காதல் நீலாம்பரி 8
____________________________
சக்தி மனுவையே மொறச்சுப் பாத்திட்டிருக்க கார்த்தி சேச்சி கேட்டாங்க...
"தம்பி தான எங்க டீக் கடைக்கு எதுக்க பைனான்ஸ் வெச்சிருக்கீங்க?
சொல்லுங்க... என்ன விசயம்?"
பேசிக்கிட்டே கேஸ் அடுப்ப பத்த வச்சு முன்ன வச்ச டீய சூடு பண்ணினாங்க..
"எனக்குப் பக்கம் தான் சேச்சி.. எம் பேரு சக்தி வேல்.. அம்மா,அப்பா என் சின்ன வயசுலயே போயிட்டாங்க.. அப்பா வழி தாத்தனும் பாட்டியும் என்ன வளர்த்து ஆளாக்கினாங்க.. ஜீவனத்துக்கு விவசாயம், பைனான்ஸ்.. இந்த வருசம் ஐயப்பனுக்கு மாலை போடலாம்னு யோசனை.. எனக்கு என்னென்ன வாங்கணும்,எங்க வாங்கணும்கறதெல்லாம் தெரியாது.. அதனால எல்லாத்தையும் நீங்களே வாங்கி வச்சுடுங்க.. நான் விடி காலைல வந்து மாலை போட்டுக்கறேன்"
சொல்லிக்கிட்டே பர்ஸ் எடுத்து 1000 ரூவா தாள் ஒண்ண உருவிக் கொடுத்தான்.. சேச்சி அத வாங்காம தயக்கமா சொன்னாங்க..
"இவ்வளவு ஆகாதுங்களே?"
"இருக்கட்டும் சேச்சி... ஆனது போக மீதிய நாளைக்குக் குடுங்க"
அரை மனதோடு பணத்தை வாங்கிக் கொண்டே சொன்னார்..
"உக்காருங்க.. டீ சாப்பிட்டுப் போலாம்.. மனு.. தம்பிக்கு ஒரு சேர எடுத்துப் போடு"
மனு வேண்டா வெறுப்பா உள்ள போயி ஒரு சேரக் கொண்டு வந்து போட்டதும் கம்பீரமா அதுல அவன் உக்காந்து மொறைக்கவும் பார்மாலிட்டிக்குக் கூட தேங்க்ஸ் சொல்ல மாட்டேங்கறானேங்கற எரிச்சல்ல சொன்னா...
"அம்மா... இவரு மத்தியானத்துலயே குடிப்பாரும்மா.. நான் பல தடவ நம்ம டீக் கடைல பாத்திருக்கேன்.. இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் மாலை போட்டு என்ன புண்ணியம்?"
சேச்சி சில நொடி அசந்து போயி நின்னுட்டாங்க.. ஏன்னா,மனு சுபாவத்துல அடுத்தவங்கள காயப் படுத்தற மாதிரி பேசறவ இல்ல.. பிடிக்கலீன்னா அவங்கள விட்டு விலகிப் போயிடுவாளே தவிர மறிச்சு சண்ட போடறவ இல்ல.. அப்படிப் பட்ட மனு இந்தத் தம்பி கிட்ட எதுக்கு வரிஞ்சு கட்டிட்டு நிக்கறான்னு புரியாம சேச்சி அதட்டலா சொன்னாங்க..
"என்ன மனு... ரொம்ப ஓவரா போவுது?அடக்கி வாசிடி.. இங்க வா.. இந்த டீயக் கொண்டு போயி அவருக்குக் குடு"
வேண்டா வெறுப்பா ஒரு காலை நெலத்துல ஒதைச்சு சிணுங்கிக்கிட்டே போற மனு கூட மனசுக்குள்ள பேசினான் சக்தி.. 'என்னச் சீண்டறது எவ்வளவு பெரிய தப்புங்கறத இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சுப்பே மனு'
அம்மா வடிச்சுக் குடுத்த டீய கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்துட்டு திரும்பும் போது சக்தி அவ வலது கைய இழுத்துப் புடிச்சுக்கிட்டே சொன்னான்...
"போகாத பாப்பா.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.. அந்தத் திண்ணை மேல உட்கார்"
அவன் கையப் புடிச்சதுமே எரிச்சலான மனு 'பாப்பா'ன்னு கூப்பிட்டதும் கோவத்தோட உச்சிக்கே போயிட்டா...
"மொதல்ல கைய விடுங்க.."
வேகமா உதறிப் பாத்தும் அது இரும்புப் பிடியாய் இருக்க தவிப்புடன் அவனப் பாத்தா.. "பேசாம உக்கார்"னு அவன் கைய விட்டதும் எதிர் திண்ணையில் அமரவும் சக்தி கேட்டான்..
"ஐயப்பனுக்கு மாலை யாரு போடணும் பாப்பா?"
"எம் பேரு பாப்பா இல்ல .. மான்யா.. மனு"
"ஓ... சரி மனு... எங் கேள்விக்கு யோசிச்சு பதில் சொல்லு"
"நல்லவங்க தான் மாலை போடணும்"
"நல்லவங்கன்னா... ?"
"பீடி,சிகரெட்,டிரிங்க்ஸ்... இந்த மாதிரி பழக்கம் இல்லாதவங்க..."
"ஓஹோ... உன்னப் பொறுத்த வரைக்கும் இந்தப் பழக்கம் உள்ளவங்க எல்லாம் கெட்டவங்க.. இல்லைன்னா நல்லவங்க.. இல்லையா மனு? அப்ப சரி.. சாமியத் தேடி நல்லவங்க போகணுமா?கெட்டவனா?"
"நல்லவன் தான்"
"நல்லவனுக்கு சாமி கிட்ட என்ன வேலை..? இவனோ எந்தத் தப்புமே பண்ணாத நல்லவன்.. அதனால பாவ மன்னிப்புக் கேக்க வேண்டியதில்ல.. நல்லவனுக்குப் பேராசை இருக்காதுங்கறதால பொன்,பொருளும் கேக்க மாட்டான்.. ஸோ,முழுக்க நல்லவனா இருக்கற ஒருத்தனுக்கு ஆண்டவனே அவசியமில்லையே?.. ஆனா,என்ன மாதிரி கெட்டவங்களுக்குத் தான் ஆண்டவன் அவசியம்.. எங்க கிட்ட இருக்கற கெட்ட குணங்களப் போக்கறதுக்காவது ஆண்டவன் வேணும்.. கையங் காலும் நல்லா இருக்கறவன் வீசி நடந்து போலாம்.. ஓடவும் செய்யலாம்.. ஆனா,ஒரு காலோ கையோ முடமான மொண்டிக்கு நிச்சயமா ஒரு ஊன்று கோல் வேணும்.. அந்த ஊன்று கோல் தான் கடவுள்.. எல்லாம்.சரியா இருக்கறவனுக்கு எதுவுமே தேவை இல்ல.. சரி! உங்கப்பா டிரிங்க்ஸ் அடிப்பாரா?"
'அடிப்பார்... ஆனா,மாலை போட்டுட்டா நெனைச்சுக் கூட பாக்க மாட்டார்.. ஐயப்பனோட சக்தி அப்படி"
சக்தி வாய் விட்டுச் சிரிச்சுட்டுக் கேட்டான்..
"மாலை போட்டா அந்த நெனைப்பே வராம பண்ற ஐயப்பன் மாலையக் கழட்டினதும் கை விட்டுடறானே.. அது ஏன்? அந்தக் கடவுள் சக்தி உள்ளவனா இருந்தா மாலைய கழட்டின பின்னாலையும் உங்கப்பாவ குடிக்காம இருக்க வெக்க முடியாதா? "
"ம்.. அது வந்து.. ''
"அவசரமில்ல.. நல்லா யோசிச்சு பத்து நாள் கழிச்சு பதில் சொன்னா போதும்..ஆனா,ஒண்ணு மனு.. மிஷின் தனமா ஓடற வாழ்க்கைல ஒரு சேஞ்ச் வேணும்னு தான் மாலை போட்டேன்..ஐயப்பன் கிட்ட எதையும் கேக்கவே கூடாதுன்னு தான் இருந்தேன்.. ஆனா,இப்ப ஒண்ண கண்டிப்பா வேண்டுதலாக் கேக்கணும்ங்கற முடிவுக்கு வந்திருக்கேன்... அது என்ன தெரியுமா?"
இப்படிக் கேட்டுட்டு சக்தி டம்ளர்ல மிச்சமிருந்த டீயைக் குடிச்சு திண்ணை மேல வச்சுட்டு உடனே ஒரு சிகரெட்டப் பத்த வச்சுக்கிட்டுச் சொன்னான்..
"பத்து நிமிசத்துக்கு முன்ன தான் கோட்டர் அடிச்சேன்.. வேற ஒரு குடி காரனா இருந்தா சரக்கடிச்சுட்டு டீ குடிக்க மாட்டான்.. ஆனா, நான் வேற விதம்! உன் அம்மா என்ன அறிமுகப் படுத்திக்கட்டதும் டீ சாப்டறீங்களான்னு கூட கேக்காம டக்னு அடுப்புப் பத்த வச்சு டீய சூடு பண்ணினாங்களே?அத வெறும் பால்,தூள்,சர்க்கரை கலந்த திரவமா பாக்கலை.. அம்மாவோட அன்பா பாக்கறேன்.. அன்ப மறுக்க முடியுமா? அப்படி மறுத்தா அவங்க மனசு கஷ்டப் படாதா?இப்படி யோசிக்கறவன் நான்.. கொஞ்சம் முன்ன நான் உள்ள வரைல நீ பேசிட்டிருந்தநக் கேட்டேன்.. நீ வயசுக்கு மீறின புத்திசாலி தான் மனு.. ஆனா,அந்த புத்தி சாலித் தனத்த அடுத்தவங்க மனச நோகடிக்க யூஸ் பண்ணக் கூடாது.. ஏன்னா,காயப் படறவனும் புத்தி சாலியா இருந்தா அவன் திருப்பிக் குடுக்கற அடிய உன்னால தாங்க முடியாது.. ஐயப்பன் கிட்ட என் வேண்டுதல் என்ன தெரியுமா? உனக்கு அமையற புருசன் எந்த நேரமும் ஒரு கைல சிகரெட்டும், இன்னொரு கைல சரக்குமா அலைறவனா அமையணும்னு தான்..
வரட்டுமா சண்டக் கோழி?"
எந்திரிச்சு அவள் தலையில் செல்லமாய் தட்டி திரும்பி பிரமையோடு நின்றிருந்த சேச்சியிடம் சொன்னான்..
"காலைல அஞ்சு மணிக்கு டாண்ணு வந்துடுவேன்"
சொல்லிட்டு ஒவ்வொரு அடியையும் அழுத்தமா வச்சு நடந்து போறவன வெறிச்சுப் பாத்தா மனு.. அவளுக்கேனோ அப்பா பேப்பர்ல வெச்சுக் குடுக்கற பஜ்ஜிய உள்ள கொண்டு போகும் போது ஒரு கைல சிகரெட்டும்,இன்னொரு கைல சரக்கு டம்ளருமா அவன் உக்காந்திருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்து மூஞ்சி ரத்தம் சுண்டி வெளுத்தது...
____________________________
சக்தி மனுவையே மொறச்சுப் பாத்திட்டிருக்க கார்த்தி சேச்சி கேட்டாங்க...
"தம்பி தான எங்க டீக் கடைக்கு எதுக்க பைனான்ஸ் வெச்சிருக்கீங்க?
சொல்லுங்க... என்ன விசயம்?"
பேசிக்கிட்டே கேஸ் அடுப்ப பத்த வச்சு முன்ன வச்ச டீய சூடு பண்ணினாங்க..
"எனக்குப் பக்கம் தான் சேச்சி.. எம் பேரு சக்தி வேல்.. அம்மா,அப்பா என் சின்ன வயசுலயே போயிட்டாங்க.. அப்பா வழி தாத்தனும் பாட்டியும் என்ன வளர்த்து ஆளாக்கினாங்க.. ஜீவனத்துக்கு விவசாயம், பைனான்ஸ்.. இந்த வருசம் ஐயப்பனுக்கு மாலை போடலாம்னு யோசனை.. எனக்கு என்னென்ன வாங்கணும்,எங்க வாங்கணும்கறதெல்லாம் தெரியாது.. அதனால எல்லாத்தையும் நீங்களே வாங்கி வச்சுடுங்க.. நான் விடி காலைல வந்து மாலை போட்டுக்கறேன்"
சொல்லிக்கிட்டே பர்ஸ் எடுத்து 1000 ரூவா தாள் ஒண்ண உருவிக் கொடுத்தான்.. சேச்சி அத வாங்காம தயக்கமா சொன்னாங்க..
"இவ்வளவு ஆகாதுங்களே?"
"இருக்கட்டும் சேச்சி... ஆனது போக மீதிய நாளைக்குக் குடுங்க"
அரை மனதோடு பணத்தை வாங்கிக் கொண்டே சொன்னார்..
"உக்காருங்க.. டீ சாப்பிட்டுப் போலாம்.. மனு.. தம்பிக்கு ஒரு சேர எடுத்துப் போடு"
மனு வேண்டா வெறுப்பா உள்ள போயி ஒரு சேரக் கொண்டு வந்து போட்டதும் கம்பீரமா அதுல அவன் உக்காந்து மொறைக்கவும் பார்மாலிட்டிக்குக் கூட தேங்க்ஸ் சொல்ல மாட்டேங்கறானேங்கற எரிச்சல்ல சொன்னா...
"அம்மா... இவரு மத்தியானத்துலயே குடிப்பாரும்மா.. நான் பல தடவ நம்ம டீக் கடைல பாத்திருக்கேன்.. இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் மாலை போட்டு என்ன புண்ணியம்?"
சேச்சி சில நொடி அசந்து போயி நின்னுட்டாங்க.. ஏன்னா,மனு சுபாவத்துல அடுத்தவங்கள காயப் படுத்தற மாதிரி பேசறவ இல்ல.. பிடிக்கலீன்னா அவங்கள விட்டு விலகிப் போயிடுவாளே தவிர மறிச்சு சண்ட போடறவ இல்ல.. அப்படிப் பட்ட மனு இந்தத் தம்பி கிட்ட எதுக்கு வரிஞ்சு கட்டிட்டு நிக்கறான்னு புரியாம சேச்சி அதட்டலா சொன்னாங்க..
"என்ன மனு... ரொம்ப ஓவரா போவுது?அடக்கி வாசிடி.. இங்க வா.. இந்த டீயக் கொண்டு போயி அவருக்குக் குடு"
வேண்டா வெறுப்பா ஒரு காலை நெலத்துல ஒதைச்சு சிணுங்கிக்கிட்டே போற மனு கூட மனசுக்குள்ள பேசினான் சக்தி.. 'என்னச் சீண்டறது எவ்வளவு பெரிய தப்புங்கறத இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சுப்பே மனு'
அம்மா வடிச்சுக் குடுத்த டீய கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்துட்டு திரும்பும் போது சக்தி அவ வலது கைய இழுத்துப் புடிச்சுக்கிட்டே சொன்னான்...
"போகாத பாப்பா.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.. அந்தத் திண்ணை மேல உட்கார்"
அவன் கையப் புடிச்சதுமே எரிச்சலான மனு 'பாப்பா'ன்னு கூப்பிட்டதும் கோவத்தோட உச்சிக்கே போயிட்டா...
"மொதல்ல கைய விடுங்க.."
வேகமா உதறிப் பாத்தும் அது இரும்புப் பிடியாய் இருக்க தவிப்புடன் அவனப் பாத்தா.. "பேசாம உக்கார்"னு அவன் கைய விட்டதும் எதிர் திண்ணையில் அமரவும் சக்தி கேட்டான்..
"ஐயப்பனுக்கு மாலை யாரு போடணும் பாப்பா?"
"எம் பேரு பாப்பா இல்ல .. மான்யா.. மனு"
"ஓ... சரி மனு... எங் கேள்விக்கு யோசிச்சு பதில் சொல்லு"
"நல்லவங்க தான் மாலை போடணும்"
"நல்லவங்கன்னா... ?"
"பீடி,சிகரெட்,டிரிங்க்ஸ்... இந்த மாதிரி பழக்கம் இல்லாதவங்க..."
"ஓஹோ... உன்னப் பொறுத்த வரைக்கும் இந்தப் பழக்கம் உள்ளவங்க எல்லாம் கெட்டவங்க.. இல்லைன்னா நல்லவங்க.. இல்லையா மனு? அப்ப சரி.. சாமியத் தேடி நல்லவங்க போகணுமா?கெட்டவனா?"
"நல்லவன் தான்"
"நல்லவனுக்கு சாமி கிட்ட என்ன வேலை..? இவனோ எந்தத் தப்புமே பண்ணாத நல்லவன்.. அதனால பாவ மன்னிப்புக் கேக்க வேண்டியதில்ல.. நல்லவனுக்குப் பேராசை இருக்காதுங்கறதால பொன்,பொருளும் கேக்க மாட்டான்.. ஸோ,முழுக்க நல்லவனா இருக்கற ஒருத்தனுக்கு ஆண்டவனே அவசியமில்லையே?.. ஆனா,என்ன மாதிரி கெட்டவங்களுக்குத் தான் ஆண்டவன் அவசியம்.. எங்க கிட்ட இருக்கற கெட்ட குணங்களப் போக்கறதுக்காவது ஆண்டவன் வேணும்.. கையங் காலும் நல்லா இருக்கறவன் வீசி நடந்து போலாம்.. ஓடவும் செய்யலாம்.. ஆனா,ஒரு காலோ கையோ முடமான மொண்டிக்கு நிச்சயமா ஒரு ஊன்று கோல் வேணும்.. அந்த ஊன்று கோல் தான் கடவுள்.. எல்லாம்.சரியா இருக்கறவனுக்கு எதுவுமே தேவை இல்ல.. சரி! உங்கப்பா டிரிங்க்ஸ் அடிப்பாரா?"
'அடிப்பார்... ஆனா,மாலை போட்டுட்டா நெனைச்சுக் கூட பாக்க மாட்டார்.. ஐயப்பனோட சக்தி அப்படி"
சக்தி வாய் விட்டுச் சிரிச்சுட்டுக் கேட்டான்..
"மாலை போட்டா அந்த நெனைப்பே வராம பண்ற ஐயப்பன் மாலையக் கழட்டினதும் கை விட்டுடறானே.. அது ஏன்? அந்தக் கடவுள் சக்தி உள்ளவனா இருந்தா மாலைய கழட்டின பின்னாலையும் உங்கப்பாவ குடிக்காம இருக்க வெக்க முடியாதா? "
"ம்.. அது வந்து.. ''
"அவசரமில்ல.. நல்லா யோசிச்சு பத்து நாள் கழிச்சு பதில் சொன்னா போதும்..ஆனா,ஒண்ணு மனு.. மிஷின் தனமா ஓடற வாழ்க்கைல ஒரு சேஞ்ச் வேணும்னு தான் மாலை போட்டேன்..ஐயப்பன் கிட்ட எதையும் கேக்கவே கூடாதுன்னு தான் இருந்தேன்.. ஆனா,இப்ப ஒண்ண கண்டிப்பா வேண்டுதலாக் கேக்கணும்ங்கற முடிவுக்கு வந்திருக்கேன்... அது என்ன தெரியுமா?"
இப்படிக் கேட்டுட்டு சக்தி டம்ளர்ல மிச்சமிருந்த டீயைக் குடிச்சு திண்ணை மேல வச்சுட்டு உடனே ஒரு சிகரெட்டப் பத்த வச்சுக்கிட்டுச் சொன்னான்..
"பத்து நிமிசத்துக்கு முன்ன தான் கோட்டர் அடிச்சேன்.. வேற ஒரு குடி காரனா இருந்தா சரக்கடிச்சுட்டு டீ குடிக்க மாட்டான்.. ஆனா, நான் வேற விதம்! உன் அம்மா என்ன அறிமுகப் படுத்திக்கட்டதும் டீ சாப்டறீங்களான்னு கூட கேக்காம டக்னு அடுப்புப் பத்த வச்சு டீய சூடு பண்ணினாங்களே?அத வெறும் பால்,தூள்,சர்க்கரை கலந்த திரவமா பாக்கலை.. அம்மாவோட அன்பா பாக்கறேன்.. அன்ப மறுக்க முடியுமா? அப்படி மறுத்தா அவங்க மனசு கஷ்டப் படாதா?இப்படி யோசிக்கறவன் நான்.. கொஞ்சம் முன்ன நான் உள்ள வரைல நீ பேசிட்டிருந்தநக் கேட்டேன்.. நீ வயசுக்கு மீறின புத்திசாலி தான் மனு.. ஆனா,அந்த புத்தி சாலித் தனத்த அடுத்தவங்க மனச நோகடிக்க யூஸ் பண்ணக் கூடாது.. ஏன்னா,காயப் படறவனும் புத்தி சாலியா இருந்தா அவன் திருப்பிக் குடுக்கற அடிய உன்னால தாங்க முடியாது.. ஐயப்பன் கிட்ட என் வேண்டுதல் என்ன தெரியுமா? உனக்கு அமையற புருசன் எந்த நேரமும் ஒரு கைல சிகரெட்டும், இன்னொரு கைல சரக்குமா அலைறவனா அமையணும்னு தான்..
வரட்டுமா சண்டக் கோழி?"
எந்திரிச்சு அவள் தலையில் செல்லமாய் தட்டி திரும்பி பிரமையோடு நின்றிருந்த சேச்சியிடம் சொன்னான்..
"காலைல அஞ்சு மணிக்கு டாண்ணு வந்துடுவேன்"
சொல்லிட்டு ஒவ்வொரு அடியையும் அழுத்தமா வச்சு நடந்து போறவன வெறிச்சுப் பாத்தா மனு.. அவளுக்கேனோ அப்பா பேப்பர்ல வெச்சுக் குடுக்கற பஜ்ஜிய உள்ள கொண்டு போகும் போது ஒரு கைல சிகரெட்டும்,இன்னொரு கைல சரக்கு டம்ளருமா அவன் உக்காந்திருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்து மூஞ்சி ரத்தம் சுண்டி வெளுத்தது...
Last edited: