அதிர்ச்சி அவனுக்குத் தான்.. ஆனா,எதிர் பாராத விதமா திடீர்னு உள்ள வந்த அவனக் கண்டு சித்ரா அதிர்ச்சியோ,ஆச்சரியமோ கொஞ்சமும் படல.. அவன் மிச்சம் வச்சிட்டுப் போயிருந்த இலைல சாப்பிடறதப் பாத்துட்டானேங்கற குற்ற உணர்ச்சியும் காணோம்.. இவன் வார்த்தை வராம தடுமாறிட்டிருக்கைல ரொம்ப இயல்பா பேசவும் செஞ்சா..
"ஏனுங்க மாமா..தண்ணி வேணுமா?"
சொல்ல வந்ததச் சொல்ல முடியாம தடுமாறினான் சக்தி.. காரியம் பண்ணின அவ காஷுவலா இருக்க வேடிக்கை பார்த்த நாம திருதிருன்னு முழிக்கறதா இருக்கேன்னு நொந்தவனாச் சொன்னான்..
"லைட்டர் மக்கர் பண்ணுது"
"மாட்ச் பாக்ஸ் வேணுமா?அதோ..அந்த செல்ப்ல இருக்கும்.. இங்கயே உக்காந்து ஸ்மோக் பண்ணுங்க.. எனக்கும் கம்பனி குடுத்த மாதிரி இருக்கும்.."
சக்தி உள்ள போயி தீப்பெட்டி எடுத்துப் பத்திக்கிட்டுக் கேட்டான்..
"இதெல்லாம் உனக்குப் பிடிக்காதே சித்ர மாலா?"
சாப்பிடறத நிறுத்தி சில நொடி அவன உத்துப் பாத்துட்டு அப்புறமாச் சொன்னா..
"மொதல்ல நீங்க உக்காருங்க.. உங்கள நிக்க வச்சு நான் உக்காந்துட்டுப் பேசக் கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ்.."
அவன் உக்காந்ததும் தொடர்ந்தா...
"சிகரெட்,குடி ரெண்டுமே நான் நேத்து வரைக்கும் வெசமா வெறுத்த விசயங்கள் தான்.. ஆனா, உங்களுக்கு அது பிடிக்கும்ங்கறதால அந்த நெனைப்ப மாத்திக்கிட்டேன்.."
"ஆச்சரியா இருக்கு.. நேத்தைய விசம் இன்னிக்கு அமிர்தமாகி இருக்கு"
"லேடீஸ் எப்பவும் இஷ்டப் பட்டு கஷ்டப் படற ஜென்மங்க.. அது அவங்களோட நலையெழுத்து.."
பேச்ச நிறுத்தி புன்னகையோட அவனப் பாக்க தன் மன நிலைய அவன் வெளிப் படையாச் சொன்னான்..
"புரியல சித்ர மாலா.."
"விளக்கைத் தேடும் விட்டில் பூச்சிகள்னு படிச்சோ, கேள்வியோ பட்டிருப்பீங்களே?அதான் நாங்க.. ஆம்பளைங்களுக்குச் சுலபமான எல்லாமே எங்களுக்குக் கஷ்டம் தான்..லவ்,மேரேஜ்,செக்ஸ், குழந்தை..இப்படி எல்லாமே எங்களுக்கு சிரமமான விசயங்கள் ..ஆண்டாண்டு காலமா இது நடந்துட்டிருக்கற விசயம் தான்..ஆனா,எந்தப் பொண்ணாவது இதெல்லாம் வேணாடாம்னு சொல்லி இருக்காளா?அதுல இருக்கற கஷ்டங்கள் அவ அறியாததா..ஏன் திரும்பத் திரும்ப அத நோக்கிப் போறா?"
"அது இயற்கை விதி சித்ர மாலா"
"பிறப்பு,இறப்பு,உதயம்,அஸ்தமனம்,அமாவாசை,பௌர்ணமி, பஞ்ச பூதங்கள்,பூகம்பம், மழை,எரிமலை.. இதெல்லாம் வேண்ணா இயற்கையோட விதின்னு ஏத்துக்கலாம்..காதலும் காமமும் கூட ஒடம்புக்கும் மனசுக்குமான தேடலா இருக்கலாம்..ஆனா,கல்யாணம் எதுக்குங்க மாமா?டோட்டலா ஓரு பொண்ண குடும்பத்துக்கு அடிமையாக்கற விசயம் தான் கல்யாணம்..அதை ஏன் வேண்டாம்னு அவளால விலக்க முடியல?அதுக்குப் பேரு தான் இஷ்டப் பட்டு கஷ்டப் படறது..அப்ப அது இயற்கையோட சதின்னு வேண்ணா வச்சுக்கலாம்"
"இதுக்கும் என் விசயத்துக்கும் என்ன சம்பந்தம்?"
"ஒருத்தர நமக்குப் பிடிக்குதுன்னு எதக் கொண்டு சொல்றோம்?நல்லதோ,கெட்டதோ நமக்குப் புடிச்ச குணங்கள் ஒருத்தர் கிட்ட அதிகமா இருந்தா அவங்கள நமக்குப் பிடிச்சுப் போவுது..எத்தன தான் பிடிச்சுப் போனாலும் பிடிக்காததும் ஏதோ சிலதாவது இருக்குமில்லையா? அத என்ன பண்றது.. அத விட்டாத் தான் நான் உங் கூட பிரண்ட் ஷிப் வெச்சுக்குவேன்னு கண்டிசன் போட முடியுமா?போட்டா பிரண்ட் ஷிப் வருமா..வந்தாலும் நிலைக்குமா?உங்கள எனக்குப் பிடிக்குதுன்னா நிறைகளோட உங்க குறைகளையும் ஏத்துக்கறது தான் நல்ல உறவுக்கு அடையாளம்..ஏத்துக்கறதுன்னா அங்கீகரிக்கறதில்ல.. அனுமதிக்கறது மட்டும்! சமயம் பாத்து வண்டி வண்டியா அட்வைஸ் வரும்னு மெமரில வச்சுக்கங்க மாமா.."
சக்தி உடனே ஒண்ணும் சொல்வாம சிகரெட்ட ஒரு தம் இழுத்து ஊதிட்டு ரெண்டு முழங் கையவும் டைனிங் டேபிள் மேல ஊணி அவ கண்கள உத்துப் பாத்துச் சொன்னான்..
"பீ பிராங்க் ..என்ன உனக்குப் பிடிக்குதுன்னா.. அது எந்த அளவுக்கு? ஒரு பையனும் பொண்ணும் அண்ணந் தங்கச்சியா இல்லாம நல்ல பிரண்ட்ஸாவும் பழகலாம்.. தப்பில்ல..ஆனா,நான் மிச்சம் வச்சுட்டுப் போன எச்சிலைல சாப்பிடறது.... கமான் சித்ர மாலா..என்ன உறவிது?நிச்சயமா வெறும் பிரண்ட் ஷிப் இல்ல .. கொஞ்சங் கொஞ்சமா அதிர்ச்சியக் குடுத்து விடியறதுக்குள்ளயே என் மூளைய மரத்துத் ஸ்தம்பிக்க வச்சுடாதே..மேற்க் கொண்டு நாம இயல்பா பழகணும்னா சரியோ,தப்போ உம் மனசச் சொல்லியே ஆகணும்"
"ஏனுங்க மாமா..தண்ணி வேணுமா?"
சொல்ல வந்ததச் சொல்ல முடியாம தடுமாறினான் சக்தி.. காரியம் பண்ணின அவ காஷுவலா இருக்க வேடிக்கை பார்த்த நாம திருதிருன்னு முழிக்கறதா இருக்கேன்னு நொந்தவனாச் சொன்னான்..
"லைட்டர் மக்கர் பண்ணுது"
"மாட்ச் பாக்ஸ் வேணுமா?அதோ..அந்த செல்ப்ல இருக்கும்.. இங்கயே உக்காந்து ஸ்மோக் பண்ணுங்க.. எனக்கும் கம்பனி குடுத்த மாதிரி இருக்கும்.."
சக்தி உள்ள போயி தீப்பெட்டி எடுத்துப் பத்திக்கிட்டுக் கேட்டான்..
"இதெல்லாம் உனக்குப் பிடிக்காதே சித்ர மாலா?"
சாப்பிடறத நிறுத்தி சில நொடி அவன உத்துப் பாத்துட்டு அப்புறமாச் சொன்னா..
"மொதல்ல நீங்க உக்காருங்க.. உங்கள நிக்க வச்சு நான் உக்காந்துட்டுப் பேசக் கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ்.."
அவன் உக்காந்ததும் தொடர்ந்தா...
"சிகரெட்,குடி ரெண்டுமே நான் நேத்து வரைக்கும் வெசமா வெறுத்த விசயங்கள் தான்.. ஆனா, உங்களுக்கு அது பிடிக்கும்ங்கறதால அந்த நெனைப்ப மாத்திக்கிட்டேன்.."
"ஆச்சரியா இருக்கு.. நேத்தைய விசம் இன்னிக்கு அமிர்தமாகி இருக்கு"
"லேடீஸ் எப்பவும் இஷ்டப் பட்டு கஷ்டப் படற ஜென்மங்க.. அது அவங்களோட நலையெழுத்து.."
பேச்ச நிறுத்தி புன்னகையோட அவனப் பாக்க தன் மன நிலைய அவன் வெளிப் படையாச் சொன்னான்..
"புரியல சித்ர மாலா.."
"விளக்கைத் தேடும் விட்டில் பூச்சிகள்னு படிச்சோ, கேள்வியோ பட்டிருப்பீங்களே?அதான் நாங்க.. ஆம்பளைங்களுக்குச் சுலபமான எல்லாமே எங்களுக்குக் கஷ்டம் தான்..லவ்,மேரேஜ்,செக்ஸ், குழந்தை..இப்படி எல்லாமே எங்களுக்கு சிரமமான விசயங்கள் ..ஆண்டாண்டு காலமா இது நடந்துட்டிருக்கற விசயம் தான்..ஆனா,எந்தப் பொண்ணாவது இதெல்லாம் வேணாடாம்னு சொல்லி இருக்காளா?அதுல இருக்கற கஷ்டங்கள் அவ அறியாததா..ஏன் திரும்பத் திரும்ப அத நோக்கிப் போறா?"
"அது இயற்கை விதி சித்ர மாலா"
"பிறப்பு,இறப்பு,உதயம்,அஸ்தமனம்,அமாவாசை,பௌர்ணமி, பஞ்ச பூதங்கள்,பூகம்பம், மழை,எரிமலை.. இதெல்லாம் வேண்ணா இயற்கையோட விதின்னு ஏத்துக்கலாம்..காதலும் காமமும் கூட ஒடம்புக்கும் மனசுக்குமான தேடலா இருக்கலாம்..ஆனா,கல்யாணம் எதுக்குங்க மாமா?டோட்டலா ஓரு பொண்ண குடும்பத்துக்கு அடிமையாக்கற விசயம் தான் கல்யாணம்..அதை ஏன் வேண்டாம்னு அவளால விலக்க முடியல?அதுக்குப் பேரு தான் இஷ்டப் பட்டு கஷ்டப் படறது..அப்ப அது இயற்கையோட சதின்னு வேண்ணா வச்சுக்கலாம்"
"இதுக்கும் என் விசயத்துக்கும் என்ன சம்பந்தம்?"
"ஒருத்தர நமக்குப் பிடிக்குதுன்னு எதக் கொண்டு சொல்றோம்?நல்லதோ,கெட்டதோ நமக்குப் புடிச்ச குணங்கள் ஒருத்தர் கிட்ட அதிகமா இருந்தா அவங்கள நமக்குப் பிடிச்சுப் போவுது..எத்தன தான் பிடிச்சுப் போனாலும் பிடிக்காததும் ஏதோ சிலதாவது இருக்குமில்லையா? அத என்ன பண்றது.. அத விட்டாத் தான் நான் உங் கூட பிரண்ட் ஷிப் வெச்சுக்குவேன்னு கண்டிசன் போட முடியுமா?போட்டா பிரண்ட் ஷிப் வருமா..வந்தாலும் நிலைக்குமா?உங்கள எனக்குப் பிடிக்குதுன்னா நிறைகளோட உங்க குறைகளையும் ஏத்துக்கறது தான் நல்ல உறவுக்கு அடையாளம்..ஏத்துக்கறதுன்னா அங்கீகரிக்கறதில்ல.. அனுமதிக்கறது மட்டும்! சமயம் பாத்து வண்டி வண்டியா அட்வைஸ் வரும்னு மெமரில வச்சுக்கங்க மாமா.."
சக்தி உடனே ஒண்ணும் சொல்வாம சிகரெட்ட ஒரு தம் இழுத்து ஊதிட்டு ரெண்டு முழங் கையவும் டைனிங் டேபிள் மேல ஊணி அவ கண்கள உத்துப் பாத்துச் சொன்னான்..
"பீ பிராங்க் ..என்ன உனக்குப் பிடிக்குதுன்னா.. அது எந்த அளவுக்கு? ஒரு பையனும் பொண்ணும் அண்ணந் தங்கச்சியா இல்லாம நல்ல பிரண்ட்ஸாவும் பழகலாம்.. தப்பில்ல..ஆனா,நான் மிச்சம் வச்சுட்டுப் போன எச்சிலைல சாப்பிடறது.... கமான் சித்ர மாலா..என்ன உறவிது?நிச்சயமா வெறும் பிரண்ட் ஷிப் இல்ல .. கொஞ்சங் கொஞ்சமா அதிர்ச்சியக் குடுத்து விடியறதுக்குள்ளயே என் மூளைய மரத்துத் ஸ்தம்பிக்க வச்சுடாதே..மேற்க் கொண்டு நாம இயல்பா பழகணும்னா சரியோ,தப்போ உம் மனசச் சொல்லியே ஆகணும்"