Lakshmi2309
புதிய முகம்
எனை அள்ளிக் கொள்வாயென
ஆவலாயிருந்தபோது
தள்ளி வைத்தாய்!!
என் மடி சாய்வாயென
மகிழ்ந்திருந்தபோது
மறந்து போனாய்!!
எனை கைபிடிப்பாயென
காத்திருந்தபோது
காணாமல் போனாய்!!
என் உயிரோடிணைவாயென
உள்ளம் மகிழ்ந்தபோது
உதறிப் போனாய்!!
செய்த பிழைதான் என்ன??
தெரியாமல் திரிந்தேன்!
விளங்காமல் விழித்தேன்!
விழி மூட மறுத்தேன்!
விடைதேடி அலைந்தேன்- இறுதியில்
வீணென்று விலகினேன்!!
ஆவலாயிருந்தபோது
தள்ளி வைத்தாய்!!
என் மடி சாய்வாயென
மகிழ்ந்திருந்தபோது
மறந்து போனாய்!!
எனை கைபிடிப்பாயென
காத்திருந்தபோது
காணாமல் போனாய்!!
என் உயிரோடிணைவாயென
உள்ளம் மகிழ்ந்தபோது
உதறிப் போனாய்!!
செய்த பிழைதான் என்ன??
தெரியாமல் திரிந்தேன்!
விளங்காமல் விழித்தேன்!
விழி மூட மறுத்தேன்!
விடைதேடி அலைந்தேன்- இறுதியில்
வீணென்று விலகினேன்!!