• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
சிறைச்சாலையில் ஆயுள் கைதியாக மாணிக்கப்பெருமாளுக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம்....உள்ளே அவரை காண யாருமே வரதா நிலையில் வேதனை கொண்டு அங்கிருப்போருடன் பேசாத தனித்து இருந்தார்......

சிறைச்சாலையில் உள்ள காவல் அதிகாரியிடம் தனது பதவி பணத்தை காட்டி அனுமதி வாங்கி அவரை காணச்சென்றான் வித்தேஸ்......

மாணிக்க பெருமாளை அழைத்து வந்தனர்.....' தன்னை காண யாரு வந்திருப்பார்கள் ' எண்ணிக்கொண்டே வந்தவர்....தன் முன்னே இதுவரை காண நபராக இருக்கவே குழம்பி போய் இருந்தார்...அவரை தனித்துவிட்ட காவல் அதிகாரி தள்ளி சென்று நின்றார்....

" நீங்க தானே மாணிக்கப்பெருமாள்....." என்றான் வித்தேஸ்...

" ஆமா,நீங்க யாரு...எதுக்கு என்னைய தேடி வந்திருக்கீங்க...," என்றவர்..

" எதிரியோட எதிரி நண்பர் சொல்லுவாங்க....நான் உங்க நண்பரா இப்போ வந்திருக்கேன்..." என்றான் வித்தேஸ்..

" நண்பரா ? "

" ஆமா,உங்களுக்கு எப்படி தீரா எதிரியோ அதுபோல எனக்கும் தீரா எதிரித்தான்....,என்னை அவன் ரொம்ப அவமான படுத்தி என் காதலியை என்கிட்ட இருந்து பிரிச்சு என்னை பைத்தியமா அழைவைச்சு என் வாழ்க்கை அழிச்சுட்டான்...அதுமட்டுமில்ல எனக்கு நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து உங்க பொண்ண அவன் கல்யாணம் பண்ணிகிட்டான்.. அவன பழிவாங்கனும் எனக்கு உங்க உதவி வேணும்....." என்றான்..

" நான் ஜெயில் இருக்கேன்...என்னால எப்படி உதவ முடியும்...."

" நான் உங்களை தப்பிக்க விடுறேன்...நீங்களும் நானும் சேர்ந்தே அவனை கொல்லனும்..." என்றான்

" நீ நினைச்சா உன்னால கொல்ல முடியுமே..எதுக்கு நீ என் உதவி எதிர்பார்க்கிற..."

" நான் ஒரு போலீஸ்..,,என் பெயர் அதுல வரக்கூடாது....நீங்க எப்படியும் அவன கொல்லத்துடிச்சுட்டு தானே இருக்கீங்க..அதான் உங்க உதவி தேடி வந்திருக்கேன்....என்னால இத தனியா செய்ய முடியும் தோனலை அதான் உங்க கிட்ட உதவி கேட்க வந்திருக்கேன்...நீங்க எனக்கு உதவி செய்தால்,நான் உங்களை வெளிய எடுக்கிறேன்...நீங்க பழைய படி பெரும் புகழோடும் இருக்கலாம் உங்களுக்கு ஒரு சம்ராஜ்ஜியத்தை உருவாக்கிகலாம்...உங்களுக்கு எதிரின்னு இருந்த தீராவும் இருக்க மாட்டான்....என்ன சொல்லிறீங்க...,உடனே சொல்லனும் இல்லை யோசீங்க...உங்களுக்கு சரின்னா இங்க இருக்க வார்டன் கிட்ட சொல்லுங்க,....நான் அவர்கிட்ட பேசி உங்களை தப்பிக்க வைக்கிறேன்....நீங்க சொல்லுற முடிவுல தான் இருக்கு...." என்றான்...

" ம்ம்...." என்றவர் அவனை ஆழமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட...' டேய் தீரா....உன் மாமானார வச்சே உன் கதைய முடிக்கிறேன் டா....' என்றவன் அங்கிருந்து சென்றான்....

பாதரியாரின் பிரசங்கம் அந்த வளாகம் முழுவதும் ஒலிக்கவே....கேத்ரீனும்,நிசானும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.இதுனால் வரை கோயில்,ஜர்ஜ் என்று போகாத மனுசன் தனக்காக கோயில்,ஜர்ஜ் என வந்திருக்கும் கணவனை காண பெருமிதமாக இருந்தது அவளுக்கு ....அவனையே பார்த்துக்கொண்டிருக்க...அவளை கண்ட அவனோ " என்ன ? " என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்,..அவள் ஒன்னுமில்லை என்று தலையசைத்தவள்..அவன் கைகளை இறுக்கப்பற்றினாள்...அவனும் அக்கைகளை தன்னிருகைகளுக்கு பத்திரபடுத்திக்கொண்டான்...

பிரசங்கம் முடிந்திடவே..இருவரும் வெளியே வர அவளோ அங்கிருந்த கதிரையில் அமர்ந்தாள்....

" என்னாச்சு ரீனுமா...வா போலாம் " என்றவன் அழைக்க...," தனு...இங்க வந்து உட்காரு " தனது பக்கத்தில் அமருமாறும் கைகளை இருக்கையில் தட்டினாள்....அவனும் அவள் பக்கத்தில் அமரவே..,அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்,..

" என்ன ரீனு,உட்கார சொல்லிட்டு இப்படி பார்க்கிற ? இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கேனோ சைட் ஓவரா அடிக்கிறியே...." என்றவனை பார்த்து மெல்லிதாய் சிரித்தவள்...

" தனு, நான் எங்க அம்மா,அப்பாவ பார்த்ததே இல்லை....குழந்தைங்களோடு குழத்தைகளா நானும் வளர்ந்தேன் நான் அனாதையா ...ஒரு அன்னையோட அணைப்பு அப்பாவோட தோழமை இதெல்லாம் எனக்கும் கிடைக்காத பல முறை ஏங்கிருக்கேன்..

ஆன நீ வந்ததுக்கு அப்புறமா எல்லாம் மாறி போச்சு தனு..எனக்கெல்லாமே நீ தான்..எனக்குன்னு,அம்மா,அப்பான்னு கொடுத்தவன் நீ....,நன்றி தனுமா.." என்றவளை,மெல்லமாய் அணைத்தவன்,

" என்ன ரீனு...இப்ப எதுக்கு பழையதை எல்லாம் பேசிட்டு அதுலையும் நன்றி வேற லூசு........" என்றான்

" இல்ல, தனு....உன்னால தான் எனக்கு சந்தோசமே கிடைச்சிருக்கு...ஏன் உன்னால தான் நமக்கு ஒரு புது சொந்தம் வரபோகுது....உன்னால எனக்கு ஒரு நல்ல அப்பா அம்மா கிடைச்சது போல...நாமலும் நல்ல அப்பா அம்மாவ இருக்க நம்ம வீடுக்கு ஒரு புது சொந்தம் வர போகுது தனு....." என்றாள் கண்களில் நீர் சுரக்க...

" ஹேய் ரீனு உண்மையாவ..." என அவள் முகமேந்தி கேட்க தலையாட்டினாள்...அவள் நெற்றியில் முத்தமிட்டவன்..,அங்கையே துள்ளி குத்தித்தான்...

" என்னாச்சு நிசான்,ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல..." அங்கே பாதர் வர..இருவரும் சேர்ந்து நின்று அவரிடம் ஆசி பெற்று,அவர்கள் அன்னை தந்தை ஆனதை கூறினார்கள்..

" ரொம்ப சந்தோசம் கேத்ரீன் குடும்ப குழந்தையின்னு வாழுறதை பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்குமா...இரண்டுபேரும் சந்தோசமா இருங்க.....காட் ப்ளஸ் யூ.." என்று சென்றுவிட...

அவளைஅழைத்துக்கு ஹாஸ்பிட்டல் விரைந்தான்..அங்கே டாக்டரிடம் செக்கப் செய்து கர்ப்பமானதை உறுதி செய்துவிட்டு...ஸ்வீட் எல்லாம் வாங்கிகொண்டு வீடு திரும்பினர்..

அன்னை சமையல் செய்ய....ஹாலில் நாதன் அமர்ந்து டீ.வி பார்த்தார்....

" அப்பா.....! " என அழைத்துகொண்டே உள்ளே வந்தவன் அவர் அருகினில் அமர்ந்தான்...

" என்ன விசயம் மகனே ! ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி இருக்கு.." என்றார்..

" ஆமா...ஆன இனி உங்களையும் என்னையும் அம்மா கண்டுக்கவே போறதில்லைப்பா...."

" ஏன்டா இப்ப மட்டும் கண்டுகிறாளா.என்னைக்கு கேத்துமா வந்தாளோ நம்மலை தான் கண்டுகிறதே இல்லையே,..,,"

" ஆமா அப்பா இன்னோரு விசயமும் இருக்கு அத சொன்ன நம்மலை மறந்திடுவாங்க...." என்றான்...

" ஆமாடா...எனக்கு என் மருமகளை பிடிக்கும்...நான் கவனிக்கிறேன் உங்களுக்கு என்ன பொறாமை அதில...." என்று வந்தார்...

" ஆமா மா ஆமா பொறாமை தான்....இப்ப அதை கொடு...." என கையில் இருந்த கரண்டியை வாங்கி கீழே வைத்தவன் நாதனை அவர் பக்கத்தில் நிற்க வைத்து....
இருவரும் சேர்ந்து நிற்கவே அவர்கள் காலில் விழுந்தனர்.

" என்னாச்சு மகனே ! காலைவிழுந்திட்டு என்ன விஷேசம்..." என்றவர் கேட்க..

" வேறென்ன,நீங்க தாத்தா பாட்டி ஆயிட்டீங்க நாங்க அம்மா அப்பாவ ஆயிட்டோம்..." என்றான்.

தேவரிசிக்கு மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்...கேத்ரீனை அணைத்து நெற்றி கண்ணம் என முத்தமிட்டவர் அவளை வழித்து நெற்றிமுறித்தார்....

" ஐயோ ! என்னால சந்தோசத்தை தாங்கவே முடியல.....இரு இரு என உள்ளே சென்றவர் கொஞ்சமாக இருவருக்கும் இனிப்பை தந்தார்..." நீ போய் ரெஸ்ட் எடு கேத்துமா....டேய் அவளை கூட்டிட்டு போடா..." என்றவர் அனுப்பிவைத்தார்...

தன்னறைக்கு உள்ளே இருவர் வந்ததும் அவளை வாரி அணைத்துக்கொண்டான்....அவளும்,
அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்...,இருவரும் அந்த அமைதியை தருணத்தை காதலாய் கொண்டனர்...

வீடே நிசப்தமாக இருக்க,...வேலையிலிருந்து இரவு வீடு திரும்பிய தீரா,சிவா இருவருக்கும் சந்தேகம் ஆனது...

" எங்க யாரையும் காணோம்,காளி,ஆன்வர்,ஆண்டனி,
கணேஷ்....எங்கடா யாரையும் காணோம்...." என்றான் தீரா..

" ஆமாண்ணா....யாரையும் காணோம் " என்றவன் அவர்கள் பெயரை சொல்லி அழைக்க....அவர்களோ கிச்சனிலிருந்து சத்தம் கொடுத்தனர்...

தீரா,சிவாவும் வந்து பார்க்க அவர்கள் கீழே காய்கறிகளை நறுக்கிகொண்டிருந்தனர்....ரது மேடையில் அமைந்திருக்க...வேலம்மாள் நின்று வேடிக்கை பார்த்தார்...

" என்னங்கடா பண்றீங்க ? " சிவா கேட்க..

" யோவ்,அண்ணா பார்த்தா தெரியல காய் கட் பண்றோம்..." காளி கூற...

" டேய் காய் தானடா கட் பண்ற எதுக்கு அழுகிற..." என்றவன் கணேஷ் பார்த்துக்கேட்க....

" யோவ்,வெங்காயம்யா,முடியல....." என கண்ணை துடைத்தவாறே கூறினான்..
 




Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
" என்ன ரதுமா,இது ? ஏன் இவனுங்கள வேலை பார்க்க விடுற...." தீரா கேட்க..

" இவனுங்க இன்னைக்கி வேலம்மாவ என்ன குறை சொன்னாங்க தெரியுமா காய் கறி இப்படி சிறுசா போடகூடாதாம் பெருசா போடனுமா....,வெங்காயத்தை நிறைய நறுக்கி போடனுமா..ஏக்கப்பட்ட கம்பளைண்ட் பண்ணானுங்க அதான் புடிச்சு நீங்களே கட் பண்ணுங்கடான்னு பனிஸ்மெண்ட் கொடுத்திருக்கேன்...அதுவும் இந்த கணேஷ் பேச்சு அப்ப அப்ப அதான் வெங்காயத்தை நறுக்க சொல்லிட்டேன்...இனி எவனாது வாய திறப்பான்..,," என்றாள்..

தீராவும்,சிவாவும் விழுந்து விழுந்து சிரிக்க.,.," அண்ணி,நாங்க சொன்னது மட்டும் தான் உங்களுக்கு கேட்டுச்சா...இன்னைக்கு காலைக்கூட இந்த சிவா அண்ணணும் தீரா அண்ணணும் கூட தான் குறை சொன்னாங்க அதெல்லாம் உங்க காதுல விழுகாதே...." என்று குரலை உயர்த்தினான் கணேஷ்.,,,"

" அடப்பாவி கணேஷ்,,நாங்க எப்படா குறை சொன்னோம்...ரது அவன் எங்களை மாட்டிவிட பொய் சொல்லுறான் நம்பாதே.,," என்றான் தீரா...

" வேணும் வேலம்மா கிட்ட கூட கேளுங்க ...இந்த நிலமையில நான் எப்படி பொய் சொல்லுவேன்...நான் விடுகிற என் கண்ணீர் மேல சத்தியம் அவங்க இரண்டு பேரும் குறை சொன்னாங்க.,.." என்று அவர்களை மாட்டிவிட.இருவரும் திருட்டு முழி முழிக்க...

" இரண்டு பேரும் உள்ள வாங்க....வேலுமா இன்னைக்கி தீரா தான் சமைக்க போறான்...நாம போய் ரெஸ்ட் எடுப்போம் வாங்க...." என வெளிய இருவரும் வர...,

" உள்ள போய் நீங்க இரண்டும் பேரும் சமைக்கிறீங்க..." என்றாள் ரது..

" அண்ணி,...இனி நாங்ககுறையே சொல்லமாட்டோம்...ப்ளீஸ் ப்ளீஸ்...." என கெஞ்சினான் சிவா...

" அதெல்லாம் இல்ல சமைங்க அப்ப தான் வேலுமா படுற கஷ்டம் தெரியும் " என்றாள்,...

" என்னடா அவகிட்ட போய் கெஞ்சிட்டு....நாங்க சமைக்கிறோம்.நாங்க உங்களை விட நல்ல சமைச்சுட்டா என்ன தருவீங்க மிஸஸ் தீராவர்த்தன்...."

" முதல்ல நீங்க சமைங்க மிஷ்டர் தீராவர்த்தன்..,அது நல்ல இருந்தா நீங்க கேட்கிறத தரேன்....முதல் உள்ள போங்க " என்றாள்..

உள்ளே சென்றவன் சமைக்கலானான்.... இருவரும் ஹாலில் அமர்ந்திருக்க சமையலறையிலிருந்து நல்ல வாசனை வந்தது...

" ரதுபாப்பா,தீரா தம்பி உண்மையாவே நல்ல சமைக்கும் பாப்பா...சில நேரம் எனக்கு உடம்பு சரியில்லைன்னா..தம்பி தான் சமைச்சு போடும்....அருமையா சமைக்கும்...."

" நிஜமாவ வேலுமா....இத முதல்லையே சொல்ல கூடாதா ? ஐயோ மாட்டிகிட்டேனா ! " என்றவள் யோசிக்க...சாப்பாடு ரெடியென நால்வரும் டைனிங் டேபிளில் செய்தவற்றை அடுக்கி வைத்தனர்....

கடைசியா வெளிய வந்த தீரா...ரதுவை கண்டு சாப்பட்டை காட்டினான் கண்களால்....இருவரையும் அமரவைத்து பரிமாறினர்,தீரா சென்று குளித்துவரவே...ரது சம்முவிற்கு ஊட்டிவிட்டாள்...,பின் அனைவரும் சாப்பிட்டனர்..

" என்ன அண்ணி நாங்க தான் ஜெயிச்சோம்....எங்க அண்ணன் கேட்கிறத நீ கொடுத்து தான் ஆகனும்.." என்றனர்.

" உங்க அண்ணனுக்கு என்ன வேணும் கேட்க சொல்லுங்க தரேன்..," என்றவள் தீராவை பார்த்து கேட்க..,

" அண்ணா,அண்ணிகிட்ட கேளுங்க அண்ணா..." என்றான் கணேஷ்.,,

" அப்படியா ! ரதுமா எனக்காக நீ உப்புமா செஞ்சு கணேஷ்ஷுக்கு கொடுமா,அவன் வாய திறந்தனால தான் இன்னைக்கு நான் சமைக்க வேண்டியதா போச்சு..அவன் வாயை அடைக்க ப்ளீஸ் என்றான்.." என்றான்..

" ஆத்தி..,நான் இனி மௌனவிரதம் தான் எதுவுமே பேசாமாட்டேன் அண்ணா ! " என ஓடிவிட அவனை துரத்தியவாறே அவர்களும் சென்று தன் இடையில் கைவைத்தவாறே தீராவை முறைத்தாள் ரது..,

" என்னடி முறைப்பு,உண்மை தான் சொன்னேன்..." என அவளிடையை பிடித்து இழுக்க,அவள் திமிரி எழ...நான் கேட்டதை தரேன் சொல்லிருக்க கேட்கட்டுமா ? " தன் ஒற்றை புருவத்தை தூக்கி மேலும் இறுக்கி அவளிடம் கேட்க...." அவனை தள்ளியவள் " தர மாட்டேன் போடா " தன்னறையை நோக்கி ஓடவே அவளை துரத்தியவன் கைகளில் சிக்கவே அவன் கேட்டத்தை வாரிவழங்கினாள்...

பொழுதும் புது விடியலாய் விடிந்தது..தீரா,ரது இருவரும் தன் எம்பெருமானை வணங்கிவிட்டு...அவன்சோபாவில் அமரந்து பேப்பரை படிக்க ஆரம்பித்தான்.....இவளோ வேலம்மாளுக்கு உதவி செய்தவாறே அவனுக்கு காபி கலந்து கொடுத்தாள்...

" அண்ணா ! அண்ணா ! காளி ஓடிவந்தான்.......

" என்ன காளி இவ்வளவு சந்தோசமா வர ? என்ன விசயம் ? " என்றவன் காபியை பருகியவாறே கேட்டான்..

" அண்ணா ! அந்த வித்தேஸ்ஸை ஆரெஸ்ட் பண்ணிடாங்க.....நீங்க சொன்னது போலவே செஞ்சேன்...அந்த வித்தேஸ் பத்தின எல்லா உண்மையும் போலீஸ் கிட்ட ஆதரத்தோடு கொடுத்துட்டேன்.சரியா அவங்களும் அவனை ஒரெஸ்ட் பண்ணிடாங்க...இனி அந்த மாணிக்க பெருமாளும் இல்லை வித்தேஸ்ஸூம் இல்லை உங்களை யாராலையும் எதிர்க்க முடியாது அண்ணா...." என்றான்.

" தீரா....எப்படி வித்தேஸ் ஜெயிலுக்கு அனுப்பின..." என்றவள் கேட்க சிரித்துக்கொண்டே அமர்ந்தவன் எவ்வாறு அவள் சிறை சென்றிருப்பான் என யோசிக்கலானான்..

தீரா(து)காதல்
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Nice. Rithu va deeera marraige pannuna appuram. Manicka perumal ponnu life ah spoil pannuvara. yosika vendum
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Wow nice ud sis ..ippa avadhu radhu n dheera live happily without any one disturbance ..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top