சக்தி பதில் சொல்றதுக்கு முந்தியே எதுவோ ஞாபகம் வந்தவளா 'ஐயையோ..ஸாரி மாமா'ன்னு துள்ளிக் குதிச்சு எந்திரிச்சா..சக்தி ஆச்சரியமா 'எதுக்கு சித்ரா?'ன்னு கேக்கவும் தன் மண்டைல அடிச்சுக்கிட்டுச் சொன்னா..
"நீங்க நின்னுக்கிட்டிருக்க நான் என்னவோ பெரிய மகாராணி மாதிரி உக்காந்து பேசிட்டு இருக்கேன் பாருங்க..மடச்சி..மடச்சி..வாங்க மாமா..இப்படி உக்காருங்க"
உண்மையிலேயே பதறிப் பேசி தன் முந்தானைல திண்ணையத் தட்டவும் செஞ்சா..பல சமயங்கள்ல ரொம்ப புத்தி சாலியா இருக்கற சித்ரா மிகச் சில சமயங்கள்ல அபத்தமாவும் நடந்துக்கறத நெனைச்சு ஆச்சரியப் பட்டவனா கேட்டான்..
"ஆம்பளைங்க முன்னால லேடீஸ் உக்காரக் கூடாதுங்கற அடிமைத்தனம் போன நூற்றாண்டுலயே வழக்கொழிஞ்சு போச்சு சித்ரா"
"ஓ..இருக்கட்டும்... சட்டமே போட்டாலும் எதையும் நான் ஏத்துக்கணுமில்லையா?எந்த மயிரானுக்கும் நான் பதறி எழுந்திருக்க மாட்டேன்..ஏன்னா,யாரையும் நான் ஆம்பளையா மதிக்கல..உங்களத் தவிர"
இவ என்ன தான் சொல்ல வர்றான்னு புரியாதவனா சக்தி கேட்டான்..
"நானென்ன ஸ்பெஷல் சித்ர மாலா?"
தொடர்ந்து திண்ணை முழுசும் முந்தானைல தூசி தட்டிக்கிட்டிருந்தவ சக்தி சொன்னதக் கேட்டதும் டக்னு அத நிறுத்தி நிமிர்ந்து சக்தியப் பாத்தா..அந்தக் கண்ணுலயும் முகத்துலயும் அப்படியொரு பூரிப்பு.. சின்னக் கண்ணு ரெண்டும் பள பளன்னு ஜொலிக்கக் கேட்டா..
"என்ன கேட்டீங்க?"
"நானென்ன ஸ்பெஷல்னு கேட்டேன்"
"எம் பேர விட்டுட்டீங்க"
"ஓ.. நானென்ன ஸ்பெஷல் சித்ர மாலா?"
அவன் சொல்லி முடிக்கவும் கண்கள் சொருகி மூடி நெஞ்சு தாழ்ந்தேற பெருமூச்சுடன் நெகிழ்ந்து சொன்னாள்..
"வா ஆஆஆஆஆஆ வ்...நல்லாருக்கு"
சக்தி குழபத்தின் உச்சிக்கே போனவனா கேட்டான்..
"எது சித்ர மாலா?"
"இது தான்..ஸ்கூல்ல அட்டண்டென்ஸ் எடுக்கைல என் முழுப் பேரச் சொல்லிக் கூப்பிடுவாங்க.. பெரும்பாலும் சித்ரா தான்..பிரண்ட்ஸ்க்கு மட்டும் 'சித்ரு'..'மாலு'.. நீங்க என் முழுப் பேரச் சொல்லிக் கூப்பிடைல நறு மணத்தோட ஒரு தென்றல் உடம்ப வருடிச் சிலிர்க்க வைக்கற மாதிரி...சூப்பர்ப்..ஐயோ..மறுபடியும் மறந்துட்டனே..இப்ப உக்காரப் போறீங்களா, இல்லையா மாமா?"
சக்திக்கு அவள் போக்கு சுத்தமாப் புரியலேன்னாலும் அவளையும் அவளின் விசித்திர குணாதியசத்தையும் ரொம்பவே ரசிச்சான்..அதனால திண்ணையின் ஒரு மூலைல போயி உக்காந்ததும் கேட்டான்..
"பேரு ரசனைய அப்புறம் வச்சுக்கலாம் சித்ர மாலா.. அதுக்கு முன்ன ஒரு கேள்வி கேட்டேன்..நீ இன்னும் அதுக்கு பதில் சொல்லல"
"என்ன கேள்விங்க மாமா? ஓ..நீங்க என்ன ஸ்பெஷல்.. அதானே?சொல்றேன்..ஆனா,இப்ப இல்ல..என் மாமன் கிட்டச் சொல்லாம யாரு கிட்டச் சொல்றது? இதுக்காகத் தான இத்தன வருசமா காத்திருந்தேன்.?"
சக்தி சட்டைய கிழிச்சுக்கற நெலைமைக்கே போயிட்டான்..'என் மாமன்'..இத என்ன அர்த்தத்துல சொல்றா இவ?கூடவே எங்கிட்டச் சொல்றதுக்காகவே இத்தன வருசமா காத்திருக்கறதா பில்டப் வேற.. இதுக்கு இவ மணியடிச்சு பூஜை பண்ணிக்கிட்டு மௌன சாமியாவே இருந்திருக்கலாம்னு அலுத்துக்கிட்டு அதச் சொல்லவும் செய்தான்..
"நீ பேசாம இருக்கறதக் கூட என்னால புரிஞ்சுக்க முடியுது..பேசறது தான் ஒரு மண்ணும் புரியல.. பொண்ணுங்க மூடு மந்திரமா பேசறதுன்னு எறங்கிட்டா பசங்கள சட்டையக் கிழிச்சுக்கற லெவலுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டுத் தான் மறு வேலை பாப்பீங்களா?"
"சேச்சே..என்ன மாமா இது?சொல்றேன்.. எல்லாத்தையும் உங்க கிட்டச் சொல்றேன்.. ஆனா, இப்ப இல்ல..நாளைக்குச் சாயந்திரம் கண்டிப்பா..ஓ.கே? சரி.. என்ன முடிவு பண்ணுனீங்க மாமா..படுக்கைய இங்க போட்டு என் கற்பக் காப்பாத்தறீங்களா?இல்ல.. தறிக் குடோன் ஆபீஸ்ல படுத்து உங்க கற்ப காப்பாத்திக்கப் போறீங்களா?"
குறும்பு மின்னும் அவ பார்வையச் சந்திச்சு புன்னகையோட சொன்னான்..
"கற்புக் கருமாந்தரத்த விடு சிதர் மாலா..நான் இங்க படுக்கறதுல வேற ஒரு சிக்கல் இருக்குதுங்கறத மறந்துட்டியே?ஒரு மணிக்கொரு சிகரெட் பத்தறவன் நான்..அதோட தோணும் போதெல்லாம் குடிக்கறவனும் கூட..இந்த ரெண்டுமே உனக்கு அலர்ஜியாச்சே?'
"நீங்க நின்னுக்கிட்டிருக்க நான் என்னவோ பெரிய மகாராணி மாதிரி உக்காந்து பேசிட்டு இருக்கேன் பாருங்க..மடச்சி..மடச்சி..வாங்க மாமா..இப்படி உக்காருங்க"
உண்மையிலேயே பதறிப் பேசி தன் முந்தானைல திண்ணையத் தட்டவும் செஞ்சா..பல சமயங்கள்ல ரொம்ப புத்தி சாலியா இருக்கற சித்ரா மிகச் சில சமயங்கள்ல அபத்தமாவும் நடந்துக்கறத நெனைச்சு ஆச்சரியப் பட்டவனா கேட்டான்..
"ஆம்பளைங்க முன்னால லேடீஸ் உக்காரக் கூடாதுங்கற அடிமைத்தனம் போன நூற்றாண்டுலயே வழக்கொழிஞ்சு போச்சு சித்ரா"
"ஓ..இருக்கட்டும்... சட்டமே போட்டாலும் எதையும் நான் ஏத்துக்கணுமில்லையா?எந்த மயிரானுக்கும் நான் பதறி எழுந்திருக்க மாட்டேன்..ஏன்னா,யாரையும் நான் ஆம்பளையா மதிக்கல..உங்களத் தவிர"
இவ என்ன தான் சொல்ல வர்றான்னு புரியாதவனா சக்தி கேட்டான்..
"நானென்ன ஸ்பெஷல் சித்ர மாலா?"
தொடர்ந்து திண்ணை முழுசும் முந்தானைல தூசி தட்டிக்கிட்டிருந்தவ சக்தி சொன்னதக் கேட்டதும் டக்னு அத நிறுத்தி நிமிர்ந்து சக்தியப் பாத்தா..அந்தக் கண்ணுலயும் முகத்துலயும் அப்படியொரு பூரிப்பு.. சின்னக் கண்ணு ரெண்டும் பள பளன்னு ஜொலிக்கக் கேட்டா..
"என்ன கேட்டீங்க?"
"நானென்ன ஸ்பெஷல்னு கேட்டேன்"
"எம் பேர விட்டுட்டீங்க"
"ஓ.. நானென்ன ஸ்பெஷல் சித்ர மாலா?"
அவன் சொல்லி முடிக்கவும் கண்கள் சொருகி மூடி நெஞ்சு தாழ்ந்தேற பெருமூச்சுடன் நெகிழ்ந்து சொன்னாள்..
"வா ஆஆஆஆஆஆ வ்...நல்லாருக்கு"
சக்தி குழபத்தின் உச்சிக்கே போனவனா கேட்டான்..
"எது சித்ர மாலா?"
"இது தான்..ஸ்கூல்ல அட்டண்டென்ஸ் எடுக்கைல என் முழுப் பேரச் சொல்லிக் கூப்பிடுவாங்க.. பெரும்பாலும் சித்ரா தான்..பிரண்ட்ஸ்க்கு மட்டும் 'சித்ரு'..'மாலு'.. நீங்க என் முழுப் பேரச் சொல்லிக் கூப்பிடைல நறு மணத்தோட ஒரு தென்றல் உடம்ப வருடிச் சிலிர்க்க வைக்கற மாதிரி...சூப்பர்ப்..ஐயோ..மறுபடியும் மறந்துட்டனே..இப்ப உக்காரப் போறீங்களா, இல்லையா மாமா?"
சக்திக்கு அவள் போக்கு சுத்தமாப் புரியலேன்னாலும் அவளையும் அவளின் விசித்திர குணாதியசத்தையும் ரொம்பவே ரசிச்சான்..அதனால திண்ணையின் ஒரு மூலைல போயி உக்காந்ததும் கேட்டான்..
"பேரு ரசனைய அப்புறம் வச்சுக்கலாம் சித்ர மாலா.. அதுக்கு முன்ன ஒரு கேள்வி கேட்டேன்..நீ இன்னும் அதுக்கு பதில் சொல்லல"
"என்ன கேள்விங்க மாமா? ஓ..நீங்க என்ன ஸ்பெஷல்.. அதானே?சொல்றேன்..ஆனா,இப்ப இல்ல..என் மாமன் கிட்டச் சொல்லாம யாரு கிட்டச் சொல்றது? இதுக்காகத் தான இத்தன வருசமா காத்திருந்தேன்.?"
சக்தி சட்டைய கிழிச்சுக்கற நெலைமைக்கே போயிட்டான்..'என் மாமன்'..இத என்ன அர்த்தத்துல சொல்றா இவ?கூடவே எங்கிட்டச் சொல்றதுக்காகவே இத்தன வருசமா காத்திருக்கறதா பில்டப் வேற.. இதுக்கு இவ மணியடிச்சு பூஜை பண்ணிக்கிட்டு மௌன சாமியாவே இருந்திருக்கலாம்னு அலுத்துக்கிட்டு அதச் சொல்லவும் செய்தான்..
"நீ பேசாம இருக்கறதக் கூட என்னால புரிஞ்சுக்க முடியுது..பேசறது தான் ஒரு மண்ணும் புரியல.. பொண்ணுங்க மூடு மந்திரமா பேசறதுன்னு எறங்கிட்டா பசங்கள சட்டையக் கிழிச்சுக்கற லெவலுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டுத் தான் மறு வேலை பாப்பீங்களா?"
"சேச்சே..என்ன மாமா இது?சொல்றேன்.. எல்லாத்தையும் உங்க கிட்டச் சொல்றேன்.. ஆனா, இப்ப இல்ல..நாளைக்குச் சாயந்திரம் கண்டிப்பா..ஓ.கே? சரி.. என்ன முடிவு பண்ணுனீங்க மாமா..படுக்கைய இங்க போட்டு என் கற்பக் காப்பாத்தறீங்களா?இல்ல.. தறிக் குடோன் ஆபீஸ்ல படுத்து உங்க கற்ப காப்பாத்திக்கப் போறீங்களா?"
குறும்பு மின்னும் அவ பார்வையச் சந்திச்சு புன்னகையோட சொன்னான்..
"கற்புக் கருமாந்தரத்த விடு சிதர் மாலா..நான் இங்க படுக்கறதுல வேற ஒரு சிக்கல் இருக்குதுங்கறத மறந்துட்டியே?ஒரு மணிக்கொரு சிகரெட் பத்தறவன் நான்..அதோட தோணும் போதெல்லாம் குடிக்கறவனும் கூட..இந்த ரெண்டுமே உனக்கு அலர்ஜியாச்சே?'