- Joined
- Jul 28, 2018
- Messages
- 2,806
- Reaction score
- 1,352
32
ராகேஷ் அறைக்குள் வந்தபோது சவிதா முடியைப் பின்னலிட்டுக் கொண்டிருந்தாள். ராகேஷை கண்டதும் “மாமா இப்படியெல்லாம் திட்டுவாங்களா? பயந்துட்டேன்...” என்றாள்.
சிரிப்புடன் “ஒரு நாள் நீயும் வாங்குவப் பாரு...” என்று ராகேஷ் கூற “ஆச தான்... அதெல்லாம் ஒண்ணும் வாங்க மாட்டேன்... சீக்கிரம் கிளம்புங்க” என்றுக் கூறி பின்னலிட்ட முடியில் பாண்டை மாட்டி வெளியே வந்தாள்.
உடை மாற்றி வந்த ராகேஷ் “சவி... அங்க எது நடந்தாலும் நீ குறுக்கப் பேசாத...” என்றான். “ம்ம்... பேச மாட்டேன்” என்று சவிதா கூற “தேவியும் எதுவும் பேசாமப் பார்த்துக்கோ” என்றான்.
“சரி ராகேஷ்... நாங்க எதுவும் பேச மாட்டோம்... எதுவா இருந்தாலும் நீங்களேப் பேசிக்கோங்க... போதுமா... நாங்க அமைதியா நின்னு வேடிக்கைப் பார்க்குறோம்...”
“என்ன டி ரொம்ப சலிச்சுக்குற?” என்று ராகேஷ் கேட்க “அதெல்லாம் ஒண்ணும் இல்ல...” என்றுக் கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டு “வாங்கப் போகலாம்” என்றாள் சவிதா.
அவள் கைப் பிடித்து “நெஜமா ஒண்ணும் இல்லையா?” என்று ராகேஷ் கேட்க அவன் மறுக் கன்னத்திலும் முத்தமிட்டு “நெஜமா ஒண்ணும் இல்ல” என்றாள் சவிதா.
“நெஜமாவே ஒண்ணுமே இல்லையா?” என்று ராகேஷ் மீண்டும் அழுத்திக் கேட்க அவன் இதழில் முத்தமிட்டு “இப்போப் போலாமா?” என்றுக் கேட்டாள் சவிதா.
சவிதா செய்ததுப் போலவே அவளை அணைத்து அவள் இதழில் முத்தமிட்ட ராகேஷ் “ஒண்ணும் இல்லையா? அப்போ சரி... வாப் போகலாம்” என்றுக் கூறிப் புன்னகைத்தான். சவிதா வெட்கப் புன்னகையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பி தேவியின் வீடு இருக்கும் தெருவை அடைந்தனர். முத்துவும் பிரபுவும் அங்கு இருக்கவே அவர்களுக்குத் தலையசைத்து விட்டு முன்னேச் சென்றான் ராகேஷ்.
இவர்கள் வீட்டினுள் நுழையும் சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த தேவி வந்தவர்களைக் கண்டு ஹாலின் ஒரு மூலையில் சென்று நிற்க சவிதா அவள் அருகில் சென்று அவள் கைப் பிடித்து நின்றாள்.
தேவியின் கை லேசாக நடுங்கவும் “என்ன தேவி? டென்ஷன் ஆகாத... அவங்கப் பேசிக்குவாங்க...” என்று அவளுக்கு தைரியம் சொன்னாள் சவிதா. தேவி அவளைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றாள்.
ராகேஷ், முத்து, பிரபு மூவரும் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தனர். சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்த குமரன் “என்ன பா? எல்லாரும் சேந்து வந்துருக்கீங்க...” என்றுக் கேட்டு அங்கிருந்த சோபாவில் அவர்களுக்கு எதிரில் அமர்ந்தார்.
ராகேஷிற்கும் பிரபுவிற்கும் நடுவில் அமர்ந்திருந்தான் முத்து. “என்னமோத் தெரியாத மாதிரிக் கேக்குறாருப் பாரு...” என்று முணுமுணுத்தவனை “சும்மா இரு டா” என்று அடக்கினான் ராகேஷ்.
“சித்தப்பா... இன்னும் எதுக்கு வெயிட் பண்ணுறீங்க? தேவிக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்ல?” என்றுப் பேச்சை ஆரம்பித்தான் பிரபு.
ஒரு முறை எதிரில் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்தவர் “இந்த விஷயம் பேசுறதுக்கு எதுக்கு இவனக் கூடக் கூட்டிட்டு வந்த?” என்று முத்துவை காட்டிக் கேட்டார் குமரன்.
பிரபு “அவனுக்கும் உங்க முடிவென்னன்னுத் தெளிவாப் புரிய வெக்கணும்னு தான். நீங்க சொல்லுங்க” என்றான் விடாமல். “எனக்கு...” என்று அவர் ஆரம்பிக்கும்போதே “எனக்கு இந்தப் பயலக் கண்டாலே ஆகல சித்தப்பா. இவனத் தவிர வேற யாருக்கு வேணா என் தங்கச்சியக் கட்டிக் குடுங்க” என்றான் பிரபு.
சமையலறையில் இருந்து இவர்கள் பேச்சைக் கேட்ட பூமா அனைவருக்கும் காபி எடுத்து வந்துக் கொடுத்தார். எல்லோரும் கப்பை எடுத்துக் கொண்டதும் சென்று தேவியின் மறுபுறம் நின்றுக் கொண்டார்.
காபியை சுவைத்துக் கொண்டே “எனக்கும் இதுல விருப்பம் இல்ல தான்” என்று இழுத்தார் குமரன். “அப்பறம் எதுக்குங்க முதல் தடவை இவன் தேவிய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தப்போ எப்போக் கல்யாணத்த வெச்சுக்கலாம்னுக் கேட்டீங்க?” என்று நிதானமாக அவரைக் கேள்விக் கேட்டான் ராகேஷ்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்றுத் தெரியாமல் விழித்தவர் அதை முகத்தில் காட்டிக் கொள்ள கூடாது என்றெண்ணி தலையைத் தாழ்த்தி காபிப் பருகுவது போல் பாவனைச் செய்தார். அந்த சில நொடிகளைப் பயன்படுத்திய ராகேஷ் பிரபுவிடம் கண்ணைக் காட்டினான்.
நடப்பதனைத்தையும் ஒருப் பார்வையாளனாக நடுவில் அமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்த முத்து ராகேஷ் கண்ணைக் காட்டவும் “நடத்துங்க டா” என்றுக் கூறி சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
“ஆமா... பின்னப் பொண்ணக் கூட்டிட்டு பைக்ல வீடு வரைக்கும் வந்தா... கட்டிக்கிற எண்ணம் இருக்கான்னுக் கேக்க தான் செய்வோம்” என்றான் பிரபு.
தன் கையிலிருந்த காபிக் கோப்பையை முன்னால் இருந்த டேபிளில் வைத்த ராகேஷ் பிரபுவின் புறம் திரும்பி அமர்ந்து “கட்டிக் குடுக்கற எண்ணம் இல்லன்னா எதுக்கு அப்படிக் கேக்கணும்?” என்றுக் கேட்டான்.
ராகேஷ் செய்ததுப் போலவே தானும் அவன் புறம் திரும்பி அமர்ந்த பிரபு “பொண்ணப் பெத்தவங்க பயப்பட தான செய்வோம்” என்றான்.
“எதுக்கு பயப்படணும்? அவனும் கட்டிக்குறேன்னு தானக் கேக்குறான்...” என்றான் ராகேஷ்
“அவன் எங்கக் கேட்டான்? அந்தப் புள்ளைக்கிட்ட மணிக்கணக்குலப் பேசுறான்... எங்கக்கிட்ட எங்கப் பேசுறான்?” என்றுக் குற்றம் சாட்டினான் பிரபு.
“அதுலயே நீங்கப் புரிஞ்சுக்க வேண்டாமா? அவனுக்கு இஷ்டம் இருக்குன்னு... சரி இப்போ என்ன? கேக்கணும்... அவ்வளவு தான... நான் கேக்குறேன்... தேவிய முத்துவுக்கு கட்டிக் குடுப்பீங்களா?” என்று விட்டுக் கொடுப்பதுப் போல் பேசினான் ராகேஷ்.
“எனக்கு இஷ்டம் இல்ல” பட்டென்று வந்தது பிரபுவின் பதில்.
“அதான் ஏன்? அவன் படிச்சுருக்கான். இன்னும் கொஞ்ச வருஷத்துல நல்ல நெலமைக்கு வந்துப் பெரிய அட்வோகேட் ஆயிடுவான். அப்பறம் என்ன?” குமரனின் முகத்தைப் பார்த்துக் கொண்டேக் கேட்டான் ராகேஷ்.
“பொண்ண நல்லாப் பார்த்துப்பான்னு எப்படி நம்புறது?” என்று பதில் கேள்விக் கேட்டான் பிரபு.
“அதெல்லாம் பார்த்துப்பான்... இத்தன நாள் அவங்க ரெண்டுப் பேரும் பழகுறதப் பாக்குற உங்களுக்குத் தெரியாதா? அவன் எப்படிப் பாத்துப்பான்னு?”
இவ்வளவு நேரம் ராகேஷயும் பிரபுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த குமரன் ஒருப் பெருமூச்சை வெளியேற்றித் தன் கையில் இருந்தக் கோப்பையைக் கீழே வைத்தார்.
அவர் குனிந்ததும் “டேய் அவரே டயர்ட் ஆயிட்டாரு... போதும் டா” என்றான் முத்து. அதே நேரம் “பசங்க நல்லா தான் பேசுறாங்க...” என்று சவிதாவிடம் கூறி சிரித்தார் பூமா.
“சரி பா... கட்டிக் குடுக்கறோம்... ஆனா கல்யாணத்த உடனே வெக்கணும். இவன் மேல எங்களுக்கு நம்பிக்க இல்ல... கொஞ்ச நாள் கழிச்சு மாறிடான்னா...” என்றான் பிரபு.
கல்யாணம் என்றுப் பேச்சு வரவும் அவசரமாகத் திரும்பி இவ்வளவு நேரம் எதுவும் பெசாதத் தன் மனைவியையும் மகளையும் பார்த்தார் குமரன்.
பூமா மகளை அணைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன... ஆனால் அதற்கு மாறாக அவர் உதட்டில் புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது.
தேவி சவிதாவின் கையை இறுகப் பற்றி தன் தாயின் தோளில் சாய்ந்திருந்தாள். சவிதாவிற்கு பெரியப் பிரச்சனை எதுவும் வராமல் இது வரை எல்லாம் சுமூகமாக முடிந்ததை எண்ணி நிம்மதியாக இருந்தது.
கிடைத்த இந்த இடைப்பட்ட நேரத்தில் “சூப்பர் மச்சான்...” என்று உணர்ச்சி வசப்பட்டு பிரபுவிற்கு கைக் கொடுத்தான் முத்து. ஒரே நேரத்தில் அவன் பின் மண்டையில் ஓங்கி அடித்தனர் பிரபுவும் ராகேஷும்.
குமரன் இவர்கள் புறம் திரும்பியதும் “என்ன சித்தப்பா அடுத்த முகூர்த்தத்துலக் கல்யாணத்த வெச்சுகலாம்ல?” என்றுக் கேட்டான் பிரபு.
“வெச்சுக்கலாம் தம்பி. தேதிப் பாத்து சொல்லுங்க” என்று சிரிப்புடன் கூறினார் குமரன்.
உடனே பிரபு பூமாவைத் திரும்பிப் பார்க்க அவரும் புரிந்துக் கொண்டவராக அங்கிருந்த காலெண்டரில் நாள் பார்த்துக் கூறினார்.
“சரி பா. இன்னும் 15 நாள்ல கல்யாணம்” என்றுக் கூறி எழுந்து முத்துவிடம் வந்த குமரன் அவன் கைப் பற்றி “சந்தோஷமா மாப்ள?” என்றுக் கேட்டார்.
32 பற்களும் தெரிய சிரித்து வைத்தான் முத்து. அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பதைப் போல் குமரன் தன் அறைக்குச் சென்றார்.
அவர் பின்னாலேயே தேவியை நோக்கிச் சென்ற முத்துவை அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்த ராகேஷ் “டேய் நில்லு டா ஒழுங்கா” என்று அடிக் குரலில் கூறினான்.
பிரபுவும் திரும்பி முறைக்கவும் “ம்ம்கும்ம்... விட மாட்டாய்ங்களே...” என்றுக் கூறி தேவியை பார்த்து கண்ணடித்து அமைதியாக நின்றான் முத்து.
ராகேஷ் அறைக்குள் வந்தபோது சவிதா முடியைப் பின்னலிட்டுக் கொண்டிருந்தாள். ராகேஷை கண்டதும் “மாமா இப்படியெல்லாம் திட்டுவாங்களா? பயந்துட்டேன்...” என்றாள்.
சிரிப்புடன் “ஒரு நாள் நீயும் வாங்குவப் பாரு...” என்று ராகேஷ் கூற “ஆச தான்... அதெல்லாம் ஒண்ணும் வாங்க மாட்டேன்... சீக்கிரம் கிளம்புங்க” என்றுக் கூறி பின்னலிட்ட முடியில் பாண்டை மாட்டி வெளியே வந்தாள்.
உடை மாற்றி வந்த ராகேஷ் “சவி... அங்க எது நடந்தாலும் நீ குறுக்கப் பேசாத...” என்றான். “ம்ம்... பேச மாட்டேன்” என்று சவிதா கூற “தேவியும் எதுவும் பேசாமப் பார்த்துக்கோ” என்றான்.
“சரி ராகேஷ்... நாங்க எதுவும் பேச மாட்டோம்... எதுவா இருந்தாலும் நீங்களேப் பேசிக்கோங்க... போதுமா... நாங்க அமைதியா நின்னு வேடிக்கைப் பார்க்குறோம்...”
“என்ன டி ரொம்ப சலிச்சுக்குற?” என்று ராகேஷ் கேட்க “அதெல்லாம் ஒண்ணும் இல்ல...” என்றுக் கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டு “வாங்கப் போகலாம்” என்றாள் சவிதா.
அவள் கைப் பிடித்து “நெஜமா ஒண்ணும் இல்லையா?” என்று ராகேஷ் கேட்க அவன் மறுக் கன்னத்திலும் முத்தமிட்டு “நெஜமா ஒண்ணும் இல்ல” என்றாள் சவிதா.
“நெஜமாவே ஒண்ணுமே இல்லையா?” என்று ராகேஷ் மீண்டும் அழுத்திக் கேட்க அவன் இதழில் முத்தமிட்டு “இப்போப் போலாமா?” என்றுக் கேட்டாள் சவிதா.
சவிதா செய்ததுப் போலவே அவளை அணைத்து அவள் இதழில் முத்தமிட்ட ராகேஷ் “ஒண்ணும் இல்லையா? அப்போ சரி... வாப் போகலாம்” என்றுக் கூறிப் புன்னகைத்தான். சவிதா வெட்கப் புன்னகையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பி தேவியின் வீடு இருக்கும் தெருவை அடைந்தனர். முத்துவும் பிரபுவும் அங்கு இருக்கவே அவர்களுக்குத் தலையசைத்து விட்டு முன்னேச் சென்றான் ராகேஷ்.
இவர்கள் வீட்டினுள் நுழையும் சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த தேவி வந்தவர்களைக் கண்டு ஹாலின் ஒரு மூலையில் சென்று நிற்க சவிதா அவள் அருகில் சென்று அவள் கைப் பிடித்து நின்றாள்.
தேவியின் கை லேசாக நடுங்கவும் “என்ன தேவி? டென்ஷன் ஆகாத... அவங்கப் பேசிக்குவாங்க...” என்று அவளுக்கு தைரியம் சொன்னாள் சவிதா. தேவி அவளைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றாள்.
ராகேஷ், முத்து, பிரபு மூவரும் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தனர். சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்த குமரன் “என்ன பா? எல்லாரும் சேந்து வந்துருக்கீங்க...” என்றுக் கேட்டு அங்கிருந்த சோபாவில் அவர்களுக்கு எதிரில் அமர்ந்தார்.
ராகேஷிற்கும் பிரபுவிற்கும் நடுவில் அமர்ந்திருந்தான் முத்து. “என்னமோத் தெரியாத மாதிரிக் கேக்குறாருப் பாரு...” என்று முணுமுணுத்தவனை “சும்மா இரு டா” என்று அடக்கினான் ராகேஷ்.
“சித்தப்பா... இன்னும் எதுக்கு வெயிட் பண்ணுறீங்க? தேவிக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்ல?” என்றுப் பேச்சை ஆரம்பித்தான் பிரபு.
ஒரு முறை எதிரில் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்தவர் “இந்த விஷயம் பேசுறதுக்கு எதுக்கு இவனக் கூடக் கூட்டிட்டு வந்த?” என்று முத்துவை காட்டிக் கேட்டார் குமரன்.
பிரபு “அவனுக்கும் உங்க முடிவென்னன்னுத் தெளிவாப் புரிய வெக்கணும்னு தான். நீங்க சொல்லுங்க” என்றான் விடாமல். “எனக்கு...” என்று அவர் ஆரம்பிக்கும்போதே “எனக்கு இந்தப் பயலக் கண்டாலே ஆகல சித்தப்பா. இவனத் தவிர வேற யாருக்கு வேணா என் தங்கச்சியக் கட்டிக் குடுங்க” என்றான் பிரபு.
சமையலறையில் இருந்து இவர்கள் பேச்சைக் கேட்ட பூமா அனைவருக்கும் காபி எடுத்து வந்துக் கொடுத்தார். எல்லோரும் கப்பை எடுத்துக் கொண்டதும் சென்று தேவியின் மறுபுறம் நின்றுக் கொண்டார்.
காபியை சுவைத்துக் கொண்டே “எனக்கும் இதுல விருப்பம் இல்ல தான்” என்று இழுத்தார் குமரன். “அப்பறம் எதுக்குங்க முதல் தடவை இவன் தேவிய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தப்போ எப்போக் கல்யாணத்த வெச்சுக்கலாம்னுக் கேட்டீங்க?” என்று நிதானமாக அவரைக் கேள்விக் கேட்டான் ராகேஷ்.
இதற்கு என்ன பதில் சொல்வதென்றுத் தெரியாமல் விழித்தவர் அதை முகத்தில் காட்டிக் கொள்ள கூடாது என்றெண்ணி தலையைத் தாழ்த்தி காபிப் பருகுவது போல் பாவனைச் செய்தார். அந்த சில நொடிகளைப் பயன்படுத்திய ராகேஷ் பிரபுவிடம் கண்ணைக் காட்டினான்.
நடப்பதனைத்தையும் ஒருப் பார்வையாளனாக நடுவில் அமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்த முத்து ராகேஷ் கண்ணைக் காட்டவும் “நடத்துங்க டா” என்றுக் கூறி சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
“ஆமா... பின்னப் பொண்ணக் கூட்டிட்டு பைக்ல வீடு வரைக்கும் வந்தா... கட்டிக்கிற எண்ணம் இருக்கான்னுக் கேக்க தான் செய்வோம்” என்றான் பிரபு.
தன் கையிலிருந்த காபிக் கோப்பையை முன்னால் இருந்த டேபிளில் வைத்த ராகேஷ் பிரபுவின் புறம் திரும்பி அமர்ந்து “கட்டிக் குடுக்கற எண்ணம் இல்லன்னா எதுக்கு அப்படிக் கேக்கணும்?” என்றுக் கேட்டான்.
ராகேஷ் செய்ததுப் போலவே தானும் அவன் புறம் திரும்பி அமர்ந்த பிரபு “பொண்ணப் பெத்தவங்க பயப்பட தான செய்வோம்” என்றான்.
“எதுக்கு பயப்படணும்? அவனும் கட்டிக்குறேன்னு தானக் கேக்குறான்...” என்றான் ராகேஷ்
“அவன் எங்கக் கேட்டான்? அந்தப் புள்ளைக்கிட்ட மணிக்கணக்குலப் பேசுறான்... எங்கக்கிட்ட எங்கப் பேசுறான்?” என்றுக் குற்றம் சாட்டினான் பிரபு.
“அதுலயே நீங்கப் புரிஞ்சுக்க வேண்டாமா? அவனுக்கு இஷ்டம் இருக்குன்னு... சரி இப்போ என்ன? கேக்கணும்... அவ்வளவு தான... நான் கேக்குறேன்... தேவிய முத்துவுக்கு கட்டிக் குடுப்பீங்களா?” என்று விட்டுக் கொடுப்பதுப் போல் பேசினான் ராகேஷ்.
“எனக்கு இஷ்டம் இல்ல” பட்டென்று வந்தது பிரபுவின் பதில்.
“அதான் ஏன்? அவன் படிச்சுருக்கான். இன்னும் கொஞ்ச வருஷத்துல நல்ல நெலமைக்கு வந்துப் பெரிய அட்வோகேட் ஆயிடுவான். அப்பறம் என்ன?” குமரனின் முகத்தைப் பார்த்துக் கொண்டேக் கேட்டான் ராகேஷ்.
“பொண்ண நல்லாப் பார்த்துப்பான்னு எப்படி நம்புறது?” என்று பதில் கேள்விக் கேட்டான் பிரபு.
“அதெல்லாம் பார்த்துப்பான்... இத்தன நாள் அவங்க ரெண்டுப் பேரும் பழகுறதப் பாக்குற உங்களுக்குத் தெரியாதா? அவன் எப்படிப் பாத்துப்பான்னு?”
இவ்வளவு நேரம் ராகேஷயும் பிரபுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த குமரன் ஒருப் பெருமூச்சை வெளியேற்றித் தன் கையில் இருந்தக் கோப்பையைக் கீழே வைத்தார்.
அவர் குனிந்ததும் “டேய் அவரே டயர்ட் ஆயிட்டாரு... போதும் டா” என்றான் முத்து. அதே நேரம் “பசங்க நல்லா தான் பேசுறாங்க...” என்று சவிதாவிடம் கூறி சிரித்தார் பூமா.
“சரி பா... கட்டிக் குடுக்கறோம்... ஆனா கல்யாணத்த உடனே வெக்கணும். இவன் மேல எங்களுக்கு நம்பிக்க இல்ல... கொஞ்ச நாள் கழிச்சு மாறிடான்னா...” என்றான் பிரபு.
கல்யாணம் என்றுப் பேச்சு வரவும் அவசரமாகத் திரும்பி இவ்வளவு நேரம் எதுவும் பெசாதத் தன் மனைவியையும் மகளையும் பார்த்தார் குமரன்.
பூமா மகளை அணைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன... ஆனால் அதற்கு மாறாக அவர் உதட்டில் புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது.
தேவி சவிதாவின் கையை இறுகப் பற்றி தன் தாயின் தோளில் சாய்ந்திருந்தாள். சவிதாவிற்கு பெரியப் பிரச்சனை எதுவும் வராமல் இது வரை எல்லாம் சுமூகமாக முடிந்ததை எண்ணி நிம்மதியாக இருந்தது.
கிடைத்த இந்த இடைப்பட்ட நேரத்தில் “சூப்பர் மச்சான்...” என்று உணர்ச்சி வசப்பட்டு பிரபுவிற்கு கைக் கொடுத்தான் முத்து. ஒரே நேரத்தில் அவன் பின் மண்டையில் ஓங்கி அடித்தனர் பிரபுவும் ராகேஷும்.
குமரன் இவர்கள் புறம் திரும்பியதும் “என்ன சித்தப்பா அடுத்த முகூர்த்தத்துலக் கல்யாணத்த வெச்சுகலாம்ல?” என்றுக் கேட்டான் பிரபு.
“வெச்சுக்கலாம் தம்பி. தேதிப் பாத்து சொல்லுங்க” என்று சிரிப்புடன் கூறினார் குமரன்.
உடனே பிரபு பூமாவைத் திரும்பிப் பார்க்க அவரும் புரிந்துக் கொண்டவராக அங்கிருந்த காலெண்டரில் நாள் பார்த்துக் கூறினார்.
“சரி பா. இன்னும் 15 நாள்ல கல்யாணம்” என்றுக் கூறி எழுந்து முத்துவிடம் வந்த குமரன் அவன் கைப் பற்றி “சந்தோஷமா மாப்ள?” என்றுக் கேட்டார்.
32 பற்களும் தெரிய சிரித்து வைத்தான் முத்து. அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பதைப் போல் குமரன் தன் அறைக்குச் சென்றார்.
அவர் பின்னாலேயே தேவியை நோக்கிச் சென்ற முத்துவை அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்த ராகேஷ் “டேய் நில்லு டா ஒழுங்கா” என்று அடிக் குரலில் கூறினான்.
பிரபுவும் திரும்பி முறைக்கவும் “ம்ம்கும்ம்... விட மாட்டாய்ங்களே...” என்றுக் கூறி தேவியை பார்த்து கண்ணடித்து அமைதியாக நின்றான் முத்து.