- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
Part 18
மதில் மேல் பூனை போல என் நெஞ்சம்
உன்னை பார்க்காத வரை
உன்னுடன் சஞ்சரிக்கவே ஆசைப்படும்
உன்னைக் கண்ட பின்னால்
உன்னுடன் இருக்கும் ஆசையை விட
எந்த உறவும் பார்த்து விடுமோ
என்ற அச்சமே மேலோங்குகிறது
நான் என்ன செய்ய?
அவர்கள் வீட்டை நெருங்க இரவு ஆயிற்று. ஆகாஷ் நேரே சஜு அறைக்கு சென்று விட்டான். சஜு கீதா கொடுத்த பாலை எடுத்து கொண்டு தன் அறைக்கு மேலே செல்ல, அதற்குள் ஆகாஷ் கட்டிலில் படுத்து உறங்கியும் விட்டான்.
சஜு, “எப்படி தூங்குகிறான் பார், கீழே படு என்று சொல்லியும் உரிமையாய் அவன் வீட்டு கட்டில் போல் தூங்குகிறான்.” என்று நினைத்தாள். அவளுள் இருந்த இன்னொரு சஜு, “இன்று இவன் பண்ண அட்டகாசத்திற்கு இவனை உருட்டி விட்டுருவோமா?.” என ஆலோசனை வழங்கியது. “யோசிக்கலாம்.” என்று கட்டிலில் அவன் அருகில் அமர்ந்து மதியம் நடந்ததை அசைபோட்டாள்.
கண்ணயர்ந்த சஜு முழிக்கும் போது, அருணிடம் தங்கள் பெசன்நகர் பங்களாக்கு வழி சொல்லி கொண்டிருந்தான் ஆகாஷ். சஜு ஆகாஷை கேள்வியுடன் பார்க்க, அவன், “அது நம்ம பங்களா தான் அங்கு சென்று சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, அதன் பின் வீடு செல்லலாம்.” என்று சொன்னான். சஜுவும் ஆகாஷும் அதன் பின் அமைதியாக தான் இருந்தனர்.
எல்லோருக்கும் ஆகாஷ் தனது வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி கொடுத்து விட்டு, தனது அறைக்கு சஜுவுடன் சென்றான். அவளை படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு, தாழ்வார ஊஞ்சலில் படுத்தபடி அமர்ந்து வானத்தை பார்த்து கொண்டிருந்தான்.
அதன் பின் ஐந்து மணி வாக்கில், எல்லோரும் டீயும், டிபனும் சாப்பிட்டு விட்டு, பெசன்நகர் பீச்சுக்கு சென்றனர். அங்கு கீதாவும், வெற்றிவேலும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர், நான்கு இளைய தலைமுறையினரும் நீரில் நின்று கொண்டிருந்தனர். மஞ்சு சிறிது ஆட்டம் போட்டாள், சஜுவை கை பிடித்து இழுத்தாள், சஜு சேலை அணிந்ததால் வர மறுத்து, இன்று மஞ்சு செய்த சேட்டையையும் நினைத்து மஞ்சுவிடம் கோபித்து கொண்டு ஆகாஷிடம் நின்று கொண்டாள். அப்பொழுது, “சித்தப்பா... சித்தி ...” என்று கோரஸாகக் கத்திக்கொண்டு சஜு மீது ஒரே சமயம் நந்துவும் சிந்துவும் மோதினர்.
இதை எதிர்பாராத சஜு தடுமாற, ஆகாஷ் அவளை கீழே விழாமல் பற்றி கொண்டான். ஆகாஷ் சஜுவின் தோளை பற்றவும், சஜு ஆகாஷ் மீது சாய்ந்து விட்டாள், அவனுக்கு இடது புறம் அவள் முகம் இருக்க, அவள் அவன் முகம் பார்க்க, குழந்தைகளின் குரலில் இருவரும் சங்கடப்பட்டு, சட்டென்று விலகினர்.
அவர்களைத் தூக்கி கொண்டு நிமிர்ந்து பார்த்தால், இரண்டடி தூரத்தில் அவி, அனி, கவி வந்து கொண்டிருந்தனர். அவி ஆகாஷிடம், “என்னடா மறுவீட்டை இங்க கொண்டாடிட்டு இருக்கியா?.” என்று அருணைப் பார்த்தான். குழந்தைகள் சஜுவிடமும், மஞ்சுவிடமும் பேசிக்கொண்டிருந்தனர். ஆகாஷ் அருணை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
சிந்து, “மஞ்சு அத்த அடு ஆரு?.” என்று அருணை காட்டி கேட்டாள்.
சஜு, “எங்க அண்ணன், உங்களுக்கு மாமா.” எனவும், நந்து, “ஏன் நாளிக்கு நம்ம வீட்ல பூ வச்சப்ப வர்ல?.”
மஞ்சு, “அவங்க ஆபீஸ்ல லீவ் தரல டா செல்லம் .”
யோசித்த சிந்து, “மஞ்சு அட்ட, அந்த லதா அட்ட மாமா மாதரி உன்னோட மாமாவா?.” என்று கல்யாணத்திற்கு வந்திருந்த ஒரு கணவன் மனைவியை அத்தை மாமா என்று அழைத்ததை நியாபக படுத்தி அவர்களை போலவா என்று வினவ,
இருவரும் அதிர்ந்து விழித்தனர், “ஆமாம்டா செல்லங்களா, அப்படி தான்.” என்று சிரித்து கொண்டே சொன்ன அருண், சஜுவிடம் இருந்து சிந்துவை வாங்கினான்.
மஞ்சு நந்துவை இறக்கி விட்டு, கோபமாக, “போடா குரங்கு.” என்று சொல்லி செல்ல, நந்துவும், சிந்துவும், “மாமா நீ கொரங்கா?.” என்று கேட்டனர்.
அதை கேட்ட அனைவரும் புன்னகைக்க, அருண், “அவளை...” என்று மனதில் கொதித்தான்.
குழந்தைகளின் கேள்வியை கேட்டு திரும்பி வந்த மஞ்சு, குழந்தைகளின் முன், தன் கோபத்தை காட்டி, குழந்தைகளும் அதையே அவனிடம் கேட்டு, அவனை சங்கடப்படுத்தியதை உணர்ந்து அவனிடம், “சாரி.” என்று சொல்லி தலை குனிந்தாள்.
இதற்கு தான் குழந்தைகளின் முன் பெரியவர்கள் எச்சரிக்கையாக வார்த்தை பிரயோகம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
அருணை சமாதானப்படுத்த, மஞ்சு அவனையும், இழுத்து கொண்டு குழந்தைகளுடன், “மாமாவை பிடி, சித்தப்பாவை பிடி.” என விளையாட, கவியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆகாஷை அவர்களுடன் இழுத்தாள். அவியும் அனியும் கை கோர்த்து நின்று ரசித்தனர். மஞ்சு, கவியை கவனிக்கும் நிலையில் இல்லை, ஆனால் சஜு கவனித்தாள். சஜுக்கு முன்பே, ஆகாஷ் தனக்கு சொந்தம், இவள் தான் பிரித்து விட்டாள் என்பது போல அவளை ஒரு பார்வை பார்த்து கொண்டே கவி ஆகாஷுடன் நின்று கொண்டு குட்டீசுடன் விளையாடினாள்.
சஜு அவர்களுடன் செல்லாமல் கடலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். இதுவே ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த சஜு என்றால், அவனை ஒரு பிடி பிடித்திருப்பாள்.
ஆகாஷ் எவ்வளவு தான் கெஞ்சினாலும், சஜு ஆகாஷுடன் வெளியே எங்கும் செல்லமாட்டாள். சஜு கல்லூரி முதல் வருடம் சேர்ந்த புதிது, தோழிகளுடன் புத்தக கண்காட்சிக்கு சென்றாள். அதே சமயம் ஆகாஷும், தன் நண்பர்களுடன் சென்றிருந்தான், அவன் இன்ஜினியரிங் கடைசி வருடம் படித்து கொண்டிருந்தான். புத்தக கண்காட்சி வாயிலிலேயே இவளைப் பார்த்த ஆகாஷ், தன் நண்பர்களிடம் இருந்து கழன்று கொண்டு அவளின் பட்டாளத்துடன் கலந்து கொண்டான்.
சஜுவின் தோழி, “சஜு, நீ வேணா அண்ணா கூட போ, நாங்க தனியா போறோம்...” என்று சொல்ல, சஜு வேண்டாம் என்று தலையாட்ட, ஆகாஷ், “இல்ல சிஸ்டர், அவ பயப்படுவா யாரும் பார்த்திருவாங்களோனு, நா இப்படியே சஜு கூட வரேன், உங்களுக்கு ஏதும் objectionஆ.” என்று கேட்டான். “இல்லை.” என்று சிரித்து சொன்ன தோழி, அவர்களை விட்டு சிறிது முன்னே தன் தோழிகளுடன் சென்றாள். அன்று பானு அவர்களுடன் வரவில்லை.
ஆகாஷ், “மாட்டிக்கிட்டியா எத்தன வாட்டி வெளிய கூப்பிட்டிருக்கேன் வந்திருக்கியா? சரி என்ன புக் வாங்க வந்த?.”
சஜு தனக்கு தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற படபடப்பில், தன் தோழிகளுடன் செல்ல, ஆகாஷும் அவள் தோழிகளுடன் பேசிக்கொண்டே சஜுவுடன் சென்றான். அப்போதே சஜுக்கு கொஞ்சம் கடுப்பு தான்.
எல்லோருக்கும் காபி வாங்கி தந்தான். சஜுவிடம், “ஏய் ஏன் இப்படி பயப்படுற? இங்கேயும் தனியா வரமாட்டேங்கற, பேசாம நாம பீச்சுக்கு போவோமா ?.”
சஜு, “என்ன ஆகாஷ், இம்ஹ்ம் நான் வரமாட்டேன் .”
ஆகாஷ், “ஏய் நீ இப்படியே சொல்லிட்டு இரு, இப்ப நீ வர்ல, தூக்கிட்டு போய்டுவேன் .”
சஜு அதிர்ந்து, “பயமுறுத்தாதீங்க ஆகாஷ்.”
ஆகாஷ், “இல்ல நிஜமா தான் சொல்றேன் .”
இவர்கள் விவாதத்தை பார்த்து, என்னவென்று விசாரிக்க, ஆகாஷ் ஒப்பாரி வைக்காத குறையாய் சொல்ல, தோழிகள் அனைவரும் அவனுக்கு சப்போர்ட் செய்தனர். கடைசியில் சஜு பேச்சு எடுபடாமல் போக, தோழிகள் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆகாஷ் தன் பைக்கில் பீச்சுக்கு அழைத்து சென்றான்.
அங்கு கடற்கரை வரை அவள் கையை பிடித்து கொண்டே சென்றான். அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம், ஆனால் மகிழ்ச்சியாக உணர்ந்தாள். அவளுக்குள் ஒரு ரிதமிக் feel இருந்து கொண்டே இருந்தது, ஆனால் அதற்கு ஆயுள் குறைவு என்பதை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
பீச் வரைக்கும் சென்றவன், அவளுடன் அமைதியாக உட்கார்ந்து, அவளுடன் பேசியிருக்கலாம் ஆனால் கடலை பார்த்தவன், உற்சாகமாகி, அங்கு கடலலையில் நிற்க வேண்டும் என்று அடம் பிடித்தான். சஜு டிரஸ் நனைந்து விடும் என்று மறுக்க, கடைசியில் சஜுவின் மறுப்பு வெற்றி பெற்று அவள் அங்கேயே நிற்பதாகவும், இவன் மட்டும் போய் சிறிது நேரம் நிற்பதகாவும் முடிவு செய்தனர்.
அதன் படி அவன் கடலலையில் நிற்க, அங்கு விளையாடி கொண்டிருந்த பெண்கள் கூட்டம் இவனை பார்த்து புன்னகைக்க (ஆகாஷ் தான் அழகனாச்சே), இவனும் இப்படியாவது பொறாமைப்பட்டு சஜு வரட்டும் என்று அவர்களிடம் புன்னகைத்தான். கடைசியில் சஜுவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே அந்த கூட்டத்தில் கலந்தும், கலந்து கொள்ளாமல் இருக்க, சஜு கொதிக்க, ஒரு 5 நிமிடம் கழித்து பார்த்தான். அங்கு சஜுவை காணவில்லை, அவன் அங்கும் இங்கும் தேட, தூரத்தில் அவள் நடந்து செல்வது தெரிய, ஆகாஷ் அவளை நோக்கி ஓடினான்.
சஜுவை நெருங்கியவன், “சனா என்னாச்சு.” என்று அவள் கையை பிடித்தான்.
சஜு, “கையை விடுங்க ஆகாஷ், நான் வீட்டுக்கு போறேன் .”
ஆகாஷ், “ப்ளீஸ் சனா, சாரி , சாரி நீ அப்படியாவது, என்னிடம் வருவன்னு தான்...” அவன் முடிக்கும் முன்னே , சஜு முறைத்து அவனை எரித்து விடுபவள் போல் பார்க்க, அவன் வாய்க்குள்ளேயே பாதி பேச்சை முழுங்கி கொண்டான்.
அவன் கெஞ்ச கெஞ்ச, சஜு நிற்காமல் ரோடை நெருங்கி கொண்டிருந்த சமயம், அந்த வழியாக ஆகாஷ் அப்பா காரை நிறுத்தி யாருடனோ பேசிக்கொண்டிருக்க, அதை பார்த்த ஆகாஷ், “அச்சச்சோ அப்பா.” என்று திரும்பி கொண்டான்.
சிறிது நேரம் கழித்து பார்த்தால், சஜுவையும் காணவில்லை, அவனுடைய அப்பாவும் பேசிவிட்டு சென்று விட்டார்.
சஜுவுக்கு இவன் தன் பின்னே வராமல் நின்றதும், அதுவும் முகத்தை திருப்பி நிற்கவும், “எவ்வளவு அழுத்தம், இவன் செய்வதை செய்து விட்டு, நான் செல்லவும் இவனுக்கு கோவம் வருகிறதா ?.” என்று மனதில் பொருமிக் கொண்டு மேலும் கோபம் கொண்டு தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.
அதன் பின் ஒரு வாரம் அவன் அவளை பார்க்க வந்தாலும் பேசாமல், அவன் சஜு வீட்டிற்கு முன் நின்று தினம் தவம் செய்தும், அதன் பின் மூன்று நாள் கழித்து அவனுடன் பேசி சமாதானம் ஆனாள். சஜு தினம் அவள் வீட்டிற்கு அருகில் தவம் இருந்ததால், அவள் இளகவில்லை. அவள் கோபம் தானாக வற்றி இறங்கி வந்தாள். அதன் பின் அவன் சொல்ல வந்ததை புரிந்து கொண்டாள். ஆகாஷ்க்கும், அவள் தானாக தான் கோபம் குறைந்து வந்திருக்கிறாள், தன் சமாதானத்திற்கு எடுத்த முயற்சி எல்லாம் அவளிடம் எடுபடாது என்று தெரியும்.
அதனால் தான் தற்பொழுது அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் அவன் இறங்கவில்லை. அவள் கோபம் குறையட்டும் என்று பொறுத்துக் கொண்டிருந்தான்.
சஜு அப்படியே வளர்ந்து, அவள் குணமும் அவ்வாறே தொடர்ந்து விட்டது. எப்பொழுதும் சஜு, உடனே சமாதானம் செய்தால், இறங்க மாட்டாள். அவள் கோபம் தானாக வடிந்து, அதன் பின் தான் மற்றவர்கள் சொல்லும் கருத்தை காது கொடுத்து கேட்பாள். அதில் நியாயம் இருந்தால், ஏற்பாள் இல்லையேல் பழைய குருடி கதவை திறடி என்று கோவத்தில் மறுபடியும் முருங்கை மரம் ஏறுவாள்.
முன்பு சிறுவயதில் அவள் கோபம் வேறு மாதிரி இருந்தது, தற்போழுது அவள் கோபம் அமைதி வடிவம் எடுத்து கொண்டது ஏனோ சஜுவுக்கே இந்த மாற்றம் தெரியவில்லை.
பின் விளையாடி ஓய்ந்து, குட்டீஸ்களுடன் ஆகாஷ், அருண் அவர்களுக்கு snacks வாங்க செல்ல, மஞ்சு சஜுவை அழைத்து செல்ல, கவிதா அழைக்காமலே ஆகாஷ் பின்னே சென்றாள்.
அவர்கள் அங்கே அங்கே போடப்பட்ட கடைகளில் snacks வாங்க, சஜு இங்கும் தனித்து இருந்தாள். அதை பார்த்த கவிதா அவளிடம் வந்தாள்.
கவி, “ஏன் சஜு, ஆகாஷ் உண்மையிலேயே உன்னை காதலித்தாரா?.” என்று வினவவும்
சஜு, “இவள் ஏன் இதை கேட்கிறாள்.” என்று பார்த்து, “ஆமாம்.” என்று சுருக்கமாக பதில் சொன்னாள்.
கவி, “பார்த்தால் அப்படி தெரியவில்லையே ?.”
சஜு, “உன்னிடம் அதை proof செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.” என்று அவள் மீது உள்ள கடுப்பில் பட்டென்று பதில் அளித்தாள்.
கவி, “ஏன் இவ்ளோ துமிராக பேசுகிறாய்? உன்னை விட அந்தஸ்த்தில் உயர்ந்தவள், அதுவுமில்லாமல், எங்கள் குடும்பத்தோடும், எங்கள் அத்தை குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நீயெல்லாம் மண் போல.” என்று அவளும் பதிலுக்கு துமிராக பேசினாள்.
சஜு, “அந்த மண் தான், கட்டிடம் கட்ட உபயோக படுதுது, கீழே இருக்கும் மண் தான் மாட மாளிகையாய் மாறி அண்ணாந்து பார்க்க வைக்குதுங்கிறத மறந்திராத, என்ன பாக்குற சிமெண்ட், செங்கல் எல்லாமே ஒரு வகை மண் தான்.” என்று அவளை பார்த்து முறைத்து கூறிவிட்டு, கீதா அமர்ந்திருக்கும் இடம் நோக்கி சென்றாள்.
அதன் பின் அவரவர்கள் வீட்டுக்கு செல்ல, வீட்டிற்கு வந்ததும் களைப்பில் அனைவரும் உறங்கி விட்டனர். ஆனால் சஜு மட்டும் உறங்காமல், அவள் அறையில் உறங்கும் ஆகாஷை பார்த்து கொண்டிருந்தாள். ஆகாஷ் அசையவும், சஜு கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள்.
அவன் அசைந்து படுக்கவும், அவன் கை முட்டியில், அவள் கல்லால் அடித்த காயம் அவளுக்கு கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் இப்படி ரத்தம் வருமாறு அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்வு வந்து அவள் மனதில் எட்டிப்பார்த்தது. உடனே மருந்து எடுத்து வந்து அவன் கைக்கு போட்டு விட்டாள். அசதியில் தூங்கிய ஆகாஷ் நல்ல வேளை எழவில்லை. அதன் பின் தூங்கும் அவன் முகத்தை பார்த்து கொண்டே அப்படியே அவன் அருகிலேயே உறங்கி விட்டாள்.
பொழுதும் புலர்ந்தது, காலையில் கண் விழித்த ஆகாஷ், தன் கழுத்தை கட்டிக்கொண்டும், தன் மீது காலை போட்டு கொண்டு உறங்கும் தன் மனைவியை பார்த்தான். புன்னகைத்து, “சனா டார்லிங், i லவ் யு டா, “என்றான். அவன் குரல் சஜுவை எட்டியதோ என்னவோ, சஜு பட்டென்று கண்களை திறந்தாள்.