ரவி உணர்ச்சி வசப் பட்டவனா சக்தி் கையப் புடிச்சுக்கிட்டுச் சொன்னான்..
"தேங்க்ஸ் நண்பா.. நீ கெளம்பிடுவேன்னு நெனைச்சு ரொம்பவே வருத்தப் பட்டேன்..படிக்கறப்பவே உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்..ஒரு பெரிய மனுசத் தோரணைல தான் எப்பவும் இருப்பே.. உண்மையச் சொல்லணும்னா இருந்தா சக்தி மாதிரி இருக்கணும்னு சில சமயம் பொறாமை கூட பட்டிருக்கிறேன்..அப்படிப் பட்ட உன்ன பன்னெண்டு வருசத்துக்கு அப்புறம் பாத்து வலிய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து அவமானப் படுத்திட்டமோன்னு ரொம்ப வேதனைப் பட்டேன்.. உனக்கு வர்ற கோபத்துக்கு இவ்வளவு பொறுமையா இருந்ததே ஆச்சரியம் தான்..நீ கொஞ்ச நாள் இங்க இருந்தா நடந்த அவமானத்துக்கும்,நீ காட்டின பொறுமைக்கும் பிராயச் சித்தம் தேடிக்குவேன்"
இன்னொரு கையால் ரவியின் தோளைத் தட்டி சக்தி சொன்னான்..
"ஆனா,ஒரு கண்டிசன் நண்பா..நானோ நெனைச்ச நேரத்துல குடிக்கறவன்..உன் சிஸ்டருக்கோ குடின்னாலே அலர்ஜி..அது நியாயமும் கூட.. அவங்க காட்டின ரியாக்சன் கொஞ்சமும் தப்பில்ல.. நான் உன் வீட்ல இருந்தா மறுபடியும் முட்டல் மோதலும்,வீண் சங்கடங்களும் வரும்..போயிடலாம் தான்..ஆனா, அவங்க கதையக் கேட்ட பின்னாடி எனக்கொண்ணு தோணுச்சு..யாருமே அவங்கள சராசரி பொண்ணா நெனைச்சு மதிக்கலியோண்ணு..அவங்க கிட்ட யாராவது பிரெண்டலியா பழகி அன்பக் கொட்டியிருந்தா அவங்க வாழ்க்கையே வேற விதமா மாறி இருக்கும்..
காதலிச்சலன் இவங்களப் பொழுது போக்காப் பாத்திருக்கான்.. காதல் விசயத்துக்கு முன்னாடியே உங்க சித்தி பெருசா அன்பக் கொட்டின மாதிரி தெரியல..அதுக்கப்புறம் பெருஞ் சுமையாப் பாவிச்சு எங்கியாவது தள்ளி விடப் பாத்திருக்காங்களே தவிர ஒரு தாயா இவங்கள அரவணைச்சுக்கல..கடைசில நீயும் அவங்கள சக மனுசியாப் பாவிக்காம ஒரு பெரிய தேவதை ரேஞ்சுல தூக்கி வச்சுட்டே..உன்னச் சுத்தி உள்ளவங்க அதுக்கு மேல போயி மாரியாத்தாளாவே ஆக்கிட்டாங்க..
இது எல்லாமே மகா அபத்தம்..கடைசிக்கு நீயாவது நல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயிக் காமிச்சு தொடர்ந்து ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கணும்.. சரி..அது உன் பர்சனல்.. என் முடிவ மாத்திக்கிட்டு நான் ஏன் இங்க இருக்கேன்னா.. கொஞ்ச காலமா உன் சிஸ்டரோட வார்த்தைய வேத வாக்கா,ஆர்டரா மதிச்சு நீங்க எல்லாருமே சாமியாடி ஏறக்குறைய அவங்கள சாமியாரிணி ஆக்கிட்டீங்க..மொத மொத அவங்க அப்படி இல்லேங்கறத சண்டை சச்ரவில்லாம வாக்கு வாதம் பண்ணாம என் நடத்தையால காட்டப் போறேன்.. அவங்களுக்கு இப்படியொரு ஷாக் இப்ப அவசியம் நண்பா..
நெலத்த விட்டு பத்தடி ஒசரத்துல பறக்கற அவங்க மனப் போக்க இயல்புக்குக் கொண்டு வர வேண்டியது ரொம்ப அவசியம்..நிச்சயமா கொண்டாடப் பட வேண்டிய அற்புதமானவங்க தான்..ஆனா,இப்படி அல்ல..டோட்டலா வேற மாதிரி..அத அப்புறமா பேசிக்கலாம்..நான் இங்க இருக்கணும்னா சில கண்டிசன்கள நீ ஏத்துக்கணும்.. உன் வீட்ல தங்கவோ, சாப்பிடவோ மாட்டேன்..எனக்கு உன் பைக் வேணும்.. நான் வெளிய போயி சாப்பிட்டு வந்துடறேன். இதுக்கு நீ சம்மதிக்கலேன்னா இப்பவே நீ மட்டும் போயி என் பேக்க எடுத்துட்டு வா..நான் இப்படியே கெளம்பிடறேன்"
ரவிக்கு அதுல வருத்தம் தான்..ஆனா,சக்தி வந்த வேகத்துல வேதனையோட போறதுக்கு இது எவ்வளவோ பெட்டர்னு பட்டதால உடனே சம்மதத்துக்கு அறிகுறியா அவன் கைய இறுக்கிப் பிடிச்சான்.. அதோட அவன் இங்கயே தங்கி இருந்தா கொஞ்சங் கொஞ்சமா அவன் மனச மாத்திடலாம்னு ஒரு நப்பாசையும் அவனுக்கு இருந்தது..அதனால உற்சாகச் சொன்னான்..
"நீ இந்த அளவுக்கு எறங்கி வந்து தங்கறதாச் சொன்னதே பெரிய விசயம்..என் வீட்டுக்குப் பின்னால இருக்கற தறிக் குடோன்ல எல்லா வசதியோடவும் ஒரு பெரிய ரூமிருக்கு..அதுல நீ தங்கிக்கலாம்..கதவச் சாத்திட்டா தறிச் சத்தம் பெருசாக் கேக்காது.. டிவி, லேப் டாப் எல்லாமிருக்கு.."
"டேய்..அது யாரோடது..?நீ பாட்டுக்கு மேல மேல பிளானா போட்டுட்டுப் போறியே?"
"தேங்க்ஸ் நண்பா.. நீ கெளம்பிடுவேன்னு நெனைச்சு ரொம்பவே வருத்தப் பட்டேன்..படிக்கறப்பவே உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்..ஒரு பெரிய மனுசத் தோரணைல தான் எப்பவும் இருப்பே.. உண்மையச் சொல்லணும்னா இருந்தா சக்தி மாதிரி இருக்கணும்னு சில சமயம் பொறாமை கூட பட்டிருக்கிறேன்..அப்படிப் பட்ட உன்ன பன்னெண்டு வருசத்துக்கு அப்புறம் பாத்து வலிய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து அவமானப் படுத்திட்டமோன்னு ரொம்ப வேதனைப் பட்டேன்.. உனக்கு வர்ற கோபத்துக்கு இவ்வளவு பொறுமையா இருந்ததே ஆச்சரியம் தான்..நீ கொஞ்ச நாள் இங்க இருந்தா நடந்த அவமானத்துக்கும்,நீ காட்டின பொறுமைக்கும் பிராயச் சித்தம் தேடிக்குவேன்"
இன்னொரு கையால் ரவியின் தோளைத் தட்டி சக்தி சொன்னான்..
"ஆனா,ஒரு கண்டிசன் நண்பா..நானோ நெனைச்ச நேரத்துல குடிக்கறவன்..உன் சிஸ்டருக்கோ குடின்னாலே அலர்ஜி..அது நியாயமும் கூட.. அவங்க காட்டின ரியாக்சன் கொஞ்சமும் தப்பில்ல.. நான் உன் வீட்ல இருந்தா மறுபடியும் முட்டல் மோதலும்,வீண் சங்கடங்களும் வரும்..போயிடலாம் தான்..ஆனா, அவங்க கதையக் கேட்ட பின்னாடி எனக்கொண்ணு தோணுச்சு..யாருமே அவங்கள சராசரி பொண்ணா நெனைச்சு மதிக்கலியோண்ணு..அவங்க கிட்ட யாராவது பிரெண்டலியா பழகி அன்பக் கொட்டியிருந்தா அவங்க வாழ்க்கையே வேற விதமா மாறி இருக்கும்..
காதலிச்சலன் இவங்களப் பொழுது போக்காப் பாத்திருக்கான்.. காதல் விசயத்துக்கு முன்னாடியே உங்க சித்தி பெருசா அன்பக் கொட்டின மாதிரி தெரியல..அதுக்கப்புறம் பெருஞ் சுமையாப் பாவிச்சு எங்கியாவது தள்ளி விடப் பாத்திருக்காங்களே தவிர ஒரு தாயா இவங்கள அரவணைச்சுக்கல..கடைசில நீயும் அவங்கள சக மனுசியாப் பாவிக்காம ஒரு பெரிய தேவதை ரேஞ்சுல தூக்கி வச்சுட்டே..உன்னச் சுத்தி உள்ளவங்க அதுக்கு மேல போயி மாரியாத்தாளாவே ஆக்கிட்டாங்க..
இது எல்லாமே மகா அபத்தம்..கடைசிக்கு நீயாவது நல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயிக் காமிச்சு தொடர்ந்து ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கணும்.. சரி..அது உன் பர்சனல்.. என் முடிவ மாத்திக்கிட்டு நான் ஏன் இங்க இருக்கேன்னா.. கொஞ்ச காலமா உன் சிஸ்டரோட வார்த்தைய வேத வாக்கா,ஆர்டரா மதிச்சு நீங்க எல்லாருமே சாமியாடி ஏறக்குறைய அவங்கள சாமியாரிணி ஆக்கிட்டீங்க..மொத மொத அவங்க அப்படி இல்லேங்கறத சண்டை சச்ரவில்லாம வாக்கு வாதம் பண்ணாம என் நடத்தையால காட்டப் போறேன்.. அவங்களுக்கு இப்படியொரு ஷாக் இப்ப அவசியம் நண்பா..
நெலத்த விட்டு பத்தடி ஒசரத்துல பறக்கற அவங்க மனப் போக்க இயல்புக்குக் கொண்டு வர வேண்டியது ரொம்ப அவசியம்..நிச்சயமா கொண்டாடப் பட வேண்டிய அற்புதமானவங்க தான்..ஆனா,இப்படி அல்ல..டோட்டலா வேற மாதிரி..அத அப்புறமா பேசிக்கலாம்..நான் இங்க இருக்கணும்னா சில கண்டிசன்கள நீ ஏத்துக்கணும்.. உன் வீட்ல தங்கவோ, சாப்பிடவோ மாட்டேன்..எனக்கு உன் பைக் வேணும்.. நான் வெளிய போயி சாப்பிட்டு வந்துடறேன். இதுக்கு நீ சம்மதிக்கலேன்னா இப்பவே நீ மட்டும் போயி என் பேக்க எடுத்துட்டு வா..நான் இப்படியே கெளம்பிடறேன்"
ரவிக்கு அதுல வருத்தம் தான்..ஆனா,சக்தி வந்த வேகத்துல வேதனையோட போறதுக்கு இது எவ்வளவோ பெட்டர்னு பட்டதால உடனே சம்மதத்துக்கு அறிகுறியா அவன் கைய இறுக்கிப் பிடிச்சான்.. அதோட அவன் இங்கயே தங்கி இருந்தா கொஞ்சங் கொஞ்சமா அவன் மனச மாத்திடலாம்னு ஒரு நப்பாசையும் அவனுக்கு இருந்தது..அதனால உற்சாகச் சொன்னான்..
"நீ இந்த அளவுக்கு எறங்கி வந்து தங்கறதாச் சொன்னதே பெரிய விசயம்..என் வீட்டுக்குப் பின்னால இருக்கற தறிக் குடோன்ல எல்லா வசதியோடவும் ஒரு பெரிய ரூமிருக்கு..அதுல நீ தங்கிக்கலாம்..கதவச் சாத்திட்டா தறிச் சத்தம் பெருசாக் கேக்காது.. டிவி, லேப் டாப் எல்லாமிருக்கு.."
"டேய்..அது யாரோடது..?நீ பாட்டுக்கு மேல மேல பிளானா போட்டுட்டுப் போறியே?"