போனக் கட் பண்ணிட்டு தன் பக்கத்துல இருந்த ஒருத்தன் கிட்ட சி.கே சொன்னான்..
"டேய்..உனக்கு ஞாபகமிருக்கா?அஞ்சு வருசத்துக்கு முந்தி ஒரு டெய்லர நோட் பண்ண சென்னிமலை ரோட்டுல நொங்குக் கடை போட்டமே?அந்த சக்தி இப்ப இங்க வரப் போறான்..ஒரு கார வரச் சொல்லி அடி பட்டவங்கள அள்ளிப் போட்டு அனுப்பு..அவன் வந்து இதெல்லாம் பாத்தாக் கத்துவான்"
"ஏன் தலைவரே..அடி,தடின்னா அவருக்குப் பயம்ங்களா?"
சி.கே வாய் விட்டுச் சிரிச்சுட்டுச் சொன்னான்..
"ரசிச்சுச் செய்வான்டா..நீயும்,நானும் அடி,தடில எறங்கினா கண்மூடித் தனமா எறங்கி அடிச்சோம்னா, அவன் அதைத் திட்டம் போட்டு ரசனையோட செய்வான்"
சொன்ன சி.கே மனசுல சக்தி விரிஞ்சான்..அஞ்சு வருசத்துக்கு முன்ன டெய்லர ஒதைச்சு விரல ஒடைச்ச பின்னால ஸ்கூட்டர தன் கிட்ட ஒப்படைச்சு அடுத்த நாள் காலைல கூப்பிடறதாச் சொல்லிட்டுப் போன சக்தி சாயந்திரம் வரைக்கும் கூப்பிடாததால இவனே கூப்பிடவும் தான் அட்ரஸ் சொல்லி வரச் சொன்னான்.. சி.கே போன போது சித்ராவோட எல்லாக் காரியமும் முடிஞ்சு சக்தி ரவி தோட்டத்துல தனியா உக்காந்து குடிச்சுக்கிட்டிருந்தான்..சி.கேக்கு ஆறுதலா என்ன சொல்றதுன்னு தெரியல..ஏன்னா,சித்ராவுக்கும் சக்திக்கும் என்ன உறவுன்னே அவனுக்குத் தெரியாது.. அதனால, கிட்ட உக்காந்து ஆறுதலா அவன் தோள்ல தட்டிக் கேட்டான்..
"எப்படி சக்தி?"
"ஆயில் இன்ஜின ஸ்டார்ட் பண்றேன்னு போனா.. அஞ்சே நிமிசத்துல போயிச் சேந்துட்டா..பெல்ட்ல புடவை மாட்டி இழுத்து செவுத்துல அடிச்சுருக்கும்னு எங்க யூகம்..ஆனா,எனக்கு மட்டும் லேசா அந்த டெய்லர் மேல சந்தேகமிருக்கு..''
"சான்ஸே இல்லடா.. டெய்லரும் செத்துட்டான்.. வாழ்க்கைல ஒண்ணு சேராதவங்க சாவுல மட்டும் ஒண்ணு சேர்ந்திருக்காங்க"
"என்னடா இது புதுக் கதை..நீ சொல்றது நிஜம் தானா?"
"நீ என்னவோ எடத்தக் காவி பண்ணிட்டு அவங்கவங்க எடத்துக்குப் போங்கன்னு சொல்லிட்டாலும் எனக்கென்னவோ மனசு ஒத்துக்கல..டெய்லர் கண்காணிக்க வேண்டிய ஆளுன்னு உள்ளுணர்வு சொல்ல ஒருத்தன மட்டும் அவன ரெண்டு நாளைக்கு கண்காணிக்கச் சொல்லி விட்டுட்டு வந்தேன்.. நாம அந்த எடத்த விட்டு விலகி ஒரு மணி நேரத்துக்கப்புறம் அவன் யாருக்கோ போன் பண்ணி அரை மணி நேரம் பேசி இருக்கான்..என் ஆளு என்ன பேசறான்னு தெரிஞ்சுக்கக் கிட்டப் போகைல இவன் 'எல்லாத் தகவலும் வாட்ஸ் அப்ல அனுப்பறேன்..அரை மணி நேரத்துக்குள்ள நான் சொனனதச் செஞ்சுட்டு இங்க வா'ன்னு சொன்னது மட்டும் காதுல விழுந்திருக்கு..அதுக்கு மேல கேக்க முடியல..பேசி முடிச்சதும் டெய்லர் கடைச் ஷட்டரச் சாத்திட்டான்..
ஒரு மணி நேரத்துக்கப்புறம் அவன் கூட்டாளி ஒருத்தன் வந்திருக்கான்..டெய்லர் ஷட்டர தாள் போடாம சும்மா தான் கீழ இழுத்து விட்டிருக்கான்.. வந்தவன் தட்டிப் பாத்துட்டு பதில் இல்லாம போகவும் ஷட்டரத் தூக்கினா டெய்லர் ஃபேன்ல தொங்கிட்டு இருக்கான்..உயிர் போயி வெகு நேரமாச்சு..அதனால அவனச் சந்தேகப் படறதுல அர்த்தமில்ல..என்னடா விதி இது?நாட்டுல அத்தனை அயோக்கியத்தனம் பண்ணினவனெல்லாம் எம்பது வயசுக்கு இருக்க இந்தப் பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சுன்னு இந்த வயசுல எமன் கூட்டிட்டுப் போறான்?எனக்கு இது என்ன மாதிரி சிஸ்டம்னு புரிய மாட்டேங்குது.. "
"சாவுங்கற பயம் ஒண்ணு மட்டுமில்லேன்னா மனுசனக் கைலயே புடிக்க முடியாதுடா சி.கே..அதனால தான் நல்லவன் கெட்டவன் பாகு பாடில்லாம,ஜாதி மத பேதமில்லாம,சின்னது பெரிசுன்னு வயசு வித்தியாசமில்லாம சாவு நடந்துக்கிட்டே இருக்கு..சரிடா.. நாளைக்கு நீ தோட்டத்துக்கு வா..உன் ஆளுங்களுக்கு அரிசி எடுத்துட்டு வந்துடலாம்"
"இந்த சூழ் நிலைல அதான் முக்கியம் பாரு.. விடறா.. அவனுங்களுக்கு நான் குடுத்துடறேன்"
"நீ லட்சக் கணக்குல குடு..அது நாங் குடுத்த மாதிரி ஆகுமா?நாளைக்கு நீ தோட்டத்துக்கு வர்றே.. அவ்வளவு தான்! நான் பல தடவ சொல்லிட்டேன்..தோட்டத்துக்கே நிரந்தரமா வந்துடுறான்னு..காதுலயே போட்டுக்கல"
"என்ன நம்பி பத்து ஆளுங்களோட அவங்க குடும்பங்களும் இருக்கு சக்தி"
"டேய்..உனக்கு ஞாபகமிருக்கா?அஞ்சு வருசத்துக்கு முந்தி ஒரு டெய்லர நோட் பண்ண சென்னிமலை ரோட்டுல நொங்குக் கடை போட்டமே?அந்த சக்தி இப்ப இங்க வரப் போறான்..ஒரு கார வரச் சொல்லி அடி பட்டவங்கள அள்ளிப் போட்டு அனுப்பு..அவன் வந்து இதெல்லாம் பாத்தாக் கத்துவான்"
"ஏன் தலைவரே..அடி,தடின்னா அவருக்குப் பயம்ங்களா?"
சி.கே வாய் விட்டுச் சிரிச்சுட்டுச் சொன்னான்..
"ரசிச்சுச் செய்வான்டா..நீயும்,நானும் அடி,தடில எறங்கினா கண்மூடித் தனமா எறங்கி அடிச்சோம்னா, அவன் அதைத் திட்டம் போட்டு ரசனையோட செய்வான்"
சொன்ன சி.கே மனசுல சக்தி விரிஞ்சான்..அஞ்சு வருசத்துக்கு முன்ன டெய்லர ஒதைச்சு விரல ஒடைச்ச பின்னால ஸ்கூட்டர தன் கிட்ட ஒப்படைச்சு அடுத்த நாள் காலைல கூப்பிடறதாச் சொல்லிட்டுப் போன சக்தி சாயந்திரம் வரைக்கும் கூப்பிடாததால இவனே கூப்பிடவும் தான் அட்ரஸ் சொல்லி வரச் சொன்னான்.. சி.கே போன போது சித்ராவோட எல்லாக் காரியமும் முடிஞ்சு சக்தி ரவி தோட்டத்துல தனியா உக்காந்து குடிச்சுக்கிட்டிருந்தான்..சி.கேக்கு ஆறுதலா என்ன சொல்றதுன்னு தெரியல..ஏன்னா,சித்ராவுக்கும் சக்திக்கும் என்ன உறவுன்னே அவனுக்குத் தெரியாது.. அதனால, கிட்ட உக்காந்து ஆறுதலா அவன் தோள்ல தட்டிக் கேட்டான்..
"எப்படி சக்தி?"
"ஆயில் இன்ஜின ஸ்டார்ட் பண்றேன்னு போனா.. அஞ்சே நிமிசத்துல போயிச் சேந்துட்டா..பெல்ட்ல புடவை மாட்டி இழுத்து செவுத்துல அடிச்சுருக்கும்னு எங்க யூகம்..ஆனா,எனக்கு மட்டும் லேசா அந்த டெய்லர் மேல சந்தேகமிருக்கு..''
"சான்ஸே இல்லடா.. டெய்லரும் செத்துட்டான்.. வாழ்க்கைல ஒண்ணு சேராதவங்க சாவுல மட்டும் ஒண்ணு சேர்ந்திருக்காங்க"
"என்னடா இது புதுக் கதை..நீ சொல்றது நிஜம் தானா?"
"நீ என்னவோ எடத்தக் காவி பண்ணிட்டு அவங்கவங்க எடத்துக்குப் போங்கன்னு சொல்லிட்டாலும் எனக்கென்னவோ மனசு ஒத்துக்கல..டெய்லர் கண்காணிக்க வேண்டிய ஆளுன்னு உள்ளுணர்வு சொல்ல ஒருத்தன மட்டும் அவன ரெண்டு நாளைக்கு கண்காணிக்கச் சொல்லி விட்டுட்டு வந்தேன்.. நாம அந்த எடத்த விட்டு விலகி ஒரு மணி நேரத்துக்கப்புறம் அவன் யாருக்கோ போன் பண்ணி அரை மணி நேரம் பேசி இருக்கான்..என் ஆளு என்ன பேசறான்னு தெரிஞ்சுக்கக் கிட்டப் போகைல இவன் 'எல்லாத் தகவலும் வாட்ஸ் அப்ல அனுப்பறேன்..அரை மணி நேரத்துக்குள்ள நான் சொனனதச் செஞ்சுட்டு இங்க வா'ன்னு சொன்னது மட்டும் காதுல விழுந்திருக்கு..அதுக்கு மேல கேக்க முடியல..பேசி முடிச்சதும் டெய்லர் கடைச் ஷட்டரச் சாத்திட்டான்..
ஒரு மணி நேரத்துக்கப்புறம் அவன் கூட்டாளி ஒருத்தன் வந்திருக்கான்..டெய்லர் ஷட்டர தாள் போடாம சும்மா தான் கீழ இழுத்து விட்டிருக்கான்.. வந்தவன் தட்டிப் பாத்துட்டு பதில் இல்லாம போகவும் ஷட்டரத் தூக்கினா டெய்லர் ஃபேன்ல தொங்கிட்டு இருக்கான்..உயிர் போயி வெகு நேரமாச்சு..அதனால அவனச் சந்தேகப் படறதுல அர்த்தமில்ல..என்னடா விதி இது?நாட்டுல அத்தனை அயோக்கியத்தனம் பண்ணினவனெல்லாம் எம்பது வயசுக்கு இருக்க இந்தப் பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சுன்னு இந்த வயசுல எமன் கூட்டிட்டுப் போறான்?எனக்கு இது என்ன மாதிரி சிஸ்டம்னு புரிய மாட்டேங்குது.. "
"சாவுங்கற பயம் ஒண்ணு மட்டுமில்லேன்னா மனுசனக் கைலயே புடிக்க முடியாதுடா சி.கே..அதனால தான் நல்லவன் கெட்டவன் பாகு பாடில்லாம,ஜாதி மத பேதமில்லாம,சின்னது பெரிசுன்னு வயசு வித்தியாசமில்லாம சாவு நடந்துக்கிட்டே இருக்கு..சரிடா.. நாளைக்கு நீ தோட்டத்துக்கு வா..உன் ஆளுங்களுக்கு அரிசி எடுத்துட்டு வந்துடலாம்"
"இந்த சூழ் நிலைல அதான் முக்கியம் பாரு.. விடறா.. அவனுங்களுக்கு நான் குடுத்துடறேன்"
"நீ லட்சக் கணக்குல குடு..அது நாங் குடுத்த மாதிரி ஆகுமா?நாளைக்கு நீ தோட்டத்துக்கு வர்றே.. அவ்வளவு தான்! நான் பல தடவ சொல்லிட்டேன்..தோட்டத்துக்கே நிரந்தரமா வந்துடுறான்னு..காதுலயே போட்டுக்கல"
"என்ன நம்பி பத்து ஆளுங்களோட அவங்க குடும்பங்களும் இருக்கு சக்தி"