காதல்... காதல்... காதல்...!
முழுக்க முழுக்க காதலோடான இனிய, ஆனால் திகட்டாத பயணம். பயணத்தில் அலுப்பில்லை. ஆர்வம் இருந்தது.
திரும்பிய திசையெங்கும் காதல்!
காதல் பூமிக்கு புதிதல்ல. ஆனால், வாசிக்கும் போது வயதையும் கடந்து, காதல் நம்மை ஆகர்சிக்கும் வகையில் ஆசிரியரின் எழுத்து நம்மை ஈர்க்கிறது.
கௌதம் கிருஷ்ணன், கிச்சாவாக மதியை காதல் செய்கிறான். கிச்சா நிலவுப் பெண்ணை நினைத்து, மதியை நிந்திக்கிறான்.
விஜயேந்தர், ரதியின் மேல் கொண்ட காதல் ஆசிரியரால் வித்தியாசமாகக் கையாளப்பட்டிருக்கிறது.
அசோக், சுபியின் காதல் அடாவடியாகக் கையாளப்பட்டிருக்கிறது.
கதைக்களம் முழுமைக்கும் திகட்டாத காதல் மழை!
காதல் மழையில் நனைய விரும்புபவர்கள், தவறாது படிக்கவும்!
காதலை காதலோடு அருமையாகச் சித்தரித்திருக்கிறார், ஆசிரியர்.
வகை, தொகையான காதல் சொல்ல வந்த ஆசிரியரின் “காதல் சொல்ல வந்தேன்”, நாவலை காதலுக்கு காணிக்கையாக்கி இருப்பது, கண்கூடாகத் தெரிகிறது.
காதல் வாசம் உணர, காதல் பேச, காதலின் அரிச்சுவடி அறிய விழைவோர், கண்டிப்பாக படிக்கலாம்.
கண்ணியம், கடைசி வரை கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது.
காதலோடு, ஆண், பெண், நட்பையும் அழகாக சித்தரித்திருக்கிறார்.
உறவுகள் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
‘பைக்’ ஓட்டி, பேத்தியின் பதற்றம் குறைக்கும் பாட்டி கதாபாத்திரம், அருமையிலும் அருமை.
வாழ்த்துக்கள் ஷா...
முழுக்க முழுக்க காதலோடான இனிய, ஆனால் திகட்டாத பயணம். பயணத்தில் அலுப்பில்லை. ஆர்வம் இருந்தது.
திரும்பிய திசையெங்கும் காதல்!
காதல் பூமிக்கு புதிதல்ல. ஆனால், வாசிக்கும் போது வயதையும் கடந்து, காதல் நம்மை ஆகர்சிக்கும் வகையில் ஆசிரியரின் எழுத்து நம்மை ஈர்க்கிறது.
கௌதம் கிருஷ்ணன், கிச்சாவாக மதியை காதல் செய்கிறான். கிச்சா நிலவுப் பெண்ணை நினைத்து, மதியை நிந்திக்கிறான்.
விஜயேந்தர், ரதியின் மேல் கொண்ட காதல் ஆசிரியரால் வித்தியாசமாகக் கையாளப்பட்டிருக்கிறது.
அசோக், சுபியின் காதல் அடாவடியாகக் கையாளப்பட்டிருக்கிறது.
கதைக்களம் முழுமைக்கும் திகட்டாத காதல் மழை!
காதல் மழையில் நனைய விரும்புபவர்கள், தவறாது படிக்கவும்!
காதலை காதலோடு அருமையாகச் சித்தரித்திருக்கிறார், ஆசிரியர்.
வகை, தொகையான காதல் சொல்ல வந்த ஆசிரியரின் “காதல் சொல்ல வந்தேன்”, நாவலை காதலுக்கு காணிக்கையாக்கி இருப்பது, கண்கூடாகத் தெரிகிறது.
காதல் வாசம் உணர, காதல் பேச, காதலின் அரிச்சுவடி அறிய விழைவோர், கண்டிப்பாக படிக்கலாம்.
கண்ணியம், கடைசி வரை கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது.
காதலோடு, ஆண், பெண், நட்பையும் அழகாக சித்தரித்திருக்கிறார்.
உறவுகள் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
‘பைக்’ ஓட்டி, பேத்தியின் பதற்றம் குறைக்கும் பாட்டி கதாபாத்திரம், அருமையிலும் அருமை.
வாழ்த்துக்கள் ஷா...