• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதோடுதான் நான் பாடுவேன்-45

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-45


ஏழாவது மாதம்:

கால சக்கரம் வேகமாக சுற்ற, மதுவந்தினிக்கு ஏழாவது மாதம் ஆரம்பித்து இருந்தது...

தன் மருமகளின் கற்பம் உறுதியான அடுத்த நாள் தன் மகன் நடத்திய கூத்தை கண்டு பயந்தவர் அவன் என்னதான் சத்தியம் செய்திருந்தாலும் அந்த கிறுக்கன் எப்ப மனசு மாறி ஏதாவது செய்து விட்டால் என்று அஞ்சி தன் மருமகளை அவன் அறைக்கு அனுப்பாமல் தன்னுடனே வைத்து கொண்டார் சிவகாமி....

அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவளை தனியாக விடாமல் தன்னுடனே இருக்க வைத்து கொண்டார்...

அவனுமே தன் அன்னையின் வேதனையை புரிந்து கொண்டு, அதன் பிறகு மதுவை எதுவும் வருத்தாமல் விலகி இருந்தான்... ஆனால் தன் எண்ணத்தில் இருந்து மட்டும் மாறவேயில்லை...

மது அடுத்த இரண்டு மாதத்திற்கு ட்ராவல் பண்ண வேண்டாம் என டாக்டர் சொல்லி இருக்க, IAS பயிற்சி வகுப்பிற்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சிவகாமி...

மதுவும் ஜெயந்த் ஐ அழைத்து விவரம் சொல்லி அவள் வகுப்பிற்கு வரமுடியாது என சொல்ல, அவனும் மது உண்டாகியிருக்கும் செய்தி கேட்டு அவளை வாழ்த்தி வீட்டில் இருந்தே படிக்க சொன்னான்...

இந்த வருடம் பரிட்சை எழுத முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தே தயார் பண்ணு.. அடுத்த வருடம் எழுதி கொள்ளலாம்... என்ன சந்தேகம்னாலும் அவனை அழைக்க சொல்லி கேட்டு கொண்டு உடம்பை பார்த்துக்க சொல்லி வைத்தான்..

அதே மாதிரி வசந்த் இடமும் பேட்மின்டன் பயிற்சிக்கு வர முடியாது என சொல்ல, முதலில் வசந்த் க்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது...

“கண்டிப்பா மது விளையாண்டு இருந்தால் நேசனல் சேம்பியன் ஆகியிருக்கலாம்.

அதை தொடர்ந்து ஆசியன் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கும்... ஆனால் எல்லாம் மிஸ் ஆச்சு.. “என்று சொல்லி வருத்தபட்டாலும்

“குழந்தை என்பது கடவுள் கொடுத்த வரம் மது... நீ அடுத்த வருடம் கூட நேசனல் விளையாடலாம்.... மீண்டும் இந்த விளையாட்டிற்கு வந்து விடலாம்... அதனால் வருத்தபடாதே.. டேக் கேர்... “ என்றான்....

தனக்கு கிடைக்காத பாக்கியம் தன் நண்பனுக்காவது கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ந்து நிகிலனையும் அழைத்து வாழ்த்தி தன் மகிழ்ச்சியை தெரிவித்தான் வசந்த்....

மதுவுக்கும் வருத்தம் தான்.. தன்னுடைய பேட்மின்டன் ராக்கெட் ஐ பார்க்கும் பொழுதெல்லாம் ஏக்கமாக இருக்கும்... ஆனால் அடுத்த நொடி தன் வயிற்றில் இருக்கும் அந்த குட்டியை நினைத்து கொள்வாள்.. உடனே அவள் முகத்தில் புன்னகை வந்துவிடும்....

ரமணியும் மது உண்டாகியிருக்கும் செய்தி கேட்டு அடுத்த நாளே கிளம்பி வந்துவிட்டார் மதுவை பார்க்க... அவருடன் இன்னும் இரண்டு அம்மாக்களும் அந்த இல்லத்தில் இருந்து வந்திருந்தனர்....

தங்களுக்கு அடைக்கலம் கொடுத்து காத்து வரும் நிகிலன் வாரிசை சுமக்கும் மதுவை பார்க்கவும் அவளை சீராட்டி பார்க்கவும் ஆசை பட்டு ரமணியுடன் வந்திருந்தனர் அவர்கள்...

தங்கள் மருமகள் உண்டாகியிருக்கும் பொழுது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசை பட்டார்களோ… அந்த ஏக்கத்தை எல்லாம் மதுவுக்கு செய்து தங்கள் ஆசையை , ஏக்கத்தை தீர்த்து கொண்டனர் அந்த பெரியவர்கள்...

நிகிலனும் அந்த இல்லத்தில் இருந்து யாரெல்லாம் மதுவை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறார்களோ அவர்களை வாரம் இருவராக அழைத்து கொண்டு வந்திருந்தான்...

மதுவை கண்டதும் அந்த பெரியவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி...அவளை தங்கள் மகள், மருமகளாக பாவித்து மதுவுக்கு பிடித்ததெல்லாம் செய்து கொடுத்து மகிழ்ந்தனர்....

ஒவ்வொருவரும் தன்னை அன்பாக கவனித்து கொள்வதை கண்டு நெகிழ்ந்து போனாள் மதுவந்தினி....

******

மூன்றாவது மாதத்தில் இருந்து மதுவிற்கு மசக்கையின் தொல்லை ஆரம்பிக்க, சாப்பிடுவது எதுவும் தங்காமல் வாமிட் பண்ணினாள்...

சுசிலா மற்றும் மைதிலி அவளுக்கு சில அறிவுரைகளை வழங்கி அதன் படி பார்த்து கொள்ள சொல்லினர்....

ஒரு முறை அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, அப்பொழுது மதுவுக்கு வயிற்றை புரட்ட, வேகமாக எழுந்து வாஷ்பேசினுக்கு ஓடினாள்...

அவள் கஷ்டபடுவதை கண்டு நிகிலனுக்குமே கஷ்டமாக இருந்தது... அவளை தன்னோடு அணைத்து கொண்டு அவள் தலையை பிடித்து கொள்ள துடித்தன அவன் கரங்கள்..

ஆனாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டு, அவளை கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருந்தான்.... தன் மகனை ஓரக் கண்ணால் பார்த்த சிவகாமி, அவன் அசையாமல் அமர்ந்து இருக்கவும்

“சரியான அழுத்தக்காரன்.... பொண்டாட்டி இப்படி கஷ்டபடற நிலையில் கூட தன் ஈகோ ல இருந்து இறங்கி வர்ரானா பார்... “ என்று திட்டி கொண்டே வேகமாக எழுந்து சென்று தன் மருமகளின் தலையை பிடித்து கொண்டார்....

இதே மாதிரி ஒருமுறை மதுவின் பெற்றோர்கள் வந்திருக்கும் பொழுது மது வாமிட் பண்ண, அதை கண்ட சாரதா அவளை தன்னுடன் அழைத்து சென்று வைத்து கொள்வதாக கூற, சிவகாமி மறுத்து விட்டார்...

“என் மருமகள்... எங்க வீட்டு வாரிசு நாங்கதான் பார்த்துக்கணும்... நீங்க வந்து உங்க பொண்ணை பார்த்துட்டு மட்டும் போகலாம்... “ என்று சிரித்து கொண்டே மறுத்து விட்டார்....

“அவர்களும் இப்படி ஒரு மாமியார் கிடைக்க நம்ம பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும். “என்று சிரித்து கொண்டே சென்றனர்.... ஆனாலும் வாரம் ஒரு முறை வந்துவிடுவர் மகளை பார்க்க என்று...

இப்படி எல்லோரும் அவளை கொண்டாட, கொண்டாட வேண்டியவன் மட்டும் இன்னுமே அவளிடம் பாராமுகமாகத்தான் இருந்தான்...

ஓரளவுக்கு அவளுக்கு மசக்கை நின்றிருக்க, அதன் பிறகே தன் மருமகளை தன் மகன் அறைக்கு அனுப்பி வைத்தார்.. அவன் புள்ளை வளர்வதை பார்த்தாலாவது மனசு மாறுவான் என்று...

ஆனால் அவனோ எப்பொழுதும் வீட்டிற்கு தாமதமாகவே வருவான்... அப்படியே சீக்கிரம் வரும் நாட்களிலும் அவளை கண்டு கொள்வதில்லை...

மதுவுக்கும் முதலில் வேதனையாக இருந்தது... பின் அதுவே பழகி விட,

“அவர் என்னை புரிந்து கொள்ளும் பொழுது புரிந்து கொள்ளட்டும்..” என்று மனதை கல்லாக்கி கொண்டு இருக்க பழகி கொண்டாள்....

*****

ஆறாவது மாதம் ஆரம்பித்து இருக்க, ஒரு நாள் இரவு வரவேற்பறையில் அமர்ந்து தன் மாமியாரின் தோளில் சாய்ந்து கொண்டு அவருடன் சீரியல் பார்த்து கொண்டிருக்க, திடீரென்று வயிற்றில் ஏதோ வித்தியாசமான உணர்வு தோன்ற ஆ வென்று அலறினாள் மது....

சிவகாமியும் பயந்து போய் விசாரிக்க, அவள் சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தார்....

“என் பேத்தி உன் வயித்துல விளையாட ஆரம்பிச்சிட்டாளாக்கும்.. இனிமேல் உனக்கு தினமும் உதைதான்... “ என்று சிரித்தார்.. அப்பொழுது அங்க வந்த அகிலா சிவகாமி சொன்னது காதில் விழ, அவளும் வேகமாக ஓடி வந்து

“அண்ணி.. நான் தொட்டு பார்க்கவா...? “ என்றாள் ஆர்வமாக....

மதுவும் அவள் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து காட்ட, அதே நேரம் அந்த குட்டியும் அசைய துள்ளி குதித்தாள் அகிலா அந்த குறுகுறுப்பில்....

“வாவ்.. சூப்பரா இருக்கான் என் மருமகன் அண்ணி.... இப்பயே அத்தை கூட விளையாட ஆரம்பிச்சுட்டான்...” என்று குதித்தாள்.. அதை கேட்ட சிவகாமி

“போடி வாலு... அது என்ன மருமகன்..? எனக்கு பேத்திதான் வரப் போறா...” என்றார்...

“போம்மா... எனக்கு ஏற்கனவே என் மருமக கார்த்தி இருக்கா.. அதனால எனக்கு மருமகன் தான் வேணும்.... “ என்று சிணுங்கினாள் அகிலா...

“ம்ஹூம்... உன் பெரிய அண்ணன் இருக்கானே… பெத்த தாய் எனக்கும், கட்டின பொண்டாட்டி இவளுக்கும் அடங்காமல் சுத்தறான் இல்ல.. இவனை எல்லாம் தட்டி கேட்க பொம்பளை புள்ளையால தான் முடியும்..

அவன் பொண்ணு வந்து மிரட்டற மிரட்டல்ல இவன் ஆட்டம், விறைப்பு எல்லாம் அடங்க போகுது பார் .. எப்பேர் பட்டவனையும் அவன் பெத்த பொண்ணு நிக்க வச்சு கேள்வி கேட்டா, அப்படியே அடங்கிட்டு போய்டுவாங்களாம் அப்பனுங்க....

அதனால இந்த பெரியவனை அவன் பொண்ணு வந்துதான் அடக்க போறா பார்...“ என்று சிரித்தார் சிவகாமி...

அதை கேட்ட அகிலா ஏதோ யோசித்தவள்

“மா.. என் அப்பாவும் அப்ப என் பேச்சை கேட்டு அடங்கினாரா? “ என்றாள் ஏக்கமாக...

அவள் குரலில் இருந்த ஏக்கமும், கண்ணில் தெரிந்த வருத்தத்தையும் கண்ட மது அவளை மாற்ற எண்ணி

“அகி... மாமா வுக்கு அத்தையெல்லாம் மிரட்ட வேண்டாம்.. அத்தையை பார்த்த உடனே அடங்கி போய்ட்டாராம்.. அப்ப விழுந்தவர் தான் அதுக்கப்புறம் அத்தையை எதிர்த்து எதுவும் பேசலையாம்... “ என்று சிரித்தாள் மது...

சிவகாமியும் வெட்க பட்டு

“உன் அண்ணி சொல்றது கரெக்ட் தான் அகிலா...உங்கப்பா என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்....

அதோட உங்கப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. நான் இரண்டு பசங்களே போதும்.. மூன்றாவது குழந்தை வேண்டாம்னு எவ்வளவோ தூரம் கெஞ்சி கேட்டும் எனக்கு பொண்ணு வேணும்னு உன்னை பெத்துக்க வச்சார்...

நீ பிறந்த பிறகு என்கிட்ட இருந்ததை விட உன் அப்பாகிட்ட தான் அதிகம் இருப்ப.. எப்பவும் உன்னை அவர் நெஞ்சு மேல போட்டு தான் தூங்க வைப்பார்... “என்று பெருமையாக சொல்ல, அகிலாவின் கண்கள் கலங்கின...

“என் அப்பா இன்னும் கொஞ்ச நாள் என்னுடன் இருந்திருக்க கூடாதா ? I miss you பா.. “ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்....

******

அதே நேரம் நிகிலன் உள்ளே வர, அகிலா தன்னை சமாளித்து கொண்டு

“அண்ணா... இங்க வாயேன்...அண்ணி வயித்துல உன்னோட பாப்பா உதைக்கிறா.... நான் தொட்டு பார்த்தேன்.. நீயும் வந்து தொட்டு பாரேன்.... “ என்று ஆர்வமாக அழைக்க, அவனோ லேசாக புன்னகைத்தவாறு மாடிக்கு சென்றான்....

“போறான் பார்.. கொஞ்சம் கூட தன் பிள்ளைனு பாசமே இல்லாம... இவனுக்கெல்லாம் எங்கப்பன் வடிவேலன் அவன் அப்பனுக்கு பாடம் சொன்ன மாதிரி இவன் புள்ளை வந்து இவன் காதை பிடித்து திருகி புரிய வச்சாதான் உண்டு... “ என்று பெருமூச்சு விட்டார் சிவகாமி...

“ஐ.. சூப்பர் மா... அப்ப இந்த பாப்பா வந்த பிறகு அண்ணா மாறிடுவானா? “ என்றாள் அகிலா..

“கண்டிப்பா... நீ வேணா பார்.. இந்த குட்டி தங்கத்தை பார்த்ததும் எப்படி பொட்டி பாம்பா அடங்க போறானு... “ என்று சிரித்தார் சிவகாமி...

“முருகா... எப்படியாவது அவனை மாத்திடு... “ என்று உள்ளுக்குள் வேண்டி கொண்டார்...

அன்று சீக்கிரம் வீட்டிற்கு திரும்பி வந்திருந்ததால் நிகிலன் இரவு உணவை முடித்து தன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான்....

அப்பொழுது கதவை திறந்து கொண்டு கையில் பால் டம்ளருடன் உள்ளே வந்தாள் மது...

இது ஆறாவது மாதம் என்பதால் அவள் வயிறு கொஞ்சம் வெளியில் தெரிய ஆரம்பித்து இருந்தது...முகம் கொஞ்சம் குண்டாகி தாய்மைக்கே உரித்தான அழகில் மிளிர்ந்தாள்...

அவள் வருவதை ஓரக் கண்ணால் கண்டவன் அவள் முகம் பார்க்க, சாதாரணமாகவே அவனை கட்டி இழுக்கும் அவள் குழந்தை முகமும்… அவளின் திரண்ட இதழ்களும் இப்பொழுது இன்னும் மெருகேறி இருக்க, தன் விழிகளை அகற்ற முடியாமல் அவளையே ஓர கண்ணால் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.....

பழைய நினைவுகள் கண் முன்னே வர, எழுந்து சென்று அவளை கட்டி அணைத்து கொள்ள துடித்தது அவன் உள்ளம்..... ஆனாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டவன் தன் தலையை உலுக்கி கொண்டு பார்வையை மாற்றி கொண்டான்......

அதற்குள் அவன் அருகில் வந்தவள் அவன் முன்னே பால் டம்ளரை நீட்டினாள் தலையை குனிந்தவாறு...

நிகிலன் வீட்டிற்கு தாமதமாக வரும் நாட்களில் சிவகாமி பாலை ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து விடுவார்... என்றாவது அதிசயமாக சீக்கிரம் வரும் நாட்களில் மதுதான் பால் எடுத்து வந்து தருவாள்....

அவனும் எதுவும் பேசாமல் வாங்கி பருகிவிட்டு டம்ளரை அவளிடம் நீட்டி விடுவான்... அவனுடைய அந்த வெறித்த பார்வை மட்டும் அப்பப்ப அவள் தனியாக இருக்கும் சமயங்களில் மட்டும் அவள் மீது படிந்து மீளும்...

தன் அன்னை இருக்கும் நேரங்களில் அவளை பார்க்க கூட மாட்டான்...இன்றும் மது டம்ளரை நீட்ட, எதேச்சையாக அவன் பார்வை அவள் வயிற்றுக்கு சென்றது...

இன்று அவள் சேலை கட்டி இருந்ததால் அந்த இடைவெளியில் அவள் வயிறு கொஞ்சமாக வெளியில் தெரிய, அப்பொழுது அகிலா சொன்ன

அண்ணி வயித்துல உன்னோட பாப்பா உதைக்கிறா.... நான் தொட்டு பார்த்தேன்.. நீயும் வந்து தொட்டு பாரேன்... என்பது நினைவு வர, அவனுக்கும் ஆசையாக இருந்தது அந்த குழந்தையை தொட்டு பார்க்க...

அதுவரை அந்த குழந்தையை பெரிதாக கண்டு கொள்ளாதவன்… இன்று அகிலா சொன்ன உன்னோட பாப்பா உதைக்கிறா என்றதில், அவன் ஆழ்மனதில் உறங்கி கொண்டிருந்த தந்தை என்ற உணர்வு குமிழிட்டு மேலே வந்தது....

அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது தானும் ஒரு தந்தையாக போகிறேன் என்று...

இதுவரை மதுவின் மேல் இருந்த வெறுப்பால்… அவள் வயிற்றில் இருக்கும் சிசுவும் அவள் சம்பந்தமானது மட்டுமே… தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றவாறு எண்ணி கொண்டிருந்தவனுக்கு அகிலாவின் வார்த்தைகள் அவனை தட்டி எழுப்பியது....

“என்னதான் அவள் வேசக்காரி, மோசமானவள் என்றாலும் அவள் வயிற்றில் இருப்பது என் குழந்தை... என் இரத்தம்.... என் உயிர்...நானும் தந்தையாக போகிறேன்....

என் அப்பா என்னை எப்படி கொண்டாடினாரோ… ஆதி எப்படி அவன் மகளை கொஞ்சறானோ, அதே போல நான் உரிமையுடன் தூக்கி கொஞ்ச, என் விரல் பிடித்து நடக்க, எனக்கும் ஒரு மகள் வரப்போகிறாள்...” என்ற பூரிப்பு அவன் உள்ளே பரவியது....

அவனுக்குள் இருக்கும் தந்தை பாசம் இப்பொழுது விழித்து கொள்ள,

“என் குழந்தையையா நான் கொல்ல துணிந்தேன்...? சே.. இவள் மீது இருந்த ஆத்திரத்தில் என்ன ஒரு முட்டாள்தனம் செய்ய இருந்தேன்....ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல அன்று ஆத்திரத்தில் என் அறிவை இழந்துதான் விட்டேன்....

நல்ல வேளையாக அம்மா என்னை சரியான நேரத்துல அந்த முட்டாள் தனத்தை செய்யாமல் தடுத்து என் குழந்தையை காப்பாத்திட்டாங்க..இல்லையென்றால் என்னவாகியிருக்கும் ? என்று யோசித்தவனுக்கு உடல் ஒரு நொடி நடுங்கியது.....

“சே,,, இனிமேல் இந்த மாதிரி ஆத்திரத்தில் அறிவை இழக்காமல் இருக்கணும்.. “

என்று உறுதி செய்து கொண்டவன், அருகில் நின்றிருந்த தன் மனைவியின் வயிற்றையே ஆசையோடும், ஏக்கத்தோடும் பார்த்து கொண்டிருந்தான்....

அகிலா மாதிரி அவனுக்கும் தன் குழந்தையை தொட்டு பார்க்கவேண்டும் போல இருந்தது....

ஆனால் அவளிடம் எப்படி கேட்பது? என அவன் ஈகோ முரண்டு பண்ண, அவள் வயிற்றை ஆசையாக பார்த்தவாறே பாலை பருகினான்....

எப்பொழுதும் போல தலையை குனிந்து கொண்டிருந்தவளுக்கு தன் கணவனின் கண்ணில் தெரியும் ஆசை , ஏக்கம் அவள் கண்ணில் படவில்லை...

அருகில் நின்று கொண்டிருக்கும் அவளை, அவள் வயிற்றை , அதன் உள்ளே இருக்கும் தன் குழந்தையை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.... அதனால் மெதுவாக அந்த பாலை பருகினான்....

எவ்வளவு மெதுவாக பாலை குடித்தாலும் கடைசியில் அது தீர்ந்து போயிருக்க, மனமே இல்லாமல் டம்ளரை நீட்டினான் அவள் முன்னே...

அவளும் அதை வாங்கி கொண்டு சென்று கழுவி வைத்து விட்டு தன் இடத்திற்கு சென்று வழக்கம் போல போர்வையை இழுத்து மூடி படுத்து கொண்டாள்....

ஆனால் நிகிலனுக்கோ கண்ணை மூடினாலும் உறக்கம் வரவில்லை.... அவள் வயிற்றில் இருந்த அவன் குழந்தை அவனை பார்த்து கண் சிமிட்டி சிரிப்பதை போலவே இருந்தது.....

மெல்ல திரும்பி அவளை பார்க்க, அவளோ நன்றாக உறங்கியிருந்தாள்... உறக்கத்திலும் அழகாக ஜொலித்த அவள் முகம் பார்க்க, இன்னும் கொதித்தது அவன் உள்ளே....

அதோடு சோபாவின் ஓரத்தில் உறங்கி கொண்டிருந்தவளை காணவும் கஷ்டமாக இருந்தது அவனுக்கு... இப்பொழுது மது கொஞ்சம் குண்டாகி இருக்க, அந்த ஷோபா போதுமானதாக இல்லை...

“பேசாமல் அவளை கட்டிலில் வந்து படுக்க சொல்லவா ?” என்று யோசிக்க, உடனே அந்த விதி சதி செய்து மீண்டும் அவன் ஈகோவை தட்டி எழுப்ப, அதன் போதனையில் தன் மனதை மாற்றி கொண்டான்....

ஆனாலும் அவளை நன்றாக படுக்க வைத்து அவள் கீழ விழுந்து விடாமல் இருக்க ஓரத்தில் தலையணையை அடுக்கி வைத்து பின் அவளை பார்த்தவாறே உறங்க முயன்றான்....

*****

இப்பொழுது மதுவுக்கு ஏழாவது மாதம் ஆரம்பித்து இருக்க, சாரதாவும் சண்முகமும் தங்கள் மகளுக்கு வளைகாப்பு செய்யணும் என்று ஆரம்பிக்க, சிவகாமிக்கும் அதை கேட்டு மகிழ்ச்சிதான்....

நிகிலன் திருமணம் குழப்பத்தில் முடிந்திருக்க, அதற்கு பிறகு வீட்டில் நடக்கும் முதல் விசேசம் இது....

வெளியில் சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் சிறு வருத்தம் அவருக்கு.... தன் இளைய மகன் இல்லையே என்று...

அதனால் விழாவை கிராண்ட் ஆக பண்ணாமல் எளிதாக பண்ணலாம் என்க, மதுவோ அந்த முதியோர் இல்லத்தில் தன் வளைகாப்பு விழாவை வைத்து கொள்ளலாம் என்றாள்....

அனைவரும் ஒத்து கொள்ள, அங்கயே ஏற்பாடு செய்திருந்தனர்.. நெருங்கிய உறவினர்கள் மற்றும் அங்க இருக்கும் நண்பர்களை மட்டும் அழைத்திருந்தனர்..

நிகிலன் தானும் தந்தையாக போகிறேன் என்று உணர்ந்ததில் இருந்தே அவனிடம் கொஞ்சமாக மாற்றம் வந்து இருந்தது... அதனால் இந்த விழா தன் மகளுக்காக என்று தன்னை சமாதானம் செய்து கொண்டு உற்சாகத்துடனே வளைய வந்தான்....

அதை கண்டு சிவகாமிக்கு ஆச்சர்யம் + மகிழ்ச்சி தான்..

“எப்படியோ இப்பயாவது இது அவன் புள்ளைனு உணர்ந்தானே.... அதுவே போதும்... “ என்று அந்த வேலனுக்கு நன்றி சொல்லி, விழா ஏற்பாட்டை கவனித்தார்....

கௌதம் நிகிலன் தந்தையாக போவது தெரிந்த உடனே அவனை அழைத்து வாழ்த்து சொல்லி மகிழ்ந்து போனான்...

மதுவை அவன் தங்கையாக ஏற்று கொண்டதால் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து தங்கைக்கு செய்யும் முறையில் முன்னின்று அந்த விழாவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் பார்த்து கொண்டான்.......

கௌதம் உரிமையோடு அண்ணன் என்று சொன்னதையும் அவனே இந்த விழாவை எடுத்து நடத்துவதையும் கண்டு மதுவின் பெற்றோர்க்கு ரொம்பவே மகிழ்ச்சி...

கௌதம் மதுவின் மேல் காட்டிய பாசம் அவள் பெற்றோர்களை அப்பா , அம்மா என்று அழைத்து காட்டிய அன்பும் கண்டு மதுவின் பெற்றோர்களுக்கு தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை தீர்த்து வைத்தது....

*****

விழாவிற்கு முதல் நாளே கௌதம் சிலரை வைத்து கொண்டு, அந்த இல்லத்தின் பெரிய ஹாலில் எல்லா அலங்காரங்களும் செய்திருந்தான்....

இன்றும் முதல் ஆளாக வந்து மற்ற ஏற்பாட்டை பார்த்து கொண்டான்... சிவகாமியும் மதுவின் பெற்றோர்களும் குடும்பத்துடன் மற்றும் சில உறவுக்காரர்களை அழைத்து கொண்டு காலையிலயே கிளம்பி அந்த இல்லத்திற்கு வந்து விட்டனர்....

அங்கிருந்த பெரியவர்கள் அனைவருக்கும் நிகிலன் புது ஆடை வாங்கி கொடுத்திருந்தான்....

அவன் திருமணம் திடீரென்று நடந்து விட்டதால் அந்த இல்லத்து பெரியவர்களுக்கு அப்பொழுது எதுவும் செய்ய முடியாததால் அந்த ஆசையை இப்பொழுது தீர்த்து கொண்டான்....

எல்லோரும் புது ஆடை உடுத்தி கொண்டு முகத்தில் மகிழ்ச்சியுடன் ஹாலில் அமர்ந்து இருந்தனர்...

சிறிது நேரத்தில் ஆதியின் குடும்பமும் காலையிலயே வந்துவிட்டனர்...

ஜானகி, சுசிலா, பாரதி மற்றும் அவர்கள் குட்டி தேவதை கார்த்தியாயினி என குடும்பத்துடன் வந்திருந்தான் ஆதி தன் நண்பனின் விழாவிற்காக.....

அவன் காரை கண்டதும் மது , சிவகாமி , நிகிலன் எல்லாரும் வெளியில் வர, ஆதி காரை நிறுத்த அவன் மகள் அவனுக்கு முன்னதாக கார் கதவை திறந்து கொண்டு வேகமாக கீழ இறங்கினாள்....

பட்டு பாவாடை சட்டை அணிந்து தலையில் இரட்டை கொம்பு வைத்து ஜடை இட்டு அதில் மல்லிகை சரத்தை இரண்டு பக்கமும் இழுத்து கட்டி வைத்திருந்தாள் பாரதி....

அவளின் குண்டு கன்னத்திற்கும், குட்டி கைகளை வேகமாக ஆட்டி நடந்து வர, அந்த குட்டி தேவதையே இறங்கி நடந்து வருவதை போல இருந்தது....

அவளை கண்டதும் நிகிலன் வேகமாக முன்னால் சென்று அவளை தூக்கி தலைக்கு மேல சுற்றி கொஞ்சி சிரித்து கொண்டே அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட, அவளும் கிளுக்கி சிரித்து நிகிலன் கழுத்தை கட்டி கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்....

அந்த குட்டி தேவதையின் முத்தம் தந்த தித்திப்பு அவன் உள்ளே சிலிர்த்தது.... உடனே தன் மகளும் இப்படித்தான் தன்னை கட்டி கொள்வாளோ ? என்று ஆசையாக இருந்தது....இப்பவே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது அவன் உள்ளே....

நிகிலன் கார்த்தியை கொஞ்சி கொண்டிருந்ததையே ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தாள் மது...

அதற்குள் அருகில் வந்திருந்த பாரதி அவளின் ஏக்க பார்வையை கண்டு கொண்டவள்,

“ஹோய்.. மதுகுட்டி... என்ன இன்னும் உன் புருசனையே சைட் அடிச்சுகிட்டிருக்க... அதான் நீ கொஞ்ச அடுத்த ஆள் வந்தாச்சு இல்ல.. இனிமேல் உன் புருசனை கொஞ்சறதை விட்டு உன் குட்டியை பார்... “ என்றாள் பாரதி கண் சிமிட்டி சிரித்தவாறு ...

“போ பாரதி... எப்பவும் உனக்கு கிண்டல்தான்.....” என்று வெட்கபட்டு லேசாக சிரித்தவாறு தலையை குனிந்து கொண்டாள் மது....

பின் அனைவரும் நலம் விசாரித்து முடிக்க, சிவகாமி அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.... சாரதா மற்றும் சண்முகத்திற்கு அவர்களை அறிமுக படுத்தி வைத்தார்...

அதே நேரம் நிகிலனின் மற்றொரு நண்பனான வசீகரன் பெற்றோர்களும் வந்திருந்தனர்....

வசீகரனுக்கு அன்று முக்கியமான சர்ஜரி இருப்பதால், தன் நண்பனை போனில் அழைத்து வாழ்த்தி தன் பெற்றோர்களை விழாவிற்கு அனுப்பி வைத்திருந்தான்...

சிவகாமி அவர்களையும் சென்று வரவேற்க, மீனாட்சியின் முகத்தில் தெரிந்த பூரிப்பை கண்டு

“என்ன மீனாட்சி...!! .ஒரு வழியா நீயும் மருமகளை கூட்டி வந்துட்ட போல... எப்படியோ இப்பயாவது அந்த வசி பயலுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சே... “ என்று சிரித்தார் சிவகாமி....

(வசிக்கு எப்படி திருமணம் நடந்தது என்று தெரியாதவர்கள் தவமின்றி கிடைத்த வரமே கதையை புரட்டி பாருங்கள்......)

மீனாட்சியும் அவர் கணவர் சுந்தரும் அதை ஒத்து கொண்டு சிரித்தவாறே சிவகாமியிடம் நலம் விசாரித்து பின் உள்ளே சென்றனர்....

நிகிலனும் அவர்களை வரவேற்று முன்னால் அனுப்பி வைத்தான்...

பெரியவர்கள் கொஞ்சம் முன்னால் நடந்திருக்க, பின்னால் இளையவர்கள் சென்றனர்...

கார்த்தியை கையில் தூக்கி கொண்டே நடந்த நிகிலனின் அருகில் வந்த பாரதி

“என்ன மாம்ஸ் ?... உங்க இளவரசிக்கு எத்தனை கதை சொல்லி இருக்கீங்க இது வரைக்கும்? “ என்று சிரித்தாள்....

“கதையா? என்ன கதை ? “ என்றான் நிகிலன் புரியாமல்..

“அடடா.. உங்களுக்கு விசயமே தெரியாதா? உங்க பிரண்ட் உங்களுக்கு டிப்ஸ் கொடுத்தாரா இல்லையா? “ என்றாள் மீண்டும் கன்னம் குழிய சிரித்தவாறு...

நிகிலன் புரியாமல் ஆதியை பார்க்க அவனோ தன் மனைவியிடம்

“ஹே.. ரதி.. என் மானத்தை வாங்காத டி...அதெல்லாம் சொல்லாத... “ என்று மெதுவாக அவள் காதை கடித்து ஜாடை சொல்லி அவளை அமைதி படுத்த முயன்றான்...

அவளோ அதை கண்டு கொள்ளாமல்

“மாம்ஸ்.. உங்க ப்ரண்ட் Parenting tips. னு ஏதோ புக்கையெல்லாம் படிச்சுட்டு அவர் இளவரசி என் வயித்துல இருக்கிறப்பவே அவளுக்கு க்ளாஸ் எடுப்பார்... தினமும் ஒரு கதை சொல்வார்...என்னையும் தூங்க விட மாட்டார்...

அவர் அப்ப கதை சொன்ன பழக்கத்திற்கு இவளும் இன்னமும் நைட் ஏதாவது கதை சொன்னாதான் தூங்கறா..!!!

ஹ்ம்ம்ம்ம் நீங்க முழிக்கிறதை பார்த்தா , அப்ப உங்க இளவரசிக்கு நீங்க கதை எதுவும் சொல்றதில்லையா? மது குட்டி நீ கொடுத்து வச்சவ.. நிம்மதியா தூங்கிடலாம்..” என்று சிரித்தாள் பாரதி..

அதை கேட்டு நிகிலன் அசடு வழிந்து சிரிக்க, மதுவுக்கோ கஷ்டமாக இருந்தது...

“அவன் கதை கூட சொல்ல வேண்டாம்.. தன் குழந்தை என்று ஒரு நாளும் கொஞ்சியதில்லையே... “ என்று எண்ணி முகம் வாடினாள்...

அப்பொழுது மதுவின் தோழி சந்தியா அங்கு வர, அதற்குள் மது தன்னை சமாளித்து கொண்டு சிரிப்புடன் அவளை வரவேற்றாள்....

தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்த தன் தோழியை கண்டதும், ஓடி வந்து கட்டி கொண்டாள் சந்தியா.....

“ஹே.... மந்தி.... நீயே ஒரு குட்டி குரங்கு... எதையும் தனியாக செய்ய மாட்ட...எப்பவும் என்னையோ, அங்கிளையோ தான் சுத்திகிட்டிருப்ப...இப்ப . உனக்குள் இன்னொரு குட்டியா? “ என்றாள் தழுதழுத்தவாறு....

“ஹோய்...சந்தி.... நான் இப்ப பிக் கேர்ள் ஆக்கும்..... அதுவும் மூத்த மருமகள்... “ என்று இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டாள் மது சிரித்தவாறு....

“பாருடா.... இந்த அரை படி எல்லாம் பிக் கேர்ள் னு காலரை தூக்கி விட்டுக்கறத.... இது சரியில்லை... எங்க என் மாம்ஸ் ?...இப்படி ஒரு பச்சை புள்ளையை அதுக்குள்ள பெரிய மனுசி மாதிரி மாத்திட்டாரே... அவரை இன்னைக்கு ஸ்பெஷலா கவனிச்சுக்கணும்.... “ என்று மதுவை மிரட்ட

“யாரு டி மா அது ?.. என் மருமகளை மிரட்டறது ? “ என்று சிரித்து கொண்டே சிவகாமி அருகில் வந்தார்.....

அவரை கண்டதும் அவர்தான் மதுவின் மாமியார் என புரிந்து கொண்டவள்

“ஹீ ஹீ ஹீ நான் தான் மாமியாரே… உங்க சின்ன மருமகள்..... !!! “ என்று குறும்பாக கண் சிமிட்டினாள் சந்தியா...

அதை கேட்டு அதிர்ந்து போன சிவகாமி ஆ வென்று வாயை பிளக்க,

“என்ன மாமியாரே !! சின்ன மருமகள் ன உடனே இப்படி சாக் ஆகி, வாயை பிளக்கறீங்க...

உங்க மூத்த மருமகள் அளவுக்கு நான் அழகா இல்லைனாலும், நானும் மூக்கும் முளியுமா பார்க்க லட்சணமாதான இருக்கேன்... அப்புறம் எதுக்கு இந்த லுக்கு? “ என்று தன் புருவத்தை உயர்த்தி மிரட்டி சிரித்தாள் சந்தியா....

அதற்குள் தன்னை சுதாரித்து கொண்ட சிவகாமி,

“வாடி.. என் வாயாடி மருமகளே... உன்னைத்தான் இத்தனை நாளா தேடிகிட்டிருந்தேன்....இப்படி ஒருத்தி இல்லையேனு...

என் சின்ன மகன் மட்டும் வரட்டும்.. அடுத்த முகூர்த்தத்துலயே உன் கழுத்துல தாலிய கட்டி, உன் வாயை அடக்கி வைக்கிறேன் பார்... “ என்று சிரித்தார்....

“ஹா ஹா ஹா அந்த ஓடிப் போனவன் வந்தா பார்க்கலாம் மாமியாரே... அப்படியும் வந்தாலும் அவன்தான் என்கிட்ட அடங்கி போகணுமாக்கும்...

அவனையும் அடக்குவேன்.. உங்களையும் அடக்கி மூலையில் உட்கார வைக்கிறேன் பார்.... “ என்று சிரித்தாள்...

“ஆத்தி... இப்பயே இந்த பேச்சு பேசறாளே...உன்னை கட்டிகிட்டு என் பையன் என்ன கஷ்டபடுவானோ ?.. அதனால என் பையன் மட்டும் வந்தானா, நீ இருக்கிற தெரு இல்ல அந்த ஏரியா பக்கமே அவனை அனுப்ப கூடாது.... “ என்று மோவாயில் கையை வைத்து நொடித்தார் சிவகாமி.

“ஹா ஹா ஹா ...அப்படி வெளிலயே அனுப்பாம உங்க முந்தானையில முடிஞ்சு வச்சுகிட்டாலும், நானே தேடி வந்து உங்க உத்தம புத்திரன்… அந்த ஓடிப்போனவன தூக்கிட்டு போய்ட்டு என் கழுத்துல தாலி கட்ட வச்சிடுவேணாக்கும்....

எப்பனாலும் நான் தான் உங்க சின்ன மருமகள்... எழுதி வச்சுக்கங்க.... “ என்றாள் சிவகாமியை மடக்க எண்ணி...

(மகிழன் மற்றும் சந்தியா வின் அதிரடி காதல் கலாட்டாக்களை தெரிந்து கொள்ள, அழகான ராட்சசியே நாவலை படித்து பாருங்கள்...!)

அதற்குள் மது அவள் கையை பிடித்து கிள்ளி பேசாத என்று ஜாடை காட்ட, அவளோ அதை கண்டு கொள்ளாமல்

“நீ சும்மா இரு மந்தி...இந்த மாமியருங்களே இப்படிதான்... இன்னைக்கு நான் ஆச்சு.... என் மாமியார் ஆச்சு.. “ என்று சிலுத்துகொண்டு அவரிடம் செல்லமாக சண்டைக்கு நின்றாள்....

அதற்குள் மது முந்தி கொண்டு

“சாரி... அத்தை.... நான் சொல்லி இருந்தேன் இல்லை... இவதான் சந்தியா.... என் க்ளோஸ் பிரண்ட் .. கொஞ்சம் வாய் ஜாஸ்தி.. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க... “ என்றாள் தயக்கத்துடன்...

“அடடா... இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு மது மா... இப்படி கலகலனு ஜாலியா பேசறதுல ஒன்னும் தப்பில்லை....” என்று சிரித்தார் சிவகாமி....

“ஆங்.... அப்படி சொல்லுங்க அத்தை... எனக்கு சமமா வாயடிக்கிற நீங்கதான் சூப்பர் அன்ட் மாடர்ன் மாமியார்...ஐ லவ் யூ.... “ என்று அவரை கட்டி கொண்டாள் சந்தியா....

சிவகாமியும் சிரித்தவாறே

“என்னமா சந்தியா.... உன் அப்பா அம்மா வரலையா...? “ என்றார் வாயிலை பார்த்தவாறு...

“நீங்க வேற அத்தை.. அவங்க எல்லாம் உங்களை மாதிரி மாடர்ன் கிடையாது... இன்னும் பழைய பஞ்சாங்கம்... அவங்களை கூட்டி வந்திருந்தேன் வச்சுக்கங்க.. இப்படி பேசாத, அப்படி சிரிக்காத.. பொண்ணா அடக்க ஒடுக்கமா இரு னு ஒரே அட்வைஸ் மழையா பொழிந்து தள்ளுவாங்க....

நான் இப்படி சுதந்திரமா சுத்த முடியாது.... அதனால இந்த இடம் ரொம்ப தூரம் உங்களுக்கு ட்ராவல் ஒத்துக்காதுனு ஏதேதோ காரணத்தை சொல்லி அவங்களை கழட்டி விட்டுட்டு நான் மட்டும் தனியா வந்திட்டேன் இந்த மந்தியோட பங்சனை கலக்கறதுக்கு...

இன்னைக்கு புல்லா இந்த சந்தியா ப்ரீ பேர்ட் அத்தை....என் இஷ்டத்துக்கு ஆடலாம்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்....

“வாயாடி.... இந்த வாய் அடிக்கறீயே... உன் கூடவேதான சுத்தி இருப்பா என் மருமக.... அவளையும் உன்னை மாதிரி மாற்றி இருக்கலாம் இல்லை... “ என்று அவள் காதை பிடித்து திருகினார் செல்லமாக.....

“ஆங்... வலிக்குது அத்தை...இப்பதான் உங்களை நல்ல மாமியார்னு சர்டிபிகேட் கொடுத்தேன்.....அதுக்குள்ள இப்படி பயங்கர டெரர் மாமியார் னு காமிக்கறீங்களே.... ஏன் டீ மந்தி? எப்படி இவங்களை சமாளிக்கிற? “ என்று தன் காதை பிடித்து கொண்டே சிரித்தவள்

“ஆங்... என்ன கேட்டிங்க அத்தை.. உங்க மருமக ஏன் வாயே பேச மாட்டேங்கிறானா ? அது ஒரு பெரிய கதை.....” என்று இழுத்து அந்த கதையை சொன்னாள் சந்தியா..!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top