'குடைக்குள் கருத்தரங்கம்'
? மாலை நேரம் ...
மழை நாளின்
மயக்கம் தீர...
சாலையோரம்.. தேநீர் அருந்த
தேங்கிய போது...
? தேநீர் தந்த தேகச்
சுறுசுறுப்பில்....
தேவையற்ற
தேவைகள் பற்றி
உரையாட......
? திடீர் தூறலின் தூதால்..
? இருவரும் குடைக்குள் குடியேற....
மனதை விட அதிகமான இடைவெளி!
? கண்களின் வழியே மின்சாரம் பாய..
? அருகாமை தந்த தடுமாற்றம் ....
? பேச்சில்லா ஊமையானேன்!
? உள்வாங்கிய என்
உணர்வுகளை
உரசிப் பார்க்காமல்....
? உன்னதமான நினைவுகளை...
உயிருக்குள் உறைய வைத்து...
? வாசற் கதவு வரை
காவலனாய் ....
? விட்டுச் சென்றாய்
உன் நினைவுகளை ...
என்னுடனே....
? மனதில் மழை ...
குடையில்லாமல் நனைந்திருந்தேன்.....!!!!!
- சரோஜினி சீனிவாசன்
? மாலை நேரம் ...
மழை நாளின்
மயக்கம் தீர...
சாலையோரம்.. தேநீர் அருந்த
தேங்கிய போது...
? தேநீர் தந்த தேகச்
சுறுசுறுப்பில்....
தேவையற்ற
தேவைகள் பற்றி
உரையாட......
? திடீர் தூறலின் தூதால்..
? இருவரும் குடைக்குள் குடியேற....
மனதை விட அதிகமான இடைவெளி!
? கண்களின் வழியே மின்சாரம் பாய..
? அருகாமை தந்த தடுமாற்றம் ....
? பேச்சில்லா ஊமையானேன்!
? உள்வாங்கிய என்
உணர்வுகளை
உரசிப் பார்க்காமல்....
? உன்னதமான நினைவுகளை...
உயிருக்குள் உறைய வைத்து...
? வாசற் கதவு வரை
காவலனாய் ....
? விட்டுச் சென்றாய்
உன் நினைவுகளை ...
என்னுடனே....
? மனதில் மழை ...
குடையில்லாமல் நனைந்திருந்தேன்.....!!!!!
- சரோஜினி சீனிவாசன்
Last edited: