சக்தி அவன் அலர்றதத் துளியும் லட்சியம் பண்ணாம அந்தக் கடப்பாரைய அசைச்சுப் பிடுங்கி எடுத்து பேசிக்கிட்டே அவனோட இடது பக்கமாப் போனான்..
"மூக்கன்..கொம்பேறி மூக்கன்! தன்ன அடிச்சவங்கள விடாம தொரத்தி,கொத்திக் கொன்னு,அவங்க சுடுகாட்டுல பொணமா எரியறத ஒரு கொம்புல ஏறி நின்னு பாத்து பழி வாங்கின திருப்தி அடையுமாம்..
அதுக்குத் தான் அப்படிப் பேரு ! இங்க நாங்க அத வில்லரணைன்னு சொல்லுவோம்..அரணை மாதிரி .. ஆனா நீளமா மரத்துக்கு மரம் வில்லுல இருந்து விடுபட்ட கணை மாதிரி அது போறதப் பாத்து எவனோ ரசனைக் காரன் அதுக்கு அந்தப் பேர வச்சிருக்கணும்..
ஆனா,அது ஒரு அப்பிராணி..பச்சப் பாம்பு மாதிரி ! கண்ணக் கொத்தும்னு அது மேல இருக்கற கட்டுக் கதை மாதிரி இது மேலயும் இருக்கறது முழுக்க கட்டுக் கதைங்க தான் ! ஏன்னா,பச்சப் பாம்புக்கும், வில்லரணைக்கும் விசமே கிடையாது"
பேசிக்கிட்டே வந்தவன் மறுபடியும் அந்தக் கடப்பாரைய உயர்த்திக் கீழிறக்க மூக்கனின் இடது உள்ளங் கையப் பொத்துக்கிட்டு மண்ணுல எறங்குச்சுது அது ! அவன் கத்துனத மட்டுமில்ல..தன்னோட காலுங்க பலவீனத்தால தள்ளாடறதக் கூட அவன் அலட்சியப் படுத்திச் சொன்னான்..
"இது மான்யாவுக்காக...ஒரே அடில உன்னக் கொன்னிருக்கலாம்..அரை உசுருல கெடக்கறவங்களோட கூடறதையும், வயசானவங்க மண்டைல உச்சி மண்டைல நச்சுனு போடறதையும் அவ்வளவு ஆனந்தமாச் சொன்னியே?அதுக்குத் தான் சன்னஞ் சன்னமா சாவு உன்னத் தேடி வருது..ஒயிட்.. ஏறு இந்த மரத்து மேல.. கெட்டியா இருக்கற காட்டுக் கொடிகளை எல்லாம் நீளமா அறுத்துக் கீழ போடு"
ஒயிட் துளியும் தாமதிக்காம கத்தியப் பல்லுல கடிச்சுக்கிட்டு குரங்கு மாதிரி லாவகமா மரத்துல ஏறினவன் நீளக் கொடிகளா அறுத்துப் போட சக்தி திருப்தியாப் பாத்துச் சொன்னான்..
"சி.கே ! இவன இழுத்து இந்த மரத்துல உக்காந்த வாக்குல காட்டுக் கொடிகளால கட்டு..முக்கியமா அவன் தலையத் துளி கூட அசைக்க முடியாத அளவுக்கு வாயோட சேத்து இறுக்கிக் கட்டு"
அதுக்குள்ள கொடிகள அறுத்து வீசிட்டு ஒயிட்டும் கீழ எறங்கிட சக்தி கடப்பாரைய அசைச்சுப் பிடுங்கின பின்னால அவன இழுத்துட்டுப் போயி வேப்ப மரத்துல சாய்ச்சு உக்கார வச்சு துளியும் அசையறதுக்கில்லாம சுத்தியும் கட்டினாங்க..சக்தி கடப்பாரையோட மூக்கன் முன்னால நின்னு சொன்னான்..
"அவரவர் வாழ்க்கை..அவரவர் இஷ்டம்னு நானும் வாழ்ந்தவன்...அதுல தப்புமில்ல தான்..ஆனா,துளியும் அரத்தமில்லைங்கறத நான் இப்ப ஓத்துக்கறேன்.. என் முப்பாட்டன், பாட்டியான பொன்னைய கவுண்டனையும், செல்லம்மாளையும் ஏன் இன்னிக்கும் இந்த ஊரும், நானும் நெனைச்சுப் பாத்து நெஞ்சுருகணும்?அருக்காணி அம்மாவ எதுக்காக சாமியா நெனச்சுக் கும்பிடணும்..?அவங்க யாருமே தனக்காக மட்டுமே வாழலைங்கற ஒரே காரணத்துக்காகத் தான்..இன்னதத் திங்கணும், இது விஷம் அது நல்லதுன்னு உயிரக் குடுத்துக் கண்டு பிடிச்சவங்க கூட மத்தவங்களுக்கும் சேர்த்து வாழ்ந்தவங்க தான் !
நம்ம ஆசைப் படியே வாழ்ந்நாலும் அடுத்தவன் வாழ்கையக் கெடுக்கக் கூடாது.. முடிஞ்சா உபகாரம் பண்ணனும..முடியாட்டி மூடிக்கிட்டு ஒதுங்கிப் போயிடணும்..ஓரினச் சேர்க்கை தான் உனக்கிஷ்டம்னா அதப் பிடிச்சவனோட வாழ்ந்துட்டுப் போ..அத விட்டுட்டு உன்னிஷ்டத்துக்கு ஒத்து வரலேன்னா கொல்லுவேன்னு கிளம்பறதுக்கு உனக்கு உரிமையில்ல.. அதுவும் என்னிஷ்டம்னு நீ சொன்னா இந்த உலகத்துல உலவக் கூட தகுதியில்லாத ஜென்மம் ...இனி ஒரு நிமிசம் கூட நீ உயிரோட இருக்கக் கூடாது..
நான் அவ்வளவு சீக்கிரத்துல எவனையும் கொல்ல நெனைச்சதில்ல..புடிக்கலைன்னா ஒதுங்கிப் போயிடுவேன்..ஊரும் உன்ன மாதிரி ஆளுங்களுகள ஒதுக்கி வைக்கலாம்..ஆனா,நீயெல்லாம் திருந்தாத ஜென்மமாச்சே?இந்த ஊர்ல இருந்து அந்த ஊருக்குப் போயி இஷ்டம் போல ஆடறவனாச்சே?உன்ன உயிரோட விட்டா பல அப்பாவிங்க உயிர்க்கு ஆபத்துங்கறதால.. நீ உச்சி மண்டைல அடிச்சு அரை உசுராக்கி அனுபவிச்ச அந்தத் தாய் மார்களுக்காகவும்..என்னால முழுசா ஒரு நாள் கூட அம்மான்னு கூப்பிட முடியாத என் அம்மா அருக்காணிக்காகவும்..உச்சி மண்ட வழியாவே உன் உயிர் போகட்டும்"
சொல்லி முடிச்சதும் கடப்பாரைய ரெண்டு கையாலயும் உயரத்துக்கு ஒசத்தி தன் சக்தியத்தனையும் கைகளுக்குக் கொண்டு வந்து மிருக பலத்துடன் அவன் உச்சி மண்டையில் இறக்கினான்..
"மூக்கன்..கொம்பேறி மூக்கன்! தன்ன அடிச்சவங்கள விடாம தொரத்தி,கொத்திக் கொன்னு,அவங்க சுடுகாட்டுல பொணமா எரியறத ஒரு கொம்புல ஏறி நின்னு பாத்து பழி வாங்கின திருப்தி அடையுமாம்..
அதுக்குத் தான் அப்படிப் பேரு ! இங்க நாங்க அத வில்லரணைன்னு சொல்லுவோம்..அரணை மாதிரி .. ஆனா நீளமா மரத்துக்கு மரம் வில்லுல இருந்து விடுபட்ட கணை மாதிரி அது போறதப் பாத்து எவனோ ரசனைக் காரன் அதுக்கு அந்தப் பேர வச்சிருக்கணும்..
ஆனா,அது ஒரு அப்பிராணி..பச்சப் பாம்பு மாதிரி ! கண்ணக் கொத்தும்னு அது மேல இருக்கற கட்டுக் கதை மாதிரி இது மேலயும் இருக்கறது முழுக்க கட்டுக் கதைங்க தான் ! ஏன்னா,பச்சப் பாம்புக்கும், வில்லரணைக்கும் விசமே கிடையாது"
பேசிக்கிட்டே வந்தவன் மறுபடியும் அந்தக் கடப்பாரைய உயர்த்திக் கீழிறக்க மூக்கனின் இடது உள்ளங் கையப் பொத்துக்கிட்டு மண்ணுல எறங்குச்சுது அது ! அவன் கத்துனத மட்டுமில்ல..தன்னோட காலுங்க பலவீனத்தால தள்ளாடறதக் கூட அவன் அலட்சியப் படுத்திச் சொன்னான்..
"இது மான்யாவுக்காக...ஒரே அடில உன்னக் கொன்னிருக்கலாம்..அரை உசுருல கெடக்கறவங்களோட கூடறதையும், வயசானவங்க மண்டைல உச்சி மண்டைல நச்சுனு போடறதையும் அவ்வளவு ஆனந்தமாச் சொன்னியே?அதுக்குத் தான் சன்னஞ் சன்னமா சாவு உன்னத் தேடி வருது..ஒயிட்.. ஏறு இந்த மரத்து மேல.. கெட்டியா இருக்கற காட்டுக் கொடிகளை எல்லாம் நீளமா அறுத்துக் கீழ போடு"
ஒயிட் துளியும் தாமதிக்காம கத்தியப் பல்லுல கடிச்சுக்கிட்டு குரங்கு மாதிரி லாவகமா மரத்துல ஏறினவன் நீளக் கொடிகளா அறுத்துப் போட சக்தி திருப்தியாப் பாத்துச் சொன்னான்..
"சி.கே ! இவன இழுத்து இந்த மரத்துல உக்காந்த வாக்குல காட்டுக் கொடிகளால கட்டு..முக்கியமா அவன் தலையத் துளி கூட அசைக்க முடியாத அளவுக்கு வாயோட சேத்து இறுக்கிக் கட்டு"
அதுக்குள்ள கொடிகள அறுத்து வீசிட்டு ஒயிட்டும் கீழ எறங்கிட சக்தி கடப்பாரைய அசைச்சுப் பிடுங்கின பின்னால அவன இழுத்துட்டுப் போயி வேப்ப மரத்துல சாய்ச்சு உக்கார வச்சு துளியும் அசையறதுக்கில்லாம சுத்தியும் கட்டினாங்க..சக்தி கடப்பாரையோட மூக்கன் முன்னால நின்னு சொன்னான்..
"அவரவர் வாழ்க்கை..அவரவர் இஷ்டம்னு நானும் வாழ்ந்தவன்...அதுல தப்புமில்ல தான்..ஆனா,துளியும் அரத்தமில்லைங்கறத நான் இப்ப ஓத்துக்கறேன்.. என் முப்பாட்டன், பாட்டியான பொன்னைய கவுண்டனையும், செல்லம்மாளையும் ஏன் இன்னிக்கும் இந்த ஊரும், நானும் நெனைச்சுப் பாத்து நெஞ்சுருகணும்?அருக்காணி அம்மாவ எதுக்காக சாமியா நெனச்சுக் கும்பிடணும்..?அவங்க யாருமே தனக்காக மட்டுமே வாழலைங்கற ஒரே காரணத்துக்காகத் தான்..இன்னதத் திங்கணும், இது விஷம் அது நல்லதுன்னு உயிரக் குடுத்துக் கண்டு பிடிச்சவங்க கூட மத்தவங்களுக்கும் சேர்த்து வாழ்ந்தவங்க தான் !
நம்ம ஆசைப் படியே வாழ்ந்நாலும் அடுத்தவன் வாழ்கையக் கெடுக்கக் கூடாது.. முடிஞ்சா உபகாரம் பண்ணனும..முடியாட்டி மூடிக்கிட்டு ஒதுங்கிப் போயிடணும்..ஓரினச் சேர்க்கை தான் உனக்கிஷ்டம்னா அதப் பிடிச்சவனோட வாழ்ந்துட்டுப் போ..அத விட்டுட்டு உன்னிஷ்டத்துக்கு ஒத்து வரலேன்னா கொல்லுவேன்னு கிளம்பறதுக்கு உனக்கு உரிமையில்ல.. அதுவும் என்னிஷ்டம்னு நீ சொன்னா இந்த உலகத்துல உலவக் கூட தகுதியில்லாத ஜென்மம் ...இனி ஒரு நிமிசம் கூட நீ உயிரோட இருக்கக் கூடாது..
நான் அவ்வளவு சீக்கிரத்துல எவனையும் கொல்ல நெனைச்சதில்ல..புடிக்கலைன்னா ஒதுங்கிப் போயிடுவேன்..ஊரும் உன்ன மாதிரி ஆளுங்களுகள ஒதுக்கி வைக்கலாம்..ஆனா,நீயெல்லாம் திருந்தாத ஜென்மமாச்சே?இந்த ஊர்ல இருந்து அந்த ஊருக்குப் போயி இஷ்டம் போல ஆடறவனாச்சே?உன்ன உயிரோட விட்டா பல அப்பாவிங்க உயிர்க்கு ஆபத்துங்கறதால.. நீ உச்சி மண்டைல அடிச்சு அரை உசுராக்கி அனுபவிச்ச அந்தத் தாய் மார்களுக்காகவும்..என்னால முழுசா ஒரு நாள் கூட அம்மான்னு கூப்பிட முடியாத என் அம்மா அருக்காணிக்காகவும்..உச்சி மண்ட வழியாவே உன் உயிர் போகட்டும்"
சொல்லி முடிச்சதும் கடப்பாரைய ரெண்டு கையாலயும் உயரத்துக்கு ஒசத்தி தன் சக்தியத்தனையும் கைகளுக்குக் கொண்டு வந்து மிருக பலத்துடன் அவன் உச்சி மண்டையில் இறக்கினான்..