கதிரவன் தன் ஒளியால் இருளை விரட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். அல்லி எழுந்தவள் எப்போதும் போல் விநாயகப் பெருமாளை துதித்தவாறு கண்விழித்தாள். பக்கத்தில் வெண்மதி நல்ல உறக்கத்தில் இருக்க, அவளை எழுப்பாதவாறு வெளியில் வந்தாள்.அங்கே கரிகாலனும், முத்தழகனும் ஆசன பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் அருகே சென்றவள்
"வணக்கம் தமையனே ...நன்றாக உறங்கினீர்களா!! என்று வினவ. சிறு புன்னகையுடன் தலையசைத்தவன்..
."தாங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றியம்மா!!! உங்களிடம் சொல்லி விடைபெறவே காத்திருந்தோம் ....
நாங்கள் வருகிறோம்..."
என்றவன் அவளின் பின் தேட அவன் யாரை தேடுகிறான் என்று அறிந்தவள்
"இளவரசி இன்னும் உறங்குகிறார்... நீங்கள் சற்று பொறுத்திருங்கள் நான் சென்று அருவியில் இருந்து நீர் கொண்டு வருகிறேன்" ...
"இல்லையம்மா தாமதமாகிவிடும்"
"தமையனே இளவரசிக்கு பாதுகாப்பாக சிறிது நேரம் இருந்தீர்களேயானால் நான் விரைவாக வந்துவிடுவேன்..."
"ஹா..ஹா..ஹா என்று சிரித்தவன் தங்கள் இளவரசிக்கு நான் காவலா!!!!
திருதிருவென முழித்தவள்
"அது...அது அவர் விழித்திருக்கும்போது தேவையில்லை...ஆனால் அவர் உறங்குகிறார் அதனால்தான்...." என்று இழுக்க...
"சரி..சரி சென்று வா" ஆனால் விரைவில் வந்துவிடவேண்டும். "
அவன் பதிலில் சிட்டாக பறந்தவள் மண்பானை எடுத்துக்கொண்டு வெளியில் வர, முத்தழகனை அழைத்தவன் அல்லிக்கு பாதுகாப்பாக செல்ல கூற, தடுக்க வந்தவள் எதையோ நினைத்தவாறு சரியென்று முன் செல்ல முத்தழகன் பின் தொடர்ந்தான்.
மெல்ல உறக்கம் கலைந்த வெண்மதியின் நினைவுகளில் உடனே வந்தவன் கரிகாலன் தான். சென்றுவிட்டானோ? என எண்ணியவள் வேகமாக எழுந்து வெளியில் வர, அவன் திரும்பி நின்றவாறு சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருக்க....அவனை கண்டவளது உலகம் ஸ்தம்பித்தது மேலாடையின்றி இரு கைகளையும் மேலே தூக்கி சூரியனை வணங்கியவாறு, பயிற்சியை ஆரம்பித்தவனது ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.
பயிற்சியை முடித்தவன் திரும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் செயலற்ற நிலை கண்டு அவனுக்கு புன்னகை வந்தது...அவன் அருகில் வர அதைகூட உணராமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.அருகில் வந்தவன் இன்னும் அவள் இயல்பு நிலைக்கு வராமல் இருக்க..அவளது கலைந்த முடிகள் முகத்தில் படர்ந்திருக்க...அதை மெதுவாக ஒதுக்கியவன்
"தேவி"
என அழைக்க....
"கூறுங்கள் ஆதித்தரே"
என ஒருவித மயக்கத்திலே கூற, அவனது அழைப்பில் அவனது முகம் பிரகாசமடைந்தது.... அவள் இன்னும் சுய நினைவு அடையவில்லை என்றறிந்தவன்...அவளது முகத்தில் மெலிதாக காற்று ஊத....அதில் மயங்கி் கண் மூடியவள் அதை ரசித்திருக்க.. .இந்த நிலை மேலும் அவனை சோதிக்க ஒற்றை விரல் கொண்டு முகவடிவை அளந்தவாறு "
தேவி"
என காதோரத்தில் கிசுகிசுக்க படக்கென்று கண்திறந்தவள் .... என்ன காரியம் செய்து விட்டாய் வெண்மதி...என்று பதற. அவனை விட்டு விலகி திரும்பி நின்று கொண்டாள். இருதயம் படபடக்க ஆரம்பித்து, கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அவள் பின்னே வந்தவன் நெருங்கி அவள் தோளை தொட , இன்னும் வெளிப்படையாக நடுங்க ஆரம்பித்தாள்.
"வேண்டாம்!!!" தாங்கள் இவ்வாறு" .....
அதற்க்குள் வார்த்தை தந்தியடிக்க.... "
"ஏன் தேவி? எதற்காக விலகல் ..உன் மனதில் நான் இல்லையா!! உன் கண்களில் நான் கண்ட காதல் மாயையா!!!"
"இல்லையே...என்று மனது ஓலமிட"
"என்னை பார் தேவி",
என்று அவளை திருப்ப அவளோ இவனை கானாமல் தலை குணிந்து நின்றாள். தவறு செய்த சிறுபிள்ளை போல கைகளை பிசைந்தவாறு தலை குனிந்து நின்றவளை பார்த்து , புன்னகை அரும்பியது.
" நேற்று என்னிடம் சண்டையிட்ட பெண்ணை அறிவாயா தேவி"அதற்கும் பதிலில்லை, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் ,
"ஒன்றை அறிவாயா தேவி , கானகத்திற்க்கு வேட்டையாட வந்தேன், ஆனால் வந்த இடத்தில் நானே வேட்டையாடப் பட்டேன்" என்றதும் அவசரமாக நிமிர்ந்து அவனை ஆராய்ந்தாள் காயம் எதாவது ஏற்பட்டுவிட்டதா என்று. அவளது தேடல் எதற்கு என்று அறிந்தவன்
"காயம் இங்கே என்று இருதய பகுதியை சுட்டிக் காட்டியதும், அவன் எதனை கூறுகிறான் என்பதை அறிந்து கொண்டாலும் இது நடவாத ஒன்று என்று அவள் மனம் வேதனை கொண்டது.
" கடவுளே இவர் இதற்கு மேல் பேசாமல் இருந்தால் நலமாக இருக்கும் அவசரமாக வேண்டுதல் வைத்தாள்.
" ஏனென்றால் அவன் பேசபேச இவள் மனம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராக இருந்தது. அவள் கைகளை அழுந்த பறறியவன்
"என்மீது என்ன பிழை? அதுவும் என் மீதான நேசத்தை மறைக்கும் அளவிற்கு."
"வணக்கம் தமையனே ...நன்றாக உறங்கினீர்களா!! என்று வினவ. சிறு புன்னகையுடன் தலையசைத்தவன்..
."தாங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றியம்மா!!! உங்களிடம் சொல்லி விடைபெறவே காத்திருந்தோம் ....
நாங்கள் வருகிறோம்..."
என்றவன் அவளின் பின் தேட அவன் யாரை தேடுகிறான் என்று அறிந்தவள்
"இளவரசி இன்னும் உறங்குகிறார்... நீங்கள் சற்று பொறுத்திருங்கள் நான் சென்று அருவியில் இருந்து நீர் கொண்டு வருகிறேன்" ...
"இல்லையம்மா தாமதமாகிவிடும்"
"தமையனே இளவரசிக்கு பாதுகாப்பாக சிறிது நேரம் இருந்தீர்களேயானால் நான் விரைவாக வந்துவிடுவேன்..."
"ஹா..ஹா..ஹா என்று சிரித்தவன் தங்கள் இளவரசிக்கு நான் காவலா!!!!
திருதிருவென முழித்தவள்
"அது...அது அவர் விழித்திருக்கும்போது தேவையில்லை...ஆனால் அவர் உறங்குகிறார் அதனால்தான்...." என்று இழுக்க...
"சரி..சரி சென்று வா" ஆனால் விரைவில் வந்துவிடவேண்டும். "
அவன் பதிலில் சிட்டாக பறந்தவள் மண்பானை எடுத்துக்கொண்டு வெளியில் வர, முத்தழகனை அழைத்தவன் அல்லிக்கு பாதுகாப்பாக செல்ல கூற, தடுக்க வந்தவள் எதையோ நினைத்தவாறு சரியென்று முன் செல்ல முத்தழகன் பின் தொடர்ந்தான்.
மெல்ல உறக்கம் கலைந்த வெண்மதியின் நினைவுகளில் உடனே வந்தவன் கரிகாலன் தான். சென்றுவிட்டானோ? என எண்ணியவள் வேகமாக எழுந்து வெளியில் வர, அவன் திரும்பி நின்றவாறு சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருக்க....அவனை கண்டவளது உலகம் ஸ்தம்பித்தது மேலாடையின்றி இரு கைகளையும் மேலே தூக்கி சூரியனை வணங்கியவாறு, பயிற்சியை ஆரம்பித்தவனது ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.
பயிற்சியை முடித்தவன் திரும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் செயலற்ற நிலை கண்டு அவனுக்கு புன்னகை வந்தது...அவன் அருகில் வர அதைகூட உணராமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.அருகில் வந்தவன் இன்னும் அவள் இயல்பு நிலைக்கு வராமல் இருக்க..அவளது கலைந்த முடிகள் முகத்தில் படர்ந்திருக்க...அதை மெதுவாக ஒதுக்கியவன்
"தேவி"
என அழைக்க....
"கூறுங்கள் ஆதித்தரே"
என ஒருவித மயக்கத்திலே கூற, அவனது அழைப்பில் அவனது முகம் பிரகாசமடைந்தது.... அவள் இன்னும் சுய நினைவு அடையவில்லை என்றறிந்தவன்...அவளது முகத்தில் மெலிதாக காற்று ஊத....அதில் மயங்கி் கண் மூடியவள் அதை ரசித்திருக்க.. .இந்த நிலை மேலும் அவனை சோதிக்க ஒற்றை விரல் கொண்டு முகவடிவை அளந்தவாறு "
தேவி"
என காதோரத்தில் கிசுகிசுக்க படக்கென்று கண்திறந்தவள் .... என்ன காரியம் செய்து விட்டாய் வெண்மதி...என்று பதற. அவனை விட்டு விலகி திரும்பி நின்று கொண்டாள். இருதயம் படபடக்க ஆரம்பித்து, கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அவள் பின்னே வந்தவன் நெருங்கி அவள் தோளை தொட , இன்னும் வெளிப்படையாக நடுங்க ஆரம்பித்தாள்.
"வேண்டாம்!!!" தாங்கள் இவ்வாறு" .....
அதற்க்குள் வார்த்தை தந்தியடிக்க.... "
"ஏன் தேவி? எதற்காக விலகல் ..உன் மனதில் நான் இல்லையா!! உன் கண்களில் நான் கண்ட காதல் மாயையா!!!"
"இல்லையே...என்று மனது ஓலமிட"
"என்னை பார் தேவி",
என்று அவளை திருப்ப அவளோ இவனை கானாமல் தலை குணிந்து நின்றாள். தவறு செய்த சிறுபிள்ளை போல கைகளை பிசைந்தவாறு தலை குனிந்து நின்றவளை பார்த்து , புன்னகை அரும்பியது.
" நேற்று என்னிடம் சண்டையிட்ட பெண்ணை அறிவாயா தேவி"அதற்கும் பதிலில்லை, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் ,
"ஒன்றை அறிவாயா தேவி , கானகத்திற்க்கு வேட்டையாட வந்தேன், ஆனால் வந்த இடத்தில் நானே வேட்டையாடப் பட்டேன்" என்றதும் அவசரமாக நிமிர்ந்து அவனை ஆராய்ந்தாள் காயம் எதாவது ஏற்பட்டுவிட்டதா என்று. அவளது தேடல் எதற்கு என்று அறிந்தவன்
"காயம் இங்கே என்று இருதய பகுதியை சுட்டிக் காட்டியதும், அவன் எதனை கூறுகிறான் என்பதை அறிந்து கொண்டாலும் இது நடவாத ஒன்று என்று அவள் மனம் வேதனை கொண்டது.
" கடவுளே இவர் இதற்கு மேல் பேசாமல் இருந்தால் நலமாக இருக்கும் அவசரமாக வேண்டுதல் வைத்தாள்.
" ஏனென்றால் அவன் பேசபேச இவள் மனம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராக இருந்தது. அவள் கைகளை அழுந்த பறறியவன்
"என்மீது என்ன பிழை? அதுவும் என் மீதான நேசத்தை மறைக்கும் அளவிற்கு."