• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் சதிராட்டம்❤️1❤️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
அது ஒரு ஏகாந்த காலை.... அந்த வானம் தன் இடையில் உடுத்தி இருந்த கருப்பு நிற தாவணியை கலைந்து நீல வண்ண சேலையை அணிந்துக் கொண்டு இருந்தது.. பறவைக்கூட்டங்கள் ஓலி எழுப்பிக் கொண்டே சந்தோஷ சிறகசைப்புடன் அந்த கடலைக் கடந்து கொண்டு இருந்தன..

எழுந்தான் செங்கதிரோன்... அவன் திசைப் பட்ட இடம் எல்லாம் விழுந்தது தங்க தூரல்... வெளியெல்லாம் ஒளியின் வீச்சு... அந்த இயற்கை பல மாயஜாலங்களை செய்து கொண்டு இருந்தது... ஆனால் அந்த பழைய இயற்கை செய்யும் புதுக்காட்சியை ரசிக்க முடியாமல் அந்த கடலையே வெறித்துக் கொண்டு இருந்தான் அவன்... அவன் கைகளின் இடுக்கில் ஆறாம் விரலாய் முளைத்து இருந்தது சிகரெட்... அவன் மனதினில் ஒரே ஒரு கேள்வி மட்டும்...

"அவள் வருவாளா?? நான் போட்ட நிபந்தனைக்கு சம்மதம் சொல்லுவாளா??..இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் என் கால கெடு முடியப் போகிறதே... என் மனதின் நம்பிக்கையை கெடுக்காமல் வந்துவிடு... " என்று அவன் மனதோடு பேசிக் கொண்டு இருந்த நேரம் அவனை நோக்கி வந்து கொண்டு இருந்தது ஒரு காலடி சப்தம்...

திரும்பிப் பார்த்தான்....

யாருக்காக காத்து இருந்தானோ அவளே தான் வந்து இருந்தாள்... அவள் பார்வையில் அக்னி கொழுந்துவிட்டு எரிந்தது...

" வினய் என்ன திமிர் இருக்கும் உனக்கு??... நீ மனுஷனே கிடையாது... சரியான சுயநலவாதி... சூழ்நிலையை பயன்படுத்தி என்னை அடையணும்னு நீ பண்ற முயற்சி எதுவும் பலிக்காது.. நான் பலிக்கவும் விட மாட்டேன்.. " என்று சொல்லியவள் அவன் கண் முன்னே ஐந்து லட்சத்திற்கான காசோலையை கிழித்து காற்றில் பறக்கவிட்டாள்...

" உன் பணமும் தேவையில்லை.. உன்னோட அனுதாபமும் தேவையில்லை.. உன்னோட உதவி இல்லாமயே எங்களாலே இந்த இக்கட்டான சூழ்நிலையை கடக்க முடியும்... " என்று பேசிக் கொண்டு இருந்தவளின் அலைபேசி ஒலித்தது.. எடுத்துப் பார்த்தாள்.. அவளுடைய காதலன்.. வைபவ் தான் அழைத்து இருந்தான்... அவள் உடனே அந்த அறையை விட்டு வெளியேறி அலைபேசியை உயிர்ப்பித்து எடுத்து காதில் வைத்தாள்.. அவள் பேசுவதற்கு முன்பே வைபவ் பேசத் தொடங்கி இருந்தான்..

" ஆதிரா... இன்னும் ஒரே நாளிலே பணத்தைக் கட்ட சொல்லி எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க... இந்த இக்கட்டான சூழ்நிலையிலே பணம் எப்படி ரெடி பண்றதுனு தெரியல... வினய் உனக்கு 5 லட்சம் ரூபாய் செக் அனுப்புனாதா போன்ல சொன்ன இல்லை.. பேசாம அவன் நிபந்தனைக்கு ஒத்துக்கோ ஆதிரா.. "

" வைபவ் என்ன பைத்தியக்காரத்தனமா உளருற.. அவன் போட்ட நிபந்தனை என்னனு தெரிஞ்சும் கூடவா அந்த பணத்தை வாங்கிக்கலாம்னு சொல்ற.. என் உயிரே போனாலும் நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்.. "

" ஆதிரா ப்ளீஸ்.. அந்த நிபந்தனைக்கு ஒத்துக்கோ.. ஒரு வகையிலே என் நிலைமைக்கு நீயும் தான் காரணம்.. நான் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலே மாட்டிக்கிட்டு இருக்கும் போது இப்படி முடியாதுனு சொல்லி அடம்பிடிக்காதே... "

"வைபவ் ப்ளீஸ் என்னாலே முடியாது என்னை கட்டாயப்படுத்தாதே.. "

" நான் கட்டாயப்படுத்தல ஆதிரா.. நான் உன்னை முழுசா நம்புறேன்.. அதனாலே தான் எந்தவித தயக்கமும் இல்லாம சம்மதம் சொல்றேன்.. உனக்கு இது ஒரு விதமான அக்னிப்பரீட்சை.. அந்த பரீட்சையை வெற்றிகரமா முடிச்சுட்டு நம்ம காதலை நிரூபிச்சுட்டு வா... நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்..
இனி உன்னோட முடிவு" என்று அவன் சொல்ல அவளுடைய கண்களில் அதுவரை வழிந்து கொண்டு இருந்த கண்ணீர் தடைப்பட்டு நின்றது... ஒரு முடிவுடன் நிமிர்ந்தாள்...

" கண்டிப்பா இந்த அக்னிப்பரீட்சையிலே ஜெயிச்சுட்டு வரேன்.. " என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் நேராக வினய்யின் முன் வந்தாள்...

" நான் இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கிறேன்.. " என்று அவள் சொல்ல அவனுடைய உதடுகளில் வெற்றிப் பெற்ற அடையாளமாய் ஒரு குறுஞ்சிரிப்பு.. அதைக் கண்டவள் மனதினிலோ கோபக்கனல்..

" வினய் ஜெயிச்சா மாதிரி இப்போவே சந்தோஷப்படாதே... நான் இந்த நிபந்தனைக்கு ஒத்துக்கிட்டதே உன்னை தோற்கடிக்க தான்..ஒரு மாசம் உன்னோட நான் இருக்க தயார்..ஆனால் என் பெண்மைக்கு எந்தவிதமான பங்கமும் வராதுனு நீ சத்தியம் பண்ண தயாரா??"

" சத்தியமா நான் நிபந்தனையிலே சொன்ன எந்த வார்த்தையும் மீற மாட்டேன்.. நீ என்னை நூறு சதவீதம் நம்பலாம்.. என் விரல் கூட உன் மேலேப்படாது... நீ என் கூட இருக்கிற அந்த முப்பது நாள் என் காதலை உணர்த்த தானே தவிர தப்பான நோக்கத்துக்காக அல்ல.. "

" சே நான் ஏற்கனவே வேற ஒருத்தரை காதலிக்கும் போது உன்னை எப்படி காதலிப்பேன்.. நீ ஏன் இப்படி கிடைச்ச சூழ்நிலையைப் பயன்படுத்தி என்னை பகடைக்காயா உருட்டுற... "

" Every thing is fair between love and war ஆதிரா... உன்னை கண்டிப்பா காதலிக்க வைப்பேன்.. அதுக்காக எந்த எல்லைக்கும் போக நான் தயார்.. "

" நீ எந்த எல்லைக்கு போனாலும் என் காதல் முழுக்க முழுக்க வைபவ்க்கானது.. உனக்கானது இல்லை... உன்னை நான் காதலிக்கவே மாட்டேன்.. "

" challenge ஆ??"

" ஆமாம் challenge தான்.. "

" உன்னை ஜெயிச்சு காட்டுறேன் ஆதிரா.. "

" உன்னாலே என்னை ஜெயிக்க முடியாது வினய்... "

" பார்க்கலாமே.."

" பார்த்துடலாமே.." என்று இருவரும் எதிரும் புதிருமாய் நின்று கொண்டு இருந்தனர்...

"கோபக்கனலை கண்களில்
பொருத்தி இருப்பவளே,,,
உன் கண்களில் காதல் கனலை
மூட்ட கொஞ்சம் நேசம்
கொண்டு வந்து இருக்கிறேன்...
பாசத்தீயில் எரிய வருவாயா பாவையே??"


தொடரட்டும் சதிராட்டம்....
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Hey it's interesting pa

Vaibhav ivan lam ennatha love pannina ivalum karanamave irukatum unmaiya love pannura evanum ipdi condition ku othuko nu sollamaatanga?????

Vinai love pannuriya un love ah puriyavaika poriya superb let's see

Nice start

@ப்ரியசகி @KalaiVishwa @Shakthi R @Suman @Ammu Manikandan apdiye tym irundha konjam vandhu etti paarungooo
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top