சித்ரா பத்தின அனுதாபம் சக்திக்கும் இருந்ததால துளியும் யோசிக்காம அவன் கையப் புடிச்சுச் சொன்னான்..
"என்னால எந்தப் பிரச்னையும் வராது.. நிம்மதியா போயிட்டு வா"
அத ஆமோதிக்கற மாதிரி ஒரு கார் செல்லமா ஹாரனடிச்ச படி அந்த வீட்டு முன்னால நிக்க ரவி சொன்னான்..
"கார் வந்தாச்சு.. நான் கெளம்பறேன்..உன்ன நம்பித் தான் நிம்மதியாப் போறேன்..பாத்துக்கோ"
சக்தி ஆதரவா அவன் தோள அணைச்சுக்கிட்டே அவனோடவே உள்ள போயி அந்தப் பெரிய சூட்ககேஸ எடுத்துக்க ரவி செல் போன்,பர்ஸ் எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டான்..ரெண்டு பேரும் ரூம விட்டு வெளிய வந்த போது சித்ரா அவசரமா ஒரு சின்ன பூஜையப் போட்டு கைல தீபாராதனைத் தட்டோட எதுக்க வந்தா..
சக்தி சில நொடிகள் அசந்தே போனான்..அது ஏன்னா, அவன் இங்க வந்ததுல இருந்து அவள அழகு பத்தின ஆராய்ச்சிக் கண்ணோட பாக்கவே இல்ல..முதல் பார்வைல கோபமும்,வெறுப்பும் பொங்குன கண்களச் சந்திச்சு காறித் துப்பினதால இவனுக்கு வந்த கோபத்துல ஒரு எதிரியா பாவிச்சு அப்பப் பாத்தான்.. தோட்டத்துக்குப் போயிட்டுத் திரும்பி வந்ததும் பல வகையான உணர்ச்சிக் கலவையால திணறிக்கிட்டு இருந்ததால அழகை ஆராயற மனப்பான்மை வரல.. ஓரளவுக்கு மனசு இப்பத் தெளிவா இருந்ததால அழகு ஆராய்ச்சில அவனா இறங்காட்டியும் அவள் தோற்றம் இழுத்தது..இயல்பா இரும்ப காந்தம் இழுக்கற மாதிரி..
வாரின தலைல முல்லைப் பூச் சூடி.. தொவைச்சு அயர்ன் பண்ணின கஞ்சி மொட மொடப்பு காட்டன் புடவைல..நெத்தில திருநீற்றுத் தீற்றல் மேல கோபிச் சந்தனமும் மின்னும் குங்குமமும்..கைல வெள்ளித் தட்டுல மெல்லிசான கோடா கரும் புகை கிளம்பும் தீபாராதனைத் தட்டோட அவ எதுக்க வந்த போது வானத்து தேவதை இறங்கி வந்து வரவேற்புக் குடுத்த மாதிரி உணர்ந்தான்..ரவிக்கு எப்படியோ சக்தியப் பொறுத்த வரைக்கும் அவள் தோற்றம் அவனோட மனசுல ஆச்சரியப் படும் படியான அமைதியையும், சாந்தியையும் பரவச் செஞ்சுது..
மத்த பொண்ணுங்களப் போல அங்கம் அங்கமா பாத்தா அவளும் இன்னுமொரு பெண்ணே ! ஆனா,ஒட்டு மொத்தப் பார்வைல அவள் தரும் அற்புத உடல் மொழியே அவளை தேவதையாக்குது..எல்லாரையும் மாதிரி இவளையும் சராசரில சேர்க்கறது மிக மடத் தனம்னு சக்தி அப்ப உணர்ந்தான்..கல்யாண நாள்ல இருந்து தன்னையே தனக்குள்ள ஒடுக்கி சராசரி உணர்ச்சிகளக் கொன்னு விரத தவமா வாழ்ந்த அவளால சராசரி உணர்ச்சிகள கொட்டும் போதும்..அது கோபமோ,வெறுப்போ,காதலோ,காமமோ..
எதுவானாலும் அது காட்டாத்து வெள்ளமாத் தான் இருக்கும்..அத எதிர் கொள்றவன் ஒரு சராசரியா இருந்தா நிச்சயம் அடிச்சு அமுக்கி மூழ்கடிச்சுடும்ங்கறதையும் அவன் உணரவே செஞ்சான்..
பக்திங்கறது அவ போட்டுக்கிட்ட வேசமல்ல.. சராசரி உணர்ச்சிகள கட்டுக்குள்ள வச்சிருந்து அவசியம்னா அத அமிர்த பிரவாகமா பொழியவே அவள் பக்தி அவளுக்குக் உதவுதுன்னு நெனைச்சான்.. காத்திருத்தல்..தனக்கான ஒண்ணுக்காகக் காத்திருக்கறது..தவம் கூட இன்னொரு மிகப் பெரிய காத்திருத்தல் தானே?உணர்ச்சிகள ஒளிவு மறைவு இல்லாம கொட்டற அந்தச் சிறு கண்கள்ல இப்ப மிகப் பெரிய சாந்தியும்,சந்தோசமும் பொங்க எதுக்க வந்து நிக்க ரவி தீபராதனைய கண்ணுல ஒத்திக்க அவளே அவன் நெத்தில திருநீற சின்னதா இட்டுச் சொன்னா..
"உண்மையா இரு..அத விடப் பெரிய விசயம் இந்த உலகத்துல ஒண்ணுமே இல்ல..போயிட்டு வா.. "
ரவி பதிலா ஒண்ணுமே சொல்லலைன்னாலும் ரொம்ப உணர்ச்சி வசப் பட்டு இருக்கான்னு அவன் முகம் தெளிவா காட்டுச்சு..எதுவும் பேசாம முன்னால போயிக்கிட்ட சக்தி பின்னால போயிக்கிட்டிருந்தவன 'அண்ணா'ங்கற அவளோட உணர்ச்சி மிகுந்த குரல் சடனா நிறுத்தித் திரும்பவும் வச்சுது.. தீபாராதனைத் தட்ட பக்கத்துல வச்சுட்டு கிட்ட வந்து அவன் உச்சந் தலைல கைய வச்சு உணர்ச்சி பொங்கச் சொன்னா..
"நீ எனக்கு வெறும் அண்ணனா எப்பவுமே இருந்ததில்ல..முகமே ஞாபகத்துல இல்லாத அப்பாவா இருந்திருக்க..அம்மா செய்யத் தவறின கடமைய அம்மாவுக்கு மேலயே எனக்குச் செஞ்சிருக்கே.. இத்தனை காலமா தாயா,தகப்பனா இருந்து பாத்துக்கிட்டதுக்கு இது வரைக்கும் நானிருந்த தவ வாழ்க்கைக்கு பலன்னு எதாவது இருந்தா அது அத்தனையும் உனக்கே சேரட்டும்..கடைசியா,இத்தன வருசமா உங்கிட்டச் சொல்லாத ஒண்ணையும் சொல்லிடறேன்..தேங்க் யு...தேங்க் யு ஃபார் ஆல்.. போயிட்டு வா"
"என்னால எந்தப் பிரச்னையும் வராது.. நிம்மதியா போயிட்டு வா"
அத ஆமோதிக்கற மாதிரி ஒரு கார் செல்லமா ஹாரனடிச்ச படி அந்த வீட்டு முன்னால நிக்க ரவி சொன்னான்..
"கார் வந்தாச்சு.. நான் கெளம்பறேன்..உன்ன நம்பித் தான் நிம்மதியாப் போறேன்..பாத்துக்கோ"
சக்தி ஆதரவா அவன் தோள அணைச்சுக்கிட்டே அவனோடவே உள்ள போயி அந்தப் பெரிய சூட்ககேஸ எடுத்துக்க ரவி செல் போன்,பர்ஸ் எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டான்..ரெண்டு பேரும் ரூம விட்டு வெளிய வந்த போது சித்ரா அவசரமா ஒரு சின்ன பூஜையப் போட்டு கைல தீபாராதனைத் தட்டோட எதுக்க வந்தா..
சக்தி சில நொடிகள் அசந்தே போனான்..அது ஏன்னா, அவன் இங்க வந்ததுல இருந்து அவள அழகு பத்தின ஆராய்ச்சிக் கண்ணோட பாக்கவே இல்ல..முதல் பார்வைல கோபமும்,வெறுப்பும் பொங்குன கண்களச் சந்திச்சு காறித் துப்பினதால இவனுக்கு வந்த கோபத்துல ஒரு எதிரியா பாவிச்சு அப்பப் பாத்தான்.. தோட்டத்துக்குப் போயிட்டுத் திரும்பி வந்ததும் பல வகையான உணர்ச்சிக் கலவையால திணறிக்கிட்டு இருந்ததால அழகை ஆராயற மனப்பான்மை வரல.. ஓரளவுக்கு மனசு இப்பத் தெளிவா இருந்ததால அழகு ஆராய்ச்சில அவனா இறங்காட்டியும் அவள் தோற்றம் இழுத்தது..இயல்பா இரும்ப காந்தம் இழுக்கற மாதிரி..
வாரின தலைல முல்லைப் பூச் சூடி.. தொவைச்சு அயர்ன் பண்ணின கஞ்சி மொட மொடப்பு காட்டன் புடவைல..நெத்தில திருநீற்றுத் தீற்றல் மேல கோபிச் சந்தனமும் மின்னும் குங்குமமும்..கைல வெள்ளித் தட்டுல மெல்லிசான கோடா கரும் புகை கிளம்பும் தீபாராதனைத் தட்டோட அவ எதுக்க வந்த போது வானத்து தேவதை இறங்கி வந்து வரவேற்புக் குடுத்த மாதிரி உணர்ந்தான்..ரவிக்கு எப்படியோ சக்தியப் பொறுத்த வரைக்கும் அவள் தோற்றம் அவனோட மனசுல ஆச்சரியப் படும் படியான அமைதியையும், சாந்தியையும் பரவச் செஞ்சுது..
மத்த பொண்ணுங்களப் போல அங்கம் அங்கமா பாத்தா அவளும் இன்னுமொரு பெண்ணே ! ஆனா,ஒட்டு மொத்தப் பார்வைல அவள் தரும் அற்புத உடல் மொழியே அவளை தேவதையாக்குது..எல்லாரையும் மாதிரி இவளையும் சராசரில சேர்க்கறது மிக மடத் தனம்னு சக்தி அப்ப உணர்ந்தான்..கல்யாண நாள்ல இருந்து தன்னையே தனக்குள்ள ஒடுக்கி சராசரி உணர்ச்சிகளக் கொன்னு விரத தவமா வாழ்ந்த அவளால சராசரி உணர்ச்சிகள கொட்டும் போதும்..அது கோபமோ,வெறுப்போ,காதலோ,காமமோ..
எதுவானாலும் அது காட்டாத்து வெள்ளமாத் தான் இருக்கும்..அத எதிர் கொள்றவன் ஒரு சராசரியா இருந்தா நிச்சயம் அடிச்சு அமுக்கி மூழ்கடிச்சுடும்ங்கறதையும் அவன் உணரவே செஞ்சான்..
பக்திங்கறது அவ போட்டுக்கிட்ட வேசமல்ல.. சராசரி உணர்ச்சிகள கட்டுக்குள்ள வச்சிருந்து அவசியம்னா அத அமிர்த பிரவாகமா பொழியவே அவள் பக்தி அவளுக்குக் உதவுதுன்னு நெனைச்சான்.. காத்திருத்தல்..தனக்கான ஒண்ணுக்காகக் காத்திருக்கறது..தவம் கூட இன்னொரு மிகப் பெரிய காத்திருத்தல் தானே?உணர்ச்சிகள ஒளிவு மறைவு இல்லாம கொட்டற அந்தச் சிறு கண்கள்ல இப்ப மிகப் பெரிய சாந்தியும்,சந்தோசமும் பொங்க எதுக்க வந்து நிக்க ரவி தீபராதனைய கண்ணுல ஒத்திக்க அவளே அவன் நெத்தில திருநீற சின்னதா இட்டுச் சொன்னா..
"உண்மையா இரு..அத விடப் பெரிய விசயம் இந்த உலகத்துல ஒண்ணுமே இல்ல..போயிட்டு வா.. "
ரவி பதிலா ஒண்ணுமே சொல்லலைன்னாலும் ரொம்ப உணர்ச்சி வசப் பட்டு இருக்கான்னு அவன் முகம் தெளிவா காட்டுச்சு..எதுவும் பேசாம முன்னால போயிக்கிட்ட சக்தி பின்னால போயிக்கிட்டிருந்தவன 'அண்ணா'ங்கற அவளோட உணர்ச்சி மிகுந்த குரல் சடனா நிறுத்தித் திரும்பவும் வச்சுது.. தீபாராதனைத் தட்ட பக்கத்துல வச்சுட்டு கிட்ட வந்து அவன் உச்சந் தலைல கைய வச்சு உணர்ச்சி பொங்கச் சொன்னா..
"நீ எனக்கு வெறும் அண்ணனா எப்பவுமே இருந்ததில்ல..முகமே ஞாபகத்துல இல்லாத அப்பாவா இருந்திருக்க..அம்மா செய்யத் தவறின கடமைய அம்மாவுக்கு மேலயே எனக்குச் செஞ்சிருக்கே.. இத்தனை காலமா தாயா,தகப்பனா இருந்து பாத்துக்கிட்டதுக்கு இது வரைக்கும் நானிருந்த தவ வாழ்க்கைக்கு பலன்னு எதாவது இருந்தா அது அத்தனையும் உனக்கே சேரட்டும்..கடைசியா,இத்தன வருசமா உங்கிட்டச் சொல்லாத ஒண்ணையும் சொல்லிடறேன்..தேங்க் யு...தேங்க் யு ஃபார் ஆல்.. போயிட்டு வா"