• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதோடுதான் நான் பாடுவேன்-46

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-46

“நாங்க இரண்டு பேரும் கிட்ட தட்ட ஒரு மூனு மாசம் இடைவெளியில் தான் பிறந்தோம் அத்தை...

எங்க இரண்டு அம்மாக்களும் எப்பவும் எங்களை ஒன்னா விட்டுட்டு கதை அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க.... அதை பார்த்து பார்த்து இந்த மந்தி சீக்கிரம் பேச ஆரம்பிச்சுட்டா.... நான் மூனு வருசம் வரைக்கும் வாயே பேசலையாம்...

எங்கப்பா வேண்டாத கோவில் இல்லை என் பொண்ணு வாய் பேச மாட்டேங்கிறானு... சமையபுரம் போய் வாய் மாதிரி பொம்மை எல்லாம் கூட வாங்கி உண்டியல் ல போட்டுட்டு வந்தாராம்....

அப்புறம் இந்த மந்தி நல்லா பேசறதை பார்த்த எங்க அம்மா, என்னை புல் டைம் இந்த மந்தி கூடவே உட்கார வச்சுட்டாங்க.... நானும் வேற வழி இல்லாம இவ பேசறதை கேட்டு கேட்டு எனக்கும் பேசணும்னு ஆசை வந்திடுச்சாம்....

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சுட்டேனாம்... அதுக்கப்புறம் இந்த மந்தியை பேச விடாமல் நானே பேச, இவ என் பேச்சை கேட்டு அப்படியே அமைதி ஆகிட்டாளாம்...

அது அப்படியே வளர்ந்து எங்க போனாலும் இவளுக்கும் சேர்த்து நானே பேசிடவும் இவ அப்படியே அமுக்கினியாட்டம் இருந்துகிட்டா...

கடைசியில பார்த்தா இவளுக்கு ஒன்னும் தெரியாதவ, அப்பாவி னு பட்டமும் எனக்கு வாயாடினு பட்டமும் கொடுத்திட்டாங்க.... இது எப்படி இருக்கு? “ என்று சிரித்தாள் சந்தியா....

அதை கேட்டு வாய் விட்டு சிரித்தார் சிவகாமி.....சிறிது நேரம் சிரித்து முடித்தவர்

“சரி டி மா.. உன் கூட பேசிகிட்டே இருக்கலாம் போல ஒருக்கு.. இப்ப வேலை நிறைய இருக்கு.. ஒரு நாள் சாவகாசமா வீட்டுக்கு வா... “ என்று அவள் கன்னம் வருடி சிரித்தவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றார் சிவகாமி...

அவர் சென்றதும் மது அவளை பார்த்து முறைத்தாள்..

“ஏன் டி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட இப்படியா பேசுவ? அத்தை எதுவும் தப்பா எடுத்திருந்தாங்கனா? கொஞ்சமாவது பெரியவளா லட்சணமா நடந்துக்கோ... “ என்று முறைத்தாள் மது

“ஹா ஹா ஹா நோ டென்சன் மந்தி.... அப்புறம் அந்த குட்டி மந்தியும் இந்த சித்தியை வயித்துக்குள்ள இருந்தே திட்டும்... அப்படியே உன் மாமியார் தப்பா எடுத்திருந்தாலும் அதை கரெக்ட் பண்ணிட மாட்டேனாக்கும்.. நோ வொர்ரிஸ் ... பி ஹேப்பி.. என்ஜாய் யுவர் டே.... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்....

அப்பொழுது பாரதி அங்கு வர, மது பாரதியை அழைத்து சந்தியாவை அறிமுக படுத்தினாள்....

“ஹாய் அக்கா.... “ என்றாள் சந்தியா கை நீட்டியவாறு...

அதை கேட்டு முறைத்தவள்

“ஹோய்... என்னை பார்த்தா அக்கா மாதிரியா இருக்கு..? . என்ன உங்களை விட ஒரு இரண்டு வயது அதிகமா இருக்கும்.. அதுக்குனு உடனே என்னை அக்கா ஆக்கிட்டியே...

இந்த மதுகுட்டியும் அப்படிதான் கூப்பிட்டா.. இப்பதான் பாரதினு கூப்பிடறா.. அதனால் நீ என்னை பெயர் சொல்லியே கூப்பிடு... “ என்றாள் பாரதி அவளை செல்லமாக முறைத்தவாறு ...

அதை கேட்டு ஆங் என்று முழித்தவள் தன்னை சமாளித்து கொண்டு

“ஓ.... நீங்க என்றும் பதினாறு ஸ்ரீதேவி யா? ...சாரி பாரதி... அதை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்லை பாரதி.... இனிமேல் நீயே மரியாதை கொடுனு கெஞ்சி கேட்டாலும் உனக்கு மரியாதை கிடையாது பாரதி.... இது ஓகே வா பாரதி... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் சந்தியா....

“அடிப்பாவி.... ஏதோ ஒரு பேச்சுக்கு என்னை பெயர் சொல்லி கூப்பிடு னா வார்த்தைக்கு வார்த்தை என் பெயரை ஏலம் விட்டுகிட்டிருக்க...

என் புருசன் கூட என் பெயரை இத்தனை தரம் சொன்னது கிடையாது.... நீ வாய்க்கு வாய் என் பெயரை சொல்ற “ என்று முறைத்தாள் பாரதி...

“அப்படியா.... ஆதி மாம்ஸ் உன் பெயரை சொல்லி கூப்பிடறதில்லையா? எங்க அவர்... இப்பவே பஞ்சாயத்தை கூட்டிடலாம்..... “ என்றவள் சற்று தொலைவில் நின்று பேசி கொண்டிருந்த ஆதியை கண்டவள்

“மாம்ஸ்.... ஆதி மாம்ஸ்... இங்க வாங்க... உங்க பொண்டாட்டி உங்க மேல கம்ப்லெயின்ட் கொடுத்திருக்கா.... என்னானு விசாரிக்கலாம்.... “ என்றாள் சத்தமாக....

அதை கேட்டு ஆதி திரும்பி பார்க்க, மூன்று பெண்களும் அவனை பார்த்து சிரித்து கொண்டிருப்பதை கண்டவன்,

“ஆஹான்... நம்மள வச்சு ஏதோ காமெடி பண்ணிகிட்டிருக்காங்க... சிக்கிடாத ஆதி... “என்று உசார் ஆனவன்

“அம்மா.... தாய்க்குலமே... என்னால என் பொண்டாட்டி ஒருத்தியையே சமாளிக்க முடியலை.. இதுல நீ வேறயா? தாங்காதும்மா.... என்னை ஆளவிடுங்க... நீங்க நடத்துங்க உங்க கச்சேரியை... “ என்று கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து நழுவினான்....

“ஆஹா... பாரதி.. அப்படி என்ன சொக்கு பொடி போட்டு வச்சிருக்க... இல்லை அப்படி மிரட்டி வச்சிருக்கியா ? பாரு... மாம்ஸ் எப்படி அலறி அடிச்சு ஓடறார்....

இதுக்கெல்லாம் நம்ம டாக்டர் வசி மாம்ஸ் தான் லாயக்கு...எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சுகிட்டே தாங்குவாராம்....” என்று சிரித்தாள் சந்தியா....

“ஹே சந்தியா... உனக்கு எப்படி எங்களை எல்லாம் தெரியும்? “ என்றாள் பாரதி ஆச்சர்யமாக

“ஹா ஹா ஹா... இந்த உலகமே என் கையில்.. அதுல தம்மாதுண்டு உங்க கேங்கை பத்தி தெரியாதாக்கும்... “ என்றவளை பாரதி முறைக்க

“ஹீ ஹீ ஹீ நோ.. டென்சன் ரதி டார்லிங்... அப்படிதான உன் புருசன் உன்னை கொஞ்சுவார்.. “ என்று ரகசியமாக கண்ணடித்து சிரித்தவள்

“இந்த மந்தி இருக்காளே... இவ கிட்ட பேசறப்ப எல்லாம் உங்களை பத்திதான் பேசுவா... அவ புருசனை பத்தி சொல்றாளோ இல்லையோ அவ மாமியார், நாத்தனார் அப்புறம் உங்களோட தானா சேர்ந்த கூட்டம்… அதுல யார் யார் எப்படி னு புல் ஹிஸ்டரி ஜ்யாக்ரபியே எனக்கு அத்துபடி...

எனக்கு பொழுது போகலைனா இந்த மந்தி கிட்ட தான் போன் பண்ணி கதை கேட்பேன்.. அவளும் எல்லாரையும் பற்றி கதை கதையா சொல்வா... உங்க போட்டோவும் அனுப்பி வச்சிருக்கா... அதான் ஆதி மாம்ஸ் ஐ பார்த்த உடனே கண்டு புடிச்சிட்டேன்....

உன்னையும் தெரிஞ்சது... ஆனா போட்டோல இருந்ததை விட இப்ப கொஞ்சம் கலர் கம்மியான மாதிரி ஆய்ட்டீங்க... கொஞ்சம் வெளில சுத்தறத குறச்சுக்கோ ரதி.... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் சந்தியா...

பாரதி அவள் காதை பிடித்து திருகி

“வாயாடி.. எனக்கே அக்காவா இருப்ப போல இருக்கு...” என்று சிரித்தாள் பாரதி...

அதே நேரம் ஜெயந்த் மற்றும் வசந்த் உள்ளே வர, மது சென்று அவர்களை வரவேற்றாள்....

ஜெயந்த் க்கு மதுவை அந்த தாய்மையின் அழகில் காண மனம் நிறைந்து இருந்தது....

ஜெயந்த் மற்றும் வசந்த் இருவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்...பின் நிகிலனையும் சந்தித்து வாழ்த்து சொல்லினர்... நிகிலனும் வெட்க பட்டு புன்னகைத்தவாறு அவர்கள் வாழ்த்தை ஏற்று கொண்டு பின் அவர்களை அழைத்து சென்று அமர வைத்தான்....

அதற்குள் சிவகாமி பாரதியை அழைத்து மதுவுக்கு அலங்காரம் பண்ணி விட சொல்ல, பாரதியும் சந்தியாவும் மதுவை அழைத்து கொண்டு சென்று அவளுக்கு திருமண பட்டு புடவையை கட்டி, தலை பிண்ணி தலை நிறைய மல்லிகையை வைத்து கொஞ்சம் நகைகளையும் பூட்டி விட்டாள் பாரதி....

ஏற்கனவே நல்ல அழகாக இருப்பவள்… இப்பொழுது தாய்மையின் பூரிப்பிலும் அந்த எளிய அலங்காரத்திலும் இன்னும் ஜொலித்தாள் மதுவந்தினி...

பின் எல்லோரும் வந்துவிட, பாரதி மதுவை அழைத்து கொண்டு வந்து அந்த ஹாலின் நடுவில் போடபட்டிருந்த மணையில் அமர வைத்தாள்...

பட்டு புடவை சரசரக்க தலையை குனிந்த படியே வந்தவளை கண்டதும் அருகில் நின்றிருந்த நிகிலன் மனம் எகிறி குதித்தது....

அவளையே இமைக்க மறந்து பார்த்தான் ஓர கண்ணால்....

அவனையுமே அவனுடைய திருமண பட்டு வேஷ்டி சட்டையை போட வைத்திருக்க, அந்த ஆடையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் முகத்தில் தான் தந்தையாக போகும் பூரிப்புடன்....

தலையை குனிந்த படியே நடந்து வந்தாலும் தன் கணவன் நின்று கொண்டிருந்ததை கண்டவள் கொஞ்சமாக தலையை நிமிர்த்தி ஓர கண்ணால் தன் கணவனை காண அவள் உள்ளேயும் சிலிர்த்தது....

எவ்வளவு அழகாக கம்பீரமாக முகத்தில் பூரிப்புடன் நிற்கும் அவனை கண்டதுமே மனம் நிறைந்து விட்டது... அவனையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள் ஓரக்கண்ணால்....

சந்தியாதான் அவளிடம் குனிந்து,

“போதும் டீ.... சைட் அடிச்சது.. என்னமோ உன் புருசனை இப்பதான் பார்க்கிற மாதிரி இப்படி முழுங்கிடற மாதிரி பார்க்கற..அவர் என்னடான்னா அதுக்கு மேல...

பெரிய ACP சார்... IPS ஆபிசர்.. பொண்டாட்டியை நேருக்கு நேராக பார்க்காமல் திருடன் மாதிரி ஓர கண்ணால் பார்த்து சைட் அடிக்கிறார்... என்னடி நடக்குது இங்க...? “ என்று அவள் கையை கிள்ளினாள் சந்தியா....

அவளை முறைத்தவள் லேசாக கன்னம் சிவக்க, தன் பார்வையை உடனே மாற்றி கொண்டாள் மது....

பாரதியும் சிரித்து கொண்டே அவளை அழைத்து வந்து மனையில் உட்கார வைத்தாள்... பின் நிகிலனையும் அழைத்து மது அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தனர்...

அவனும் வெட்க பட்டு கொண்டே நெழிந்தவாறு அவள் அருகில் அமர்ந்தான்....

"மாம்ஸ்.. போதும்.. ரொம்ப வெட்க படாதிங்க... கல்யாணத்தப்போ முறைச்சுகிட்டே இருந்தீங்களாம்.. உங்க ஆளுதான் சொன்னா..... அதனால் இப்ப புல்லா சிரிச்சுகிட்டே போட்டோக்கு போஸ் கொடுங்க பார்க்கலாம்.. " என்றாள் சந்தியா சிரித்தவாறு ....

நிகிலனும் அதை கேட்டு சிரிக்க, மதுவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.. அவனின் கம்பீர சிரிப்பையே அடிக்கடி ரசித்தாள் ஓரக் கண்ணால்...

அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்களை வைத்தே விழாவை ஆரம்பித்தனர்...

*****

சுமங்களிகளாக இருக்கும் வயது முதிர்ந்த சில பெண்மணிகளை அழைக்க, அவர்களும் தங்களையும் பொருட்டாக, சொந்தமாக மதித்து அழைக்கிறார்களே என உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்து போய் முன்னால் வந்தவர்கள் மதுவுக்கு சந்தனம் பூசி, வளையல் அடுக்கி, மஞ்சள் நீர் வைத்திருந்த அந்த சொம்பால் தலை சுத்தி அவளுக்கு வளையலை போட்டு அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்....

நிகிலன் கன்னத்திலும் சந்தனத்தை தடவி அவனையும் வாழ்த்தினர்....அதன் பின் ஒவ்வொருவராக மதுவுக்கு வளையல் அடுக்கி ஆசி வழங்க, சாரதாவும் மனம் நெகிழ்ந்து போய் தன் மகளுக்கு சந்தனம் பூசி அவளை ஆசிர்வதித்தார்....

சிவகாமியையும் அழைத்தாள் பாரதி....

அவரோ தான் ஒரு அமங்கலி என முன்னால் வர மறுக்க, சந்தியா போய் அவரை இழுத்து வந்தாள்.. அதே போல ஜானகி, சுசிலா, ரமணி, மீனாட்சி என் அனைவரும் மதுவுக்கு வளையல் அடுக்கி மனம் நிறைந்து வாழ்த்தினர்....

ஆதி இதையெல்லாம் தன் கேமிராவில் பதிந்து கொண்டிருந்தான்...

கடைசியில் பாரதியும் மதுவிற்கு கன்னம் நிறைய சந்தனத்தை பூசி பின் நிகிலன் முகம் முழுவதுமே பூசி விட்டாள்...

சந்தியாவும் அதே போல செய்ய, அந்த இடமே கலகலவென்று சிரிப்பொலியில் நிறைந்து இருந்தது...

கார்த்தியை தூக்கி வைத்து கொண்டு இருந்த அகிலா தானும் அதே போல செய்ய வேண்டும் என்று மதுவின் அருகில் வந்தவள், கார்த்தியை கீழ இறக்கி விட்டு தன் அண்ணிக்கு சந்தனத்தை தடவினாள்...

அதை உற்று பார்த்து கொண்டிருந்த அந்த குட்டியும், தன் பிஞ்சு கையால் கொஞ்சம் சந்தனத்தை எடுத்து தன் குட்டி கால்களை எக்கி மதுவின் கன்னத்தை தொட முயன்று கொண்டிருக்க, அதை கண்டு சிரித்த நிகிலன் எழுந்து கார்த்தியை தூக்கி கொள்ள, அவளும் மதுவின் கன்னத்தில் சந்தனத்தை பூசினாள் தன் தளிர் கரங்களால்....

அதை கண்டு அனைவரும் சிரிக்க , அந்த குட்டி தேவதையும் வெட்க பட்டு சிரித்தாள்.....

உடனே சந்தியா

“மாம்ஸ்... லாஸ்ட் உங்க சான்ஸ்... நீங்களும் உங்க பொண்டாட்டிக்கு பூசி விடுங்க.. இன்னைக்கு இந்த மந்தியோட கன்னத்தை ஒரு வழி பண்ணிடலாம்... “ என்று சிரித்தாள்...

அதை கேட்டு நிகிலன் வெட்க பட்டு தயங்கி நிக்க,

“என்ன மாம்ஸ்..? இப்படி வெட்க படறீங்க.. ஒரு வேளை பாரதி ஆதி மாம்ஸ் ஐ மிரட்டி வச்சிருக்கிற மாதிரி, இந்த மந்தியும் உங்கள மிரட்டி வச்சிருக்காளா??

நான் இருக்கேன் உங்க பக்கம்.... நீங்க தைர்யமா அள்ளி பூசுங்க... “ என்று சீண்ட, அதற்கு மேல் தயங்காமல் அந்த கின்னத்தில் இருந்த சந்தனத்தை எடுத்து தன் மனைவியின் குண்டு கன்னத்தில் பூசினான் நிகிலன்....

அவளும் வெட்க பட்டு அவன் முகம் நோக்க, இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்து கொண்டன நீண்ட நாட்களுக்கு பிறகு.....

அவன் கை பட்டதும் அவள் உள்ளே சில்லிட, அதே உணர்வுதான் நிகிலனுக்கும்.. அவள் கன்னம் தீண்டிய அவன் கரங்கள், அந்த சந்தனத்தின் குளிர்ச்சியை விட அவள் கன்னம் சில்லென்று இருக்க, அவன் உள்ளேயும் சில்லென்ற இன்ப தீண்டல்கள்...

உடல் எல்லாம் பரவசம்… புதுவெல்லம் பாய்ந்தோடியதை போல இருந்தது அவன் உள்ளே....

“ம்ம்ம்ஹூம்..... மாம்ஸ்.... இது தான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கறதுனு சொல்றது.. ஏதோ போனா போகுது பொண்டாட்டியை யே ஏக்கமா பார்த்துகிட்டிருக்கீங்கனு ஒரு சான்ஸ் வாங்கி கொடுத்தா, உடனேயே டூயர் பாட ஆரம்பிச்சுட்டீங்க...

நாங்க எல்லாம் இன்னும் இங்கதான் இருக்கோம்.. நினைப்புல வைங்க.... “ என்று சிரித்தாள் சந்தியா...

அதற்குள் சுதாரித்து கொண்டவன் மேலும் வெட்க பட்டு சிரித்து கொண்டே தன் கைகளை எடுத்து கொண்டான்.. பின் தானாகவே அருகில் இருந்த வளையலை எடுத்து அவள் கரம் பிடித்து அவளுக்கு அணிவித்தான்...

மதுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியாத ஒரு இனம் புரியாத உணர்வு...

“இது போதும் எனக்கு...இந்த நொடிகள் போதும்.... இனி எத்தனை துன்பம் வந்தாலும் தாங்குவேன்...” என்று உள்ளுக்குள் சிலிர்த்து போனாள்..

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க, ரமணிக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது... ஆனாலும் சின்ன வருத்தம் தன் மருமகளுக்கும் இந்த மாதிரி நல்லது நடக்கலையே என்று..

ஆனாலும் தன் வருத்தத்தை மறைத்து கொண்டு நிகிலனாவது நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்தினார்...

*****

எல்லாரும் வளையல் அடுக்கி முடித்திருக்க, மது எல்லோரிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்...அந்த இல்லத்து பெரியவர்களிடமும் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து வணங்கினாள்...

அவர்களுக்கும் மனம் கொள்ளா மகிழ்ச்சி... ஏற்கனவே மதுவை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.... இப்பொழுது தங்களையும் மதித்து அவள் காலில் விழ, ஒவ்வொருவரும் அவளை தொட்டு தூக்கி அவள் கன்னம் வருடி ஆசிர்வதித்தனர் மனம் நிறைவுடன்.....

பின் வழக்கபடி வேற யாராவது திருமணம் ஆகி குழந்தை இல்லாத பெண்களுக்கு மனையில் அமர வைத்து வளையல் அடுக்குவர் என்பதால் அந்த இல்லத்தில் வேலை செய்யும் சமீபத்தில் திருமணமான பெண் ஒருத்தியையும் ரமணி அழைத்து வந்து அவளுக்கும் வளையல் அடுக்க சொன்னார்...

பின் சிவகாமி பாரதியை பார்த்து

"பாரதி மருமகளே .. அடுத்து நீயும் மனையில உட்கார்.. " என்றார் சிரித்து கொண்டே

"எதுக்கு மாமியாரே.. ? " என்றாள் பாரதி புரியாமல்

"ஹ்ம்ம் கார்த்தி குட்டிக்கு கூட விளையாட அடுத்து ஒரு தம்பி வேணும் இல்ல.. அதுக்குத்தான்.. பாவம் அவளும் இந்த இரண்டு கிழவிங்க கூடயே எத்தனை நாளைக்கு விளையாடறது? " என்று சிரித்தார் சிவகாமி....

அதை கேட்டு கன்னம் சிவந்தாள் பாரதி...அவளின் வெட்கத்தையே இமைக்க மறந்து ரசித்தான் அவள் எதிரில் இருந்த அவள் கணவன் ஆதி....

தன் கேமராவில் அவளை மட்டும் சூம் பண்ணி அவள் சிவந்து சிரிக்கும் அழகை அழகாக பதிந்து கொண்டான் உள்ளுக்குள் சிலிர்த்தவாறு....

தன் கன்ன சிவப்பை மறைத்து கொண்டவள்,

"ஹீ ஹீ ஹீ ... நான் எப்பவோ ரெடி மாமியாரே.. ஆனால் எங்க வீட்ல ஒரு டாக்டர் மாமியார் இருக்காங்களே.. அவங்க இளவரசிக்கு நாலு வயசு ஆனாதான் அடுத்த குழந்தையை பத்தி யோசிக்கணும்னு சொல்லி தடா போட்டுட்டாங்க....

என் பையன் வந்துட்டா அவங்க மொத்த பாசமும் என் பையனுக்கு போய்டுமாம்... அவங்க இளவரசி பொக்குனு போய்டுவானு தடா போட்டுட்டாங்க... " என்றாள் வருத்தமாக...

அதை கேட்டு ஜானகியும் சுசிலா வும் சிரிக்க,

“என்ன சுசி அப்படியா? “ என்றார் சிவகாமி..

“ஆமாம் சிவா.... கொஞ்ச நாளைக்கு அவ வாழ்க்கையை அனுபவிக்கட்டும்... உன்ன மாதிரி அடுத்தடுத்து இரண்ட பெத்துகிட்டு அதுங்களை வளர்க்கறதுக்கே வாழ்க்கை பூரா ஓடணும்..

அதான் கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணட்டும் னு சொல்லிட்டேன்... அதைத்தான் இப்படி மாத்தி சொல்றா... "என்று சிரித்தார் சுசிலா...

"ஹ்ம்ம்ம் எனக்கு இது மாதிரி எடுத்து சொல்ல அப்ப யாரும் இல்லை.. இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் கொடுத்து வச்சவளுங்க.. " என்றார் சிவகாமி பெருமூச்சோடு....

அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த சந்தியா.

“அத்தை... நானும் அதுல உட்காரவா? எனக்கும் வளையல் போட்டு விடறீங்களா? " என்றாள் புன்னகைத்தவாறு.

அதை கேட்டு அனைவரும் சிரிக்க ,

“எதுக்கு அத்தை எல்லாம் சிரிக்கறீங்க? “ என்றாள் முழித்தவாறு...

“ஹ்ம்ம்ம் அது கல்யாணம் ஆன பொண்ணுங்க உட்காரது மருமகளே... அவங்களும் சீக்கிரம் உண்டாகி குழந்தை பெத்துக்கணும்னு இப்படி உட்கார வச்சு வளையல் போடறது....... என்ன உன்னையும் உட்கார வச்சுடலாமா? "என்று சிரித்தார் சிவகாமி.....

“ஆத்தி.... என் புருசனையே நான் இன்னும் பார்க்கலை... அதுக்குள்ள குழந்தையா?... என்னை ஆள விடுங்க...” என்று கன்னம் சிவந்து சிரித்து கொண்டே ஓடி விட்டாள் சந்தியா.....

பின் அனைவரும் சிரித்து கொண்டே சாப்பிடும் இடத்திற்கு சென்றனர்....

கேட்டரிங் மூலமாக முன்பே சாப்பாடு ஏற்பாடு செய்திருக்க ஆதி, ஜெயந்த், கௌதம், வசந்த் என்று அனைவரும் பரிமாற, அந்த இல்லத்து பெரியவர்களும் அவங்க வீட்டு விழா மாதிரி மன திருப்தியுடன் சாப்பிட்டனர்..

விழாவிற்கு வந்திருந்தவர்களும் சாப்பிட்டு முடிய, அந்த விழா இனிதாக முடிந்த திருப்தியில் அனைவரும் விடை பெற்று சென்றனர்....

*****

விழா முடிந்ததும் மதுவை சிவகாமி தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்...

பூஜை அறையில் விளக்கேற்றி அந்த முருகனை வணங்கி விட்டு

“நல்ல படியா குழந்தையை பெத்து எடுத்துகிட்டு வா டா.. " என்று அந்த முருகனின் திருநீற்றை அவள் நெற்றியில் வைத்து ஆசிர்வதித்தார்...

சாரதாவும் சண்முகமும் வளைகாப்பிற்கு பிறகு மதுவை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கேட்டு கொண்டனர்..

அவர்களுக்கும் ஒரே மகள் என்பதால் அவளை சீராட்டி பார்க்க அவர்களுக்கும் ஆசையாக இருக்கும் என்று சிவகாமி சம்மதித்தார்..

அதோடு இங்க தன் மகன்தான் இன்னும் முறுக்கி கொண்டே இருக்கறானே.. தன் மருமகள் அவள் பிறந்த வீட்டிலாவது சென்று நிம்மதியாக இருக்கட்டும் என்று அவளை அனுப்பி வைக்க ஒத்து கொண்டார்..

அதன்படி இங்கு வீட்டிற்கு வந்த பிறகு, மது அவள் பிறந்த வீட்டிற்கு செல்வதாக இருந்தது...

தன் அறையில் அவளுக்கு வேண்டிய ஆடை மற்றும் சில புத்தகங்களை நேற்றே பேக் பண்ணி வைத்து விட்டாள் மது.. ஏனோ அவளுக்கு தன் தாய் வீட்டிற்கு செல்ல மனமேயில்லை.. .

தன் கணவன் பாராமுகமாக இருந்தாலும் அவன் முகத்தை பார்த்து கொண்டேயாவது இருக்கலாம்...

ஆனால் அங்கு சென்று விட்டால் கண்டிப்பா அவன் தன்னை பார்க்க வரமாட்டான்.. அவளும் இங்க வர முடியாது... அதனால் இங்கயே இருக்கலாம் என்று எண்ணியவள் அதை எப்படி தன் அத்தையிடம் சொல்லுவது என்று தயக்கமாக இருந்தது...

அட்லீஸ்ட் தன் கணவன் பார்த்து போக வேண்டாம் என்று சொன்னாலாவது அதை காரணம் காட்டி இருந்து விடலாம் என்று எண்ணியிருக்க, அவனோ இவள் போவதை கண்டு கொள்ளவேயில்லை....

தன் பிறந்த வீட்டிற்கு செல்லுமுன் எதையோ மறந்து விட்டதை போல இருக்க தன் அறைக்கு வந்து தேடி கொண்டிருந்தாள் மது ...

அப்பொழுது நிகிலன் எதையோ எடுக்க அவன் அறைக்கு வந்திருக்க, அங்கு அவளை கண்டதும் அப்படியே நின்று விட்டான்....

இவ்வளவு நேரம் தெரியாத அவள் பிரிவு இப்பொழுது அவள் தன்னை விட்டு செல்கிறாள் என்றதும் அவன் உள்ளேயும் ஏதோ அழுத்த மனம் பாரமாக இருந்தது...

எனனதான் அவளிடம் பாராமுகமாக இருந்தாலும், அவனை அறியாமலயே அவள் முகத்தை பார்த்து கொண்டிருப்பதே அவனுக்கு நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கும்..

இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் உறங்கி கொண்டிருக்கும் அவள் முகத்தை பார்த்தாலே அவனுக்கு நிம்மதியான உறக்கம் வந்து விடும்....

அதுவும் அவள் வயிற்றில் இருப்பது தன் குழந்தை என உணர்ந்ததில் இருந்தே அவனும் கொஞ்சம் கொஞ்சமாக இலக ஆரம்பித்து இருந்தான்..

இந்த நிலையில் அவள் விட்டு செல்கிறாள் என்பது மனதை அழுத்த, அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்....

அவன் பார்வையை கண்ட மது உடனே தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள்...

பின் கொஞ்சம் தைர்யத்தை வரவழைத்து கொண்டு கடைசி முயற்சியாக

“நான் போகட்டுமா? “ என்றாள் அவனை ஏக்கமாக பார்த்து கொண்டே...

வேண்டாம்..போகாதே... “ என்று ஒரு வார்த்தை சொல்லிவிடேன்.. நான் அப்பாகிட்ட சொல்லி இங்கயே இருந்திடறேன்... “ என்ற இறைஞ்சுதல் அவள் கண்களில்....

தன் கணவனை பிரிந்து செல்ல கஷ்டபட்டு இங்கயே தங்கி விட துடிக்க, அவனையே ஏக்கமாக பார்த்தாள் மது...

நிகிலனுக்கும் அதே பீல்தான் அவளை இங்கயே தங்க வைக்கணும் என்று.. ஆனாலும் மனம் விட்டு தன் ஈகோவை விட்டு சொல்ல முடியாமல் அவள் கேட்ட கேள்விக்கு

“உன் விருப்பம்...” என்றான்.. ஆனாலும் இங்கயே இருந்து விடேன்.. என்றது அவன் உள் மனம்...

அதற்குள் கீழிருந்து சிவகாமி மதுவை அழைக்க, அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் கண்ணில் தேங்கிய நீருடன்

“நல்லா சாப்பிடுங்க.. உடம்பை பார்த்துக்கங்க... “ என்று தரையை பார்த்து சொல்லி விட்டு, அவனை கடந்து சென்றாள் தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு...

நிகிலனுக்குமே ஏனோ தன் உயிரை பிரித்து எடுத்து செல்வது போன்ற வலிதான்... ஆனாலும் அதை அடக்கி கொண்டு அவனுமே கீழிறங்கி வர, பின் அனைவரிடமும் விடை பெற்று காரில் ஏறினாள்...

கௌதம் தான் காரை ஓட்டினான்... சிவகாமி, அகிலா, நிகிலன் என அனைவரும் வாயில் வரை வந்து நிக்க, தன் கணவனை கண் நிறைய கண்டு மனதில் நிரப்பி கொண்டு எல்லோருக்கும் கை அசைத்து விடை பெற்று சென்றாள் மதுவந்தினி.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top