சொல்லி நிறுத்திட்டு சக்தி வச்சிருந்த சிகரெட் பாக்கெட்ல இருந்து ஒண்ணப் பத்திக்கிட்டு அவன் தொடர்ந்தான்..
"உனக்கு ஆரம்பத்துல இருந்து சொன்னாத் தான் புரியும்..சித்ரா மாலா என் சித்தி பொண்ணு..என்ன விட ரெண்டு வயசு எளையவ..அவளுக்கு மூணு வயசு இருக்கைலயே அவ அப்பா நைட்ல தோட்டத்துக்குத் தண்ணி கட்டப் போனப்ப பாம்பு கடிச்சு இறந்துட்டார்.. வசதிக்குக் குறையில்ல..தோட்டம் போக சென்டர் டவுன்ல வீடும் அதச் சுத்தி பத்துக் கடைகளுமிருக்க பொருளாதாரம் பத்தின கவலையில்ல.. எங்க பேமிலி சித்திக்கு புல் சப்போர்ட்டா இருந்தது..லீவு விட்டா சித்ர மாலா இங்க தான் இருப்பா..
அப்ப பிளஸ் டூ படிச்சுக்கிட்டிருந்தா.. இவங்க கடைல ஒண்ண வாடகைக்கு டெய்லர் ஒருத்தன் புடிச்சான்.. ஆளு பாக்க சினிமா ஆக்டர் மாதிரி அம்சமா இருப்பான்.. நடத்தையோ படு மோசம்..எப்படியோ எழவு அவன இவ லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா..ரெண்டு பேரும் மாத்தி மாத்தி லவ் லெட்டரா எழுதித் தள்ள அவனோட அப்பன் கைல அதுல ரெண்டு கெடைச்சிருச்சு..அவங்க மதமே வேற..அதோட அவனுக்குப் பொண்ணுப் பாத்து கல்யாணம் நிச்சயமும் பண்ணிட்டாங்களாம்..
அவன் அப்பன் அந்த லெட்டர எடுத்துட்டு வந்து சித்தி வீட்டு முன்னால நின்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண அவங்களுக்கு பெரிய கேவலமாயிடுச்சு..இத்தனை நடந்தும் அவன் வருவான்னு இவ எதிர் பார்த்து காத்திருக்க..அவனோ கூலா வீட்ல பாத்து வச்ச பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமனார் ஊருக்கே குடி போயிட்டான்..சித்தியோ இதுக்கு மேல வயசுப் பொண்ண வெச்சுக் காப்பத்தறது கஷ்டம்னு படிப்பப் பாதிலயே நிறுத்தி அவசர அவசரமா மாப்ள தேட ஆரம்பிச்சுட்டாங்க..
இங்கியோ இவ டெய்லருக்கு லவ் லெட்டர் குடுத்து அது பெரிய ரகளையாயி ஊரே கேளு நாடே கேளுன்னு நாறிப் போயிக் கெடக்குது..உனக்கு நம்மாளுங்களப் பத்தித் தான் தெரியுமே?ஒண்ணுன்னா ஒம்பது, ஊருதுன்னா பறக்குதுன்னு கதை கட்டுவாங்களே?அது எந்த அளவுக்குப் பறந்துச்சுன்னா இவ அவனோட படுத்து மூணு தடவ ரகசியமா அபார்சன் பண்ணிக்கிட்டாங்கற அளவுக்குப் பரவிடுச்சு.. ரெண்டு வருசம் சரியான மாப்ள கெடைக்கல.. ஒண்ணு ரெண்டு வந்தவங்களையும் ஊருப் புரளி ஓட வெச்சிருச்சு..
அந்த நேரத்துல தான் இந்த மாப்ள ஜாதகம் வந்திருக்கு.. படிப்பு பத்தாவதுன்னாலும் வசதி எக்கச் சக்கம்.. காசு ஒண்ணு மட்டுமிருந்தா எல்லாக் குறைகளையும் மூடி மறைச்சுடுமில்லையா?ஜாதகம் பொருந்தி வர தகுந்த ஆளுங்கள விட்டு சித்தி அவனப் பத்தி விசாரிச்சுப் பாக்க பையனுக்கு குடிப் பழக்கம் உண்டுன்னு கேள்விப் பட்டிருக்காங்க..சித்தி அதப் பெருசா எடுத்துக்கல.. அதுக்கு ரெண்டு காரணங்கள்..ஒண்ணு இன்னிக்குக் குடிக்காத ஆம்பளைங்கறது அபூர்வமாயிடுச்சு.. ரெண்டாவது சித்ர மாலாவுக்கு இருந்த கெட்ட பேரு..
நல்லா விசாரிக்காம அவசர அவசரமா நாள் குறிச்சு கல்யாணமும் முடிவாகி நிச்சயம் பண்ணி உப்புச் சக்கரை வாங்கி மண்டபத்துக்குப் பணம் கட்டி தாலிக் கொடிக்கு ஆர்டர் குடுத்து பத்திரிக்கை அடிச்சு ஊருக்கும்,உறவுக்கும் குடுத்திட்டிருக்கற போது அந்தத் தகவல் வருது..அந்தப் பையனுக்கு ஏதோ இதயத்துல கோளாறுன்னு..சித்தி பதறிப் போயி இந்தச் சம்பந்தத்தக் கொண்டு வந்த புரோக்கரக் கூப்பிட்டு விசாரிச்சிருக்கறாங்க..
அந்தாளு தெரிஞ்சவரு,நம்பிக்கையானவரு தான்.. ஆனா,மாப்ள வீட்டுக் காரங்க மூடி மறைச்சுச் சொன்னத அவரும் நம்பி இங்க சொல்லிட்டார்..பையனுக்கு லேசா நெஞ்சு வலி ரெண்டு தடவ வந்ததும் அதுக்கு ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட்க்கு அப்புறம் சரியாயிட்டதாவும் சொல்லி கூடவே உங்க பொண்ணப் பத்தியும் தான் நாங்க பலதும் கேள்விப் பட்டோம்.. பொறாமைக் காரங்க பலதும் சொல்வாங்க..நாம அதக் கண்டுக்கக் கூடாதுன்னு எவ்வளவு பெருந் தன்மையா நடந்துக்கிட்டோம்..உங்களுக்கு அது இல்லாம போச்ச..? உங்களுக்கு துளி சந்தேகம்னாலும் இப்பவே எல்லாத்தையும் நிறுத்திடலாம்னு பதில் வர சித்தி ஆடிப் போயி சரண்டராயிட்டாங்க..
அப்புறம் ஒவ்வொண்ணா டெய்லியும் ஒரு தகவல் மாப்ளைய பத்தி வர சித்தி எதையுமே காதுல போட்டுக்கல..கல்யாண ஏற்பாடுகள இன்னும் மும்மூரமா செஞ்சாங்க..இவளோ எது நடந்தாலும் சரின்னு விரக்தியோட உச்சிக்கே போயிட்டா... ரெண்டாவதா இவ கிட்ட யாருமே அபிப்ராயம் கேக்கவே இல்லேங்கறதே உண்மை..கல்யாணம் முடிவானதே அடுத்தவங்க சொல்லித் தான் தெரிஞ்சுக்கிட்டான்னா பாத்துக்கோ..சித்தி ஏறக்குறைய இவ கூடப் பேசறதையே நிறுத்திட்டாங்க..
..
"உனக்கு ஆரம்பத்துல இருந்து சொன்னாத் தான் புரியும்..சித்ரா மாலா என் சித்தி பொண்ணு..என்ன விட ரெண்டு வயசு எளையவ..அவளுக்கு மூணு வயசு இருக்கைலயே அவ அப்பா நைட்ல தோட்டத்துக்குத் தண்ணி கட்டப் போனப்ப பாம்பு கடிச்சு இறந்துட்டார்.. வசதிக்குக் குறையில்ல..தோட்டம் போக சென்டர் டவுன்ல வீடும் அதச் சுத்தி பத்துக் கடைகளுமிருக்க பொருளாதாரம் பத்தின கவலையில்ல.. எங்க பேமிலி சித்திக்கு புல் சப்போர்ட்டா இருந்தது..லீவு விட்டா சித்ர மாலா இங்க தான் இருப்பா..
அப்ப பிளஸ் டூ படிச்சுக்கிட்டிருந்தா.. இவங்க கடைல ஒண்ண வாடகைக்கு டெய்லர் ஒருத்தன் புடிச்சான்.. ஆளு பாக்க சினிமா ஆக்டர் மாதிரி அம்சமா இருப்பான்.. நடத்தையோ படு மோசம்..எப்படியோ எழவு அவன இவ லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா..ரெண்டு பேரும் மாத்தி மாத்தி லவ் லெட்டரா எழுதித் தள்ள அவனோட அப்பன் கைல அதுல ரெண்டு கெடைச்சிருச்சு..அவங்க மதமே வேற..அதோட அவனுக்குப் பொண்ணுப் பாத்து கல்யாணம் நிச்சயமும் பண்ணிட்டாங்களாம்..
அவன் அப்பன் அந்த லெட்டர எடுத்துட்டு வந்து சித்தி வீட்டு முன்னால நின்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண அவங்களுக்கு பெரிய கேவலமாயிடுச்சு..இத்தனை நடந்தும் அவன் வருவான்னு இவ எதிர் பார்த்து காத்திருக்க..அவனோ கூலா வீட்ல பாத்து வச்ச பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமனார் ஊருக்கே குடி போயிட்டான்..சித்தியோ இதுக்கு மேல வயசுப் பொண்ண வெச்சுக் காப்பத்தறது கஷ்டம்னு படிப்பப் பாதிலயே நிறுத்தி அவசர அவசரமா மாப்ள தேட ஆரம்பிச்சுட்டாங்க..
இங்கியோ இவ டெய்லருக்கு லவ் லெட்டர் குடுத்து அது பெரிய ரகளையாயி ஊரே கேளு நாடே கேளுன்னு நாறிப் போயிக் கெடக்குது..உனக்கு நம்மாளுங்களப் பத்தித் தான் தெரியுமே?ஒண்ணுன்னா ஒம்பது, ஊருதுன்னா பறக்குதுன்னு கதை கட்டுவாங்களே?அது எந்த அளவுக்குப் பறந்துச்சுன்னா இவ அவனோட படுத்து மூணு தடவ ரகசியமா அபார்சன் பண்ணிக்கிட்டாங்கற அளவுக்குப் பரவிடுச்சு.. ரெண்டு வருசம் சரியான மாப்ள கெடைக்கல.. ஒண்ணு ரெண்டு வந்தவங்களையும் ஊருப் புரளி ஓட வெச்சிருச்சு..
அந்த நேரத்துல தான் இந்த மாப்ள ஜாதகம் வந்திருக்கு.. படிப்பு பத்தாவதுன்னாலும் வசதி எக்கச் சக்கம்.. காசு ஒண்ணு மட்டுமிருந்தா எல்லாக் குறைகளையும் மூடி மறைச்சுடுமில்லையா?ஜாதகம் பொருந்தி வர தகுந்த ஆளுங்கள விட்டு சித்தி அவனப் பத்தி விசாரிச்சுப் பாக்க பையனுக்கு குடிப் பழக்கம் உண்டுன்னு கேள்விப் பட்டிருக்காங்க..சித்தி அதப் பெருசா எடுத்துக்கல.. அதுக்கு ரெண்டு காரணங்கள்..ஒண்ணு இன்னிக்குக் குடிக்காத ஆம்பளைங்கறது அபூர்வமாயிடுச்சு.. ரெண்டாவது சித்ர மாலாவுக்கு இருந்த கெட்ட பேரு..
நல்லா விசாரிக்காம அவசர அவசரமா நாள் குறிச்சு கல்யாணமும் முடிவாகி நிச்சயம் பண்ணி உப்புச் சக்கரை வாங்கி மண்டபத்துக்குப் பணம் கட்டி தாலிக் கொடிக்கு ஆர்டர் குடுத்து பத்திரிக்கை அடிச்சு ஊருக்கும்,உறவுக்கும் குடுத்திட்டிருக்கற போது அந்தத் தகவல் வருது..அந்தப் பையனுக்கு ஏதோ இதயத்துல கோளாறுன்னு..சித்தி பதறிப் போயி இந்தச் சம்பந்தத்தக் கொண்டு வந்த புரோக்கரக் கூப்பிட்டு விசாரிச்சிருக்கறாங்க..
அந்தாளு தெரிஞ்சவரு,நம்பிக்கையானவரு தான்.. ஆனா,மாப்ள வீட்டுக் காரங்க மூடி மறைச்சுச் சொன்னத அவரும் நம்பி இங்க சொல்லிட்டார்..பையனுக்கு லேசா நெஞ்சு வலி ரெண்டு தடவ வந்ததும் அதுக்கு ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட்க்கு அப்புறம் சரியாயிட்டதாவும் சொல்லி கூடவே உங்க பொண்ணப் பத்தியும் தான் நாங்க பலதும் கேள்விப் பட்டோம்.. பொறாமைக் காரங்க பலதும் சொல்வாங்க..நாம அதக் கண்டுக்கக் கூடாதுன்னு எவ்வளவு பெருந் தன்மையா நடந்துக்கிட்டோம்..உங்களுக்கு அது இல்லாம போச்ச..? உங்களுக்கு துளி சந்தேகம்னாலும் இப்பவே எல்லாத்தையும் நிறுத்திடலாம்னு பதில் வர சித்தி ஆடிப் போயி சரண்டராயிட்டாங்க..
அப்புறம் ஒவ்வொண்ணா டெய்லியும் ஒரு தகவல் மாப்ளைய பத்தி வர சித்தி எதையுமே காதுல போட்டுக்கல..கல்யாண ஏற்பாடுகள இன்னும் மும்மூரமா செஞ்சாங்க..இவளோ எது நடந்தாலும் சரின்னு விரக்தியோட உச்சிக்கே போயிட்டா... ரெண்டாவதா இவ கிட்ட யாருமே அபிப்ராயம் கேக்கவே இல்லேங்கறதே உண்மை..கல்யாணம் முடிவானதே அடுத்தவங்க சொல்லித் தான் தெரிஞ்சுக்கிட்டான்னா பாத்துக்கோ..சித்தி ஏறக்குறைய இவ கூடப் பேசறதையே நிறுத்திட்டாங்க..
..