?????????????முன் மாலை பொழுதில்
முகமறியாதவனின் வருகை
புயலென வந்தான்
புன்னகை புரிந்தான்
யாரடா இவன் என்ற என் எண்ணத்தினை
கண்டுகொண்டான் சில கணங்களில் என் கண்களில்
யான் உன்னவன் என்றான்
காலத்தை வெல்லும் என் காதல் நீ எனச் சொல்லி சென்றான்
இனியவனிடம் என் இனிய இதழ்கள் வார்த்தைகளை இயம்பவில்லை
இதமாய் இதயம் திருடி கொண்டான் ...
நானோ உயிர் காதல் கொண்டேன்...
என் முகவரி(வுரை)யான
என்னவனிடத்தில்...