உன்னை யாரோ நினைக்குறாங்க” என ரிதா ஏதேச்சையாய் கூற,

“ ப்ச்.... இதையெல்லாமா நம்பற?” என்றவள் மனதில்,” இது உண்மைனா அவன் இந்நேரத்துக்கு புரையேறியே செத்திருப்பான்.” என ரிஸ்வியை நினைத்து கொண்டாள்.

“ நோ சரா.... நீ இப்படி எல்லாம் சொல்லபடாது..... லவ் பீல்லோட நினைச்சா நிச்சயம் அவனுக்கும் புரையேறும்” – இது நம்மோட மைண்ட் வாய்ஸ்....

புரண்டு புரண்டு படுத்தவனுக்கு நித்திரை மட்டும் எட்டாகனியாய் போக தன் அலைபேசியை உயிர்பித்தான்.

ஏதோ ஒரு கோப்புக்குள் ஒளித்து வைத்திருந்த தன்னவளின் பிம்பங்களை வெளி கொணர்ந்தான்.

“ ம்...... இங்க என்னை தூங்க முடியாம தவிக்க விட்டுட்டு அங்க நீ மட்டும் நிம்மதியா தூங்கிட்டிருக்கியா....” என அவன் இதழ்கள் தன் போக்கில் பிதற்றி கொண்டிருக்க, விழிகளோ திரையை தாண்டி தன்னவளை ரசித்து கொண்டிருக்க, திரையை தேய்த்து கொண்டிருக்கும் விரலோ அவள் ஸ்பரிசத்தை உணர்ந்தது போல் ஜாலம் காட்டிக் கொண்டிருந்தது. இங்கே குடும்பத்தில் பெரும் பிரளயத்தை உண்டாக்கிய அதே புகைப்படம் அங்கே அவன் மனதில் சுகமான பூகம்பங்களை உண்டாக்கி கொண்டிருந்தது.

ஆம்....... நம் ரிஸ்வி காதல் நோயில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறானாம். நோயின் மருந்து நம் சராவிடம் தான் உள்ளதாம் – இதை நான் கூறவில்லை அவனது அக அறிக்கை கூறுகிறது.

திரையில் கைகள் இரண்டையும் கன்னத்துக்கு அடியில் கொடுத்து சுகமாக தூங்கி கொண்டிருக்கும் மைசராவை இல்லை இல்லை அவனின் மெஹரை இமை கொட்டாமல் பார்த்திருந்தான்.

இனி வரும் வசனங்கள் அனைத்தும் ரிஸ்வியின் காதல் பிதற்றல்களே.....

“ எப்படி தூங்குறா பாரு.... ஒன்னுமே தெரியாத பச்ச புள்ள மாதிரி” என்றவன் அவளின் பிம்பத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

“ உன்னை பர்ஸ்ட் டைம் ட்ரெயின்ல பார்த்த போது பெருசுசா எதுவும் தோணலடி. பொண்ணு அழகா இருக்காளே அதுவும் அப்பாவியா தெரிறாளே இந்த மன்சூர் ஏதாவது சில்மிஷம் பண்ணுவானே னு தான் பயந்தேன். ட்ரெயின்ல நமக்குள்ள சண்டை வந்தப்ப உன் மேல செம கோபம் வந்திச்சு.ஆனா என் அறையில என் பக்கத்துல அழகா தூங்கிட்டு இருந்த உன்னை பார்த்ததும் அப்படியே என் மனசு வெண்ணெய் மாதிரி உருகிடுச்சு பேபி..... நல்லா புஸு புஸு னு ரசகுல்லா மாதிரி கன்னம். பிங்க் ரோஜா போல உதடு.....குழந்தை தனம் மாறாத உன் முகம். தூங்கும் போதும் கலையாத உன் உடை. எல்லாமே எல்லாமே எனக்கு புதுசா தெரிஞ்சது பேபி.... ஏதோ நாம ரொம்ப உரிமையா, ரொம்ப அன்னியோனியமா சேர்ந்து தூங்கிட்டிருந்த மாதிரி ஒரு பீல். சத்தமில்லாம மனச திறந்து உள்ள நுழைச்சிட்ட மெஹர். அந்த நிமிஷத்த அப்படியே சேமிச்சி வைக்கணும் னு தான் இந்த செல்பிய எடுத்தேன். நா உண்மையிலயே தூங்குற மாதிரி இருக்குல” என தன் காலரை தூக்கி விட்டு கொண்டான். ( அடப்பாவி ரிஸ்வி.... சரா நினைச்சது போல நீ எடுத்த போட்டோ தானா அது)

அதன் பிறகு அவள் பண்ணிய ஆர்பாட்டம் நினைவு வர “ ராட்சஸி..... அன்னைக்கு நான் உன்னை கிஸ் பண்ண வரலடி. நெற்றில விழுந்த முடிய ஒதுக்க தான் முயற்சி பண்ணேன். உன்ன தொடகூட இல்லைடி. ஆனா நீ என்னை பொறுக்கி ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணியா. அதான் எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சி. நம்மளோட முதல் சந்திப்பே மோதல்ல ஆரம்பிச்சதால என்னால உன் கிட்ட நெருங்கவே முடியல டி. ” என உருகினான்.

அதற்கு பின்பும் மோதலோடே தொடர்ந்த நாட்களை அவன் மனது சுகமாய் அசைபோட்டது.

“ நா உன்னை சீண்டும் போது ஒத்த புருவத்த தூக்கி காரசாரமா ஒரு முறைப்பு முறைப்பியே..... அய்யோ மெஹர் அதுல.... அதுல தான்டி நா மொத்தமா விழுந்துட்டேன். அதுக்காகவே உன்னை அதிகம் சீண்டுவேன்” என இப்போது அவளின் முறைப்பை எண்ணி சிலாகித்தான். மன்சூர் அவளை நெருங்கி விட கூடாது என்பதற்காக அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் அவனையும் சேர்த்தே சராவிடமிருந்து விலக்கி வைத்தது.

ஒரு பெருமூச்சை விட்டு அலைபேசியில் அடுத்த படத்தை பார்த்தான். சராவின் கரங்கள் மட்டும் தெரியும் படம் இது.

“ இது நம்ம லவ் ஸ்டோரில ரொம்ப முக்கியமான போட்டோ மெஹர். செம டர்னிங் பாய்ண்ட்..... மைசராவ என்னோட மெஹரா காட்டிய படம். தினமும் தொழுது முடிச்சிட்டு வரும் போது நீ தோட்டத்தில இருப்பியா அப்படியே திருட்டுதனமான உன்ன சைட்டடிச்சிட்டு தான் வீட்டுக்குள்ள போவேன். அன்னைக்கு நா வரும் போது நீ தோட்டத்தில இல்லை..... உன்னை தேடிகிட்டு தான் உள்ளே வந்தேன்.

ஆனா ரூம்லயும் நீ எனக்கு முதுகு காட்டுனா மாதிரி தான் உட்கார்ந்திருந்த, போன் பேசிட்டு நைசா கேமராவ ஆன் பண்ணி உன்னை அது மூலமா பார்த்திடலாம் னு நினைச்சி ஆன் பண்ணா, மடி மேல இருந்த உன்னோட கைகள் மட்டும் தெரிஞ்சுது. நீ போட்டிருக்க வளையல பார்த்து எனக்கு பயங்கர ஷாக். எனக்கு அந்த வளையலை பற்றி தெரியும் மெஹர். உன் மடியில இருந்த சபூரா மாமி போட்டோ வேற எனக்கு உண்மைய சொல்லாம சொல்லிடுச்சு. அதான் அத அப்படியே போட்டோ எடுத்துட்டேன்.

கள்ளி..... சொந்த வீட்டுக்கே விருந்தாளியா வந்திருக்கே.... ம்.... சென்னையில இருக்குற என் ஆளுங்க மூலமா உன்னை பற்றிய என் சந்தேகமெல்லாம் உண்மையா னு விசாரிச்சி தெரிஞ்சிகிட்டேன். நீ யாரு னு தெரிஞ்ச பிறகு நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவேயில்ல மெஹர்...” என்றவன் அடுத்த படத்தை பார்த்தான்.

புளியஞ்சோலை சென்ற போது அவள் நீரோடையில் கால் நனைத்தவாறு அமர்ந்திருந்த படம்.....

“ ம்.... என்ன சொல்றது.... நா ஒரு ப்ளான் போட்டா நீ ஒரு ப்ளான் போட்ட பாரு.... மச்சான நொந்து நூடுல்ஸ் ஆக்கிட்ட டி.” சிரிப்பும் கவலையுமாய் கூறியவன், “ அன்னைக்கு நீ போன் பேசிட்டே தனியா போனத நா முதல்லயே கவனிச்சிட்டேன்டி பப்ளிமாஸ்.... நாம ரெண்டு பேரும் தனியா போகலாம். உன் கிட்ட லவ்வ ப்ரபோஸ் பண்ணலாம் னு நினைச்சி தான் அவங்க எல்லாத்தையும் முதல்ல அனுப்பினேன். உன்னை பற்றி விசாரிக்க சொன்ன விஷயங்களையும் அப்போ தான் என் ஆளுங்க உறுதிபடுத்தினாங்க. அந்த போனுக்காக தான் வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்போ தான் இந்த போட்டோவ எடுத்தேன்.

ஆசை ஆசையா உன் கிட்ட ரொம்ப நேரம் பேசனும் னு சுத்து வழியில கூட்டிட்டு போனேன். ஆனா லூசு.... நான் ப்ளாக் டீ குடிக்கிறத பார்த்துட்டு பிராந்தி குடிக்கிறேன் நினைச்சிட்ட நீ.... அந்த கடுப்புல நீ ஏதோ பேச.... அத கேட்ட கடுப்புல நான் ஏதோ பேச னு அன்னைக்கு என் ப்ரபோஸ் பண்ற மூடையே கெடுத்துவிட்டுட நீ.....

அது மட்டுமா.... மறுநாள் என்னை காகா னு கூப்பிட்டு வெறுப்பேத்துனியே.... செம காண்டாகிட்டேன். அதான் கடுப்புல டீல பெப்பர், சால்ட்ட போட்டேன். காகா னு சொன்ன வாய பத்து தடவை கழுவ வேண்டாம்?”

அன்னைக்கு உன் இடம் தெரிஞ்சி இருந்துக்கோ னு சொன்னது கூட இந்த வீட்டுல பேத்தின்ற உன் இடத்துல உரிமையோட இரு. ப்ரெண்ட் னு அந்நியமா நிற்காதன்ற அர்த்தத்துல தான். உன் வாயிலிருந்தே உண்மைய வரவழைக்க தான் நான் அடிக்கடி உன்னை சீண்டி விட்டேன் மெஹர். ஆனா அழுத்தக்காரிடி நீ.... கடைசி வரைக்கும் உண்மையை சொல்லவேயில்ல.....

இப்படியே நாம சேர்ந்திருந்த பதினஞ்சி நாளும் நாம சேரா முடியாமலே போயிடுச்சி மெஹர். இதுல மன்சூரோட சதி நிறைய இருக்கு. ட்ரெயின்ல உன்னை போட்டோ எடுத்தது அவன் தான். அப்பவும் நீ என்னை தான் சந்தேகமா பார்த்தே. அந்த போட்டோவ டெலிட் பண்ண தான் நான் அவன் கூட கெஸ்ட் ஹவுஸுக்கு போனேன். நான் அவன் போன்ன உடைச்சிட்டேன்ற கோபத்துல நான் குடிக்க வைத்திருந்த ப்ளாக் டீயில பிராந்திய ஊற்றி வைச்சிட்டான். நானும் எப்பவும் போல ஒரே சிப்ல குடிச்சிட்டேன். அப்புறம் தான் அவன் பண்ணின வேலை தெரிஞ்சது. அதுக்கு தான் அவன் மண்டைய உடைச்சேன்.....

நீ கல்யாணத்துல போட்டிருந்த ட்ரஸ் கூட நா உனக்காக டிசைன் பண்ணது தான் மெஹர். அத அவன் எப்படியோ கண்டுபிடிச்சி, அதையும் அவனுக்கு சாதகமா மிஸ்யூஸ் பண்ணிகிட்டான். கல்யாணத்துல அந்த ட்ரஸ்ஸ நீ போடுவ னு நா எதிர்பார்க்கவேயில்ல மெஹர். அதுலயும் பிடிச்சவங்க கொடுத்தாங்க அதனால போட்டிருக்கேன் னு நீ சொன்னதும், மன்சூர நீ லவ் பண்ணிட்டே னு நினைச்சி நொறுங்கி போயிட்டேன். ஆனா நைட்டே ரிதா போன் பண்ணி மன்சூர் உங்கிட்ட நடந்தத சொல்லும் போது ஒரு பக்கம் பயங்கர கோபம் வந்தாலும் இன்னொரு பக்கம் நீ அவன லவ் பண்ணலன்றது அப்படி ஒரு சந்தோஷத்த கொடுத்துச்சி. அவன புரட்டி எடுத்துட்டேன் மெஹர். இனி உன் பக்கமே வரமாட்டான்.

பட் நான் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ண கூடாது னு தான் என் பேர வைச்சி உன்னை காயப்படுத்தியிருக்கான். கண்டிப்பா அந்த காயம் உன் மனசுல இருக்கும் அதான் நான் உன் கிட்ட பேசவேயில்ல.... கொஞ்ச நாள் போகட்டும் னு விட்டேன். இனிமே உன்னை என் மனைவியா ஆக்குறது தான் என் புல் டைம் ஜாப். அதுக்கான முயற்சிகளை தொடங்கிட்டேன் மெஹர் செல்லம். “ என குதூகலித்தவனின் வயிறு கத்த, அப்போது தான் மதிய வேளைவரை மெஹரின் நினைவுகளில் முழ்கி கிடப்பதை உணர்ந்தான்.

அடுத்த வந்த இரு நாட்களில் அவன் உடல் மட்டும் சிங்கப்பூரை சுற்றி வர, மனமோ மெஹரை சுற்றிக் கொண்டிருந்தது. மூன்றாம் நாள் உற்சாகமாய் இந்தியா வந்து இறங்கினான்.

ஆனந்த ட்விஸ்ட் எப்படி இருந்தது நட்பூஸ். போரடித்ததா? கொஞ்சம் சொல்லிட்டு போங்க மக்கா. ஆனந்த ட்விஸ்ட்டை தொடர்ந்து அமர்க்களமான ட்விஸ்ட் அடுத்த பதிவில்

- மழை வரும்....
தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

- பர்வீன்.மை
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
வாவ் அருமையான பதிவு, ரிஸ்வி பலே கில்லாடிதான் போ, சரா பத்தி எல்லாம் தெரிந்துகிட்டு ஒன்னுமே தெரியாதமாதிரி என்ன சீன்போட்ட சரா கிட்ட, இப்ப மை மெகர், பியாரி, மேரிமீனு பிணாத்திக்கட்டு இருக்க, நீ செய்தது எல்லாம் தெரிஞ்சிச்சு, சரா உன்ன துவைச்சு காயப்போட போறா, உன் நிலைமை என்ன ஆக்கப்போகுதோ, சும்மாவே செம காண்டுள இருக்க சரா, ரிஷ்வி உனக்கு இருக்கு ஆப்பு சுயரா ???????????
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
ரொம்ப பிடிச்சது ஆனந்த திருப்பம்..ஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top