ரொம்ப நனறிம்மா..Happy to know this from u....happy for u tooo.....
ரொம்ப நனறிம்மா..Happy to know this from u....happy for u tooo.....
????உங்க தம்பியென்ன டாக்டரா அக்கா?
ஒரு தோட்டத்துல வாட்ச்மேன்.. அத மறந்துடாதீங்க..
??????
Ipovachum kudikakoodadhunu yosikarare....good...நான் அந்தப் பெருசத் திட்டறத உன்னால ஒரு நாள் கூட பொறுத்துக்க முடியாது..கஸ்டமருங்க பறக்கறாங்களோ இல்லையோ, மொத ஆளா நாம் பறக்கறது நிச்சயம்..அதனால சி.கே.. நானும் ஆளு வேணும்னா எனக்கு அடங்கின ஆளப் போட்டுக்கறேன்..நீயும் வேற முதலாளி தேடிக்கோ.. அதான் ரெண்டு பேருக்குமே நல்லது..கடைசிக்கு நம்ம நல்ல பிரண்ட் ஷிப்பாவது மிச்சமா இருக்கும்'னு ஓப்பனாச் சொல்லிட்டான்..மொத்தத்துல எங்களுக்கு வேலை குடுக்க எவனும் தயாரா இல்ல..
இப்பவும் சொல்றேன்..இந்த நிமிசம் நீ குடிய விடு.. அடுத்த நிமிசத்துல இருந்து நானும் என் ஆளுங்களும் உனக்கு அடிமையா இருக்கோம்..அது வரைக்கும் தயவு செஞ்சு என்னத் தோட்டத்துக்குக் கூப்பிடாத"
சக்தி பொறுமையா எல்லாம் கேட்டுட்டு சி.கே தோள இறுக்கியணைச்சு உடனே சொன்னான்..
"கண்டிசன் போடறது எனக்குத் துளியும் புடிக்காத விசயம்..ஸாரி நண்பா..இந்த ஜென்மத்துல நம்மால ஒண்ணு சேந்து வேலை செய்ய முடியாது..ஆனா, நண்பனா இருக்கறதுல தடையில்லையே?உன்ன மாதிரி ஒருத்தன் பிரண்டா இருக்க நான் குடுத்து வச்சிருக்கணும்"
சி.கே உணர்ச்சி வசப் பட்டவனா சக்திய இறுக்கி அணைச்சுச் சொன்னான்..
"குடி ஒண்ண விட்டா உன்ன அடிச்சுக்க இந்த ஜில்லாவுலயே உன்ன அடிச்சுக்க ஆள் கிடையாது சக்தி"
×××××+×××××××××××××××××××××××××××××××
அன்னிக்குப் பாத்தது தான் சக்திய..அதுக்கப்புறம் சந்திச்சுக்கவே இல்ல..எப்பவாவது போன்ல பேசினதோட சரி..இன்னிக்குத் தான் அஞ்சு வருசத்துக்கு அப்புறம் நேர்ல சந்திக்கப் போறோம்னு சி.கே நெனைச்ச போது நூறடிக்கு அந்தப் பக்கம் சக்தி ஒரு பாறையத் தாண்டிக் குதிச்சு வலில கெடந்த பாம்ப தூக்கி எட்ட வீசிட்டு வர்றதப் பாத்தான்..ஓடிப் போயி அணைச்சுக் கூட்டி வந்து தன் கூட்டாளிங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சான்..எல்லாரையும் உக்காரச் சொல்லிட்டு சக்தி நின்னுக்கிட்டே பேச்ச ஆரம்பிச்சான்..
"சாவகாசமா உங்க ஒவ்வொருத்தரையும் அறிமுகப் படுத்திக்கறேன்..இப்ப நேரமில்ல..என்ன,ஏதுன்னு அதப் பத்தி விளக்கமாப் பேசறதுக்கு முன்ன எனக்கும், சி.கேவுக்கும் அஞ்சு வருசமா ஒரு பஞ்சாயத்திருக்கு.. மொதல்ல அத முடிச்சுடலாம்.."
சக்தி பேச்ச நிறுத்திட்டு கொஞ்ச நேரம் தன் நண்பன் முகத்தையே பாத்துட்டுத் தொடர்ந்தான்..
"நண்பனோட சேர்த்து உங்க எல்லாரையுமே அஞ்சு வருசத்துக்கு முந்தியே என் தோட்டத்துக்கு வேலைக்குக் கூப்பிட்டேன்..வர முடியாதுன்னுட்டான்.. சம்பளம் கட்டு படியாகலைங்கறதுக்காக அவன் வர மாட்டேன்னு சொல்லல..அவன் எத்தன கேட்டாலும் நான் குடுப்பேன்.. என்னால முடியவே முடியாதுன்னு அப்ப நான் நெனைச்ச ஒண்ணக் கேட்டான்..எங் குடிய விடச் சொன்னான்..நாம குடிக்கறதுல இவனுக்கென்ன நஷ்டம்னு நான் முடியாதுன்னுட்டேன்.. நான் மட்டும் இவஞ் சொன்னத அப்பவே கேட்டிருந்தா.. எம் மேல உசுரையே வச்சிருந்த மூணு பேர்ல ஒருத்தர் உசுரு போயிருக்காது..இன்னும் ரெண்டு பேரோட உசுரு ஊசலாடிட்டு இருக்காது..குடியால எல்லாரையும் இழந்து சி.கே மாதிரியே இப்ப அனாதையா நிக்கறேன்...."
மேல பேச முடியாம துக்கம் தொண்டைய அடைக்க பொங்கி வந்த கண்ணீரை மறைக்க யோசிக்கறனா பாவிச்சுத் தலை குனிஞ்சான் சக்தி !சில நொடிகள் தான்..உடனே சமாளிச்சு தல நிமிந்து கம்பீரமா சி.கேவப் பாத்துச் சொன்னான்..
"அவனுக்கு நஷ்டம் வந்துடும்னு பயந்து அவன் குடிய விடச் சொல்லல..எனக்கு நஷ்டம் வந்துடக் கூடாதுன்னு தான் அப்படிக் கேட்டான்னு இப்பப் புரியுது.. அதனால, தண்பனோட சேர்த்து ஆண்டவனுக்கும் இப்ப ஒரு சவால் விடறேன்..நேத்து நைட் குடிச்சது தான்..மத்த நாள்ல இன்னேரத்துக்கு ஒரு ஆப்ப உள்ள ஏத்தியிருப்பேன்.. இனியும் 48 மணி நேரத்துக்கு அதத் தொட மாட்டேன்..இந்த 48மணி நேரத்துக்குள்ள என் எதிரியக் கண்ட துண்டமா வெட்டிப் பொதச்சுட்டு நான் திரும்பைல உயிருக்குப் போராடிட்டிருக்கற அந்த அற்புதமான ஜீவனுங்க மீண்டு மறு ஜென்மம் எடுத்துட்டா...என் தாய் அருக்காணி அம்மா மேல சத்தியமா குடி,சிகரெட்ட இந்த ஜென்மத்துல நான் தொட மாட்டேன்.. இனிமே எங்கிட்ட வேலை செய்யறதுக்கு உனக்குச் சம்மதம் தான சி.கே?"
சி.கே தாவி நண்பனை அணைச்சுக்கிட்டான்.. சம்மதம்னு வாயால தான் சொல்லணுமா என்ன?