நிலம் ஏக்கர் பற்றி கூறிய விளக்கம் எல்லாம் அருமை டார்லி.
நாம எல்லாம் எப்போ வருசத்துக்கு ஒரு முறை அத்தி பூத்தப்புல ஊரு பக்கம் போன எங்க நுங்கு, பிஞ்சு மங்காய், பச்சையா அப்பிடியே புடிங்கி குடுக்கும் வேர்க்கடலை, பம்பு செட்டு, கிணறுன்னு வாய் பொளந்து சுத்திட்டு வருவோம் அவ்வளவு தான் வேற ஒன்னும் தெரியல?
ரெண்டு பேரும் திருச்சியில்அடிக்கும் லூட்டி மைண்ட் ப்லோவிங், பட் திருச்சி தான் பிறந்த மண்ணின் பெருமை பத்தி பேசி நம்ப handsome காதுல ரத்தம் வரல , மனசை பொங்க வைச்சுட்டா மா ??
இருந்தாலும்தற்சமயம் அவள் சென்னை வாசியா இருந்து கிட்டு நம்ப சிங்காரச்சென்னை கூவம் ?பத்தி கேலி பண்ணிட்டாளே வாலு ?
என்ன இருந்தாலும் handsome handsome தான்? நண்பேன்டா? எந்த நெடியும் உன் தோழியை விட்டு கொடுக்காத உன் பண்பு இருக்குகே sweet சாஸு டா நீயி?
ஆமா? அது ஏதோ பூரிக்கு தொட்டுக்க ஒரு பேரு சொன்னாங்க யா?
என்ன பா..? கடப்பா, யோவ்? எனக்கு தெரிஞ்சது எல்லாம் கடப்பாரை, பாகுபலி கட்டப்பா அப்புறம் ஆந்திரவில் இருக்கும் ஊரு கடப்பா மட்டும் தான்.
எங்க ஆயா சாத்தியமா, இது என்னவோ புதுமையா நான் இது வரை கேள்வி படாத பேரு டா சாமி.? நமக்கு தெரிஞ்சது எல்லாம் வெஜுடேபிள் குருமா, இல்லனா உருளைக்கிழங்கு மசாலா மட்டும் தான்.
சரி ?
பரவா இல்லை நல்ல தான் இருக்கு கடப்பா பேரு. கொஞ்சம் ரெசிபியும் சேர்த்து அனுப்பி இருக்கலாம் தல ? நாளைக்கு காலையிலே எங்க வீட்டுக்கரு தட்டுல கடப்பா வைச்சு அசத்தி இருப்பேன் இல்ல.
( அவரு இது என்ன gravy இதோட பேரு என்னனு கேக்காம இருந்த சரி??) சும்மா just for fun ?
ud super நாளைக்கு வருமா ??