• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கிறுக்கல்கள்_3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
**ஒட்டாத பாதரசம்
என் விரல்களில்,
மருதாணியாய் சிவக்கும்
நீ இட்டால்..
...


**எறும்புகளின்
மழைக்கால
சேமிப்பு போல ,
உன்னோடு இருந்த
நினைவுகளை
சேகரித்து வைக்கிறேன்
பிரிவு நேரத்தில்
பிதற்றிக் கொள்ள!!!
..



**புல்லாங்குழலை விட
எனக்கு பிடித்தது
அலைபேசியே!!!
அதில் தானே,
அத்தனை ராகங்களும் சேர்ந்து ஒரு வடிவெடுத்து
உன் குரலாய் ஒலிக்கிறது!!!
.....


என் உயிர் இலைகளின் பச்சையத்தை
பறித்து போனவனே ,
பட்டமரமாய் நிற்கின்றேன்..
ஒரே


ஒரு பார்வை பார்
எந்தன் வேர்களும்
கிளைவிடும்...!!




 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top