அந்த நேரம்..தோட்டத்துல.. எல்லாருக்கும் சாப்பாடு போட்டு நாய்களையும் கவனிச்சுட்டு ஒரு பெரிய கேரியர்லயும் எடுத்து வச்சுட்டு அருக்காணி அம்மா ரூமுக்குள்ள போனா செல்வி ! மாலை போட்டிருந்த அவங்க போட்டோ முன்னால நின்னு கையக் கூப்பி கண்ண மூடி முணு முணுப்பாச் சொன்னா..
"பெறாத மகனுக்காக உயிர் குடுத்த தாயே..நீயே இந்தத் தோட்டத்துக்கு காவல் தெய்வம்..வந்தவங்க எல்லாருக்கும் மனங் கோணாம குடுப்பியாமே?உன் மகளா நின்னு மடிப் பிச்சை ஏந்தறேன்..எந்த உயிருக்கும் சேதாரமில்லாம காப்பாத்த வேண்டியது உம் பொறுப்பு..
அப்படிச் சேதாரமானா உன் உயிர் தியாகத்துக்கு அர்த்தமில்லாம போயிடும்..என்னடா அவங்க முன்னால வீறாப்பா பேசிட்டு இப்ப மடிப் பிச்சை கேக்கறாளேன்னு பாக்கறியா?பொலம்பறது எனக்குப் புடிக்காது தான்.. ஆனா,கவலை இல்லாம இருக்குமா?அப்படி ஏதாவது ஒரு உயிர் பலி குடுத்தே ஆகணும்னா தயவு செஞ்சு என் உசுர எடுத்துக்கோ தாயே..இனி வந்தா அவங்க மூணு பேரும் வந்தாத் தான் இந்த தோட்டத்துக்குள்ள காலெடுத்து வெப்பேன்..இல்லாடாடி பொணமாத் தான் வருவேன்..இது சத்தியம்''
விடு விடுன்னு ரூம விட்டு ஹாலுக்கு வந்தவ காரோட்டத் தெரிஞ்சவன காரெடுக்கச் சொல்லிட்டு கேரியரத் தூக்கிட்டு வெளிய வந்து அங்க நின்னுக்கிட்டிருந்தவன் கிட்டச் சொன்னா..
"அண்ணா,கதவ உள்ள சாத்திட்டு அவங்க வர்ற வரைக்கும் நீங்களும் மாடில இருங்க..ரவுண்ட்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க"
வந்து நின்ன கார்ல ஏறி முன்னையே பேசி வச்சிருந்த படி ஆஸ்பத்திரிக்குப் போனா...
××××××××××××××××××××××××××××××
அதே நேரம்..சக்தி தலைல அடி வாங்கி எகிறிப் பறந்த அதே நொடி..கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி மனுவோட ஒடம்பு ஒரு தடவ தூக்கிப் போட சகல அணுக்களும் வேகமா இயங்க 'ஐயோ சக்தி"ன்னு எந்திரிக்க முயற்சி பண்ணினவள நர்ஸ் திடுக்கிட்டு ஓடியாந்து அழுத்திப் பிடிச்சாங்க..ஒரு ஒதறல்ல நர்ஸ எம்பிப் போய் விழ வெச்சு வெறியா மனு எந்திரிக்க பல டியூப் இணைப்புகள் தெறிச்சுப் பறந்தன..கண்ணாடிக் கதவு வழியா இதப் பாத்த சேச்சியும்,விஜிம்மாவும் அவசரமா உள்ள வந்து விஜிம்மா நர்ஸ கவனிக்க சேச்சி மனுவக் கட்டிப் பிடிச்சு சாந்தப் படுத்தினாங்க..
"என்ட மோளே..மனும்மா..இங்க பாரு"
,தலையுதறி கண் விழித்த மனு சேச்சியக் கண்டதும் உடனே கேட்டா..
"எங்கம்மா இருக்கோம்...என் சக்தி எங்க?"
"ஆஸ்பத்திரில இருக்கோம்..சக்தி தம்பி வெளிய ஒரு வேலையாப் போயிருக்கு..காலைல வந்துடும்"
"இல்லம்மா..சக்திக்கு என்னமோ ஆபத்து..என் போன் எங்க?"
விஜிம்மா உதவியால எந்திரிச்ச நர்ஸ் டாக்டருக்கு உள் போன் மூலமா தகவல் தர வேகமா வந்தார் அவர்.. வந்ததும் மனுவ பரிசோதிச்சுப் பாத்துட்டு மனு தூங்கறதுக்கான இன்ஞ்செக்சன போட்டு அமைதியாச் சொன்னார்..
"அமைதியா இருங்க மான்யா..."
"டாக்டர்...என் சக்தி..."
டாக்டர் அவளுக்கு சமாதானமா ஏதோ சொல்லிட்டிருக்க.. மனு இருந்த கோலம் சேச்சிய பத்து வருசம் பின்னுக்குத் தள்ளுச்சு..சக்தி மொத மொதலா மாலை போட்டு கட்டுக் கட்ட வராம இருக்க மயங்கி கிடந்த மனுவ அவங்க இப்பப் பாத்தாங்க..அதே உதடு துடிப்பு..அதே கண் கலங்கல்..மனு மாறல..அதே அன்பு..!காதல் எந்நாளும் காதலே..அது கூடுவதுமில்லை..குறைவதுமில்லை !
மருந்து குடுத்த மயக்கத்துல கொஞ்சங் கொஞ்சமா கண் சொருக அதையும் தாண்டி மனு மனசு எந்திரிச்சு மண்டியிட்டுக் கதறியது...
",தாயே சித்ர மாலா..என் சக்திய..இல்ல..உன் மாமனக் காப்பாத்து"
உதடுகள் முணுமுணுக்க தூக்கத்தில் ஆழ்ந்த மனுவை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்த டாக்டரின் உதடுகளும் முணுமுணுத்தன..'இம்பாஸிபிள்.. திஸ் ஈஸ் மிர்ரகிள்'
++++++++++++++++++++++++××××××××
மனு மருந்து தந்த தூக்கத்துல ஆழப் போயி சித்ர மாலான்னு உதடுகள் முணுமுணுத்த அதே சமயம் குப்புறக் கிடந்த சக்தி மெல்லப் புரண்டான்.. தலைல ஒரு டன் பாறைய வச்சு அழுத்தின பாரமிருக்க ரெண்டு கையவும் ஊணி எந்திரிச்சு உக்கார வலது நெத்திலிருந்து வேகமா வழிஞ்ச ரத்தம் அவன் காலரை நனைச்சுக் கீழே எறங்கியது..
"பெறாத மகனுக்காக உயிர் குடுத்த தாயே..நீயே இந்தத் தோட்டத்துக்கு காவல் தெய்வம்..வந்தவங்க எல்லாருக்கும் மனங் கோணாம குடுப்பியாமே?உன் மகளா நின்னு மடிப் பிச்சை ஏந்தறேன்..எந்த உயிருக்கும் சேதாரமில்லாம காப்பாத்த வேண்டியது உம் பொறுப்பு..
அப்படிச் சேதாரமானா உன் உயிர் தியாகத்துக்கு அர்த்தமில்லாம போயிடும்..என்னடா அவங்க முன்னால வீறாப்பா பேசிட்டு இப்ப மடிப் பிச்சை கேக்கறாளேன்னு பாக்கறியா?பொலம்பறது எனக்குப் புடிக்காது தான்.. ஆனா,கவலை இல்லாம இருக்குமா?அப்படி ஏதாவது ஒரு உயிர் பலி குடுத்தே ஆகணும்னா தயவு செஞ்சு என் உசுர எடுத்துக்கோ தாயே..இனி வந்தா அவங்க மூணு பேரும் வந்தாத் தான் இந்த தோட்டத்துக்குள்ள காலெடுத்து வெப்பேன்..இல்லாடாடி பொணமாத் தான் வருவேன்..இது சத்தியம்''
விடு விடுன்னு ரூம விட்டு ஹாலுக்கு வந்தவ காரோட்டத் தெரிஞ்சவன காரெடுக்கச் சொல்லிட்டு கேரியரத் தூக்கிட்டு வெளிய வந்து அங்க நின்னுக்கிட்டிருந்தவன் கிட்டச் சொன்னா..
"அண்ணா,கதவ உள்ள சாத்திட்டு அவங்க வர்ற வரைக்கும் நீங்களும் மாடில இருங்க..ரவுண்ட்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க"
வந்து நின்ன கார்ல ஏறி முன்னையே பேசி வச்சிருந்த படி ஆஸ்பத்திரிக்குப் போனா...
××××××××××××××××××××××××××××××
அதே நேரம்..சக்தி தலைல அடி வாங்கி எகிறிப் பறந்த அதே நொடி..கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி மனுவோட ஒடம்பு ஒரு தடவ தூக்கிப் போட சகல அணுக்களும் வேகமா இயங்க 'ஐயோ சக்தி"ன்னு எந்திரிக்க முயற்சி பண்ணினவள நர்ஸ் திடுக்கிட்டு ஓடியாந்து அழுத்திப் பிடிச்சாங்க..ஒரு ஒதறல்ல நர்ஸ எம்பிப் போய் விழ வெச்சு வெறியா மனு எந்திரிக்க பல டியூப் இணைப்புகள் தெறிச்சுப் பறந்தன..கண்ணாடிக் கதவு வழியா இதப் பாத்த சேச்சியும்,விஜிம்மாவும் அவசரமா உள்ள வந்து விஜிம்மா நர்ஸ கவனிக்க சேச்சி மனுவக் கட்டிப் பிடிச்சு சாந்தப் படுத்தினாங்க..
"என்ட மோளே..மனும்மா..இங்க பாரு"
,தலையுதறி கண் விழித்த மனு சேச்சியக் கண்டதும் உடனே கேட்டா..
"எங்கம்மா இருக்கோம்...என் சக்தி எங்க?"
"ஆஸ்பத்திரில இருக்கோம்..சக்தி தம்பி வெளிய ஒரு வேலையாப் போயிருக்கு..காலைல வந்துடும்"
"இல்லம்மா..சக்திக்கு என்னமோ ஆபத்து..என் போன் எங்க?"
விஜிம்மா உதவியால எந்திரிச்ச நர்ஸ் டாக்டருக்கு உள் போன் மூலமா தகவல் தர வேகமா வந்தார் அவர்.. வந்ததும் மனுவ பரிசோதிச்சுப் பாத்துட்டு மனு தூங்கறதுக்கான இன்ஞ்செக்சன போட்டு அமைதியாச் சொன்னார்..
"அமைதியா இருங்க மான்யா..."
"டாக்டர்...என் சக்தி..."
டாக்டர் அவளுக்கு சமாதானமா ஏதோ சொல்லிட்டிருக்க.. மனு இருந்த கோலம் சேச்சிய பத்து வருசம் பின்னுக்குத் தள்ளுச்சு..சக்தி மொத மொதலா மாலை போட்டு கட்டுக் கட்ட வராம இருக்க மயங்கி கிடந்த மனுவ அவங்க இப்பப் பாத்தாங்க..அதே உதடு துடிப்பு..அதே கண் கலங்கல்..மனு மாறல..அதே அன்பு..!காதல் எந்நாளும் காதலே..அது கூடுவதுமில்லை..குறைவதுமில்லை !
மருந்து குடுத்த மயக்கத்துல கொஞ்சங் கொஞ்சமா கண் சொருக அதையும் தாண்டி மனு மனசு எந்திரிச்சு மண்டியிட்டுக் கதறியது...
",தாயே சித்ர மாலா..என் சக்திய..இல்ல..உன் மாமனக் காப்பாத்து"
உதடுகள் முணுமுணுக்க தூக்கத்தில் ஆழ்ந்த மனுவை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்த டாக்டரின் உதடுகளும் முணுமுணுத்தன..'இம்பாஸிபிள்.. திஸ் ஈஸ் மிர்ரகிள்'
++++++++++++++++++++++++××××××××
மனு மருந்து தந்த தூக்கத்துல ஆழப் போயி சித்ர மாலான்னு உதடுகள் முணுமுணுத்த அதே சமயம் குப்புறக் கிடந்த சக்தி மெல்லப் புரண்டான்.. தலைல ஒரு டன் பாறைய வச்சு அழுத்தின பாரமிருக்க ரெண்டு கையவும் ஊணி எந்திரிச்சு உக்கார வலது நெத்திலிருந்து வேகமா வழிஞ்ச ரத்தம் அவன் காலரை நனைச்சுக் கீழே எறங்கியது..