" விடு தீரா...நான் போறேன் உனக்கு தான் பிரைவசி முக்கியம் ல ..நீ எப்படி வேணா இருந்துட்டுபோ நான் கேட்க மாட்டேன்.,நான் போய் தூங்குறேன்..,."
அவனிடமிருந்து தன்னை பிரிக்க முடியாமல் போனது.....
" ரதுமா...பிரைவசி இல்லடி,....உன்கிட்ட சொல்ல கூடாது.சொன்னா என் மேல கோபடுவ.நீ கஷ்டபடுவ அதான் சொல்லை....சாரி ரதுமா..." என அவள் முகத்தை திருப்பி பிடித்துக்கொண்டு கேட்க...
" நீ என்ன யோசிக்கிறேன் சொல்லட்டுமா தீரா....என்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கை அழிச்சுட்டேன்தானே..." என்றவள் கூற தலைகுனிந்தான்..
" நீ சிவா கிட்ட நீ பேசினதும் சிவா உன்கிட்ட பேசினதையும் நான் கேட்டேன்...எல்லா முடிவுலையும் சரியா இருக்கிற நீ இதுல ஏன்டா யோசிக்கிற....என் வாழ்க்கைய உன்னை விட்டுட்டு யாருகூட வாழ சொல்லுற தீரா..,அந்த வித்தேஸ் இறையாகிருந்தா சந்தோச பட்டிருப்பீயா....எப்படி உன்னால இப்படி யோசிக்கமுடியுது....." அவன் சட்டையை பிடித்தவள்...உன் கூட ஒருநாள் வாழ்ந்தாலும் சந்தோசமா வாழனும் நினைக்கிறேன்....ஏன்டா புருஞ்சிக்க மாட்டிற....நான் உன்னை கொலை பண்ண வேணான்னு சொல்லையே நீ பண்ணு நான் ஏதுமே சொல்ல மாட்டேன்...உனக்காக காத்திட்டு இருப்பேன்....உன்னை விட்டு வேற வாழ்க்கை யோசிக்க முடியல தீரா....நீ இப்படி யோசிக்கிற நினைச்சா கஷ்டமாருக்கு....இதுக்கு நான் ஹாஸ்பிட்டல் செத்து போயிருக்கலாம்....போடா.." அவனிடமிருந்து எழுந்தவளின் கைப்பற்றியவன்....
" ரதுமா.....ஐயம் சாரி டி..என்னால என் முடிவுல இருந்து மாறா முடியல அதே சமயம்...உன் வாழ்க்கை என்னோட சேர்த்து அழிச்சுடேனோ ஒரு குற்றவுணர்வா இருக்குடி....சந்தோசமா நீ இருக்கன்னும் ஆசை படுறேன்...என்னால என் முடிவால உன் சந்தோசம் இல்லாம போயிடுமோன்னு பயமா இருக்கு.... ஐ யம் சாரி ரதுமா..." என அவன் முகம் எந்த...
" ஏன்டா உனக்கு புரியல என் தீரா தான் என் சந்தோசம்....உனக்கு ஏன் புரியல...இப்ப இருக்க வாழ்க்கையா நான் எவ்வளவு சந்தோசமா அனுபவிச்சுட்டு இருக்கேன் தெரியுமா...." என கண்ணீரோடு கரைந்தவள்..அவன் முகம் எங்கும் முத்தமிட்டவள்..." உனக்கு அப்படி யோசனை வந்தா அடுத்த நொடியே என் கொன்னும் போட்டு தீரா...உன் கையால சாகுறது சந்தோசம்...இப்படி யோசிக்காத ரொம்ப வலிக்கிதுடா...." என அவன் சட்டை பற்ற...
" இனி அப்படியோசிக்க மாட்டேன்....தப்பா நினைக்க மாட்டேன்....ரதுமா,இரண்டு பேறும் சந்தோசமா இருக்கலாம்...." எனகூறி அவளழிதலை சிறையெடுத்தான்...சம்மூ உறங்கவே கட்டிலில் கீழே இருவரும் இணைய இல்லறம் இனியதாய் தொடங்கியது...
தனது பணம் பலத்தையும் பதிவையும் வைத்தே பெரும் திட்டம் ஒன்றை தீட்டிய வித்தேஸ்....அதை செயல் படுத்த தொடங்கினான்....தனது அதிகாரத்தை வைத்து சிறை சென்ற மாணிக்கப்பெருமாளை காண நினைத்தவன்,அங்க உள்ள அதிகாரியின் உதவியால் உள்ளே மாணிக்கத்தை காணச்சென்றான்....
தீரா(து) காதல்