காதல் நீலாம்பரி 5
__________________________
சக்தி அவளின் அந்தக் கேள்விக்கு அதிர்ந்தே தான் போய் விட்டான்.. விசயத்தை முழுக்கவும் அலசி தெளிவாய் உள்ள ஒருத்தியால் மட்டுமே இப்படிப் பட்ட கேள்வியை எதிர் கொண்டு பதில் சொல்ல முடியும் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.. ஆனால்,தன்னையே வாயடைத்து மலைத்துப் போக வைக்குமளவுக்கு மனு இப்படியொரு பதிலை கேள்வியாய் வீசுவாள் என அவன் துளியும் எதிர் பார்க்கவில்லை..
மனு மாதிரி ஒரு பொண்ணோட காதல் கிடைக்கறது ரொம்பவே பெரிய விசயம்.. வரம், குடுப்பினைன்னு எத்தனையோ சொல்லலாம்.. ஆனா,அந்த வரத்துக்குத் தகுதியுடையவனா ஒருத்தன் இருக்கணுமில்லையா? அந்தத் தகுதி தனக்கு இருக்காங்கறதே அவன் கேள்வி..
இந்தக் காதல் இருக்கே? அது அப் நார்மல் மேட்டர்.. நார்மலா யதார்த்தம் யோசிக்கறவன் உருகி உருகி காதலிக்க முடியாது.. நீ இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னு உளற முடியாது.. லெட்டர் எழுதி வச்சுட்டுச் சாக முடியாது.. சாவுக்கு கொஞ்சம் முன்ன ஆக்ரோசமா காமம் வச்சுக்க முடியாது..
காதலும் காமமும் இன்னொரு முறை வாழும் துடிப்பு.. தனக்கான, தன் சாயல் உள்ள வாரிசை உருவாக்கும் முனைப்பு.. அந்தத் துடிப்பும், முனைப்பும் இருக்கைல சாவு ஏன்? சாவப் பத்தி யோசிக்கறவனுக்கு மொதல்ல சிந்தனை செத்துப் போயிடுது.. அல்லது சாவுங்கற புள்ளிலயே சிந்தனை மரத்து நின்னுடுது..
காதலிக்கற எல்லாருமே.. அது ஆணோ,பெண்ணோ.. குறைகளப் பத்தி யோசிக்கறதே இல்ல.. கண்ணுல படற குறைகளையும் இவங்களா நிறைகளாக்கிடறாங்க..
காதலிக்கற போது போட்டுக்கறது பெரும் பாலும் ஜெண்டில் வேசங்களே.. கல்யாணத்துக்குப் பின்னால அந்த வேசங்கள் பல்லிளிக்கும் போது விவாக ரத்தில் முடிகிறது..
மனு அற்புதமான பொண்ணு.. அறிவோட அழகும் சேர்ந்த அபூர்வ சிருஷ்டி.. அந்த அற்புதம் தன்னால சிதையணுமா? இருக்கற தீவிரத்துக்கு இவ அவ்வளவு சுலபத்துல இதுல இருந்து பின் வாங்கப் போறதில்லேன்னு அவனுக்குத் தெளிவாப் புரியுது.. ஆனா,எப்படிக் கையாண்டா இந்த விசயம் தனக்குச் சாதகமா முடியும்ங்கறது தான் அவனுக்குத் தெரியல..
சில்லி மூக்கு ஒடைஞ்சு ரத்தம் கொட்ட நிக்கைலயும் 'ஐ லவ் யூ' சொல்றவள அதுக்கு மேல என்ன பண்ணிட முடியும்?சரி.. புத்தியால அடிக்கலாம்னு 'உன்னோடது காதல் இல்ல.. உடம்பு வெறி'ன்னு பச்சையா தாக்குனா 'அப்ப எப்ப வெச்சுக்கலாம்?'னு கேக்கறவ கிட்ட தங் கிட்ட பதில் இல்லையேன்னு சக்தி அசந்தது உண்மை தான் ! அதுக்காக இதச் சரின்னு ஏத்துக்கற மன நிலையும் அவனுக்கில்லாததால அவளப் பாத்து சிரிச்சுக்கிட்டே கேட்டான்..
"அர்த்தம் புரிஞ்சு தான் இந்தக் கேள்வியக் கேக்கறியா மனு?"
மனு அசர வில்லை.. அவன் இன்னும் பெரிதாய் ஏதோ திட்டமிட்டு தன்னை உரையாடலுக்குள் இழுக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தே இருந்தாலும் எதிர் கொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் சளைக்காமல் பதில் சொன்னாள்..
"ஆனானப் பட்ட அற்புதமான மனசையே உனக்கு அர்ப்பணிச்சுட்டேன் சக்தி.. ஆனா, நீ கேவலம் மண்ணோ,தீயோ திங்கற ஒடம்போட வெறிங்கறே.. சரி! அதையும் பாத்துடலாமே? ஒரு சில தடவைங்க உங் கூட படுத்து எந்திரிச்சா அந்த வெறி அடங்கிடுமில்லையா?"
"இப்படிப் பேச உனக்கு வெக்கமா இல்லையா?"
"ஊர்ல,சபைல பேசறதுன்னா நிச்சயமா வெக்கமென்ன?கேவலமா நெனைப்பேன்.. உங் கிட்டப் பேசறதுல என்னடா வெக்கம்? உனக்கொண்ணு தெரியுமா? என்னோட கனவுக் கற்பனைல உங் கூட பல தடவ படுத்து நமக்கு நாலு வயசுல ஒரு கொழந்தை கூட இருக்கு.. ஆண் கொழந்தை.. இப்ப அதுக்குப் பேரு வச்சு ஸ்கூல்ல சேத்தணும்.. என்ன பேரு வெக்கலாம்... சொல்லு?'
சக்திக்கு இன்னூமொரு அதிர்ச்சி ! பட படப்பா கேட்டான்...
"உனக்குப் பைத்தியமா மனு? நாலு வயசுல கொழந்தைன்னா... எத்தன வருசமா என்னக் காதலிக்கறே?"
'தெரியல சக்தி.. ஐ திங்க்.. உம் முன்னால நான் பெரியவளா மலர்ந்தனே.. அந்த நொடியாக் கூட இருக்கலாம்.. அப்பா,அம்மா சண்ட பத்தி உங் கிட்ட பேச வந்தனே.. அந்த நொடியாவும் இருக்கலாம்.. இன்னும் டீப்பாச் சொல்லணும்னா உன் கூடப் பழகுன பத்து வருசத்துல ஒவ்வொரு நொடியும் உனக்கானதா இருக்கலாம்.. ஆனா,அதக் காதல் தான்னு தெளிவா புரிஞ்சு வேண்ணா அஞ்சு வருசமாச்சு.. உன் பாட்டி செத்த விசயம் தெரிஞ்சு துக்கம் விசாரிக்க உன் வீட்டுக்கு வந்த போது சொன்னியே? 'அம்மா,அப்பாங்கற பிம்பங்களே எனக்கு ஞாபகமில்ல மனு.. ஆனா, ஒரு நாளும் என்ன அனாதையா நெனச்சு ஏங்கினதில்ல.. அந்த அளவுக்கு என் பாட்டி எனக்கு எல்லாமா இருந்தாங்க.. இப்ப வேண்ணா நான் அனாதையா ஃபீல் பண்றேன்'னு சொன்ன போது பதில் சொல்லாம மரமா நின்னேன்.. ஆனா, மனசு எப்படித் துடிச்சுது தெரியுமா? அப்படியே உன்ன இழுத்து நெஞ்சுல சாச்சு தல தடவி 'அப்படிச் சொல்லாத சக்தி.. நான் ஒருத்தி இருக்கற வரைக்கும் என்னிக்கும் நீ அனாதையில்ல'ன்னு சொல்லத் துடி துடிக்குது.. அந்த நொடி தெரிஞ்சுக்கிட்டேன் சக்தி.. இது வெறும் பிரெண்ட் ஷிப் மட்டுமில்ல.. அதுக்கும் மேலேங்கறத..."
அவளோடுப் பேச பேச சக்திக்கு ஒவ்வொரு வார்த்தையும் அணு குண்டாகவே தெரிந்தது .. அடுத்ததா என்ன குண்டப் போடுவாளோங்கற பயம் கூட வந்தது.. பொண்ணுங்கள அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுக்க முடியாதுன்னு சொல்றது உண்மை தானோன்னு.அவனுக்குத் தோணுச்சு..
ஏன்னா... பத்து வருசமா எல்லாத்தையும் மனம் திறந்து பேசும் மனு தன் மேல அஞ்சு வருசமா காதல வளர்த்துக்கிட்டு வர்றாங்கறத தன்னால துளி கூட யூகிக்க முடியலியே?இல்ல.. காரணம் அது இல்ல.. இந்த அஞ்சு வருசமா மத்தவங்களக் கூர்ந்து கவனிக்காம தன் வேதனையே பெருசுன்னு இருந்ததே இதுக்குக் காரணம்னு நெனச்சுக்கிட்டவன் அவள மடக்க அடுத்த கேள்விய வீசினான்
"ஆனா மனு.. இந்தக் காதல் ஈடேறாதுங்கறத உம் மனசு உனக்கு சுட்டிக் காட்டவே இல்லையா?"
'நல்லாவே... பல தடவ.. ஆனா,காதல் மனசு அதக் காதுல வாங்குனாத் தான?உண்மையும்,உறுதியுமிருந்தா இந்தக் காதல் ஜெயிக்கும்னு ஜபம் பண்ணிக்கிட்டிருந்துச்சு.. என் ஒரு கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல சக்தி"
சக்திக்கு லேசாய் எரிச்சல் வந்தது.. பின்ன என்ன? பதிலே சொல்ல முடியாத கேள்விகளா கேட்டு மடக்கி அவள மூச்சுத் திணற வெக்கணுங்கற சங்கல்பத்தோட அவன் உக்காந்ததென்ன?இப்ப அவன் பதில் சொல்ல முடியாம திணறுமளவுக்கு அவன் வார்த்தைகளையே அவனுக்கு எதிரா திருப்பின அவள் மாயமென்ன? சரி.. இறங்கின ஆட்டத்த கடைசி வரைக்கும் தனக்கு சாதகமா ஆடற முடிவோட கேட்டான்..
"சீரியஸாத் தான் கேக்கறியா மனு?"
__________________________
சக்தி அவளின் அந்தக் கேள்விக்கு அதிர்ந்தே தான் போய் விட்டான்.. விசயத்தை முழுக்கவும் அலசி தெளிவாய் உள்ள ஒருத்தியால் மட்டுமே இப்படிப் பட்ட கேள்வியை எதிர் கொண்டு பதில் சொல்ல முடியும் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.. ஆனால்,தன்னையே வாயடைத்து மலைத்துப் போக வைக்குமளவுக்கு மனு இப்படியொரு பதிலை கேள்வியாய் வீசுவாள் என அவன் துளியும் எதிர் பார்க்கவில்லை..
மனு மாதிரி ஒரு பொண்ணோட காதல் கிடைக்கறது ரொம்பவே பெரிய விசயம்.. வரம், குடுப்பினைன்னு எத்தனையோ சொல்லலாம்.. ஆனா,அந்த வரத்துக்குத் தகுதியுடையவனா ஒருத்தன் இருக்கணுமில்லையா? அந்தத் தகுதி தனக்கு இருக்காங்கறதே அவன் கேள்வி..
இந்தக் காதல் இருக்கே? அது அப் நார்மல் மேட்டர்.. நார்மலா யதார்த்தம் யோசிக்கறவன் உருகி உருகி காதலிக்க முடியாது.. நீ இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னு உளற முடியாது.. லெட்டர் எழுதி வச்சுட்டுச் சாக முடியாது.. சாவுக்கு கொஞ்சம் முன்ன ஆக்ரோசமா காமம் வச்சுக்க முடியாது..
காதலும் காமமும் இன்னொரு முறை வாழும் துடிப்பு.. தனக்கான, தன் சாயல் உள்ள வாரிசை உருவாக்கும் முனைப்பு.. அந்தத் துடிப்பும், முனைப்பும் இருக்கைல சாவு ஏன்? சாவப் பத்தி யோசிக்கறவனுக்கு மொதல்ல சிந்தனை செத்துப் போயிடுது.. அல்லது சாவுங்கற புள்ளிலயே சிந்தனை மரத்து நின்னுடுது..
காதலிக்கற எல்லாருமே.. அது ஆணோ,பெண்ணோ.. குறைகளப் பத்தி யோசிக்கறதே இல்ல.. கண்ணுல படற குறைகளையும் இவங்களா நிறைகளாக்கிடறாங்க..
காதலிக்கற போது போட்டுக்கறது பெரும் பாலும் ஜெண்டில் வேசங்களே.. கல்யாணத்துக்குப் பின்னால அந்த வேசங்கள் பல்லிளிக்கும் போது விவாக ரத்தில் முடிகிறது..
மனு அற்புதமான பொண்ணு.. அறிவோட அழகும் சேர்ந்த அபூர்வ சிருஷ்டி.. அந்த அற்புதம் தன்னால சிதையணுமா? இருக்கற தீவிரத்துக்கு இவ அவ்வளவு சுலபத்துல இதுல இருந்து பின் வாங்கப் போறதில்லேன்னு அவனுக்குத் தெளிவாப் புரியுது.. ஆனா,எப்படிக் கையாண்டா இந்த விசயம் தனக்குச் சாதகமா முடியும்ங்கறது தான் அவனுக்குத் தெரியல..
சில்லி மூக்கு ஒடைஞ்சு ரத்தம் கொட்ட நிக்கைலயும் 'ஐ லவ் யூ' சொல்றவள அதுக்கு மேல என்ன பண்ணிட முடியும்?சரி.. புத்தியால அடிக்கலாம்னு 'உன்னோடது காதல் இல்ல.. உடம்பு வெறி'ன்னு பச்சையா தாக்குனா 'அப்ப எப்ப வெச்சுக்கலாம்?'னு கேக்கறவ கிட்ட தங் கிட்ட பதில் இல்லையேன்னு சக்தி அசந்தது உண்மை தான் ! அதுக்காக இதச் சரின்னு ஏத்துக்கற மன நிலையும் அவனுக்கில்லாததால அவளப் பாத்து சிரிச்சுக்கிட்டே கேட்டான்..
"அர்த்தம் புரிஞ்சு தான் இந்தக் கேள்வியக் கேக்கறியா மனு?"
மனு அசர வில்லை.. அவன் இன்னும் பெரிதாய் ஏதோ திட்டமிட்டு தன்னை உரையாடலுக்குள் இழுக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தே இருந்தாலும் எதிர் கொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் சளைக்காமல் பதில் சொன்னாள்..
"ஆனானப் பட்ட அற்புதமான மனசையே உனக்கு அர்ப்பணிச்சுட்டேன் சக்தி.. ஆனா, நீ கேவலம் மண்ணோ,தீயோ திங்கற ஒடம்போட வெறிங்கறே.. சரி! அதையும் பாத்துடலாமே? ஒரு சில தடவைங்க உங் கூட படுத்து எந்திரிச்சா அந்த வெறி அடங்கிடுமில்லையா?"
"இப்படிப் பேச உனக்கு வெக்கமா இல்லையா?"
"ஊர்ல,சபைல பேசறதுன்னா நிச்சயமா வெக்கமென்ன?கேவலமா நெனைப்பேன்.. உங் கிட்டப் பேசறதுல என்னடா வெக்கம்? உனக்கொண்ணு தெரியுமா? என்னோட கனவுக் கற்பனைல உங் கூட பல தடவ படுத்து நமக்கு நாலு வயசுல ஒரு கொழந்தை கூட இருக்கு.. ஆண் கொழந்தை.. இப்ப அதுக்குப் பேரு வச்சு ஸ்கூல்ல சேத்தணும்.. என்ன பேரு வெக்கலாம்... சொல்லு?'
சக்திக்கு இன்னூமொரு அதிர்ச்சி ! பட படப்பா கேட்டான்...
"உனக்குப் பைத்தியமா மனு? நாலு வயசுல கொழந்தைன்னா... எத்தன வருசமா என்னக் காதலிக்கறே?"
'தெரியல சக்தி.. ஐ திங்க்.. உம் முன்னால நான் பெரியவளா மலர்ந்தனே.. அந்த நொடியாக் கூட இருக்கலாம்.. அப்பா,அம்மா சண்ட பத்தி உங் கிட்ட பேச வந்தனே.. அந்த நொடியாவும் இருக்கலாம்.. இன்னும் டீப்பாச் சொல்லணும்னா உன் கூடப் பழகுன பத்து வருசத்துல ஒவ்வொரு நொடியும் உனக்கானதா இருக்கலாம்.. ஆனா,அதக் காதல் தான்னு தெளிவா புரிஞ்சு வேண்ணா அஞ்சு வருசமாச்சு.. உன் பாட்டி செத்த விசயம் தெரிஞ்சு துக்கம் விசாரிக்க உன் வீட்டுக்கு வந்த போது சொன்னியே? 'அம்மா,அப்பாங்கற பிம்பங்களே எனக்கு ஞாபகமில்ல மனு.. ஆனா, ஒரு நாளும் என்ன அனாதையா நெனச்சு ஏங்கினதில்ல.. அந்த அளவுக்கு என் பாட்டி எனக்கு எல்லாமா இருந்தாங்க.. இப்ப வேண்ணா நான் அனாதையா ஃபீல் பண்றேன்'னு சொன்ன போது பதில் சொல்லாம மரமா நின்னேன்.. ஆனா, மனசு எப்படித் துடிச்சுது தெரியுமா? அப்படியே உன்ன இழுத்து நெஞ்சுல சாச்சு தல தடவி 'அப்படிச் சொல்லாத சக்தி.. நான் ஒருத்தி இருக்கற வரைக்கும் என்னிக்கும் நீ அனாதையில்ல'ன்னு சொல்லத் துடி துடிக்குது.. அந்த நொடி தெரிஞ்சுக்கிட்டேன் சக்தி.. இது வெறும் பிரெண்ட் ஷிப் மட்டுமில்ல.. அதுக்கும் மேலேங்கறத..."
அவளோடுப் பேச பேச சக்திக்கு ஒவ்வொரு வார்த்தையும் அணு குண்டாகவே தெரிந்தது .. அடுத்ததா என்ன குண்டப் போடுவாளோங்கற பயம் கூட வந்தது.. பொண்ணுங்கள அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுக்க முடியாதுன்னு சொல்றது உண்மை தானோன்னு.அவனுக்குத் தோணுச்சு..
ஏன்னா... பத்து வருசமா எல்லாத்தையும் மனம் திறந்து பேசும் மனு தன் மேல அஞ்சு வருசமா காதல வளர்த்துக்கிட்டு வர்றாங்கறத தன்னால துளி கூட யூகிக்க முடியலியே?இல்ல.. காரணம் அது இல்ல.. இந்த அஞ்சு வருசமா மத்தவங்களக் கூர்ந்து கவனிக்காம தன் வேதனையே பெருசுன்னு இருந்ததே இதுக்குக் காரணம்னு நெனச்சுக்கிட்டவன் அவள மடக்க அடுத்த கேள்விய வீசினான்
"ஆனா மனு.. இந்தக் காதல் ஈடேறாதுங்கறத உம் மனசு உனக்கு சுட்டிக் காட்டவே இல்லையா?"
'நல்லாவே... பல தடவ.. ஆனா,காதல் மனசு அதக் காதுல வாங்குனாத் தான?உண்மையும்,உறுதியுமிருந்தா இந்தக் காதல் ஜெயிக்கும்னு ஜபம் பண்ணிக்கிட்டிருந்துச்சு.. என் ஒரு கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல சக்தி"
சக்திக்கு லேசாய் எரிச்சல் வந்தது.. பின்ன என்ன? பதிலே சொல்ல முடியாத கேள்விகளா கேட்டு மடக்கி அவள மூச்சுத் திணற வெக்கணுங்கற சங்கல்பத்தோட அவன் உக்காந்ததென்ன?இப்ப அவன் பதில் சொல்ல முடியாம திணறுமளவுக்கு அவன் வார்த்தைகளையே அவனுக்கு எதிரா திருப்பின அவள் மாயமென்ன? சரி.. இறங்கின ஆட்டத்த கடைசி வரைக்கும் தனக்கு சாதகமா ஆடற முடிவோட கேட்டான்..
"சீரியஸாத் தான் கேக்கறியா மனு?"