கா.அ.க- 53(3)
அனைவர் மனமும் கனமாக, ரசியாவின் மனம் மட்டும் இன்னும் உலைகளமாய் கொதித்து கொண்டிருந்தது. இத்தகைய பேரன்பு கொண்ட தன் காகாவுக்கு சபூரா செய்த கைமாறு தான் என்ன? இப்பவும் கூட அவள் வீட்டில் நடந்த சம்பவத்தை பற்றி பேசவேயில்லையே....
மகனின் நினைவில் கண்ணீர் உகுந்த கமரை தோளணைத்து ஆறுதல்படுத்தினான் ரிஸ்வி. ரிதாவும் அவன் தோள் சாய, அவளை தண்ணீர் அருந்த செய்து ஆசுவாசப்படுத்தினான்.
தந்தை நினைவில் பரிதவிக்கும் தன்னவளை தான் ஆறுதல்படுத்த முடியவில்லை. கண்களால் அவளை வருட, அவளோ அன்னையின் அரவணைப்பில் தஞ்சமடைந்திருந்தாள்.
ஒருவாறு தன்னை சமாதானபடுத்தி கொண்ட கமர்," போதுமா ரசியா? என் மவன் அவன் பொண்டாட்டிக்கு கொடுத்த பணம் அது. அதை விமர்சனம் பண்ண நம்ம யாருக்குமே உரிமை இல்ல... அய்யோ என் மவன் என்ன நோக்கத்துக்காக கொடுத்தானோ அது நிறைவேறாமலே போயிடுச்சே" என்றார் ஆற்றாமையாக.
" ரசியா.... இப்போவாவது என் மருமவ பத்தர மாத்து தங்கம் னு புரிஞ்சிகிட்டியா?" கமர் மேலும் அரற்ற
" இதுக்கு தான் உன் தங்கமான மருமக வீட்டை விட்டு போனாளாமா? முதல்ல அத கேளு" ரசியா பொறுமை இழந்து கத்தினார்.
" மாம்... கொஞ்சம் அமைதியா பேசுங்க."
" என்ன ரிஸ்வி... நீயும் அவ பக்கம் சாய்ஞ்சிட்டியா?"
" போதும் நிறுத்து ரசியா... இப்போ உனக்கு அந்த அஞ்சு லட்சத்துக்கும் கணக்கு தெரியணும். அதானே?" எனவும் பொங்கிவிட்டார் ரசியா.
" என்னை என்ன காசுக்கு அலையுறவ னு நினைச்சியா? அந்த அஞ்சு லட்சம் என் கால் தூசுக்கு சமம்."
" அப்புறம் என்னத்துக்குலா இன்னமும் தையாதக்கா னு குதிக்கிற?"
" ஏன்மா எல்லா கேள்வியையும் என்னை மட்டும் தான் கேப்பியா? உன் மருமகள கேட்கவே மாட்டியா?"
" அவ கேட்குறதும் சரி தான். ஏன் சபூரா இதுக்காகவா நீ வீட்டை விட்டு போன இது என்னோட பணம் னு நெஞ்சை நிமிர்த்தி சொல்லிட்டு உன் வேலைய பார்க்க வேண்டியது தானே? இல்ல நான் வர்ற வரைக்குமாவது பொறுமையா காத்திருக்கலாம் ல? இப்படி ராவோட ராவா கிளம்பி போக என்ன அவசியம்?" எனவும் சபூரா மலங்க மலங்க விழித்தார். பொறுமையை வெகுவாக இழந்து விட்ட ரசியா தன் மகள்களின் முன் தன் நடத்தையை கூறு போட்டு விடுவாளோ என பயந்து போனார்.
" அப்போ ரெண்டு பேருக்கும் நடுவுல வேற ஏதோ பிரச்சனை இருக்கு. அப்படி தானே?" கமர் பாயிண்ட்டை பிடிக்க, ரிஸ்விக்கு தான் தலை சுற்றி போனது. இவர்கள் பிரச்சனை எப்போது தீர்ந்து தன் காதல் எப்போது நிறைவேறுவது? என்றோ நடந்து முடிந்த ஒன்றுக்காக மல்லுகட்டி கொண்டிருப்பவர்களை பார்க்கும் போது அவனுக்கு எரிச்சல் தான் வந்தது.
" சொல்லு சபூரா...." கமர் அதட்ட பதில் வந்தால் தானே.
" சரி நீயாவது சொல்லு ரசியா.... அப்படி என்ன நடந்தது?" ரசியா சபூராவை முறைக்க, மகள்கள் இருவருக்கும் அத்தனை சங்கடமாய் இருந்தது.
" ரெண்டு பேரும் சொல்ல மாட்டீங்கள.... அப்போ அந்த உண்மை உங்களோடவே புதைஞ்சி அழிஞ்சி போகட்டும். அந்த கருமம் எங்களுக்கு வேணாம். என்னைக்கு பேசனும் னு தோணுதோ அன்னைக்கு நீங்களே பேசி தீர்த்துக்குங்க. இனிமேலும் இந்த சின்னஞ்சிறுசுகள என்னால கஷ்டப்படுத்த முடியாது" எனவும்
" என்ன சபூரா அமைதியா இருந்தே காரியம் சாதிக்கலாம் னு பார்க்கிறியா?" என பல்லை கடித்தவர் கணவரிடம்," என்னங்க நீங்களும் அமைதியா இருக்கீங்க?" என்றார் ரசியா.
" அந்த பிள்ளைங்க முகத்தை பாரு ரசியா... ஏற்கனவே பரிதவிச்சி நிற்குதுங்க. இதுக்கு மேல என்ன பேச?" எனக் கூறிவிட முகம் கடுகடுக்க சபூராவை முறைப்பதை தவிர ரசியாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
மைசராவிற்கு இதயமே விண்டு போல வலித்தது. ரசியாவின் பொசுக்கி விடும் பார்வையிலிருந்து தன் அன்னையை எங்காவது அழைத்து சென்று விடலாமா என தவித்தது.
" மைசரா இப்படி முன்னாடி வந்து நில்லுமா" என கமர் அழைத்ததும் முன்னே வந்து நின்றாள். கமர் ஒரு முறை ரிஸ்வியை தயக்கமாக பார்த்தார். ரிஸ்வி கண்களை அழுந்த மூடி திறந்து ஊக்கினான்.
"சரா.... இவங்க சண்டை என்னைக்கு ஓயுமோ தெரியாது. இதையெல்லாம் உன் மனசுல போட்டு உளப்பிக்காத. சரியா? நா கேட்குற கேள்விக்கு உன் மனசுல இருக்குற பதிலை சொல்லணும். உனக்கு ரிஸ்வியை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?" கேட்டேவிட்டார் கமர்.
ஒரு புறம் ரசியாவின் முறைப்பு, மறுபுறம் சபூராவின் அழுகை மைசராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. " வேண்டவே வேண்டாம் னு சொல்லிட்டு எங்கையாவது போயிடலாமா?" என்று கூட தோன்றியது.
" சரா நிமிர்ந்து என்னை பாரு.... ரிஸ்விய கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?" மீண்டும் கமர் கேட்டு அவளது எண்ணவோட்டத்தை கலைத்தார்.
மைசராவின் பார்வை தன்னிச்சையாக ரிஸ்வியை பார்க்க, நடுநடுங்கி போனாள் அவள். நெறித்த புருவங்களுக்கு கீழே எரியும் பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அந்த காதல்கிராதகன். அவனது தீர்க்கமான பார்வை தன் உள்ளத்தை கண்டு கொண்டானோ என பயத்தை விதைக்க அவளது முதுகு தண்டு சில்லிட்டது.
" பேசு மெஹர்....." அவனது குரல் சாதாரணமாக இருந்தாலும் அதன் பின்னுள்ள காதல் அவளுக்கு புரியாதா? இல்லை தன்னுடைய அழைப்பு அவளுள் ஏற்படுத்தும் ஜாலம் தான் அவனுக்கு தெரியாதா? அவனது ஒற்றை அழைப்பில் அவளது எண்ணங்கள் யாவும் பின்னுக்கு போக மனதில் பிரதானமாய் அவனே வீற்றிருந்தான். அவனது பார்வையை நேருக்கு நேராக சந்தித்தவளால் சிந்திக்கவே முடியவில்லை.
அவள் இதயம் தன் பொய் பூட்டுகளை எல்லாம் தகர்த்து விட, " எனக்கு சம்மதம்" என்றாள் மென் குரலில். அவ்வளவு தான் அதுவரை அவள் மேல் கோபம் கொண்டிருந்த ரிதா ஓடி வந்து கட்டி கொண்டாள். மைசராவின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட, அதை பார்த்த ரிஸ்விக்கு அந்த செய்கையை தனதாக்கி கொள்ள வேண்டும் என காதல் மனம் பரபரத்தது.
மைசரா சம்மதிப்பாள் என துளியும் எதிர்பாராத ரசியாவும் சபூராவும் திகைத்து விழிக்க, கமர் எழுந்து சென்று தன் பேத்தியை வரித்து திருஷ்டி கழித்தார்.
ரசியாஆக்ரோஷமாய் எழுந்து," என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது ரிஸ்வி. இவளை எல்லாம் என் சம்மந்தியா நினைச்சி கூட பார்க்க முடியாது." எனவும்
" ஸாரி மாம்.... நீங்க நாம போட்ட டீல்ல மறந்துட்டீங்க போல.." என தோளை குலுக்கினான் அவன்.
" ஏன் ஒத்துக்க முடியாது? ரெண்டு பேருக்கும் கட்டிக்குற முறை தானே? இது எங்க வாப்பா குடும்பம் மாமி . உங்களுக்கு சம்மந்தியாக எங்க உம்மாவுக்கு எல்லா ரைட்சும் இருக்கு..." என யாஸ்மின் சண்டைக்கு வந்தாள். தன் தங்கை சம்மதித்துவிட்டதும் அவள் நம்பிக்கையாய் பேசினாள்.
ரசியா கோர தாண்டவம் ஆடும் முன்," ஆனா ஒரு கண்டிஷன்" என அவரது வாயடைத்தாள் ரிஸ்வியின் காதலி.
- மழை வரும்....
தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கும்
பர்வீன்.மை
அனைவர் மனமும் கனமாக, ரசியாவின் மனம் மட்டும் இன்னும் உலைகளமாய் கொதித்து கொண்டிருந்தது. இத்தகைய பேரன்பு கொண்ட தன் காகாவுக்கு சபூரா செய்த கைமாறு தான் என்ன? இப்பவும் கூட அவள் வீட்டில் நடந்த சம்பவத்தை பற்றி பேசவேயில்லையே....
மகனின் நினைவில் கண்ணீர் உகுந்த கமரை தோளணைத்து ஆறுதல்படுத்தினான் ரிஸ்வி. ரிதாவும் அவன் தோள் சாய, அவளை தண்ணீர் அருந்த செய்து ஆசுவாசப்படுத்தினான்.
தந்தை நினைவில் பரிதவிக்கும் தன்னவளை தான் ஆறுதல்படுத்த முடியவில்லை. கண்களால் அவளை வருட, அவளோ அன்னையின் அரவணைப்பில் தஞ்சமடைந்திருந்தாள்.
ஒருவாறு தன்னை சமாதானபடுத்தி கொண்ட கமர்," போதுமா ரசியா? என் மவன் அவன் பொண்டாட்டிக்கு கொடுத்த பணம் அது. அதை விமர்சனம் பண்ண நம்ம யாருக்குமே உரிமை இல்ல... அய்யோ என் மவன் என்ன நோக்கத்துக்காக கொடுத்தானோ அது நிறைவேறாமலே போயிடுச்சே" என்றார் ஆற்றாமையாக.
" ரசியா.... இப்போவாவது என் மருமவ பத்தர மாத்து தங்கம் னு புரிஞ்சிகிட்டியா?" கமர் மேலும் அரற்ற
" இதுக்கு தான் உன் தங்கமான மருமக வீட்டை விட்டு போனாளாமா? முதல்ல அத கேளு" ரசியா பொறுமை இழந்து கத்தினார்.
" மாம்... கொஞ்சம் அமைதியா பேசுங்க."
" என்ன ரிஸ்வி... நீயும் அவ பக்கம் சாய்ஞ்சிட்டியா?"
" போதும் நிறுத்து ரசியா... இப்போ உனக்கு அந்த அஞ்சு லட்சத்துக்கும் கணக்கு தெரியணும். அதானே?" எனவும் பொங்கிவிட்டார் ரசியா.
" என்னை என்ன காசுக்கு அலையுறவ னு நினைச்சியா? அந்த அஞ்சு லட்சம் என் கால் தூசுக்கு சமம்."
" அப்புறம் என்னத்துக்குலா இன்னமும் தையாதக்கா னு குதிக்கிற?"
" ஏன்மா எல்லா கேள்வியையும் என்னை மட்டும் தான் கேப்பியா? உன் மருமகள கேட்கவே மாட்டியா?"
" அவ கேட்குறதும் சரி தான். ஏன் சபூரா இதுக்காகவா நீ வீட்டை விட்டு போன இது என்னோட பணம் னு நெஞ்சை நிமிர்த்தி சொல்லிட்டு உன் வேலைய பார்க்க வேண்டியது தானே? இல்ல நான் வர்ற வரைக்குமாவது பொறுமையா காத்திருக்கலாம் ல? இப்படி ராவோட ராவா கிளம்பி போக என்ன அவசியம்?" எனவும் சபூரா மலங்க மலங்க விழித்தார். பொறுமையை வெகுவாக இழந்து விட்ட ரசியா தன் மகள்களின் முன் தன் நடத்தையை கூறு போட்டு விடுவாளோ என பயந்து போனார்.
" அப்போ ரெண்டு பேருக்கும் நடுவுல வேற ஏதோ பிரச்சனை இருக்கு. அப்படி தானே?" கமர் பாயிண்ட்டை பிடிக்க, ரிஸ்விக்கு தான் தலை சுற்றி போனது. இவர்கள் பிரச்சனை எப்போது தீர்ந்து தன் காதல் எப்போது நிறைவேறுவது? என்றோ நடந்து முடிந்த ஒன்றுக்காக மல்லுகட்டி கொண்டிருப்பவர்களை பார்க்கும் போது அவனுக்கு எரிச்சல் தான் வந்தது.
" சொல்லு சபூரா...." கமர் அதட்ட பதில் வந்தால் தானே.
" சரி நீயாவது சொல்லு ரசியா.... அப்படி என்ன நடந்தது?" ரசியா சபூராவை முறைக்க, மகள்கள் இருவருக்கும் அத்தனை சங்கடமாய் இருந்தது.
" ரெண்டு பேரும் சொல்ல மாட்டீங்கள.... அப்போ அந்த உண்மை உங்களோடவே புதைஞ்சி அழிஞ்சி போகட்டும். அந்த கருமம் எங்களுக்கு வேணாம். என்னைக்கு பேசனும் னு தோணுதோ அன்னைக்கு நீங்களே பேசி தீர்த்துக்குங்க. இனிமேலும் இந்த சின்னஞ்சிறுசுகள என்னால கஷ்டப்படுத்த முடியாது" எனவும்
" என்ன சபூரா அமைதியா இருந்தே காரியம் சாதிக்கலாம் னு பார்க்கிறியா?" என பல்லை கடித்தவர் கணவரிடம்," என்னங்க நீங்களும் அமைதியா இருக்கீங்க?" என்றார் ரசியா.
" அந்த பிள்ளைங்க முகத்தை பாரு ரசியா... ஏற்கனவே பரிதவிச்சி நிற்குதுங்க. இதுக்கு மேல என்ன பேச?" எனக் கூறிவிட முகம் கடுகடுக்க சபூராவை முறைப்பதை தவிர ரசியாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
மைசராவிற்கு இதயமே விண்டு போல வலித்தது. ரசியாவின் பொசுக்கி விடும் பார்வையிலிருந்து தன் அன்னையை எங்காவது அழைத்து சென்று விடலாமா என தவித்தது.
" மைசரா இப்படி முன்னாடி வந்து நில்லுமா" என கமர் அழைத்ததும் முன்னே வந்து நின்றாள். கமர் ஒரு முறை ரிஸ்வியை தயக்கமாக பார்த்தார். ரிஸ்வி கண்களை அழுந்த மூடி திறந்து ஊக்கினான்.
"சரா.... இவங்க சண்டை என்னைக்கு ஓயுமோ தெரியாது. இதையெல்லாம் உன் மனசுல போட்டு உளப்பிக்காத. சரியா? நா கேட்குற கேள்விக்கு உன் மனசுல இருக்குற பதிலை சொல்லணும். உனக்கு ரிஸ்வியை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?" கேட்டேவிட்டார் கமர்.
ஒரு புறம் ரசியாவின் முறைப்பு, மறுபுறம் சபூராவின் அழுகை மைசராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. " வேண்டவே வேண்டாம் னு சொல்லிட்டு எங்கையாவது போயிடலாமா?" என்று கூட தோன்றியது.
" சரா நிமிர்ந்து என்னை பாரு.... ரிஸ்விய கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?" மீண்டும் கமர் கேட்டு அவளது எண்ணவோட்டத்தை கலைத்தார்.
மைசராவின் பார்வை தன்னிச்சையாக ரிஸ்வியை பார்க்க, நடுநடுங்கி போனாள் அவள். நெறித்த புருவங்களுக்கு கீழே எரியும் பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அந்த காதல்கிராதகன். அவனது தீர்க்கமான பார்வை தன் உள்ளத்தை கண்டு கொண்டானோ என பயத்தை விதைக்க அவளது முதுகு தண்டு சில்லிட்டது.
" பேசு மெஹர்....." அவனது குரல் சாதாரணமாக இருந்தாலும் அதன் பின்னுள்ள காதல் அவளுக்கு புரியாதா? இல்லை தன்னுடைய அழைப்பு அவளுள் ஏற்படுத்தும் ஜாலம் தான் அவனுக்கு தெரியாதா? அவனது ஒற்றை அழைப்பில் அவளது எண்ணங்கள் யாவும் பின்னுக்கு போக மனதில் பிரதானமாய் அவனே வீற்றிருந்தான். அவனது பார்வையை நேருக்கு நேராக சந்தித்தவளால் சிந்திக்கவே முடியவில்லை.
அவள் இதயம் தன் பொய் பூட்டுகளை எல்லாம் தகர்த்து விட, " எனக்கு சம்மதம்" என்றாள் மென் குரலில். அவ்வளவு தான் அதுவரை அவள் மேல் கோபம் கொண்டிருந்த ரிதா ஓடி வந்து கட்டி கொண்டாள். மைசராவின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட, அதை பார்த்த ரிஸ்விக்கு அந்த செய்கையை தனதாக்கி கொள்ள வேண்டும் என காதல் மனம் பரபரத்தது.
மைசரா சம்மதிப்பாள் என துளியும் எதிர்பாராத ரசியாவும் சபூராவும் திகைத்து விழிக்க, கமர் எழுந்து சென்று தன் பேத்தியை வரித்து திருஷ்டி கழித்தார்.
ரசியாஆக்ரோஷமாய் எழுந்து," என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது ரிஸ்வி. இவளை எல்லாம் என் சம்மந்தியா நினைச்சி கூட பார்க்க முடியாது." எனவும்
" ஸாரி மாம்.... நீங்க நாம போட்ட டீல்ல மறந்துட்டீங்க போல.." என தோளை குலுக்கினான் அவன்.
" ஏன் ஒத்துக்க முடியாது? ரெண்டு பேருக்கும் கட்டிக்குற முறை தானே? இது எங்க வாப்பா குடும்பம் மாமி . உங்களுக்கு சம்மந்தியாக எங்க உம்மாவுக்கு எல்லா ரைட்சும் இருக்கு..." என யாஸ்மின் சண்டைக்கு வந்தாள். தன் தங்கை சம்மதித்துவிட்டதும் அவள் நம்பிக்கையாய் பேசினாள்.
ரசியா கோர தாண்டவம் ஆடும் முன்," ஆனா ஒரு கண்டிஷன்" என அவரது வாயடைத்தாள் ரிஸ்வியின் காதலி.
- மழை வரும்....
தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கும்
பர்வீன்.மை