காதல் நீலாம்பரி 3
==================
மான்யா செல் போன்ல இருந்த அந்தப் போட்டோவ இன்னொரு தடவ பாத்தா.. அவன் ஏதோ ஒரு யோசனைல அவ டியூசன் ரூம்ல வந்து உக்காந்திட்டிருக்கைல எடுத்த போட்டோ.. இத யாரு கிட்டயாவது காட்டி 'இவன் தான் என் லவ்வர்'னா அவங்க ரியாக்சன் எப்படி இருக்கும்னு யோசிக்க, 'பாவம்.. அலறிட மாட்டாங்க?ன்னு தோணவும் அவ முகத்துலயும் உதட்டுலயும் புன்னகை ஓடியது..
ஏன்னா.. எதுக்க இருந்த டேபிள் மேல ரெண்டு காலையும் தூக்கிப் போட்டு உக்காந்திருந்த சேரை பின்னால சுவத்துல சாய்ச்ச படி இருந்த சக்தி முன்னால டேபிள்ல பாதி காலியான ஆஃப் பாட்டில் பிராண்டி.. கைல சிகரெட்..! எந்தப் பொண்ணுமே விரும்பாத போஸ் இது.. ஆனா, தனக்கு ஏன் அவனோட குறைகளப் பெருசா எடுத்துக்க முடியலேன்னு யோசித்துப் பாத்தா... எத்தனையோ சொல்லலாம்னு முணு முணுக்கறா.. 'ஆனா,யாரு கிட்ட?'ங்கற மனசாட்சியோட கேள்விக்குத் தான் அவ கிட்ட பதில் இல்ல..
இந்தக் காதல் கருமாந்திரம் இருக்கே?அத யாரு கிட்டவும் சொல்லாம மனசுக்குள்ளயே வெச்சுக்கிட்டு குறுஞ் சிரிப்பா சிரிக்கவும் வைக்கற இதே காதல் யாராவது தகுந்த ஆள் கெடைச்சா அதையவே மணிக் கணக்குல பேசவும் வைக்கும்.. காதலோட விசித்திரமிது ! ஆனா, தன் காதல உள்ளயும் வச்சுக்க முடியாத பேசவும் ஆளுமில்லாத கட்டத்துல தான் நிர்மலா அந்தப் போனப் பண்ணித் தொலைய இவளும் எல்லாத்தையும் கொட்டி ஆறுதலானாள்..
எல்லாத்தையும் சொன்ன பின்னால தான் அவளுக்கு அந்த பயம் வந்தது.. ஏன்னா,நிர்மலா ஒரு உளறு வாய்.. அவ எங்கியாவது உளறிக் கொட்டி அது சக்தி காதுக்குப் போயிட்டா.. ? யெஸ் ஆர் நோன்னு பதில் சொல்லிட்டுப் போறவனா இருந்தா நேரடியா இவளே தன் மனசுல இருக்கறதச் சொல்லி இருப்பா.. ஆனா,சக்தி ஒரு டைப்பான ஆளு.. புடிச்சிருந்தா உயிரக் குடுத்துப் பழகுவான்.. அதே சமயம் அவனோட இந்த சுபாவத்தப் பயன் படுத்தி யராவது ஒரு சின்னத் தப்பான உரிமை எடுத்துக்கிட்டாலும்.. அதே உயிரக் குடுத்தாவது விலகிடுவான்.. அவ்வளவு தான்! அப்புறம் எத்தன கெஞ்சுனாலும் மனசு இளக மாட்டான்.. அதான் சக்தி !!
அவள் சிந்தனைகளுக்கு ஆப்பு.வெக்கிற மாதிரி போன் அழைப்பு.. எடுத்துப் பாத்தா... நிர்மலா ! ஆன் பண்ணி காதுல வச்சு இவ 'ஹலோ' சொல்றதுக்கு முந்தியே அந்தப் பக்கம் நிர்மலா அடை மழையா கொட்ட ஆரம்பிச்சுட்டா... !
"ஏய்... ஸாரிடி.. வெரி ஸாரிடி இவளே.. நான் உனக்கு நல்லது செய்யறதா நெனச்சு ஒரு மிகப் பெரிய தப்புப் பண்ணிட்டேன்.. அது இப்ப ஒரு புயலா, பூகம்பமா உன் கிட்ட வந்திட்டிருக்கு.. எப்படியாவது சமாளின்னு சொல்றதுக்குத் தான் கூப்பிட்டேன்.. வெச்சுடவா?''
மான்யா அவசரமா பதில் சொல்லாம இருந்திருந்தா வச்சே இருப்பா..
"ஏய்.. என்ன விசயம்னு சொல்லிட்டு வச்சுத் தொலைடி...."
"ஓ.. நான் அதச் சொல்லலையா? எனக்கு இருக்கற பதட்டத்துல என்ன சொன்னோம்கங்கறது கூட ஞாபகத்துல இல்ல.. குறுக்க பேசாம கவனி.. அன்னிக்கு நீ சக்தி பத்திச் சொன்னது எல்லாம் எங் கிட்ட ஆட்டோமேடிக் கால் ரெக்கார்டுல இருந்துச்சு... ரெண்டு நாளைக்கு முன்ன அத.அனுப்பி வெச்சதோட நின்னிருந்தா காரியம் சுமூகமா முடிஞ்சிருக்குமோ என்னவோ.. நான் பண்ணின மடத் தனம் அதப் பூகம்பமா ஆக்கிடுச்சுன்னு நெனைக்கறேன்.. உன் ஆளு சுத்தமா வெந் தண்ணிடி.. எதச் சொன்னாலும் வெந் தண்ணில வெரல விட்ட மாதிரி தை தைன்னு குதிக்கறான்..."
"இன்னொரு தடவ சக்திய அவன் இவன்னு பேசினா கட் பண்ணிடுவேன் நிரு.. அப்புறம் எப்பவும் உங் கூடப் பேச மாட்டேன்.."
"ஏய்... நீ அன்னிக்குப் பேசுன ஒன்றரை மணி நேரமும் மரியாதை குடுத்துப் பேசினதா எனக்கு ஞாபகமில்ல.."
"நான் பேசுவேன்டி.. ஏன்னா, அவன் என்னோட ஆளு.. ஆனா, நீ பேசறதுக்கு எந்த உரிமையுமில்ல"
"நியாயமா இதுக்கு எனக்குக் கோவம் வரணும்டி.. ஆனா, பரிதாபம் தான் வருது.. உன் கிட்ட இருக்கற காதல்ல லட்சத்துல ஒரு பங்கு கூட அவன் கிட்ட... ஸாரி.. அவர்ர்ர்ர் கிட்ட.. போதுமா?.. இருக்கற மாதிரி தெரியல.. நான் வேணும்னே தான் அவருக்கு போன் பண்ணி வம்பிழுத்தேன்.. உன்னவரப் பொறுத்த வரைக்கும் மனு இந்த மாதிரி உங்கள லவ் பண்றா.. நீங்களும் அவள லவ் பண்ணுங்கன்னு சொன்னா குப்பையா ஒதுக்கித் தள்ளிட்டுப் போயிடுவார்னு யோசிச்சு தான் அவரு கிட்ட நீங்க தான் அவளத் தூண்டி விட்டிருக்கீங்கன்னு அபத்தமா சண்ட போட்டேன்.. அவர் எங் கிட்ட ஜெண்டில் மேனாப் பேசிட்டு உன்ன மையமா வெச்சுக் கிளம்ப வேகமா வந்துட்டிருக்கார்டி புயலா... இதுக்கு மேல.. மகளே! உன் சமத்து... நைட் போன் பண்ணி புயல் சேதாரத்தக் கேட்டு மதிப்பிடறேன்.. வச்சுடவா?..."
வச்சுட்டா... மனுவுக்கு கோவங் கோவமா வந்துச்சு..ஆமா.. வச்சுட்டா..! அவளுக்கென்ன? இது வெறும் தகவல்.. இங்க இருந்து அங்க, அங்க இருந்து இங்கயும் பரிமாறிப் பொழுது போக்கிக்கற குரூரம்.. இதுல சம்பந்தப் பட்டவங்க மனசு என்ன பாடு படும்ங்கறது அவளுக்குத் தெரியாது.. அல்லது.. அதப் பத்தி அவளுக்குக் கவலை இல்ல..
சக்தி இத வெறும் தகவலா மட்டும் கேட்டிருந்தா 'ஸாரி மனு.. நான் அந்த எண்ணத்துல பழகலை'ன்னு சொல்லிட்டு மறந்திருப்பான்.. ஆனா, இவ லவ்வத் தூண்டி விட்டதுக்கே அவன் தான் காரணம்னு குற்றஞ் சொன்னா?அப்ப கண்டிப்பா புயலோட பூகம்பமும் வரும்ங்கறது கன்ஃபார்ம்.. அவளுக்கு சக்திக்கு விசயம் தெரிஞ்சது பத்தியோ, அதனால வரக் கூடிய பின் விளைவுகள் பத்தியோ துளியும் கவலை இல்லை.. 'இனி உன் முகத்துலயே முழிக்க மாட்டேன்'ன்னுட்டுப் போயிட்டா..? இனி அவனப் பாக்காத .. அவங் கூடப் பேசாத நாளும் ஒரு நாளா?
அவள் சிந்தனை அங்கயும் இங்கயுமா அலை பாய்ஞ்சுக்கிட்டிருந்த அதே நேரம் தூரத்துல அவன் புல்லட் சத்தமும்.. வேகமா அவ வீட்டு முன்னால பிரேக் அடிக்கற சத்தமும் கேட்க இனி எது வந்தாலும் எதிர் கொண்டு தான் ஆகணும்ங்கற வெட்டித் துணிச்சல்ல மெல்ல சிரிச்சுகிட்டே அவளுக்குப்.புடிச்ச பாட்ட ஹம்மிங் செய்யவும் ஆரம்பிச்சா..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
==================
மான்யா செல் போன்ல இருந்த அந்தப் போட்டோவ இன்னொரு தடவ பாத்தா.. அவன் ஏதோ ஒரு யோசனைல அவ டியூசன் ரூம்ல வந்து உக்காந்திட்டிருக்கைல எடுத்த போட்டோ.. இத யாரு கிட்டயாவது காட்டி 'இவன் தான் என் லவ்வர்'னா அவங்க ரியாக்சன் எப்படி இருக்கும்னு யோசிக்க, 'பாவம்.. அலறிட மாட்டாங்க?ன்னு தோணவும் அவ முகத்துலயும் உதட்டுலயும் புன்னகை ஓடியது..
ஏன்னா.. எதுக்க இருந்த டேபிள் மேல ரெண்டு காலையும் தூக்கிப் போட்டு உக்காந்திருந்த சேரை பின்னால சுவத்துல சாய்ச்ச படி இருந்த சக்தி முன்னால டேபிள்ல பாதி காலியான ஆஃப் பாட்டில் பிராண்டி.. கைல சிகரெட்..! எந்தப் பொண்ணுமே விரும்பாத போஸ் இது.. ஆனா, தனக்கு ஏன் அவனோட குறைகளப் பெருசா எடுத்துக்க முடியலேன்னு யோசித்துப் பாத்தா... எத்தனையோ சொல்லலாம்னு முணு முணுக்கறா.. 'ஆனா,யாரு கிட்ட?'ங்கற மனசாட்சியோட கேள்விக்குத் தான் அவ கிட்ட பதில் இல்ல..
இந்தக் காதல் கருமாந்திரம் இருக்கே?அத யாரு கிட்டவும் சொல்லாம மனசுக்குள்ளயே வெச்சுக்கிட்டு குறுஞ் சிரிப்பா சிரிக்கவும் வைக்கற இதே காதல் யாராவது தகுந்த ஆள் கெடைச்சா அதையவே மணிக் கணக்குல பேசவும் வைக்கும்.. காதலோட விசித்திரமிது ! ஆனா, தன் காதல உள்ளயும் வச்சுக்க முடியாத பேசவும் ஆளுமில்லாத கட்டத்துல தான் நிர்மலா அந்தப் போனப் பண்ணித் தொலைய இவளும் எல்லாத்தையும் கொட்டி ஆறுதலானாள்..
எல்லாத்தையும் சொன்ன பின்னால தான் அவளுக்கு அந்த பயம் வந்தது.. ஏன்னா,நிர்மலா ஒரு உளறு வாய்.. அவ எங்கியாவது உளறிக் கொட்டி அது சக்தி காதுக்குப் போயிட்டா.. ? யெஸ் ஆர் நோன்னு பதில் சொல்லிட்டுப் போறவனா இருந்தா நேரடியா இவளே தன் மனசுல இருக்கறதச் சொல்லி இருப்பா.. ஆனா,சக்தி ஒரு டைப்பான ஆளு.. புடிச்சிருந்தா உயிரக் குடுத்துப் பழகுவான்.. அதே சமயம் அவனோட இந்த சுபாவத்தப் பயன் படுத்தி யராவது ஒரு சின்னத் தப்பான உரிமை எடுத்துக்கிட்டாலும்.. அதே உயிரக் குடுத்தாவது விலகிடுவான்.. அவ்வளவு தான்! அப்புறம் எத்தன கெஞ்சுனாலும் மனசு இளக மாட்டான்.. அதான் சக்தி !!
அவள் சிந்தனைகளுக்கு ஆப்பு.வெக்கிற மாதிரி போன் அழைப்பு.. எடுத்துப் பாத்தா... நிர்மலா ! ஆன் பண்ணி காதுல வச்சு இவ 'ஹலோ' சொல்றதுக்கு முந்தியே அந்தப் பக்கம் நிர்மலா அடை மழையா கொட்ட ஆரம்பிச்சுட்டா... !
"ஏய்... ஸாரிடி.. வெரி ஸாரிடி இவளே.. நான் உனக்கு நல்லது செய்யறதா நெனச்சு ஒரு மிகப் பெரிய தப்புப் பண்ணிட்டேன்.. அது இப்ப ஒரு புயலா, பூகம்பமா உன் கிட்ட வந்திட்டிருக்கு.. எப்படியாவது சமாளின்னு சொல்றதுக்குத் தான் கூப்பிட்டேன்.. வெச்சுடவா?''
மான்யா அவசரமா பதில் சொல்லாம இருந்திருந்தா வச்சே இருப்பா..
"ஏய்.. என்ன விசயம்னு சொல்லிட்டு வச்சுத் தொலைடி...."
"ஓ.. நான் அதச் சொல்லலையா? எனக்கு இருக்கற பதட்டத்துல என்ன சொன்னோம்கங்கறது கூட ஞாபகத்துல இல்ல.. குறுக்க பேசாம கவனி.. அன்னிக்கு நீ சக்தி பத்திச் சொன்னது எல்லாம் எங் கிட்ட ஆட்டோமேடிக் கால் ரெக்கார்டுல இருந்துச்சு... ரெண்டு நாளைக்கு முன்ன அத.அனுப்பி வெச்சதோட நின்னிருந்தா காரியம் சுமூகமா முடிஞ்சிருக்குமோ என்னவோ.. நான் பண்ணின மடத் தனம் அதப் பூகம்பமா ஆக்கிடுச்சுன்னு நெனைக்கறேன்.. உன் ஆளு சுத்தமா வெந் தண்ணிடி.. எதச் சொன்னாலும் வெந் தண்ணில வெரல விட்ட மாதிரி தை தைன்னு குதிக்கறான்..."
"இன்னொரு தடவ சக்திய அவன் இவன்னு பேசினா கட் பண்ணிடுவேன் நிரு.. அப்புறம் எப்பவும் உங் கூடப் பேச மாட்டேன்.."
"ஏய்... நீ அன்னிக்குப் பேசுன ஒன்றரை மணி நேரமும் மரியாதை குடுத்துப் பேசினதா எனக்கு ஞாபகமில்ல.."
"நான் பேசுவேன்டி.. ஏன்னா, அவன் என்னோட ஆளு.. ஆனா, நீ பேசறதுக்கு எந்த உரிமையுமில்ல"
"நியாயமா இதுக்கு எனக்குக் கோவம் வரணும்டி.. ஆனா, பரிதாபம் தான் வருது.. உன் கிட்ட இருக்கற காதல்ல லட்சத்துல ஒரு பங்கு கூட அவன் கிட்ட... ஸாரி.. அவர்ர்ர்ர் கிட்ட.. போதுமா?.. இருக்கற மாதிரி தெரியல.. நான் வேணும்னே தான் அவருக்கு போன் பண்ணி வம்பிழுத்தேன்.. உன்னவரப் பொறுத்த வரைக்கும் மனு இந்த மாதிரி உங்கள லவ் பண்றா.. நீங்களும் அவள லவ் பண்ணுங்கன்னு சொன்னா குப்பையா ஒதுக்கித் தள்ளிட்டுப் போயிடுவார்னு யோசிச்சு தான் அவரு கிட்ட நீங்க தான் அவளத் தூண்டி விட்டிருக்கீங்கன்னு அபத்தமா சண்ட போட்டேன்.. அவர் எங் கிட்ட ஜெண்டில் மேனாப் பேசிட்டு உன்ன மையமா வெச்சுக் கிளம்ப வேகமா வந்துட்டிருக்கார்டி புயலா... இதுக்கு மேல.. மகளே! உன் சமத்து... நைட் போன் பண்ணி புயல் சேதாரத்தக் கேட்டு மதிப்பிடறேன்.. வச்சுடவா?..."
வச்சுட்டா... மனுவுக்கு கோவங் கோவமா வந்துச்சு..ஆமா.. வச்சுட்டா..! அவளுக்கென்ன? இது வெறும் தகவல்.. இங்க இருந்து அங்க, அங்க இருந்து இங்கயும் பரிமாறிப் பொழுது போக்கிக்கற குரூரம்.. இதுல சம்பந்தப் பட்டவங்க மனசு என்ன பாடு படும்ங்கறது அவளுக்குத் தெரியாது.. அல்லது.. அதப் பத்தி அவளுக்குக் கவலை இல்ல..
சக்தி இத வெறும் தகவலா மட்டும் கேட்டிருந்தா 'ஸாரி மனு.. நான் அந்த எண்ணத்துல பழகலை'ன்னு சொல்லிட்டு மறந்திருப்பான்.. ஆனா, இவ லவ்வத் தூண்டி விட்டதுக்கே அவன் தான் காரணம்னு குற்றஞ் சொன்னா?அப்ப கண்டிப்பா புயலோட பூகம்பமும் வரும்ங்கறது கன்ஃபார்ம்.. அவளுக்கு சக்திக்கு விசயம் தெரிஞ்சது பத்தியோ, அதனால வரக் கூடிய பின் விளைவுகள் பத்தியோ துளியும் கவலை இல்லை.. 'இனி உன் முகத்துலயே முழிக்க மாட்டேன்'ன்னுட்டுப் போயிட்டா..? இனி அவனப் பாக்காத .. அவங் கூடப் பேசாத நாளும் ஒரு நாளா?
அவள் சிந்தனை அங்கயும் இங்கயுமா அலை பாய்ஞ்சுக்கிட்டிருந்த அதே நேரம் தூரத்துல அவன் புல்லட் சத்தமும்.. வேகமா அவ வீட்டு முன்னால பிரேக் அடிக்கற சத்தமும் கேட்க இனி எது வந்தாலும் எதிர் கொண்டு தான் ஆகணும்ங்கற வெட்டித் துணிச்சல்ல மெல்ல சிரிச்சுகிட்டே அவளுக்குப்.புடிச்ச பாட்ட ஹம்மிங் செய்யவும் ஆரம்பிச்சா..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~