சக்தி சுதாரிச்சுக்கிட்டுக் கேட்டான்..
"வேற ஆஸ்பிடலுக்கு...."
"பிரயோசனமில்ல...அதுக்கு மே உங்க விருப்பம்.. ரெண்டாவதா பயணங்களத் தாங்கற கண்டிசன்லயும் அவங்க ஹெல்த் இல்ல"
சக்தி ஒரு முடிவுக்கு வந்தவனாச் சொன்னான்..
"ஓ.கே டாக்டர்.. எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம்..நான் இப்ப அவள ஒரு தடவ பாத்துட்டு வர எமர்ஜென்சி வார்டுக்குள்ள போக உங்க அனுமதி வேணும்"
டாக்டர் டியூட்டி நர்ஸ்க்கு 'உள்ள விடு'ன்னு கண் ஜாடைலயே கட்டளை போட்டுட்டு சக்தி தோள்ல தட்டிட்டுப் போயிட்டார்.. நர்ஸ் அவன எமர்ஜென்சி வார்டுக்குள்ள அனுமதிக்கறதுக்கு முன்ன வாயவும் ் மூக்கவும் ஆபரேசன் பண்ற டாக்டர் மாதிரி துணி மாஸ்க்ல மூடிக் கட்டி அவங்க தந்த ரப்பர் செருப்பு போட்டுக்கச் சொல்லி 'பேசண்ட தொடாம எட்ட நின்னு பாக்கணும்'னு கண்டிப்பா எச்சரிச்சுக் கூட்டிட்டுப் போனாங்க..எமர்ஜென்சி வார்டுக்கு வேளிய விஜிம்மா, சேச்சி உக்காந்திருக்க சக்தி எந்ந உணர்ச்சியுமில்லாம அவங்களப் பாத்துட்டு உள்ள போனான்...
உள்ள போனதும் அவங்க கெடந்த நெலையப் பாத்து
சில நொடி அசையாம நின்னான்..ஆஸ்பிடலுக்கே உண்டான அந்த மருந்து வாடைல அவனுக்கு இடது பக்கமா கந்தசாமியும்,வலது பக்கமா மனுவும் படுத்திருக்க.. படுத்திருந்த எடங்கள்ல வித்தியாசம் இருந்ததே ஒழிய படுத்திருந்த நிலைமை என்னவோ ஒண்ணே தான்..துளி அசையாம கெடந்தவங்களச் சுத்தி ஏகப்பட்ட உபகரணங்கள்..ரெண்டு பேரையுமே பல டியூப்ங்க சுத்தி மூழ்கடிச்சிருந்தது..வாய்ல,மூக்குல டியூப் செருகி இருக்க,நெத்தி நெஞ்சுக்கு மேலன்னு டியூப்ங்க ஒட்டி இணைக்கப் பட்டிருந்தது..மானிட்டருங்களும் ஓடிக் கொண்டிருக்க ரெண்டு பேருக்குமே சுவாசத்துக்காக பிராண வாயு இணைக்கப் பட்டிருந்தது..
சக்தி ஒத்துழைக்க மறுத்த தன் கால்கள சிரமப் பட்டு நகர்த்தி கந்தசாமி படுத்திருந்த இடத்த நெருங்கினான்..
எந்த உணர்ச்சியுமில்லாம அவர் முகத்தையே பாத்துக்கிட்டிருந்த சக்தி சுய நினைவே இல்லாதவன் மாதிரி நர்ஸ் சொன்னதையும் மறந்து தன் வலது கைய அவர் நெஞ்சுல வச்சு வருடினான்..நர்ஸ் பதறி 'சார்'னு கிட்ட வர சடார்னு திரும்பி மாஸ்க்கால மூடியிருந்த உதட்டு மேல இடது கை ஆட்காட்டி விரல வச்சு சீறலா 'உஷ்ஷ்ஷ்ஷ்'னானே பாக்கலாம்..சாதாரணச் சீறலா அது?அடி பட்ட ராஜ நாகத்தோட சீறல் ! கூடவே எரிக்கும் பார்வை..நர்ஸ் வெலவெலத்துப் பின் வாங்க ஒரு நிமிசம் கந்தசாமி நெஞ்ச ஆறுதலா வருடி குனிஞ்சு அவர் நெத்தில முத்தமிட்டான்..பேச்சற்றுக் கெடந்தவரோட தொடு உணர்ச்சி மூலமா ஓராயிரம் செய்திகள அவன் கடத்த கந்நசாமியின் சுவாசம் சற்று சீராகத் தொடங்கி மருந்து ஆதிக்க மயக்கத்துல இருந்து விடுபட்டு இயல்பான தூக்கத்துல ஆழ்ந்தார்..சில சமயங்களில் பார்வையும்,பேச்சும் செய்ய முடியாத விந்தையை ஒற்றைத் நக நுனித் தொடுதல் சாதித்து விடும் !
சக்தி நிமிர்ந்து நகர்ந்து மனு படுக்கைய நெருங்கினான்..படுக்கைய ஒட்டி நின்னு தடுமாறும் தன் கால்களத் திடமா ஊணி அவ முகத்த சலனமற்றவனாப் பாத்தான்'இதுக்கா என்ன நெருங்கினே மனு...இதுக்கா சில்லி மூக்கு உடைய அறை வாங்கியும் 'கண்ட துண்டமா வெட்டிப் போட்டாலும் என் ஒவ்வொரு சதைத் துண்டும் சொல்லும் ஐ லவ் யூன்னு கம்பீரமா தலை நிமிர்ந்து சொன்னே தங்கம்..இதுக்கா என்னோடயும், வாழ்வோடயும் போராடினே பேபி?.. ஏன் உன்னால சாவோடயும்,ஆழப் போயிட்டிருக்கற உன் நினைவோடயும் போராட முடியல?அடப் போடா.. உன்னோட இனி மல்லுக் கட்ட முடியாதுன்னு அலுத்து வெறுத்து காலம் பூரா அனாதையாவே இருந்து தொலைன்னு சபிச்சுட்டுப் போறியா மனு?ஆழப் போயிட்டிருக்கற உன் நினைவுகள என் உயிர் நிலை உணர்ச்சிகள் அத்தனையும் ஒரு சேர எழுப்பி இப்பச் சொல்றேன்..ஐ லவ் யூ கண்ணம்மா..திரும்பி நான் உயிரோட வரைல நீயும் உயிரோட நினைவோட இருக்கணும்..ஒரு வேள பொணமா வந்தா நீயும் இங்க பொணமாத் தான் இருக்கணும்..நிச்சயமா கோமாவுல ஆழ்ந்த சதைப் பிண்டமா அல்ல..இது உன் அற்புதமான காதல் மீது சத்தியம்'..உள்ள அவ கூடப் பேசிக்கிட்டே துளியும் யோசிக்காம அவளோட ஆக்ஸிஜன் மாக்ஸக் கழட்டி வேகமாக் குனிஞ்சு அவள் மென்னிதழ்கோடு தன் உறுதி இதழ்களை அழுத்தமாய் இணைக்க.. தன் நெஞ்சுல கை வச்சு 'ஹெக்'னு அதிர்ந்தது அந்த நர்ஸ் மட்டுமல்ல !ஆழ்ந்து உள்ள போயிட்டிருந்த மனுவும் தான் !!
"வேற ஆஸ்பிடலுக்கு...."
"பிரயோசனமில்ல...அதுக்கு மே உங்க விருப்பம்.. ரெண்டாவதா பயணங்களத் தாங்கற கண்டிசன்லயும் அவங்க ஹெல்த் இல்ல"
சக்தி ஒரு முடிவுக்கு வந்தவனாச் சொன்னான்..
"ஓ.கே டாக்டர்.. எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம்..நான் இப்ப அவள ஒரு தடவ பாத்துட்டு வர எமர்ஜென்சி வார்டுக்குள்ள போக உங்க அனுமதி வேணும்"
டாக்டர் டியூட்டி நர்ஸ்க்கு 'உள்ள விடு'ன்னு கண் ஜாடைலயே கட்டளை போட்டுட்டு சக்தி தோள்ல தட்டிட்டுப் போயிட்டார்.. நர்ஸ் அவன எமர்ஜென்சி வார்டுக்குள்ள அனுமதிக்கறதுக்கு முன்ன வாயவும் ் மூக்கவும் ஆபரேசன் பண்ற டாக்டர் மாதிரி துணி மாஸ்க்ல மூடிக் கட்டி அவங்க தந்த ரப்பர் செருப்பு போட்டுக்கச் சொல்லி 'பேசண்ட தொடாம எட்ட நின்னு பாக்கணும்'னு கண்டிப்பா எச்சரிச்சுக் கூட்டிட்டுப் போனாங்க..எமர்ஜென்சி வார்டுக்கு வேளிய விஜிம்மா, சேச்சி உக்காந்திருக்க சக்தி எந்ந உணர்ச்சியுமில்லாம அவங்களப் பாத்துட்டு உள்ள போனான்...
உள்ள போனதும் அவங்க கெடந்த நெலையப் பாத்து
சில நொடி அசையாம நின்னான்..ஆஸ்பிடலுக்கே உண்டான அந்த மருந்து வாடைல அவனுக்கு இடது பக்கமா கந்தசாமியும்,வலது பக்கமா மனுவும் படுத்திருக்க.. படுத்திருந்த எடங்கள்ல வித்தியாசம் இருந்ததே ஒழிய படுத்திருந்த நிலைமை என்னவோ ஒண்ணே தான்..துளி அசையாம கெடந்தவங்களச் சுத்தி ஏகப்பட்ட உபகரணங்கள்..ரெண்டு பேரையுமே பல டியூப்ங்க சுத்தி மூழ்கடிச்சிருந்தது..வாய்ல,மூக்குல டியூப் செருகி இருக்க,நெத்தி நெஞ்சுக்கு மேலன்னு டியூப்ங்க ஒட்டி இணைக்கப் பட்டிருந்தது..மானிட்டருங்களும் ஓடிக் கொண்டிருக்க ரெண்டு பேருக்குமே சுவாசத்துக்காக பிராண வாயு இணைக்கப் பட்டிருந்தது..
சக்தி ஒத்துழைக்க மறுத்த தன் கால்கள சிரமப் பட்டு நகர்த்தி கந்தசாமி படுத்திருந்த இடத்த நெருங்கினான்..
எந்த உணர்ச்சியுமில்லாம அவர் முகத்தையே பாத்துக்கிட்டிருந்த சக்தி சுய நினைவே இல்லாதவன் மாதிரி நர்ஸ் சொன்னதையும் மறந்து தன் வலது கைய அவர் நெஞ்சுல வச்சு வருடினான்..நர்ஸ் பதறி 'சார்'னு கிட்ட வர சடார்னு திரும்பி மாஸ்க்கால மூடியிருந்த உதட்டு மேல இடது கை ஆட்காட்டி விரல வச்சு சீறலா 'உஷ்ஷ்ஷ்ஷ்'னானே பாக்கலாம்..சாதாரணச் சீறலா அது?அடி பட்ட ராஜ நாகத்தோட சீறல் ! கூடவே எரிக்கும் பார்வை..நர்ஸ் வெலவெலத்துப் பின் வாங்க ஒரு நிமிசம் கந்தசாமி நெஞ்ச ஆறுதலா வருடி குனிஞ்சு அவர் நெத்தில முத்தமிட்டான்..பேச்சற்றுக் கெடந்தவரோட தொடு உணர்ச்சி மூலமா ஓராயிரம் செய்திகள அவன் கடத்த கந்நசாமியின் சுவாசம் சற்று சீராகத் தொடங்கி மருந்து ஆதிக்க மயக்கத்துல இருந்து விடுபட்டு இயல்பான தூக்கத்துல ஆழ்ந்தார்..சில சமயங்களில் பார்வையும்,பேச்சும் செய்ய முடியாத விந்தையை ஒற்றைத் நக நுனித் தொடுதல் சாதித்து விடும் !
சக்தி நிமிர்ந்து நகர்ந்து மனு படுக்கைய நெருங்கினான்..படுக்கைய ஒட்டி நின்னு தடுமாறும் தன் கால்களத் திடமா ஊணி அவ முகத்த சலனமற்றவனாப் பாத்தான்'இதுக்கா என்ன நெருங்கினே மனு...இதுக்கா சில்லி மூக்கு உடைய அறை வாங்கியும் 'கண்ட துண்டமா வெட்டிப் போட்டாலும் என் ஒவ்வொரு சதைத் துண்டும் சொல்லும் ஐ லவ் யூன்னு கம்பீரமா தலை நிமிர்ந்து சொன்னே தங்கம்..இதுக்கா என்னோடயும், வாழ்வோடயும் போராடினே பேபி?.. ஏன் உன்னால சாவோடயும்,ஆழப் போயிட்டிருக்கற உன் நினைவோடயும் போராட முடியல?அடப் போடா.. உன்னோட இனி மல்லுக் கட்ட முடியாதுன்னு அலுத்து வெறுத்து காலம் பூரா அனாதையாவே இருந்து தொலைன்னு சபிச்சுட்டுப் போறியா மனு?ஆழப் போயிட்டிருக்கற உன் நினைவுகள என் உயிர் நிலை உணர்ச்சிகள் அத்தனையும் ஒரு சேர எழுப்பி இப்பச் சொல்றேன்..ஐ லவ் யூ கண்ணம்மா..திரும்பி நான் உயிரோட வரைல நீயும் உயிரோட நினைவோட இருக்கணும்..ஒரு வேள பொணமா வந்தா நீயும் இங்க பொணமாத் தான் இருக்கணும்..நிச்சயமா கோமாவுல ஆழ்ந்த சதைப் பிண்டமா அல்ல..இது உன் அற்புதமான காதல் மீது சத்தியம்'..உள்ள அவ கூடப் பேசிக்கிட்டே துளியும் யோசிக்காம அவளோட ஆக்ஸிஜன் மாக்ஸக் கழட்டி வேகமாக் குனிஞ்சு அவள் மென்னிதழ்கோடு தன் உறுதி இதழ்களை அழுத்தமாய் இணைக்க.. தன் நெஞ்சுல கை வச்சு 'ஹெக்'னு அதிர்ந்தது அந்த நர்ஸ் மட்டுமல்ல !ஆழ்ந்து உள்ள போயிட்டிருந்த மனுவும் தான் !!