முதலாவதாக இந்த குறுநாவல் போட்டியில் என் கதை வெற்றி பெற வேண்டும் என்று ஓட்டு போட்ட என் பெருமதிப்பிற்குரிய வாசகர்களுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாதளவுக்கு என் அன்பும் நன்றியும்?????????
இந்த போட்டி முழுக்க முழுக்க ஒரு ஜாலி என்டர்டைனர். அந்த வகையில் யாரடி நீ மோகினி கதையை என் பாணியிலிருந்து மாறுப்பட்டு எழுதி வெறும் ஒரு என்டர்டைனர் என்ற ரீதியிலேயே கொடுத்தேன். அது சிலருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் அல்லது மனதையோ புண்படுத்தியிருந்தால் அதற்காக இந்த சந்தர்ப்பத்தில் என் மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன்.
மற்றபடி இந்த போட்டியின் விதிமுறைக்கு ஏற்ப நான் முழுவதுமாக என் பங்களிப்பை தந்து இந்த கதையை எழுதினேன். என்னுடைய அந்த பாணியையும் ஏற்று அங்கீகரித்து இப்படி மானவரியாக ஓட்டும் வழங்கினீர்கள்.
அதற்கு கோடானு கோடி நன்றிகள்??? மற்றும் என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி???
எல்லோருடைய கதையும் உண்மையிலேயே ஒவ்வொரு வகையான என்டர்டைனர் என்றே நான் சொல்லுவேன்.
இதில் வாசகர்கள் ரசனையே வெற்றியை தீர்மானித்தது. மற்றபடி இந்த ஓட்டு எண்ணிக்கை எழுத்தாளர்களின் திறமையின் அளவுகோலை தீர்மனிக்கவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து.
என்னை பொறுத்த வரை நேர்மையாக தங்கள் பங்களிப்பை கொடுத்து இதில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் வெற்றியாளர்கள். அந்த வரிசையில் நானும் இருப்பதில் பெருமிதமும் கர்வமும் கொள்கிறேன்.
இறுதியாக அதே நேரம் ஆனந்தத்தோடும் மனமகிழ்வோடும்,
அதிக ஓட்டுக்கள் பெற்ற பலரின் மனதையும் கவர்ந்த கதைகளுக்கும் அதனை எழுதிய என் சக எழுத்தாளினிகள் அழகி மற்றும் தென்றலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.???
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.