நீ ஆரம்பத்துல இருந்தே மனுவோட விழுதில்லையா?இப்போ தான் சக்தி யை ரொம்ப ரொம்ப புடிக்கிது......
நீ ஆரம்பத்துல இருந்தே மனுவோட விழுதில்லையா?இப்போ தான் சக்தி யை ரொம்ப ரொம்ப புடிக்கிது......
நன்றி கவிம்மா..Hi bro...
A wonderfully narrated episode.... Shakth's condition were beautifully written..... Ends with a suspense....semma
Well done shakthi.சரி..அவன் வந்த பின்னாலயோ,நாளைக்குக் காலைல கூடவோ நடந்ததச் சொல்லி அவன் கிட்ட மன்னிப்பும் கேட்டு உன்னக் கல்யாணம் பண்ணக் கேக்கறேன்னு வை..அப்ப நடந்ததெல்லாம் சரின்னு ஆயிடுமா சித்ர மாலா?எந்த நொடில அவன் என்ன நம்பி உன்ன இங்க விட்டுட்டுப் போனானோ அந்த நொடில இருந்து அவன் எடத்துல அண்ணனா,அப்பனா நின்னு உன்ன பத்திமாக் காப்பாத்தி ஒப்படைக்கறதுக்குத் தான் எனக்கு உரிமை இருக்கே தவிர..தப்பா சின்னதா ஒரு ஸ்டெப் வெச்சாலும் அந்த டெய்லருக்கும் எனக்கும் துளி கூட வித்தியாசமில்லாம போயிடும்..
இது என் என் நிலை..இனி உன் பொசிசனப் பாப்போம்.. அம்மாவ வெறுத்து உறவுகள விலக்கி நீ தாலியக் கழட்டி வீசிட்டு காரை எடுன்னதும் எடுத்த ரவி அப்ப உனக்கு அடிமையானான் சித்ர மாலா..இன்னும் அதுல இருந்து அவன் மீளவோ,மீள முயற்சிக்கவோ கூட இல்ல.. என் வயசு அவனுக்கு..உன்ன விட ரெண்டு வயசு மூத்தவன்.. இருபத்தேழாகுது..எந்த பிக்கல்,பிடுங்கலுமில்லாத படிச்சு நல்ல வசதியோட பெரிய வக்கீல் கிட்ட ஜுனியரா இருக்கறவன் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலேன்னு ஒரு நாளாவது யோசிச்சிருப்பியா?
டீப்பா யோசிச்சா அதுக்குக் காரணம் நீங்கறது உனக்குப் புரியும்..உன்ன வீட்ல வச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணி பொண்டாட்டியோட கொஞ்சிக் குலாவறதப் பாவமா நெனைக்கறான் அவன் ! உனக்கொரு நல்ல வாழ்க்கைய அமைச்சுக் குடுத்த பின்னால தான் தனக்கு எந்த நல்ல காரியமும் நடக்கணும்னு தவமாக் காத்திருக்கான்..அப்படிப் பட்டவனுக்கு மனசளவுல துளி துரோகம் நெனைச்சாலும் மகா பாவம் சித்ர மாலா.. அது உன்னாலயும் முடியாதுன்னே நான் நம்பறேன்.. ஏன்னா, நீ அந்தக் குரலால மகா குழப்பத்துல இருக்கியே தவிர நிச்சயமா குறுக்குப் புத்தி உள்ளவ இல்ல..
..இப்படித் தான் வாழணும்னு எந்த வரையறையும் என் வாழ்க்கைல இல்ல தான்..உன்ன மாதிரியே என் வாழ்க்கை.. என்னிஷ்டம்னு வாழறவன் தான்..ஆனா, வாழ்க்கைங்கறது நாம ஒருத்தர் மட்டுமே அடங்கின ஒண்ணில்ல சித்ர மாலா..பலரும்,பலதும் கலந்ததே நம்ம வாழ்க்கை..இந்தப் பலர் கலந்த வாழ்க்கைல எனக்கும் துரோகம் பண்ணினவங்க இருக்கலாம்.. அவங்களத் தேடிப் பிடிச்சுப் பழி வாங்கறனோ, இல்லையோ.. எனக்கு உதவுனவங்க..எனக்காக உருகினவங்க.. என்ன முழுசா நம்பினவங்களுக்கு என்ன செஞ்சேன்ங்கறது முக்கியமில்லையா?பிரதி பலன் பாக்காத அன்புக்குக் கூட கட்டுப் படலேன்னா நான் வாழறத விட செத்துடறதே ரொம்ப நல்லது ..
இதுக்கு மேலயும் உன் கோரிக்கை உயிரோட இருந்தா நிச்சயம் நிறைவேத்துவேன்..ஆனா,நாளைக்குக் காலைல நான் உயிரோட இருக்க மாட்டேன் .. இதுக்கு மேல உன்னிஷ்டம் சித்ர மாலா"
எல்லாப் பாரத்தையும் கொட்டிட்ட நிம்மதில பெரு மூச்சோட எந்திரிச்சு டேபிள் மேல செல் எடுத்து அழுத்தி மணி பார்த்தான்..2.10..இனித் தூங்கின மாதிரி தான்னு நெனைச்சவனா புகைய இழுத்துக்கிட்டே செல் தந்த கொஞ்ச வெளிச்சத்துல சித்ராவத் திரும்பி பாத்தவனுக்கு ஆச்சரியம் தான் மிஞ்சியது.. அவன் உணர்ச்சிப் பூர்வமா அத்தனை பேசியதக் கேட்டும் அந்த முகத்துல பெருசா எந்த மாறுதலுமில்ல..ஆர்வம் பொங்கும் கண்களால அவனோட ஒவ்வொரு அசைவையும் உள் வாங்கிட்டிருந்தா..சக்தி அலுப்பா செல் டார்ச்ச ஆன் பண்ணி டேபிள் மேல சுவத்துல சாய்ச்ச மாதிரி வச்சுட்டு டேபிள்ல சாய்ஞ்சு புகைக்கவும் சித்ரா ஒரு புன்னகையோட பேச ஆரம்பிச்சா..
"எல்லாத்தையும் சொல்லி முடிச்சுட்டீங்களா .. இல்ல..இன்னும் பாக்கி இருக்கா?அந்தக் குரல் எனக்கானவரா உங்களத் தேர்ந்தெடுத்ததுல எந்தத் தப்புமில்லேன்னு இப்பப் புரியுது எனக்கு..ஏன்னா, உண்மையான ஆண்மைங்கறது இது தான்..ஓவர் சென்டிமென்ட் மாமா உங்களுக்கு..இப்ப என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு நீள லெக்சர் குடுத்தீங்க.. ஒரு பச்சக்... தட்ஸ் ஆல் !அதுக்கு மேல எனக்கு ஒரு ஆனியனும் வேணாம்.. செத்துப் போன புருஷனால எனக்கு அதுன்னாலே வெறுப்பு தான் வருது..இப்ப நாங் கேட்டத குடுக்கப் போறீங்களா,இல்லையா"