கேரட் கீர்
தேவையான பொருட்கள் :
கேரட் - பெரியதாக இரண்டு
சர்க்கரை - உங்கள் சுவைக்கேற்ப (நான் அரை கப் சேர்த்துக்கிட்டேன்)
ஏலக்காய் தூள் - கால் ஸ்பூனிற்கும் குறைவாக
முந்திரி - 5
பாதாம் - 5
பிஸ்தா - 5 (முந்திரி, பாதாம், பிஸ்தா இந்த மூன்றும் உங்கள் விருப்பத்திற்கேற்ற படி சேர்த்துக் கொள்ளுங்கள்)
குங்குமப்பூ - சிறிதே சிறிதளவு (ஒரு மூன்று இதழ்) (விருப்பமிருந்தால் மட்டும் சேர்த்துக்கோங்க, நான் சேர்க்கவில்லை, சேர்த்தால் கலர் இன்னும் நல்ல கிடைக்கும்)
செய்முறை :
கேரட்டை நன்றாக கழுவி, தோல் நீக்கிவிட்டு ஒன்றுக்கு நான்காக வெட்டி குக்கரில் 1 விசில் விட்டு எடுத்து ஆற வைக்கவும்....
ஆறியதும் மிக்ஸியில் விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்...
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து காய்ச்சாத பால் ஒரு லிட்டர் ஊற்றி சூடாக்கவும், பால் கொதித்து வரும் சமயத்தில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும், சேர்த்ததும் நன்கு கலந்து விடவும், அடுப்பை மிதமான தீயில் வைத்திருக்கவும்...
அடிக்கடி கிளறி விடவும்.....
ஐந்து நிமிடத்திற்கு பிறகு நன்றாக கொதித்து வரும் பொழுது, உங்கள் இனிப்பு சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கிளறுங்கள், அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்... இதனுடனே முந்திரி, பாதாம், பிஸ்தா இவைகளை குட்டியாக சீவி அல்லது நறுக்கி இதனுடன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்...
ஐந்து நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து இறக்கி விட்டு, க்ளாசில் ஊற்றி முந்திரி, பாதாம், பிஸ்தா இவைகளை குட்டியாக சீவி இதன் மீது தூவி சூடாகவும் குடிக்கலாம், பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஜூஸ் போலவும் அருந்தலாம்.....