• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கையால் அள்ளி சாப்பிடுபவர்களா நீங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
கையால் அள்ளி சாப்பிடுபவர்களா நீங்கள் ! உங்களுக்காக !

இந்தியாவில் கையால் சாப்பிடுவதுதான் பாரம்பரிய வழக்கம் இந்தியாவில் மட்டுமின்றி ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பகுதிகளிலும் கையால் சாப்பிடுவது தான் வழக்கம்.

இந்த பகுதிகளில் பலர் ஸ்பூன் மற்றும் கத்தியை பயன்படுத்தி உணவை சாப்பிட மாட்டார்கள்.

ஆனால் தற்போதைய காலத்தில் நாகரிகம் என்ற பெயரில் நமது பாரம்பரிய பழக்கங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் நம் முன்னோர்கள் இப்படி கையால் உணவருந்தியதற்கு பின்னணியில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. நாம் உணவை கையால் உன்பதால் ஏராளமான நன்மைகள் நமக்குக் கிடைக்கும்

உண்ணுதல் என்பது உணர்வு பூர்வமான மற்றும் கவனமுள்ள செயல்முறையாகும். உணவை உண்ணும் போது நம் அனைத்து உணர்வுகளையும் பயன்படுத்தி சாப்பிடுகிறோம்.

அதாவது பார்வை,வாசனை,கேட்பது,சுவை மற்றும் தொடுதல். ஒருவர் உணவு சாப்பிடும் போது உடல்,மனம் மற்றும் ஆன்மா என அனைத்தும் ஒன்றிணைக்கிறது.

மேலும் இந்த காரணத்தினால் தான் பல மேற்கத்திய நாடுகளில் கைகளில் உணவை சாப்பிட ஊக்குவிக்கிறார்கள்.

கைகளில் சாப்பிடுவது... அசுத்தமானதாகவும்,அருவருக்கத்தக்கதாகவும் நினைக்கிறார்கள்.

ஆனால் கையால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் இனிமேல் அப்படி நினைக்க மாட்டார்கள்.

உண்ணுதல் என்பது உணர்வை தூண்டும் ஒரு உணர்வுபூர்வமான அனுபவமாகும். ஆயுர்வேதத்தின் படி கையில் உள்ள ஒவ்வொரு விரலிலும் ஐந்து கூறுகள் இருக்கிறதாம். அதில்...

பெருவிரல் -ஆகாயம் ஆள்காட்டிவிரல்-காற்று நடுவிரல் - நெருப்பு மோதிரவிரல்- தண்ணீர் சுண்டுவிரல்- நிலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கையால் உணவை சந்தோஷமாக சாப்பிடும் போது இந்த ஐந்து கூறுகளும் தூண்டப்பட்டு நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது. ஒருவரது உடலில் ஐந்து கூறுகளும் சமநிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஐந்து கூறுகளும் ஒருவரது சுறுசுறுப்பை அதிகரிக்கும்.

அதாவது கையால் உணவை உட்கொள்ளும் போது உணவின் சுவை மற்றும் மணம் போன்றவையும் மேம்பட்டு இருக்கும்.

கத்தி (அ ) ஸ்பூன் முலம் சாப்பிடுவது ஒரு வகையான மருத்துவ முறையாகும். இப்படி சாப்பிடும்போது அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்காது. அதேசமயம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்றும் கவனிக்க மாட்டோம். அதேசமயம் ஸ்பூனால் சாப்பிடும் போது பல செயல்களான டிவி பார்ப்பது... மொபைலில் பார்ப்பது... அல்லது ஏதேனும் புத்தகத்தை படிப்பது என்று செய்வோம். உணவின் மீது கவனத்தை செலுத்த மாட்டோம் இதன் விளைவாக அதிகமாக உணவை உட்கொள்ள நேரிடும் உடல் பருமன் அதிகரிக்கும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top