உன் பிரிவு ஒன்றும்
என்னை அதிகம் வருத்தவில்லை கண்மணி...
என்னை விட்டு நீ சென்றதும்
கண்களில் கண்ணீர் ஒன்றும்
குளம் போல் தேங்கவில்லை...
நீ சொன்ன வார்த்தைகள்
என் மனதின் சமநிலையை
சிறிதளவும் குலைக்கவில்லை...
பார்க்கும் பொருட்களில் எல்லாம்
உன் நினைவுகள் குவிந்து
மனதை தடுமாற வைக்கவில்லை...
உன்னிடமிருந்து அழைப்புகள்
வருகிறதா என அலைபேசியை
நிமிடத்திற்கொரு முறை பார்க்கவில்லை....
எப்பொழுதோ நீ அனுப்பிய
குறுஞ்செய்திகளை திரும்பவும்
வாசித்து மனதை ஒன்றும்
கீறி கொள்ளவில்லை....
நீ அளித்த அன்பளிப்புகளை
எடுத்துப் பார்த்து, அடுத்த வருட பரிசை அளிக்க
நீ இருக்க மாட்டேயே
என ஏங்கவில்லை...
உன்னுடன் சிரித்த நாட்களை
எண்ணி அழுது கொண்டு இருக்கவில்லை...
இனி நீ இல்லை என்ற உண்மையை
என் மனதிடம் திரும்ப திரும்ப
சொல்லி உன் இன்மையை போக்கி
கொள்ள விரும்பவில்லை....
காதல் தோல்வியைப் பறைசாற்ற
ஆட்டு தாடி வளர்க்கவில்லை...
சந்தோஷமாக இல்லை என்று காட்ட வருத்தத்தை பூசிக் கொள்ளவில்லை...
சந்தோஷமாக தான் இருக்கிறேன்
என்று காட்ட போலி புன்னகையை
மாட்டிக் கொள்ளவில்லை...
நான் நானாக தான்
இருக்கின்றேன் கண்மணி...
தினமும் சிரிக்கிறேன்...
பூக்களை ரசிக்கின்றேன்...
நேரத்திற்கு சாப்பிடுகிறேன்..
நிம்மதியாக உறங்குகிறேன்...
காதல் கவிதைகள் எழுதுகின்றேன்...
சிரித்து சந்தோஷமாக தான் இருக்கின்றேன்...
ஆனால் சில நேரத்தில் யாரையும்
பார்க்க பிடிக்காமல்
எதையும் மனதினில் யோசிக்காமல்
எதனுடனும் சிந்தனை ஒட்டாமல்
வெறித்த விழிகளுடன் வானத்தை
பார்க்கும் அந்த சில வெறுமையான
தருணங்களை தவிர
உன் பிரிவு ஒன்றும்
என்னை அதிகம் வருத்தவில்லை கண்மணி...
என்னை அதிகம் வருத்தவில்லை கண்மணி...
என்னை விட்டு நீ சென்றதும்
கண்களில் கண்ணீர் ஒன்றும்
குளம் போல் தேங்கவில்லை...
நீ சொன்ன வார்த்தைகள்
என் மனதின் சமநிலையை
சிறிதளவும் குலைக்கவில்லை...
பார்க்கும் பொருட்களில் எல்லாம்
உன் நினைவுகள் குவிந்து
மனதை தடுமாற வைக்கவில்லை...
உன்னிடமிருந்து அழைப்புகள்
வருகிறதா என அலைபேசியை
நிமிடத்திற்கொரு முறை பார்க்கவில்லை....
எப்பொழுதோ நீ அனுப்பிய
குறுஞ்செய்திகளை திரும்பவும்
வாசித்து மனதை ஒன்றும்
கீறி கொள்ளவில்லை....
நீ அளித்த அன்பளிப்புகளை
எடுத்துப் பார்த்து, அடுத்த வருட பரிசை அளிக்க
நீ இருக்க மாட்டேயே
என ஏங்கவில்லை...
உன்னுடன் சிரித்த நாட்களை
எண்ணி அழுது கொண்டு இருக்கவில்லை...
இனி நீ இல்லை என்ற உண்மையை
என் மனதிடம் திரும்ப திரும்ப
சொல்லி உன் இன்மையை போக்கி
கொள்ள விரும்பவில்லை....
காதல் தோல்வியைப் பறைசாற்ற
ஆட்டு தாடி வளர்க்கவில்லை...
சந்தோஷமாக இல்லை என்று காட்ட வருத்தத்தை பூசிக் கொள்ளவில்லை...
சந்தோஷமாக தான் இருக்கிறேன்
என்று காட்ட போலி புன்னகையை
மாட்டிக் கொள்ளவில்லை...
நான் நானாக தான்
இருக்கின்றேன் கண்மணி...
தினமும் சிரிக்கிறேன்...
பூக்களை ரசிக்கின்றேன்...
நேரத்திற்கு சாப்பிடுகிறேன்..
நிம்மதியாக உறங்குகிறேன்...
காதல் கவிதைகள் எழுதுகின்றேன்...
சிரித்து சந்தோஷமாக தான் இருக்கின்றேன்...
ஆனால் சில நேரத்தில் யாரையும்
பார்க்க பிடிக்காமல்
எதையும் மனதினில் யோசிக்காமல்
எதனுடனும் சிந்தனை ஒட்டாமல்
வெறித்த விழிகளுடன் வானத்தை
பார்க்கும் அந்த சில வெறுமையான
தருணங்களை தவிர
உன் பிரிவு ஒன்றும்
என்னை அதிகம் வருத்தவில்லை கண்மணி...
Last edited: