கொஞ்ச நேரத்துல அதிர்ச்சிய உதறித் தள்ளிட்டு சக்தி சொன்னான்..
"இதென்ன மனு..அப்பா புதுசா ஒரு பூதத்தக் கெளப்பறார்?"
"என்னக் கேட்டா?எனக்கென்னவோ பயமா இருக்கு சக்தி.."
"போடி லூசு..அவரு தான் ஏதோ மப்புல பேசறார்னா நீயும் அதப் பெருசா எடுத்துக்கறியா?யோசி மனு.. இத ஒரு கொலைன்னு வச்சுக்கிட்டா மொதல்ல வர்ற கேள்வி 'ஏன்?'..அடுத்ததா வர்றது 'எப்படி?'..காரணம் இருந்தா தான் இந்தக் காரியமே..எங்கம்மாவ ஒருத்தன் ஏன் கொல்லணும்?அவங்க காதுல கம்மல்,மாங்கல்யம் தவிர எந்த நகையும் போட மாட்டாங்க..அதுவும் பத்திரமா இருக்கு..அடுத்ததா எப்படிங்கற கேள்வி.. பட்டப் பகல்ல ஒருத்தன் நம்ம தோட்டத்துக்குள்ள பூந்து கொலை பண்ணிட்டுப் போறது அவ்வளவு சுலபமில்ல மனு"
"தப்புப் பண்றே மகனே.."
இடைல வந்த கந்தசாமி குரலுக்கு ரெண்டு பேரும் திரும்ப செவுத்துல சாய்ஞ்சு உக்காந்திருந்தார் அவர்..
"எப்பவும் சாயந்திரமாத் தான் கெணத்து மேட்டுக்குக் குளிக்கப் போற உன் அம்மா இன்னிக்கு காலைலயே ஏன் போனான்னு யோசிச்சியா?இங்க வா..என்ன கைத் தாங்கலா உன் ரூமுக்குக் கூட்டிட்டுப்போ.. தூக்கம் வர மாட்டேங்குது..தனியா இருந்தா தொங்கிடலாம்ங்கற எண்ணம் வருது..உலகத்துலயே கொடுமையான நோய் தனிமை தான் மகனே"
சக்தி அவர் கிட்டப் போயி குழந்தை மாதிரி அவரத் தூக்கி நிறுத்த அவன் தோள்ல ஆதரவா கையப் போட்டுக்கிட்டே நடந்து ரூமுக்குப் போனாங்க.. ரூம் வாசல் கிட்டப் போனதும் கந்தசாமி தயங்கி நின்னார்..
அவனக் கெஞ்சலாக் கேட்டார்..
"இங்கியே உக்காந்துக்கறனே?"
"நீட்டியே படுக்கற அளவுக்கு சோபா இருக்கைல இங்க ஏன் உக்காரணும்?இது அம்மாவோட யதாஸ்தானம்பா"
தயக்கமின்றி வந்தது அவர் குரல்..
"அதனால தான்..."
சக்தி வாயடைச்சுப் போனான்..கைத் தாங்கலா அவர உக்கார வெக்க சுவத்துல சாஞ்சு அந்த இடத்த ஆசையோடு கண்கள்ல கண்ணீர் பொங்க தடவிக் கொடுத்துச் சொன்னார்..
"இங்க தான் நேத்து உக்காந்து பாட்டுக் கேட்டா.. இந்தப் பொம்பளைங்க இருக்காங்களே?ஒவ்வொரு வீட்லயும் தங்களோட அடையாளத்தப் பதிச்சுட்டுப் போயிடறாங்க.. ஏன்னா,வீடு தான் அவங்க உலகம்..சமையல் கட்டு தான் அவங்க ராஜ்ஜியம்..உங்கம்மா இல்லாத இந்த வீட்ட என்னால கற்பனை கூட பண்ண முடியலியே சக்தி?.. தங்கம்..எனக்கு இன்னும் கொஞ்சம் பிராந்தி ஊத்திக் குடு..."
சக்தி ஆறுதலா அவர் தோளத் தட்டிட்டுப் போய் அரை டம்ளர் ஊத்தி கலந்து குடுக்க குடிச்சுட்டுச் சொன்னார்..
"இங்க உக்காந்து தான் நேத்துச் சொன்னா.. இனிமே பேசல..செத்த பொணமாயிடறேன்னா.. நானும் விளையாட்டா அதச் செய் மொதல்ல..அப்பத் தான் எனக்கு நிம்மதின்னேன்..போயிட்டா..அந்த உத்தமி வாக்கு பொய்யாயிடுமா?சக்தி..நாங் கூட நேத்து உங்கிட்டச் சொன்னனே?இந்த ஆம்பளைங்கற திமிரு ஒழியற அன்னிக்கு நெடுஞ் சாண் கிடையா அவ கால்ல உளுந்து என்ன மன்னிச்சுடு தாயேன்னு கண்ணீர் விட்டுக் கதறிடுவேன்னு..?அத இன்னிக்குச் செஞ்சிட்டேம்பா.. ஆனா,அந்தக் காலக் கண்ணீரால கழுவியும் அத உணரத் தான் அவளுக்கு உயிரில்லை..அம்பது வருசம்.. எங்க அம்மா பெத்துப் போட்ட கையோட போயிச் சேந்துட்டாங்க..வெறும் மண்ணாக் கெடந்த என்ன மனுசனா உருக் கொடுத்து உயிர் குடுத்தது உங்கம்மா தான்..எனக்குத் தாயும் அவளே..இந்த ஆண்டவன் இருக்கானே?கருணையில்லாத வியாபாரி..உன்னக் குடுத்து அவள எடுத்துக்கிட்டான்..."
மனு அவர் முன்னால ஒரு தட்டு நிறைய ரஸ்தாளிப் பழங்கள கொண்டு வந்து வைக்க நிமிர்ந்து பாத்துச் சொன்னார்...
"பாத்தியா..நாந் தான் அப்பவே உங்கிட்டச் சொன்னனே தங்கம்?காலைல உங் கையால எதக் குடுத்தாலும் சாப்பிடறேன்னு..."
மனு ஒரு பழத்த எடுத்து உரிச்சு நீட்டிச் சொன்னா...
"மணியப் பாருங்க..பன்னெண்டரை...இது அடுத்த நாள் கணக்குல வரும்"
கந்தசாமி முதல் முறையா புன்னகைச்சுச் சொன்னார்..
"பலே மனு..ஆனா தங்கம்..என்ன மாதிரி பழங் கட்டைங்களுக்கு விடிஞ்சாத் தான் அடுத்த பொழுது ஆரம்பம்..இருந்தாலும் உன் அன்புக்காக அருக்காணியே இதக் குடுத்ததா நெனைச்சு எடுத்துக்கறேன்"
வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட்டவரின் கண்கள் ஏனோ குளமாக அதத் துண்டால துடைச்சுச் சொன்னார்...
"இனி பாத்துப் பாத்துச் செய்ய அவளில்ல..நீயும் ரெண்டொரு நாள்ல போயிடுவே..இந்தக் குடும்பம் என்ன கதியாகும்னு தெரியலியே மனு?"
"இதென்ன மனு..அப்பா புதுசா ஒரு பூதத்தக் கெளப்பறார்?"
"என்னக் கேட்டா?எனக்கென்னவோ பயமா இருக்கு சக்தி.."
"போடி லூசு..அவரு தான் ஏதோ மப்புல பேசறார்னா நீயும் அதப் பெருசா எடுத்துக்கறியா?யோசி மனு.. இத ஒரு கொலைன்னு வச்சுக்கிட்டா மொதல்ல வர்ற கேள்வி 'ஏன்?'..அடுத்ததா வர்றது 'எப்படி?'..காரணம் இருந்தா தான் இந்தக் காரியமே..எங்கம்மாவ ஒருத்தன் ஏன் கொல்லணும்?அவங்க காதுல கம்மல்,மாங்கல்யம் தவிர எந்த நகையும் போட மாட்டாங்க..அதுவும் பத்திரமா இருக்கு..அடுத்ததா எப்படிங்கற கேள்வி.. பட்டப் பகல்ல ஒருத்தன் நம்ம தோட்டத்துக்குள்ள பூந்து கொலை பண்ணிட்டுப் போறது அவ்வளவு சுலபமில்ல மனு"
"தப்புப் பண்றே மகனே.."
இடைல வந்த கந்தசாமி குரலுக்கு ரெண்டு பேரும் திரும்ப செவுத்துல சாய்ஞ்சு உக்காந்திருந்தார் அவர்..
"எப்பவும் சாயந்திரமாத் தான் கெணத்து மேட்டுக்குக் குளிக்கப் போற உன் அம்மா இன்னிக்கு காலைலயே ஏன் போனான்னு யோசிச்சியா?இங்க வா..என்ன கைத் தாங்கலா உன் ரூமுக்குக் கூட்டிட்டுப்போ.. தூக்கம் வர மாட்டேங்குது..தனியா இருந்தா தொங்கிடலாம்ங்கற எண்ணம் வருது..உலகத்துலயே கொடுமையான நோய் தனிமை தான் மகனே"
சக்தி அவர் கிட்டப் போயி குழந்தை மாதிரி அவரத் தூக்கி நிறுத்த அவன் தோள்ல ஆதரவா கையப் போட்டுக்கிட்டே நடந்து ரூமுக்குப் போனாங்க.. ரூம் வாசல் கிட்டப் போனதும் கந்தசாமி தயங்கி நின்னார்..
அவனக் கெஞ்சலாக் கேட்டார்..
"இங்கியே உக்காந்துக்கறனே?"
"நீட்டியே படுக்கற அளவுக்கு சோபா இருக்கைல இங்க ஏன் உக்காரணும்?இது அம்மாவோட யதாஸ்தானம்பா"
தயக்கமின்றி வந்தது அவர் குரல்..
"அதனால தான்..."
சக்தி வாயடைச்சுப் போனான்..கைத் தாங்கலா அவர உக்கார வெக்க சுவத்துல சாஞ்சு அந்த இடத்த ஆசையோடு கண்கள்ல கண்ணீர் பொங்க தடவிக் கொடுத்துச் சொன்னார்..
"இங்க தான் நேத்து உக்காந்து பாட்டுக் கேட்டா.. இந்தப் பொம்பளைங்க இருக்காங்களே?ஒவ்வொரு வீட்லயும் தங்களோட அடையாளத்தப் பதிச்சுட்டுப் போயிடறாங்க.. ஏன்னா,வீடு தான் அவங்க உலகம்..சமையல் கட்டு தான் அவங்க ராஜ்ஜியம்..உங்கம்மா இல்லாத இந்த வீட்ட என்னால கற்பனை கூட பண்ண முடியலியே சக்தி?.. தங்கம்..எனக்கு இன்னும் கொஞ்சம் பிராந்தி ஊத்திக் குடு..."
சக்தி ஆறுதலா அவர் தோளத் தட்டிட்டுப் போய் அரை டம்ளர் ஊத்தி கலந்து குடுக்க குடிச்சுட்டுச் சொன்னார்..
"இங்க உக்காந்து தான் நேத்துச் சொன்னா.. இனிமே பேசல..செத்த பொணமாயிடறேன்னா.. நானும் விளையாட்டா அதச் செய் மொதல்ல..அப்பத் தான் எனக்கு நிம்மதின்னேன்..போயிட்டா..அந்த உத்தமி வாக்கு பொய்யாயிடுமா?சக்தி..நாங் கூட நேத்து உங்கிட்டச் சொன்னனே?இந்த ஆம்பளைங்கற திமிரு ஒழியற அன்னிக்கு நெடுஞ் சாண் கிடையா அவ கால்ல உளுந்து என்ன மன்னிச்சுடு தாயேன்னு கண்ணீர் விட்டுக் கதறிடுவேன்னு..?அத இன்னிக்குச் செஞ்சிட்டேம்பா.. ஆனா,அந்தக் காலக் கண்ணீரால கழுவியும் அத உணரத் தான் அவளுக்கு உயிரில்லை..அம்பது வருசம்.. எங்க அம்மா பெத்துப் போட்ட கையோட போயிச் சேந்துட்டாங்க..வெறும் மண்ணாக் கெடந்த என்ன மனுசனா உருக் கொடுத்து உயிர் குடுத்தது உங்கம்மா தான்..எனக்குத் தாயும் அவளே..இந்த ஆண்டவன் இருக்கானே?கருணையில்லாத வியாபாரி..உன்னக் குடுத்து அவள எடுத்துக்கிட்டான்..."
மனு அவர் முன்னால ஒரு தட்டு நிறைய ரஸ்தாளிப் பழங்கள கொண்டு வந்து வைக்க நிமிர்ந்து பாத்துச் சொன்னார்...
"பாத்தியா..நாந் தான் அப்பவே உங்கிட்டச் சொன்னனே தங்கம்?காலைல உங் கையால எதக் குடுத்தாலும் சாப்பிடறேன்னு..."
மனு ஒரு பழத்த எடுத்து உரிச்சு நீட்டிச் சொன்னா...
"மணியப் பாருங்க..பன்னெண்டரை...இது அடுத்த நாள் கணக்குல வரும்"
கந்தசாமி முதல் முறையா புன்னகைச்சுச் சொன்னார்..
"பலே மனு..ஆனா தங்கம்..என்ன மாதிரி பழங் கட்டைங்களுக்கு விடிஞ்சாத் தான் அடுத்த பொழுது ஆரம்பம்..இருந்தாலும் உன் அன்புக்காக அருக்காணியே இதக் குடுத்ததா நெனைச்சு எடுத்துக்கறேன்"
வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட்டவரின் கண்கள் ஏனோ குளமாக அதத் துண்டால துடைச்சுச் சொன்னார்...
"இனி பாத்துப் பாத்துச் செய்ய அவளில்ல..நீயும் ரெண்டொரு நாள்ல போயிடுவே..இந்தக் குடும்பம் என்ன கதியாகும்னு தெரியலியே மனு?"