• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
மக்கள் அதிகமாக செல்லும் சாலைஅது.அருகிலே பள்ளிவேறு இருப்பதால் காலை மாலை அச்சாலை மாணவ மாணவியர்கள் செல்வதுண்டு.அச்சாலையிலே மாணிக்கத்தின் மதுபானகடை இருப்பதால் அங்கு வரும் ஆட்கள் குடித்து விட்டு மக்களையும் பள்ளி குழந்தைகளுக்கு இடையூறு செய்தனர்.போலீஸிடம் கம்பளைண்ட் கொடுத்தாலும் ஆக்சன் எடுப்பதாக தெரியவில்லை,..அவர்களை அப்புறப்படுத்தவும் இல்லை.அதனால் மக்கள் தீராவிடம் சென்றனர். தீரா அவனது அந்த மதுபானகடையை மட்டுமல்ல அவனது மது உற்பத்தி செய்யும் பேக்ட்ரியையே மூட வைத்துவிட்டான்...அதில் எதோ கலப்பதாகவும் உடலுக்கு தீங்கு என்றே கூறி அதை மொத்த மூடிவிடச்செய்தான்.இதனால் மாணிக்கத்திற்கு பல கோடிகள் நஷ்டமாகியது மாணிக்கம் கொதியாய் கொதித்து போனார்...கண்டிப்பாக இந்த முறை அவனை பழிவாங்க வேண்டும் என்று அவரது மூளை குறுகுறுத்தது அவனோ,என்ன செய்யாலாம் என்றே யோசித்துக்கொண்டிருந்தார்..

யாருக்காவும் எதற்காகவும் தன் பணியிலிருந்து ஓயாத கதிரவனும் தத்தம் வேலை செவ்வனே,செய்தார்,அழகிய காலைவேலையது...

எதற்கும் அஞ்சிடா தீரானையே அஞ்ச வைத்துவிட்டாள் ரது.எங்கே அவளருகில் சென்றால் தன் முழு கட்டுபாட்டையும் இழந்து விடுவமோ என்றும் தன் பழைய தீரானை வெளிக்கொண்டு வந்திடுவாளோ என்ற அச்சத்தில் ரதுவிடம் எட்டி நின்றே பேசினாலும் அவனது கண்களை ஈர்த்துக்கொண்டிருதாள் ரது..

ஒப்பனைகள் எதுவுமின்றி வெறும் சிரிப்பொன்றை தன் அழகியலாய்,பூசிக்கொண்டு பார்ப்பவரை கவரும் அவளது அழகு தான் தீரனை வீழ்த்தும் ஆயுதமாக போனது....

தன் மகளிடம் சிரித்து சிரித்து பேசுவதை எட்ட நின்றே ரசிக்க..அவனை பார்த்து கேலி செய்துகொண்டிருந்தனர்.ஆண்டனி,
கணேஷ்,சிவா மூவரும்.

" அண்ணா,அண்ணி செம அழகுல அண்ணா ? " என்றனர்.அவனும் தன்னை மறந்த " ஆமால " என்றான்.

" ஹாஹா! ஆமாதான் அண்ணா,அப்பட்டாம தெரியுதுண்ணா நீங்க வழியுறது..." என்றான் கணேஷ் தீரனிடம் கூற..

" டேய் என்னையே கலாய்க்கிறீயா நீ இவன் சாப்பிடுற சாப்பாடுல மிளகாய் பொடிய அதிகமா போடுங்கடா " என்று அவனுக்குத் செல்ல தண்டனையாய் கொடுத்தான் தீரா.


" அட போங்க அண்ணே நானே இத தான் வேலம்மா கிட்ட சொல்லலாம் இருக்கேன் வர வர அதுக்கு சமைக்கிறது மாதிரியே சமைக்கிது அந்த அம்மாவ மாத்தன்னும் அண்ணா " என்றான். " இத மட்டும் வேலம்மாள் கேட்டாங்க அவ்வளவு தான்.வேற யாருடா ரௌவுகளுக்கு சமைக்கவருவா ? யாரத்தான் கூட்டிட்டு வரது..." சிவா புலம்ப..

" சிவா,அண்ணா நீயாரையும் கூட்டிட்டு வராத.தீரா அண்ணன் அண்ணிய கூட்டிட்டு வந்தா போதும் அண்ணி அண்ணணுக்கு காரமாக சமைக்கிறப்ப நமக்கு கிடைக்கும்ல " என்றான் கணேஷ்..,அதைகேட்க உள்ளுக்குள் ஆனாந்தமாய் இருந்தாலும் வெளியே பொய் கோபமாய் அவனை செல்லமாக தீரா அடிக்கச்செல்ல சரியாக ரது அங்கே வந்தாள்,...

" என்ன நடக்குது இங்க ஒரே சிரிப்பாக இருக்கு என்ன விசயம் " என்று ரது கேட்க..." இல்லங்க,எங்க வீட்டுல வேலை பார்க்கிற வேலம்மாள் சமையலை பத்தி சிரிச்சுட்டு இருந்தோம்..

" ஓ..சரி " என்றாள்." உங்களுக்கு சமைக்க தெரியுமாங்க " என்று கணேஷ் கேட்க.அவளோ ' பேக்க பேக்க'. " என்னாச்சுங்க சொல்லுங்க "

" கணேஷ் , நான் அந்த பக்கமே போனதில்லை...எனக்கு அதெல்லாம் தெரியாது." என்றதும்.தீராவை பார்த்ததும் " கடைசி வரைக்கும் வேலம்மா கையில தான் சாப்பாடுண்ணே " என்று காதுக்குள் முனுமுனுத்தான்.

அவளோ புரியாமல் அவர்களை பார்த்தாள்.பின் தீரனிடம்

" தீரா சார் ரொம்ப நன்றி சார் " என்றாள்." எதுக்கு நன்றி ? "

" இல்ல,சம்முவ நீங்க போட்டிக்கு அனுப்ப ஒத்துகிட்டத்துக்கு,அவன் ஒன் மத்தா இதசொல்ல முயற்சி எடுத்தா எங்க அது எல்லாம் வீணாகிடுமோன்னு பயம்,நீங்கவேற போவேன்னான்னு சொன்னதா சொல்லும் போது கொஞ்சம் கஷ்டமா இருந்தது...இப்ப நீ ஒத்துகிட்டு அவளை அழைச்சுட்டு வந்ததுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு அதான் நன்றி சொன்னேன். " என்றாள்.

" நான் தான் நன்றி சொல்லன்னும்.இவ்வளவு தூரம் அவள முயற்சியெடுக்க வைச்சிருக்கீங்க.சம்மு தான் என் உயிர் அவ தான் எனக்கு எல்லாமே.அவளுடைய பாதுகாப்பு எனக்கு எவ்வளவு முக்கியமோ அதவிட அவளுடைய சந்தோசமும் எனக்கு முக்கியம்.அதான் போட்டில கலந்துக்க ஒத்துக்கிட்டேன்.ஆனா பாதுகாப்பும் முக்கியம்,அதான் இவங்க துணைக்கு வராங்க...இவங்க வரதுனால உங்களுக்கு எந்த பிரச்சினை இல்லையே..." என்று கேட்டான்.
" தாராளமாக வரட்டும் எந்த பிரச்சனையும் இல்லை..அவங்களும் சம்முவோடா முயற்சிய பார்க்கட்டும் " என்றாள்,..மெல்லியதாய் புன்னகை செய்தான்.

" மலர் அவளை அழைக்க..." தீராசார், உங்க உயிரை பத்திரமா பார்த்துப்பேன் நீங்க கவலை படாதீங்க சார்.நான் வரேன் " என்று நகர்ந்துவிட்டாள்,

அந்த போட்டியில் கலந்த மாணவர்கள் மட்டும் தனியாக வேணில் சில ஆசிரியர்களோடு சென்றனர் வேறு பள்ளிக்கு.சிறு தலையசைவுடன் தீராவிடம் விடைப்பெற்றாள்.

அந்த வேண் இன்னோரு பள்ளிக்குள் சென்றது. அந்த பள்ளியில் தான் போட்டி நடந்தது சம்முவை தன்,கைக்குள்ளே வைத்திருந்தாள் ரது...இம்மியளவும் அவளை பிரியவே இல்லை.

அங்கு போட்டி நடக்க ஆரம்பித்து முதலில்,சிறு குழந்தைக்கான போட்டி நடந்து பல பள்ளியிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.சம்முவும் தன் திறமையை காட்டி அழகாக திருக்குறளை கூறினாள்.அவள் கூறியதும் அரங்கமே கைத்தட்டியது..பின் அவள் ரதுவிடம் வந்து அமர்ந்து கொள்ள அவளை தன் மடியில் அமர்ந்திக்கொண்டாள்...அடுத்து போட்டியில் கலந்த மாணவர்கள் தங்களின் திறமையை காண்பித்தனர்...

இங்கு நடக்கும் அத்தனையும் கணேஷ் தீராவிற்கு தகவலாய் கூறினான்.சம்முவை அண்ணி பத்திரமாக பார்ப்பதாக கூற தீராவிற்கு நிம்மதி வந்தது.

ஆயினும் தீராவின் மகள் இங்கு போட்டிக்காக வந்திருப்பது ரதுவின்பின்னால் எந்நேரமும் அவளறியாமல் தொடர்ந்து வரும் மாணிக்கத்தின் ஆட்கள்..மாணிக்கத்திற்கு தகவல் அளிக்க.அவரோ அக்குழந்தை அழிக்குமாறு தன் மகளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்றும் கூறினார்.

போட்டிகள் நடந்து முடிய...சம்மு ரெஸ்ட் ரூம் போகவேண்டும் என்றாள்..மலரிடம் சொல்லிக்கொண்டு இருவரும் தனியாக சென்றனர்.

" சம்மு,நான் வந்ததுக்கு அப்பறம் தான் நீ வெளிய போகனும் சரியா யார்கூப்பிட்டாலும் என்னைவிட்டு போக கூடாது சரியா " என்றாள்..அவளும் தலையாட்டினாள்..

இருவருமாக அடுத்தஅடுத்த டாய்லெட்டை உபயோகித்தனர்.பின் இருவரும் கைகழுவினர்..கொஞ்ச தூரம் வர அவளது,சேலை அவளை தடுக்க சரிசெய்துகொண்டிருந்தாள்...இதை கவனிக்காத சம்மு..வெளியே தனியாக நின்றிருந்தாள்..சம்முவை தேடிவந்த மாணிக்கத்தின் ஆட்கள் அவள் தனியாக நிற்பதை பார்த்து கொல்ல வந்தனர்.. தன்னிடம் இருக்கும் கத்தியை வைத்துக்கொண்டு அவள் கழுத்தை அறுக்க ஒருவன் வேகமாக வர அதே நேரம் சேலை சரிசெய்தவள் சம்மு அருகில் இல்லை என்பதை உணர்ந்தவள் வெளியே வேகமாக வந்தாள்.அவளை அந்த ரௌடி,நெருங்கும் முன் இவள் நெருங்கி தூக்கிகொள்ள சம்முவின் கழுத்தை பதம் பார்க்க வந்த கத்தி ரதுவின் கைரை பதம் பார்க்க..வலியில் கத்தினாள்...

" அந்தபொண்ண கொடுத்துட்டு போயிடு.இதுல நீ தலையிடாத ." என்றான்.

" முடியாது,ஏன்டா உங்க வஞ்சகத்தை தீர்க்க ஏன்டாபிஞ்சு குழந்தையை பழி தீர்க்க வந்திருங்கீங்க,என் உயிர் இருக்க வரைக்கும் உங்களால சம்முவ
நெருங்க விட மாட்டேன் " என்றாள்.

" அப்ப நீ உன் உயிர விட தான் போற " என்று, கத்தியை வைத்து அவளைகொலை செய்ய போக ஒருவன் தடுத்துதான்.. டேய் அவங்க நம்ம ஐயா பொண்ணு டா அவங்களுக்கு எதாவது ஆச்சு உன்னையும் என்னையும் கொன்னுடுவாருடா.. " என்றதும் அதிர்ச்சியானாள்.இவர்கள் தன் தந்தை அனுப்பிய ஆட்கள் என்று....

" அம்மா,அந்த பொண்ண கொடுத்திட்டு நீங்க போயிருங்க மா " என்றான்..

" முடியாது,." என்று சம்முவை தூக்கி ஓட ஆரம்பித்தாள்...அவள் காயத்தோடு ஓடிவருவதை பார்த்த ஆண்டனியும் கணேஷ்ஷூம் அதிர்ந்தவர்கள் அவர்களின் பின்னே வரும் ரௌவுடிகளை கண்டு அறிவாளை எடுத்தனர்...அங்கே போர்களமானது....இருவரும் அங்கே வந்த ரௌடிகளோடு சண்டை போட்டனர்....கணேஷ் சிவாவிடம்சொல்ல அவனோ தீராவிற்கு தெரியாமல் ஆட்களை அனுப்பிவைத்தான்..

முடிந்த அளவு சம்முவை,காப்பாற்ற போராடி சண்டை போட்டனர் எதிர்பாராத விதத்தில் ஆண்டனியை தாக்கினர்...
அடுத்து கணேஷ்ஷை தாக்க வருதற்குள் தீரா ஆட்கள் வர இவர்கள் பயந்துசென்றனர்...

ஆண்டனியையும் ரதுவையும் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றனர்...

அங்கே மலர்சம்மூவை வைத்திருந்தாள்...ஆண்டனி முதுகில் அறிவாள் பதிய அவனுக்க சிகிச்சை அளித்தனர்..இங்கே கையில் கத்திப்பட்டத்தால் ரதுவுக்கும் கட்டு போட்டுக்கொண்டிருந்தனர்.

மீட்டிங் முடிந்து தீரா வர அங்கே சிவா தயங்கிதயங்கி,அனைத்தையும் கூற கோபமடைத்தவன் நேராக மருத்துவமனைக்கு விரைந்தான்...

அழுதழுத்து அப்படியே உறங்கிய சம்முவை மடியில் வைத்திருந்தாள் மலர்... அங்கே வந்த தீரா...

சம்முவை அழைக்க,...கண்விழித்தவள் தீராப்பா என்று பாய்ந்தாள்...

" உனக்கு ஒன்னும் இல்லேலடா " என்று அவளை உடல் முழுதையும் பார்த்தான்,.." தீரா.....ரது...மிஸ்....ஆண்டனி..." என்று தேம்பினாள்....

" ஒன்னில்ல ஒன்னில்ல டா அவங்களுக்கு ஓன்னுமாகாதுடா நீ அழுகாத " என்று கண்ணீரை துடேடைத்தவன் அவளை தன்னோடு இருக்க அணைத்தான்...

" அண்ணா,வந்தது ரதுவோட அப்பா மாணிக்கத்தோட ஆட்கள் தான்...ரதுவை அவங்களையும் காயப்படுத்தினது அவங்க தான் அண்ணா " என்றாள் மலர்...

மருத்துவமனை என்பதால் அமைதியாக இருந்தவன்..." ரது மிஸ் எங்க ? " என்று மலரிடம் கேட்க உள்ளே சிகிச்சை அறையை காட்டினாள்..

" அண்ணா," ஓடிவந்தான் கணேஷ்...

" ஆண்டனிக்கு என்னாச்சு கணேஷ் " என்றவன் கேட்க..." முதுகுலே வெட்டிடாங்கண்ணா அழமா அறிவாள் இறங்கிருச்சு டாக்டர் உள்ள பார்த்துகிட்டு இருக்காங்கண்ணா...." என்றான்.

" நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சேன்னோ அது நடந்திருச்சு ...இதுக்கு தான் நான் சம்முவ அனுப்பல...." என்றான் அவளை சுமந்து கொண்டே கைகள் வெடைக்க கோபத்தில் இருந்தான்.

அப்போது தான் கையில் கட்டு போட்டு வந்தாள் ரது....சம்முவை கணேஷ்ஷிடம் கொடுத்து விட்டு ரதுவிடம் வந்தான்..

" சாரி தீரா சார்....என்னால தான் இதெல்லாம் போட்டின்னு அழைச்சுட்டு போய் இப்படி ஆயிருச்சு.." என்று குற்ற உணர்வு போல அவளை பாராமல் தலைகுணிந்து அழுதுகொண்டே கூறினாள்....

அவளது அடிப்பட்ட கையை பற்றியவன்...அதை கண்டான்..

" பெரிய அளவுக்கு இல்ல சின்ன கீறல் தான்...சம்முக்கு எதுவும் ஆகாம காப்பாத்தினதுலே இது ஒரு பெரிய விஷயம் இல்ல தீரா சார்..." என்று தன் வலியை மறைத்து கூறினாள்..

" என் உயிரை பத்திரமா பார்த்துபேன் சொன்ன.இதான் நீ பார்த்துகிற லட்சனமா ரது.." அவள் கைப்பற்றி கூறியவனின் முகத்தை பார்த்தாள் அவனும் பார்த்தான்.
அவன் பார்வை ஏதோ சொல்ல அவனது ஒருமையான பேச்சும் ஏதோ அவளுக்கு உணர்த்தியது..

" வீட்டுக்கு போ ரது இங்க இருக்காத " என்றான்..." கணேஷ் " அழைக்க குழந்தையை வாங்கியவன் இவங்களை விட்டுட்டு வா....என்றான்.

" வாங்க " என அவனழைத்துச்சென்றான்.மலர் அவளை கைபிடித்து இழுத்துச்சென்றாலும் தீராகூறியதிலே அவள் மனம் நின்றது......

தீ(ரா)துகாதல்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான்தான் First,
சித்து டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
சித்து.h டியர்
 




Last edited:

honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
I love dheeran ..thanks for taking this issue n adding to the story ..keep
Rocking sis .
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Deera indirect ah love expose pannit ah irrukan. Rathu eppo purindu kolval.
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Chinna kuzhandai ya kolla parkurimgale da, radhu kum adiya, radhu yosikira, Ava sammu va sonnada nee Enna ninaichitu pesura, nice update chithu dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top