Fantastic ???????இருளுக்குள் கறுமையாய்...
தாய்மைக்குள் கண்டிப்பாய்...
காதலுக்குள் வலியாய்...
எரிமலைக்குள் கனலாய்...
என்னுள் நிரம்பியவளின் - - காதல்
தடமில்லாமல்...
தீவைச் சூழ்ந்த கடலாய்...
பாலை மணலின் சூடாய்...
பௌர்ணமி மதியின் வட்டமாய்...
புதுப்பெண்ணின் நாணமாய்...
எனக்குள் என்னவளுக்கான - - காதல் பட்டவர்த்தனமாக...
முரண்பாடுகளுக்கு இடையில்
மூச்சு விட முடியாமல்
தவிக்கிறது காதல்..
எனினும்
மழை நாளில் தோன்றும் ஈசலின்
நம்பிக்கையோடு
காத்திருக்கிறது...
நம்முடைய காதல்
காதலிப்பது ஒரு சுகம்
காதலிக்கபடுவது சொர்கம்??