அதே சமயம் கீழே...ஹாலில்..
"அருக்கு டார்லூ..என்னோட கோட்டா?"
"லிமிட்டத் தாண்டக் கூடாது தாத்தா டார்லிங் !அதுக்குள்ள நான் யோகா,தியானம் பண்ணிட்டு வந்துடறேன்"
தோட்டத்துக்குள் எவருக்கும் குடிக்கவோ,புகைக்கவோ அனுமதியில்லை..கந்தசாமி ஒருவரைத் தவிர ! அவரும் இரவில் அளவாய்..பேத்தியின் அனுமதியோடு !
பூஜையறை..முக்கியமான சில ஆசனங்களை அரை மணி செய்து விட்டு கடைசியாய் பத்மாசனத்தில் பத்து நிமிசம் தியானதத்தில் ஆழ்ந்து விட்டுக் கண் திறந்த போது..எதிரே ஒரு உருவம் மெல்ல மெல்ல உருப் பெற ஆரம்பித்தது..முதலில் திரண்டு உருண்டையான வெண் பனித் திரளாய்ச் சுழன்றது மெல்ல..காலில் துவங்கி படிப் படியாய் தலை வரை உருவம் பெறறது அப்பெண் உருவம்..அதுவும் பத்மாசனத்தில் ! குழந்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தது.. அது முழுமையடைந்து சாந்தமான புன்னகையை வெளிப் படுத்த குழந்தையும் புன்னகைத்துச் சொன்னது..
"ஹாய் பேபி...வெல்கம் மை ஹவுஸ்"
உருவத்தின் புன்னகை விரிய கனிவுக் குரலில் கேட்டது..
"உனக்குப் பயமா இல்லையா பேபி?"
குழந்தை நெஞ்சை நிமிர்த்தி உறுதியாய்ச் சொன்னது..
"நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?மிஸ்டர் சக்தி வேலோட டாட்டர்...தப்புப் பண்ணத் தான் பயப் படணுமே தவிர ஆண்டனுக்கே பயப் படணும்ங்கற அவசியமில்லேன்னு சொல்லிக் குடுத்திருக்கார்"
"சக்தி வேல் !" அந்த உருவத்தின் குரலில் இன்னும் கனிவு பொங்கக் கேட்டது..
"மிஸ்டர் சக்தி வேலோட ஆறு வருசத்துக்கு முந்தின ஆட்டம் உனக்குத் தெரியுமா?"
'ஓ..தாத்தா டார்லிங் கதை கதையாச் சொல்லி இருக்கார்"
"வெல் பேபி..அந்த ஆட்டத்தோட அடுத்த பார்ட் நாளைக்கு ஆரம்பிக்கப் போவுது..கேரளா தத்த மங்கலத்துல ஆரம்பிச்சு உங்கப்பாவின் குருசேத்திரமான கொளத்துக்குள்ள முடியப் போகுது.. மனுச சக்திங்கள மீறின சக்திங்களோட ஆட்டமிது.. ரெண்டு பக்கமும் உயிர் பலி நிச்சயம்.. அப்பா,அம்மா, இந்தத் தோட்டத்தக் காப்பாத்த இந்தத் தடவ நானும் இந்த ஆட்டத்துல கலந்துக்கப் போறேன்..அதுக்கு உன்னோட ஹெல்ப் வேணும்"
குழந்தை யோசிக்காமல் கை நீட்டிச் சொன்னது..
"இந்த நிமிசத்துல இருந்து நாம பிரண்ட்ஸ்.. நான் சக்தி வேல்,மான்யோவோட டாட்டர் சுபன்யா சக்திவேல்...."°
உருவம் தன் பனித் திரள் கையால் குழந்தையின் மலர்க் கை பற்றிச் சொன்னது...
"என் பெயர் சித்ர மாலா"
(முற்றும்...
××××××××××××××××××+×++××××
அந்த சமயத்துல தான் விஜி மேடம் எஸ்எம் நாவல்ஸ்ல அறிவிச்சிருந்த ஒரு நாவல் போட்டியப் பத்திச் சொல்லி அதுல என்னையும் கலந்துக்கச் சொன்னாங்க.. 'இன்னும் ஒத்தச் சிறுகதை எழுதிக் கிழிக்கல.. நானாவது..நாவலாவது..எழுதறதாவது'ன்னு பேசாம இருந்தேன்..அவங்க விடறதா இல்ல..சமயம் கிடைக்கற போதெல்லாம் 'எஸ் எம்ல மெம்பராயிட்டீங்களா?'ன்னு நச்சரிச்சுக்கிட்டே இருந்தாங்க..நானும் சலிக்காம 'இன்னும் இல்லீங்க மேடம்..நாளைக்கு'ன்னு தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தேன்..ஒரு கட்டத்துல அவங்க சலிச்சுப் போயி...
விட்டுட்டாங்கன்னு நெனைக்கறீங்களா?அதான் இல்ல.. இவன நம்பினா வேலைக்காவதுன்னு அவங்களே களத்துல எறங்கி என் இ மெயில் ஐடிய வாங்கி அவங்களே எனக்கு தேவான்னு ஒரு புனைப் பெயர வச்சு எஸ்எம்ல கொண்டு வந்து தள்ளினாங்க..
"அருக்கு டார்லூ..என்னோட கோட்டா?"
"லிமிட்டத் தாண்டக் கூடாது தாத்தா டார்லிங் !அதுக்குள்ள நான் யோகா,தியானம் பண்ணிட்டு வந்துடறேன்"
தோட்டத்துக்குள் எவருக்கும் குடிக்கவோ,புகைக்கவோ அனுமதியில்லை..கந்தசாமி ஒருவரைத் தவிர ! அவரும் இரவில் அளவாய்..பேத்தியின் அனுமதியோடு !
பூஜையறை..முக்கியமான சில ஆசனங்களை அரை மணி செய்து விட்டு கடைசியாய் பத்மாசனத்தில் பத்து நிமிசம் தியானதத்தில் ஆழ்ந்து விட்டுக் கண் திறந்த போது..எதிரே ஒரு உருவம் மெல்ல மெல்ல உருப் பெற ஆரம்பித்தது..முதலில் திரண்டு உருண்டையான வெண் பனித் திரளாய்ச் சுழன்றது மெல்ல..காலில் துவங்கி படிப் படியாய் தலை வரை உருவம் பெறறது அப்பெண் உருவம்..அதுவும் பத்மாசனத்தில் ! குழந்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தது.. அது முழுமையடைந்து சாந்தமான புன்னகையை வெளிப் படுத்த குழந்தையும் புன்னகைத்துச் சொன்னது..
"ஹாய் பேபி...வெல்கம் மை ஹவுஸ்"
உருவத்தின் புன்னகை விரிய கனிவுக் குரலில் கேட்டது..
"உனக்குப் பயமா இல்லையா பேபி?"
குழந்தை நெஞ்சை நிமிர்த்தி உறுதியாய்ச் சொன்னது..
"நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?மிஸ்டர் சக்தி வேலோட டாட்டர்...தப்புப் பண்ணத் தான் பயப் படணுமே தவிர ஆண்டனுக்கே பயப் படணும்ங்கற அவசியமில்லேன்னு சொல்லிக் குடுத்திருக்கார்"
"சக்தி வேல் !" அந்த உருவத்தின் குரலில் இன்னும் கனிவு பொங்கக் கேட்டது..
"மிஸ்டர் சக்தி வேலோட ஆறு வருசத்துக்கு முந்தின ஆட்டம் உனக்குத் தெரியுமா?"
'ஓ..தாத்தா டார்லிங் கதை கதையாச் சொல்லி இருக்கார்"
"வெல் பேபி..அந்த ஆட்டத்தோட அடுத்த பார்ட் நாளைக்கு ஆரம்பிக்கப் போவுது..கேரளா தத்த மங்கலத்துல ஆரம்பிச்சு உங்கப்பாவின் குருசேத்திரமான கொளத்துக்குள்ள முடியப் போகுது.. மனுச சக்திங்கள மீறின சக்திங்களோட ஆட்டமிது.. ரெண்டு பக்கமும் உயிர் பலி நிச்சயம்.. அப்பா,அம்மா, இந்தத் தோட்டத்தக் காப்பாத்த இந்தத் தடவ நானும் இந்த ஆட்டத்துல கலந்துக்கப் போறேன்..அதுக்கு உன்னோட ஹெல்ப் வேணும்"
குழந்தை யோசிக்காமல் கை நீட்டிச் சொன்னது..
"இந்த நிமிசத்துல இருந்து நாம பிரண்ட்ஸ்.. நான் சக்தி வேல்,மான்யோவோட டாட்டர் சுபன்யா சக்திவேல்...."°
உருவம் தன் பனித் திரள் கையால் குழந்தையின் மலர்க் கை பற்றிச் சொன்னது...
"என் பெயர் சித்ர மாலா"
(முற்றும்...
××××××××××××××××××+×++××××
அந்த சமயத்துல தான் விஜி மேடம் எஸ்எம் நாவல்ஸ்ல அறிவிச்சிருந்த ஒரு நாவல் போட்டியப் பத்திச் சொல்லி அதுல என்னையும் கலந்துக்கச் சொன்னாங்க.. 'இன்னும் ஒத்தச் சிறுகதை எழுதிக் கிழிக்கல.. நானாவது..நாவலாவது..எழுதறதாவது'ன்னு பேசாம இருந்தேன்..அவங்க விடறதா இல்ல..சமயம் கிடைக்கற போதெல்லாம் 'எஸ் எம்ல மெம்பராயிட்டீங்களா?'ன்னு நச்சரிச்சுக்கிட்டே இருந்தாங்க..நானும் சலிக்காம 'இன்னும் இல்லீங்க மேடம்..நாளைக்கு'ன்னு தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தேன்..ஒரு கட்டத்துல அவங்க சலிச்சுப் போயி...
விட்டுட்டாங்கன்னு நெனைக்கறீங்களா?அதான் இல்ல.. இவன நம்பினா வேலைக்காவதுன்னு அவங்களே களத்துல எறங்கி என் இ மெயில் ஐடிய வாங்கி அவங்களே எனக்கு தேவான்னு ஒரு புனைப் பெயர வச்சு எஸ்எம்ல கொண்டு வந்து தள்ளினாங்க..