1
காதல் நீலாம்பரி.....!!!
பெருமாள் கோவில் முன் செருப்பைக் கழட்டி.....
கண்மூடி கையக் கூப்பி பவள உதடுகள் முணு முணுக்க...
இறையை வணங்கும் மான்யாவை ...
சக்தி சிகரெட் பத்திக்கிட்டே ஓரக் கண்ணால் பாத்தான்...
அழகி.. பேரழகி.. ஒடம்பால மட்டுமில்ல மனசாலயும் !!! எப்படி நின்னு எந்தக் கோணத்துல பாத்தாலும் அழகைப் பிரதி பலிக்கற அழகி !! பேச்சு,பார்வை,நடைன்னு எல்லாத்துலயும் அழகு மிளிரும் அழகி !!!
அந்தப் புன்னகை...
அவளோட அந்த அலாதிப்புன்னகையே அவள அலங்கரிக்கற மிகப் பெரிய அணிகலன்..
‘இன்னும் என்னத்த வேண்டறா? தன் காதல் ஜெயிக்கணும்னா? ஸாரி மான்யா..நான் உன்னோட காதல ஜெயிக்க விட மாட்டேன’ உக்கிரமாய் மனதுக்குள் தோன்றும் எண்ணங்களுக்கு சலிப்படைந்தவனாய்த் தலையுதறி மீண்டும் அவளைப் பார்த்தான்
தேவதை.. எல்லா விசயத்துலயும் தேவதை..! இவளா என்னக் காதலிக்கறா? என்ன விட பத்து வயசு கம்மி.. Bsc கிராஜுவேட்.. தமிழ்,மலையாளம், இத்தி, ஆங்கிலம்னு நாலு மொழி சரளமா பேச,எழுதத் தெரிஞ்சவ.. இந்தில 'பண்டிட்'பட்டம் வாங்கினவ..
கம்ப்யூட்டர் சென்டர்ல ஒரு ட்ரெய்னரா இருக்கறதோட தன் வீட்ல காலைல இருவது பேருக்கு இந்தியும், சாயந்திரம் அம்பது கொழந்தைங்களுக்கு டியூசனும் நடத்தறவ....
மலையாளிங்களுக்கே ஆன அந்த நிறம்.. ஏணி என்ன?ஜேசிபியே வச்சுத் தூக்கினாலும் தன்னால அவ காலு கிட்டக் கூட போக முடியாதே?
தன்னப் பத்தி யோசிக்கும் போது சக்தி மனசுல வெறுப்பும், கசப்புமே கடைசீல மிச்சமாச்சு..
தனியார் பள்ளியின் 'படி,படி'ங்கற தாரக மந்திரம்.. விளையாட்ல ஆர்வமுள்ள இவன அதுல ஊக்கப் படுத்தாம மணிப் பிரகாரம் ஒவ்வொரு பாடத்தையும் நெட்டுருவாய் மண்டைல ஏத்தற அதோட ஜெயில் தனம்....
பத்தாவது படிக்கறப்ப பாதியிலயே அடமாய் வெளியே வந்தவன் அவன்.. அஞ்சு வயசுக் கொழந்தை கூட சரளமா இங்கிலீஷ் பேசற இந்தக் காலத்துல நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி அந்த பாஷையக் பேசவோ,கேட்கவோ நேரும் தருணங்களில் தடுமாறுபவன்...
ஏழு வயசலயே பெத்தவங்கள எடுத்து முழுங்கி தாத்தா,பாட்டி செல்லத்துல வளர்ந்தவனுக்கு இயல்பாவே முரட்டுத் தனம் அமைய படிப்பு ஏறலை...
சிப்காட்டுக்கு எடுத்த நெலத்துக்கு வந்த பணத்துல அவன் அப்பா இருந்த காலத்துலயே பெருந்துறை சென்டர் டவுன்ல இடம் வாங்கி முப்பது கடைகளக் கட்டி விட...
இன்னிக்கது ரெண்டு லகரம் வாடகையாக் கொட்ட இவன் ஏகாந்தமாச் சுத்திட்டு திரியறவன்.. அது போக காடு,தோட்டம்னு அடிப் படைச் சொத்துக்களுக்கும் பஞ்சமில்ல.. வசதி ஒண்ணுல மட்டும் அவள விட சில படி மேல இருக்கானே தவிர மத்த விசங்யங்கள்ல அதள பாதாளத்துல...
காதல் கருமாந்தரத்துக்குக் கண்ணில்ல தான்.. எதையும் அலசிப் பாக்காதுன்னே வெச்சுக்கிட்டாலும்.....
ஆணோ,பெண்ணோ குணம் முக்கியமில்லையா?அப்படித் தன் கிட்ட மெச்சத் தகுந்த குணம் என்ன இருக்குன்னு யோசிச்சுப் பாத்தவனுக்கு ஏளனம் கலந்த புன்னகை தான் வந்ததே தவிர சுட்டிக் காட்டற அளவுக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வரலை..
இவன் யோசனையக் கலைக்கற மனம் வருடும் அவள் மெல்லிய குரல்..
"போலாமா சக்தி? ஏதோ பலத்த யோசனை போலிருக்கு..மூணு தடவ கூப்பிட வெச்சுட்டே. அப்படி என்ன யோசனை?"
சிகரெட்டக் கீழ போட்டு மிதிச்சுக்கிட்டே 'கேட்டுடலாமா?'ன்னு யோசிச்சவன் ...
'நடு ரோட்லயா?'ங்கற கேள்வி வரவும் உடனே முந்தின கேள்விய அழிச்சுட்டு வெறுப்பா சொன்னான்
"நத்திங் பேபி"
சொல்லிக்கிட்டே தன் ராயல் என்பீல்டு பைக்க நோக்கிப் போனவன அவளோட இந்த பதில் தேக்கி நிறுத்தி திரும்பிப் பாக்க வச்சது..
"ஹேய்.. நத்திங் ஈஸ் சம்திங்க்"
அவளோட அந்த அலாதியான அந்தப் புன்னகை.. கண்ணுல தொடங்கி முகம் பூரா பரவி கடைசியா உதட்டுக்கு வர்ற புன்னகைய அவன் பல தடவ கவனிச்சிருந்தாலும் இன்னிக்குத் தான் உன்னிப்பா யோசிக்க வெக்குது..
துளியும் கபடில்லாத அந்தக் கண்களப் பாக்கவும் ரெண்டு நாளா கேட்ட வாட்ஸ் அப் கால் ரெக்கார்டர் கூட பொய்யோன்னு நெனச்சுத் திணறினான்.. எப்படிப் பொய்யாகும்..அது இவ குரல் தான்.. அத இவனுக்கு அனுப்பினது இவளோட உயிர்த் தோழியாச்சே? இப்பவும் அவள் குயில் குரல் தான் அவன் சிந்தனைய அறுத்துச்சு..
"ஏய்.. சக்தி.. இன்னிக்கென்னவோ நீ சரியில்ல.. அடிக்கடி உள்ளுக்குள்ள போயி மோனத்துல ஆழ்ந்துடறே.. என்ன விசயம் பேபி?"
"அதான் சொன்னனே?..நத்திங்"
"அதுக்கான பதிலையும் 'நத்திங் ஈஸ் சம்திங்'னு ஒரு கேள்வி மாதிரியே சொல்லிட்டேன்"
'எத வச்சு அப்படிச் சொல்றே ?"
"ஒரு பொண்ணு சொல்ற நத்திங்கற வார்த்தைக்குள்ள ஆயிரம் விசயங்கள் அடங்கி இருக்கும்.. அவ்வளவு இல்லேன்னாலும் உன் நத்திங்ல ஒண்ணு,ரெண்டாவது இருக்காதா?"
“ஒண்ணுமே இல்லாமலும் போகலாமில்லையா?”
“சான்ஸே இல்லை.. எண்ணங்களே இல்லாத நிர்ச் சலனம்ங்கறது ஞானிகளுக்கே சாத்தியமான ஒண்ணு.. என்ன பாக்கக்கறே?இது கொஞ்ச நாளைக்கு முன்ன பேச்சு வாக்குல நீ எங் கிட்டச் சொன்னது தான்... கமான் சக்தி ் அவுத்துக் கொட்டிரு.. நான் உன்னோட பெஸ்ட் பிரண்டில்லையா?”
சொல்லி முடித்தவளின் முகத்தில் மீண்டும் அந்தப் புன்னகை.. அன்பாய்,ஆதரவாய் தோள் தடவி மனம் வருடி 'சொல்லு.. என்ன உன் பிரச்னை?ன்னு தோள்ல கை போட்டு கேக்கற மாதிரியான வெல்கம் புன்னகை..நிச்சயம் இவளக் கட்டிக்கறவன் குடுத்து வெச்சவன் தான்..ஆனா,அந்தக் குடுத்து வெச்சவனா தன்னக் கற்பனை பண்ணிப் பாக்க சக்தியால துளி கூட முடியல. ‘நீ பெஸ்ட் பிரண்டா இல்லாததால தாண்டி இத்தன மனக் கஷ்டமும்,பிரச்னையும்'னு கத்தத் தோணுச்சு அவனுக்கு.. .
ஏனோ இனம் தெரியாத கோவம் வர சுள்ளுனு அவ கிட்ட எரிஞ்சு விழுந்தான்
"ரோட்ல வச்சுத் தான் எல்லா பஞ்சாயத்தும் நடக்கணுமா?வா போலாம்"
ஆனா,அவ அவன் எரிச்சல துளியும் சட்டை செய்யலன்னாலும் அவனோட ‘வா’ங்கற ஒத்தச் சொல்ல உத்தரவா பாவிச்சு பைக்குல அவன் பின்னால.ஏறி உக்காந்தா.. ஏன்னா,சக்தி கோவமா இருக்கும் போது வார்த்தைல அவங் கிட்ட வெளையாடறது ரொம்பவே ஆபத்து.. நெஞ்சையே அறுக்கற மாதிரி அங்க இருந்து பதில் வரும்..
ரெண்டே நிமிசத்துல அவ வீடு வந்ததும் எறங்குனவ கிட்டச் சொன்னான்
“உங்கிட்ட தனியா ஒரு விசயம் பேசணுமே பேபி?”
“எப்ப வேணும்னாலும்.. நான் காத்திருக்கேன் சக்தி”
அடுத்த நொடியே அந்த புல்லட் சீறிப் பாய கண்ணிலிருந்து மறையும் விரிந்த அவன் முதுகையே புன்னகையுடன் பார்த்தாள்..
++++++++++++++++++++
காதல் நீலாம்பரி.....!!!
பெருமாள் கோவில் முன் செருப்பைக் கழட்டி.....
கண்மூடி கையக் கூப்பி பவள உதடுகள் முணு முணுக்க...
இறையை வணங்கும் மான்யாவை ...
சக்தி சிகரெட் பத்திக்கிட்டே ஓரக் கண்ணால் பாத்தான்...
அழகி.. பேரழகி.. ஒடம்பால மட்டுமில்ல மனசாலயும் !!! எப்படி நின்னு எந்தக் கோணத்துல பாத்தாலும் அழகைப் பிரதி பலிக்கற அழகி !! பேச்சு,பார்வை,நடைன்னு எல்லாத்துலயும் அழகு மிளிரும் அழகி !!!
அந்தப் புன்னகை...
அவளோட அந்த அலாதிப்புன்னகையே அவள அலங்கரிக்கற மிகப் பெரிய அணிகலன்..
‘இன்னும் என்னத்த வேண்டறா? தன் காதல் ஜெயிக்கணும்னா? ஸாரி மான்யா..நான் உன்னோட காதல ஜெயிக்க விட மாட்டேன’ உக்கிரமாய் மனதுக்குள் தோன்றும் எண்ணங்களுக்கு சலிப்படைந்தவனாய்த் தலையுதறி மீண்டும் அவளைப் பார்த்தான்
தேவதை.. எல்லா விசயத்துலயும் தேவதை..! இவளா என்னக் காதலிக்கறா? என்ன விட பத்து வயசு கம்மி.. Bsc கிராஜுவேட்.. தமிழ்,மலையாளம், இத்தி, ஆங்கிலம்னு நாலு மொழி சரளமா பேச,எழுதத் தெரிஞ்சவ.. இந்தில 'பண்டிட்'பட்டம் வாங்கினவ..
கம்ப்யூட்டர் சென்டர்ல ஒரு ட்ரெய்னரா இருக்கறதோட தன் வீட்ல காலைல இருவது பேருக்கு இந்தியும், சாயந்திரம் அம்பது கொழந்தைங்களுக்கு டியூசனும் நடத்தறவ....
மலையாளிங்களுக்கே ஆன அந்த நிறம்.. ஏணி என்ன?ஜேசிபியே வச்சுத் தூக்கினாலும் தன்னால அவ காலு கிட்டக் கூட போக முடியாதே?
தன்னப் பத்தி யோசிக்கும் போது சக்தி மனசுல வெறுப்பும், கசப்புமே கடைசீல மிச்சமாச்சு..
தனியார் பள்ளியின் 'படி,படி'ங்கற தாரக மந்திரம்.. விளையாட்ல ஆர்வமுள்ள இவன அதுல ஊக்கப் படுத்தாம மணிப் பிரகாரம் ஒவ்வொரு பாடத்தையும் நெட்டுருவாய் மண்டைல ஏத்தற அதோட ஜெயில் தனம்....
பத்தாவது படிக்கறப்ப பாதியிலயே அடமாய் வெளியே வந்தவன் அவன்.. அஞ்சு வயசுக் கொழந்தை கூட சரளமா இங்கிலீஷ் பேசற இந்தக் காலத்துல நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி அந்த பாஷையக் பேசவோ,கேட்கவோ நேரும் தருணங்களில் தடுமாறுபவன்...
ஏழு வயசலயே பெத்தவங்கள எடுத்து முழுங்கி தாத்தா,பாட்டி செல்லத்துல வளர்ந்தவனுக்கு இயல்பாவே முரட்டுத் தனம் அமைய படிப்பு ஏறலை...
சிப்காட்டுக்கு எடுத்த நெலத்துக்கு வந்த பணத்துல அவன் அப்பா இருந்த காலத்துலயே பெருந்துறை சென்டர் டவுன்ல இடம் வாங்கி முப்பது கடைகளக் கட்டி விட...
இன்னிக்கது ரெண்டு லகரம் வாடகையாக் கொட்ட இவன் ஏகாந்தமாச் சுத்திட்டு திரியறவன்.. அது போக காடு,தோட்டம்னு அடிப் படைச் சொத்துக்களுக்கும் பஞ்சமில்ல.. வசதி ஒண்ணுல மட்டும் அவள விட சில படி மேல இருக்கானே தவிர மத்த விசங்யங்கள்ல அதள பாதாளத்துல...
காதல் கருமாந்தரத்துக்குக் கண்ணில்ல தான்.. எதையும் அலசிப் பாக்காதுன்னே வெச்சுக்கிட்டாலும்.....
ஆணோ,பெண்ணோ குணம் முக்கியமில்லையா?அப்படித் தன் கிட்ட மெச்சத் தகுந்த குணம் என்ன இருக்குன்னு யோசிச்சுப் பாத்தவனுக்கு ஏளனம் கலந்த புன்னகை தான் வந்ததே தவிர சுட்டிக் காட்டற அளவுக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வரலை..
இவன் யோசனையக் கலைக்கற மனம் வருடும் அவள் மெல்லிய குரல்..
"போலாமா சக்தி? ஏதோ பலத்த யோசனை போலிருக்கு..மூணு தடவ கூப்பிட வெச்சுட்டே. அப்படி என்ன யோசனை?"
சிகரெட்டக் கீழ போட்டு மிதிச்சுக்கிட்டே 'கேட்டுடலாமா?'ன்னு யோசிச்சவன் ...
'நடு ரோட்லயா?'ங்கற கேள்வி வரவும் உடனே முந்தின கேள்விய அழிச்சுட்டு வெறுப்பா சொன்னான்
"நத்திங் பேபி"
சொல்லிக்கிட்டே தன் ராயல் என்பீல்டு பைக்க நோக்கிப் போனவன அவளோட இந்த பதில் தேக்கி நிறுத்தி திரும்பிப் பாக்க வச்சது..
"ஹேய்.. நத்திங் ஈஸ் சம்திங்க்"
அவளோட அந்த அலாதியான அந்தப் புன்னகை.. கண்ணுல தொடங்கி முகம் பூரா பரவி கடைசியா உதட்டுக்கு வர்ற புன்னகைய அவன் பல தடவ கவனிச்சிருந்தாலும் இன்னிக்குத் தான் உன்னிப்பா யோசிக்க வெக்குது..
துளியும் கபடில்லாத அந்தக் கண்களப் பாக்கவும் ரெண்டு நாளா கேட்ட வாட்ஸ் அப் கால் ரெக்கார்டர் கூட பொய்யோன்னு நெனச்சுத் திணறினான்.. எப்படிப் பொய்யாகும்..அது இவ குரல் தான்.. அத இவனுக்கு அனுப்பினது இவளோட உயிர்த் தோழியாச்சே? இப்பவும் அவள் குயில் குரல் தான் அவன் சிந்தனைய அறுத்துச்சு..
"ஏய்.. சக்தி.. இன்னிக்கென்னவோ நீ சரியில்ல.. அடிக்கடி உள்ளுக்குள்ள போயி மோனத்துல ஆழ்ந்துடறே.. என்ன விசயம் பேபி?"
"அதான் சொன்னனே?..நத்திங்"
"அதுக்கான பதிலையும் 'நத்திங் ஈஸ் சம்திங்'னு ஒரு கேள்வி மாதிரியே சொல்லிட்டேன்"
'எத வச்சு அப்படிச் சொல்றே ?"
"ஒரு பொண்ணு சொல்ற நத்திங்கற வார்த்தைக்குள்ள ஆயிரம் விசயங்கள் அடங்கி இருக்கும்.. அவ்வளவு இல்லேன்னாலும் உன் நத்திங்ல ஒண்ணு,ரெண்டாவது இருக்காதா?"
“ஒண்ணுமே இல்லாமலும் போகலாமில்லையா?”
“சான்ஸே இல்லை.. எண்ணங்களே இல்லாத நிர்ச் சலனம்ங்கறது ஞானிகளுக்கே சாத்தியமான ஒண்ணு.. என்ன பாக்கக்கறே?இது கொஞ்ச நாளைக்கு முன்ன பேச்சு வாக்குல நீ எங் கிட்டச் சொன்னது தான்... கமான் சக்தி ் அவுத்துக் கொட்டிரு.. நான் உன்னோட பெஸ்ட் பிரண்டில்லையா?”
சொல்லி முடித்தவளின் முகத்தில் மீண்டும் அந்தப் புன்னகை.. அன்பாய்,ஆதரவாய் தோள் தடவி மனம் வருடி 'சொல்லு.. என்ன உன் பிரச்னை?ன்னு தோள்ல கை போட்டு கேக்கற மாதிரியான வெல்கம் புன்னகை..நிச்சயம் இவளக் கட்டிக்கறவன் குடுத்து வெச்சவன் தான்..ஆனா,அந்தக் குடுத்து வெச்சவனா தன்னக் கற்பனை பண்ணிப் பாக்க சக்தியால துளி கூட முடியல. ‘நீ பெஸ்ட் பிரண்டா இல்லாததால தாண்டி இத்தன மனக் கஷ்டமும்,பிரச்னையும்'னு கத்தத் தோணுச்சு அவனுக்கு.. .
ஏனோ இனம் தெரியாத கோவம் வர சுள்ளுனு அவ கிட்ட எரிஞ்சு விழுந்தான்
"ரோட்ல வச்சுத் தான் எல்லா பஞ்சாயத்தும் நடக்கணுமா?வா போலாம்"
ஆனா,அவ அவன் எரிச்சல துளியும் சட்டை செய்யலன்னாலும் அவனோட ‘வா’ங்கற ஒத்தச் சொல்ல உத்தரவா பாவிச்சு பைக்குல அவன் பின்னால.ஏறி உக்காந்தா.. ஏன்னா,சக்தி கோவமா இருக்கும் போது வார்த்தைல அவங் கிட்ட வெளையாடறது ரொம்பவே ஆபத்து.. நெஞ்சையே அறுக்கற மாதிரி அங்க இருந்து பதில் வரும்..
ரெண்டே நிமிசத்துல அவ வீடு வந்ததும் எறங்குனவ கிட்டச் சொன்னான்
“உங்கிட்ட தனியா ஒரு விசயம் பேசணுமே பேபி?”
“எப்ப வேணும்னாலும்.. நான் காத்திருக்கேன் சக்தி”
அடுத்த நொடியே அந்த புல்லட் சீறிப் பாய கண்ணிலிருந்து மறையும் விரிந்த அவன் முதுகையே புன்னகையுடன் பார்த்தாள்..
++++++++++++++++++++
Last edited: